ஜோதிட உலகில் பிரம்மாண்டமாகப் பேசப்படும் யோகத்தில் ஒன்று புதாத்திய யோகம். பலவிதமான கிரகச் சேர்க்கைகள் இருந்தாலும், சூரியன் மற்றும் புதன் இணைவினால் உருவாகும் இந்த யோகம் பலருக்கு கல்வியில், தொழிலில், உத்தியோகத்தில், பொருளா தாரத்தில் மிகப்பெரிய திருப்புமுனையைத் தந்துள்ளது.
ஜாதகக் கட்டத்தில் சூரியனும் புதனும் சேர்ந்திருந் தால் புதாதித்ய யோகமென்று கூறுவார்கள். சூரியன், புதன், சுக்கிரன் ஆகிய மூன்றும் முக்கூட்டு கிரகங்கள்.
எந்த ஜாதகத்தை எடுத்தாலும் இந்த மூன்று கிரகங்களும் அடுத்தடுத்த கட்டங்களிலேயே இருக்கும். புதன் சூரியனைவிட்டு 29 பாகைக்கு மேல் விலகுவதில்லை. இதை வைத்தே ஒருவரின் ஜாதகம் சரியாகக் கணிக்கப் பட்டுள்ளதா என்பதை எளிமையாகக் கண்டறிய முடியும்.
ஒருவர் ஜாதகத்தில் சூரியனும் புதனும் சேர்ந்திருந் தால் புதாதித்ய யோக அடிப்படையில் ஜாதகர் கல்வி கேள்வியில் சிறந்து விளங்க வேண்டுமல்லவா? ஜாதகத் தில் புதனும் சூரியனும் சேர்ந்திருக்கும் பலர் பள்ளி இறுதிப்படிப்பைக்கூட முழுமையாக முடிக்காதவர்கள். 30 வருடத்திற்கு முன்பு இந்த யோகம் அமையப் பெற்றவர்களில் பலர் மழைக்காகக்கூட பள்ளிக்கூடத்தில் ஒதுங்கியதில்லை. சில குழந்தைகளுடைய பெற்றோர் கள் நல்ல கல்வி பயின்று உயர்ந்த உத்தியோகம், பதவியில் இருப்பார்கள். ஆனால் குழந்தைகள் பெற்றோருக்கு எதிர்மறையாக இருப்பார்கள். சில பெற்றோர்களுக்கு அடிப்படைக் கல்விஞானம்கூட இருக்காது. ஆனால் பிள்ளைகள் படிப்பில் படு சுட்டியாக- கெட்டியாக இருப்பார்கள்.
குழந்தையின் கல்வி ஞானத்திற்கும், தாய்- தந்தையின் கல்வி ஞானத்திற்கும் சம்பந்தமிருக்காது. அதே போல் எந்த படிப்பறிவும் இல்லாத பலர் பன்னாட்டு வணிகத்தில் ஈடுபட்டு சாதனையாளராக வலம்வருகிறார் கள். ஆங்கிலப் பள்ளிக்கூடத்தில் படித்த பலர் அரை குறை ஆங்கிலம் பேசுகிறார்கள். பள்ளிப்படிப்பைக்கூட முடிக்காத பலர் இலக்கணப் பிழையில்லாமல் தெளிவாக ஆங்கிலம் எழுதுவார்கள்; பேசுவார்கள். இதுபோன்ற அனைத்திற்கும் ஒருவரின் ஜாதகத்திலுள்ள புதாதித்ய யோகம் மட்டுமே காரணம்.
இந்த கிரகச் சேர்க்கை பற்றி பல அரிய தகவல்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
சூரியன்
நவகிரகங்களில் சூரியன் முதன்மையான கிரகமாகும். ஒன்பது கிரகங்களில் நம் கண்ணுக்குத் தெளிவாகப் புலப்படுபவர் சூரியபகவான். காலபுருஷ 5-ஆம் அதிபதியான சூரியன் ஆத்மகாரகன் என்பதால் சூரியன் பலம்பெற வேண்டும். ஆன்மா பலம்பெற்றால் மட்டுமே நிம்மதியாக- தைரியமாக எதையும் செய்துமுடிக்க முடியும்.
ஒருவரது ஜாதகத்தில் சூரியன் பலம்பெற்றிருந்தால் அந்த ஜாதகர் தனது சுய சிந்தனையுடன்- சுயமாக முடிவெடுக்கக்கூடிய நபராக இருப்பார். வாழ்க்கை ஒளிமயமாகும். அடையமுடியாத வெற்றிகளே கிடையாது. இவருக்கு எப்படியும் நிறைந்த கல்வி, உணவு, உடை, இருப்பிடம், திருமணம், குழந்தை பாக்கியம் போன்ற அடிப்படைத் தேவைகள் குறித்த காலத்தில் கிடைத்துவிடும். அதே போன்று நீண்ட ஆயுள், ஆரோக் யம் கிடைக்கும். ஜனனகால ஜாதகத் தில் சூரியன் சுப பலத்துடன் இருந்தால் உடல் தேஜஸ் பெறும்.
நிர்வாகத் திறமை, தலைமை தாங்கும் இயல்பு, பிரபல மனிதர்களுடன் சமூகத் தொடர்புகள், சமுதாய அங்கீகாரம், அரசு உத்தியோகம், அரசுபதவி ஆகியவை கிடைக்கும். எதிலும் ஆட்சி, அதிகாரத்துடன் இருக்க வைப்பார். வாழ்வில் வெற்றிபெற சூரியபலம் மிக முக்கியம்.
புதன்
நவகிரகங்களில் சூரியனுக்கு அடுத் துள்ள முதல் கிரகம் புதனாகும். கிரகங் களில் மிகச்சிறிய கிரகமாக இருப்ப தால் சந்திரனுக்கு அடுத்து வேகமாக சுற்றக்கூடிய கிரகம் புதனாகும். சூரியனுக்கு மிக அருகிலுள்ள கிரகம் என்பதால் புதனுக்கு வெளிச்சம் அதிகமாகக் கிடைக்கும்.
புத்தி, அறிவு, ஞானம் ஆகிய வற்றை வழங்குவதால் புத்தி காரகன் என்று பெயர். ஒரு மனிதனின் ஞானத்திற்கும், புத்திக் கூர்மைக்கும் காரண மான கிரகம் என்பதால் வித்யா காரகன் என்ற பெயரும் உண்டு. புதன் வலிமை பெற்றவர்கள் மட்டுமே புத்திசாலியாக இருப்பார்கள்.
ஜனன ஜாதகத்தில் புதன் பலம்பெற்றவர்கள் இளமைப் பொலிவுடன் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். கணக்கி யல், மறைமுகமான, நுணுக்க மான பிரச்சினைகளைத் தீர்ப்ப தில் நிபுணராக இருப்பார் கள். வியாபாரத் தந்திரம் மிக்க வராகவும், மதிநுட்பத்தைப் பயன்படுத்தி, இருந்த இடத்திலேயே தொழில்செய்து வருமானம் செய்பவராகவும் இருப்பர். "ஒயிட் காலர் ஜாப்' செய்பவர் என்றும் கூறலாம்.
பாவ கிரகங்களுடன் சேரா மலிருந்தால் புதன் தனித்தன்மை யுள்ள சுபகிரகம். வேறு எந்த கிரகத்துடனும் சேராத புதனுக்கும் அதன் பார்வைக்கும் குருவுக்கு நிகரான சக்தியுண்டு. அதேநேரத்தில் புதன் இரட்டைத் தன்மையுள்ள கிரகம். தான் சேரும் கிரகத்திற்கு, இடத்திற்குத் தக்கவாறு, பார்க்கும் கிரகத்திற்குத் தக்கவாறு ஜாதகரை மாற்றிவிடுவார். புதன் பலம்பெற்றவர்கள் நகைச்சுவை உணர்வு மிகுந்தவர். ஜோதிடம், பேச்சாற்றல், கணிதம், கணினித் துறை, கவிதை எழுதுதல், சிற்பம் வடித்தல், சித்திரம் வரைதல், நடிப்பு, நாடகம், சாஸ்திர ஞானம், நுண்கலைகள் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பார்கள். எழுத்தாளர்கள், கவிஞர் கள், உலகம் போற்றும் நகைச்சுவை நடிகர்கள், பேச்சாளர்கள், பத்திரி கைத் துறையினர், அரசியலை அலசுபவர்கள், விமர்சிப்பவர்கள், மிகச்சிறந்த வியாபாரிகள், ஆலோசகர்கள், கல்வியாளர்கள், ஓவியர்கள் அனைவரும் புதனின் ஆதிக்கத்தில் உள்ளவர்கள்.
புதாதித்ய யோகம்
சூரியனுக்கு முதல்வட்டப் பாதையில் புதன் இருப்பதால் கிரகங்களிலேயே முதலிடத்தைப் பெறுகிறார். மனித வாழ்வில் அறிவுக் கண்ணைத் திறப்பதில் முதலிடத்தில் இருப்பதும் கல்விதான். சூரியனின் வெப்பத்திற்கு ஈடு கொடுத்து, அதாவது சூரியனின் ஈர்ப்பு விசையால் உள்ளிழுக்கப்பட்டு அழிந்துவிடாமல் புதன் தன் பாதையில் சுற்றி வரும்படி புதனின் கட்டமைப்பு அமைந்துள்ளது. சூரியனிட மிருந்து வெளிவரும் அனைத்து கதிர்களையும் தன்னகத்தே தேக்கிக்கொள்ளும் தன்மையை புதன் பெற்றுள்ளது. அதனால்தான் மனிதனின் நினைவாற்றலுக்கும் புத்திக்கூர்மைக்கும் பொது அறிவுக்கும் புதனையே காரக கிரகம் என்கிறோம்.
மனித உடலில் தலைப் பகுதியைக் குறிக்கும் கிரகம் சூரியன். சூரியனுக்கு மிக அருகிலேயே சுற்றும் புதன் தலையின் முக்கிய அங்கமாகவும், உடலியக்கத்திற்கு மிக முக்கிய அங்கமாகவும் உள்ள மூளையை ஆளுமை செய்வதால், அனைத்துவிதமான அறிவையும் ஆற்றலையும் கொடுப்பவர் புதனாகும். சூரியனைவிட்டு விலகாமல் சுற்றிவருவதால் புதனை வெறும் கண்களால் பார்க்க இயலாது.
மனித உடலின் செயல்பாட்டிற்குப் பல உறுப்புகள் காரணமாகின்றன. அந்த உறுப்புகளின் செயல்பாட்டிற்கு பல சுரப்பிகள் காரணமாகின்றன. மனித மூளை யின் அடிப்பகுதியில் சுரக்கும் நாளமில்லா சுரப்பியான "பிட்யூட்டரி' சுரப்பிதான் நினைவாற்றலையும் சிந்தனை, நுண்ணறிவையும் தூண்டுவதாக மருத்துவம் கூறுகிறது. புதன்கிரகமே இச் சுரப்பியைத் தன் ஆளுமைக் குள் வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
புதன் ஒருவர் மட்டுமே தனித்திருக்கும் நிலையில் சுபராக இருப்பார். பிறருடன் இணையும்போது, அவர் சேரும் கிரகம் சுபரானால் தன்னைச் சுபராகவும், அந்த கிரகம் பாவரானால் தன்னைப் பாவராகவும் தனது நிலையை மாற்றிக்கொள்வார்.
புதன் பலம் குறைந்திருப்பவர்கள், நுண்ணறிவுத் திறன் குறையப் பெற்றிருப் பார்கள். மனக்குழப்பம் அடைவார்கள். நுரையீரல், சிறுநீரகக் கோளாறு, நரம்புத்தளர்ச்சி, ஜீரண உறுப்புகளின் கோளாறு என உடல்நலம் பாதிக்கும். சூரிய பலம் குறைந்திருப்பவர்கள் ஆன்மபலத்தை இழப்பார்கள். இதயம் தொடர்பான நோய்கள் ஏற்ப்படும். நிர்வாகத்திறன் குறையும்.
சூரியன் என்றால் ஆன்மா; புதன் என்றால் புத்தி. ஆன்மாவும் புத்தியும் இணையும்போது மட்டுமே மனிதர்களுக்கு ஆன்மபலம் பெருகும். ஆன்மபலம், ஞானத்தைத் தரும் சூரியனுடன் புத்தி காரகன், வித்யா காரகன் புதன் சேரும்போது மனிதனுக்கு அளவில்லாத வாழ்வியல் ஞானம் ஏற்படுகிறது. ஆன்மபலத்தால் அடையமுடியாத வெற்றியே கிடையாது. பலர் புதாதித்ய யோகம் கல்விக்கு மட்டுமே பலன்தருமென்று நினைக்கிறார்கள். ஆனால் இது மனிதர்கள் வாழ்வில் அனைத்து விதமான வெற்றியை வழங்கக்கூடிய யோகமாகும்.
சூரியனுடன் புதன் இணையும்போது அவர் நன்மைதரும் சுபராக செயல்படுவாரா அல்லது தீமைதரும் பாவராக இருப்பாரா என்று கணிப்பதில் சிக்கல் ஏற்படும். அனுபவ முள்ளவர்களையும் தடுமாறவைக்கும். சூரியன், புதன், இவர்களைப் பார்க்கும் கிரகங்களின் நிலை, ஆதிபத்தியம் ஆகியவற்றைக்கொண்டு பலனைச் சீர்தூக்கிப் பார்க்கவேண்டும்.
இதை எளிமையாக எட்டு விதிகளில் கூறிவிடலாம்.
1. சூரியனுக்கும் புதனுக்கும் பாகை அடிப்படையில் 7 டிகிரி மட்டுமே வித்தியாசம் இருக்கவேண்டும். சூரியனுடன் குறிப்பிட்ட பாகையில் புதன் இணைந்திருக்கும்போது அஸ்தமனம் ஏற்படும். அஸ்தங்க கதியிலிருக்கும் புதன் நற்பலன்கள் தருவார். புதனுக்கு அஸ்தங்க தோஷம் கிடையாது.
2. புதனுக்கு வக்ரகதி ஏற்படுவதுண்டு. வக்ரத்திலுள்ள கிரகங்கள் உச்ச பலத்தைத் தருமென்று ஒரு சாரார் கூறுவர். ஆனால் புதன் வக்ரகதியில் இருந்தால் மனக்குழப்பம் தருவார் என்பதால், ஜாதகத்தில் புதன் வக்ரம் பெறாமலிருப்பது சிறப்பு.
3. சூரியன் அல்லது புதனுக்கு ராகு- கேது, சனி சம்பந்தம் இருக்கக்கூடாது. சூரியனோ, புதனோ ராகு- கேது, சனி சாரம் பெறக் கூடாது.
4. சூரியன், புதனை நோக்கிச் சென்றால், தந்தை அதிக புத்திசாலி; கல்வியில் சிறந்து விளங்குபவர்; கணித நுண்ணறிவுடையவர்; நிர்வாகப் பதவியில் இருப்பார் அல்லது சிறந்த வியாபாரி. அதேபோல் குழந்தையும் தந்தைக்கு இணையாக சகல செயல்களிலும் வல்லமை பெறும்.
5. சூரியன், புதனை நோக்கிச் செல்லும் அனைவருக்கும் பாவக, காரக, ஆதிபத்தியரீதியாக ஏதாவது ஒருசில நன்மை உண்டாகும்.
6. புதன் சூரியனை நோக்கிச் சென்றால் தந்தைக்கு படிப்பறிவுக் குறைவு, அடிமைத் தொழில், படிப்புக்கு சம்பந்தமில்லாத வேலை அமையும். அதேபோல் குழந்தைக்கும் கல்வியில் ஞானக்குறைவு ஏற்படும்.
7. சூரியன், புதன் சேர்க்கைக்கு குரு சம்பந்தம் இருந்தால் இவர்கள் பெயர், புகழ் பத்திரிகைகள், தொலைக்காட்சிமூலம் வெளியுலகிற்குத் தெரியும்.
8. புதன் ஒருவரே மறைவு ஸ்தானங் களான 3, 6, 8, 12-ல் இருக்கும்போது நற்பலனைத் தருவார். மறைந்த புதன் நிறைந்த பலனுண்டு. இவர் சூரியனுடன் சேர்ந்து ஒரே ராசியில் இருக்கும்போது புதாதித்ய யோகம் உண்டாகும். சூரியன், புதன் ஆகியோரின் பலம், ஆதிபத்தியம் சுப- அசுபர்களின் இணைவு, பார்வை ஆகியவற்றின் தன்மையைப் பொருத்து பலன்களின் அளவு கூடவோ குறையவோ செய்யும்.
இனி 12 லக்னத்தினருக்கும் புதாதித்ய யோகத்தால் ஏற்படும் சுப- அசுபங்களைப் பார்க்கலாம்.
மேஷம்
இவர்களுக்கு சூரியன் 5-ஆமதிபதி. புதன் 3, 6-ஆமதிபதி. 15 வயதிற்குமேல் கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். உயர்கல்விக்கு இடம்பெயர்ந்து செல்வார்கள். வங்கியில் கல்விக்காகக் கடன் பெறுவார்கள். முக்கியப் பிரமுகராக- ராஜதந்திரியாக விளங்குவார்கள். பத்திரிகைத் துறை, எழுத்துத் துறையில் ஆர்வம் மிகுதியாக இருக்கும். அரசாட்சி, பொதுமக்கள் தொடர்பு, மற்றோரைக் கவருகின்ற ஆற்றலைப் பெறுவார்கள். பூர்வீகச் சொத்தை கடனுக்காக இழப்பார்கள். பூர்வீகச் சொத்து தொடர்பான விஷயத்தில் தந்தையின் ஆதரவு குறைவுபடும்.
சிலர் இளைய சகோதரருக்கு பூர்வீகச் சொத்தை விட்டுக்கொடுக்க வேண்டிய நிலையிருக்கும். பூர்வீகச் சொத்திற்கு முறையான ஆவணங்கள் இருக்காது. சிலருக்கு சொத்தில் எல்லைத் தகராறு இருக்கும்.
பரிகாரம்
மேஷ லக்னத்தினர் ஞாயிற்றுக்கிழமை காலை 8.00-9.00 மணிவரையான புதன் ஓரையில் சிவனுக்கு வில்வமாலை அணிவித்து வழிபட, புதாதித்ய யோகத்தால் நற்பலன் உண்டாகும்.
ரிஷபம்
ரிஷப லக்னத்தினருக்கு புதன் 2, 5-ஆமதிபதி. சூரியன் 4-ஆமதிபதி. 12 லக்னத்த வர்களில் புதாதித்ய யோகத்தால் மிகுந்த நற்பலன் பெறுபவர்கள் ரிஷப லக்னத்தினர் என்றால் அது மிகையாகாது. ஆரம்பக் கல்வியிலிருந்து உயர்கல்விவரை தொடர்ந்து நன்றாகப் படித்து பதக்கங்கள் பெறுவார்கள். கற்ற கல்விக்குத் தொடர்பான உத்தியோகம், தொழிலில் இருப்பவர்கள். விவசாயம் மற்றும் கால்நடைப் பண்னைகள்மூலம் பெரும் பணம் சம்பாதிப்பார்கள். கல்வி நிறுவனங்கள் நடத்துவார்கள் அல்லது பணிபுரிவார்கள் அல்லது ஞானோபதேசம் செய்வார்கள். பேச்சை மூலதனமாகக்கொண்ட தொழிலில் கொடிகட்டிப் பறப்பார்கள். மூளையை மூலதனமாகக்கொண்ட ஏஜென்ஜி, கன்சல்டிங் நிறுவனங்கள், பங்கு வர்த்தகத்தில் மிகுதியாக சம்பாதிப்பார்கள்.
பூர்வீகச் சொத்தை சுகந்திரமாக அனுபவிப் பார்கள். வம்சாவளியாக குலத்தொழிலில் முத்திரை பதிப்பவர்கள்.
பரிகாரம்
வெள்ளிக்கிழமை காலை 7.00-8.00 மணி வரையான புதன் ஓரையில் சிவ பெருமானை வழிபட பிரம்மாண்டமான வளர்ச்சியுண்டு!
தொடர்ச்சி அடுத்த இதழில்...
செல் : 98652 20406