எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,

வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

ன்புள்ள நேயர்களே! தற்போது ஏற்பட வுள்ள சர்ப்ப கிரகங்கள் பெயர்ச்சியால், திருக்கணிதப் படி 12-4-2022 செவ்வாய் பகல் 1.48 மணிமுதல் 30-10-2023 பகல் 4.35 மணிவரை ராகு மேஷத்தி லும், கேது துலாத்திலும் சஞ்சாரம் செய்ய இருக்கின் றன. (வாக்கியப்படி 21-3-2022 திங்கட்கிழமை பகல் 2.52 மணிமுதல் 8-10-2023 மாலை 3.29 மணி வரை). இதனால் 12 ராசி நேயர்களுக்கும் உண்டாகப் போகும் பலன்களை இங்கு வழங்கியுள்ளேன்.

Advertisment

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

தற்போது ஏற்படவுள்ள சர்ப்பகிரகப் பெயர்ச்சியால் ராகு ஜென்ம ராசியிலும், கேது 7-லும் சஞ்சாரம் செய்யவுள்ளனர். சிலநேரங்களில் உங்கள் நிதானத்தை இழக்கநேரிடும் என்பதால் எதைச் செய்தாலும் யோசித்துச் செய்வது நல்லது. முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு பொறுமையுடன் செயல்பட்டால் தான் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகக்கூடிய காலமென்பதால் விட்டுக்கொடுத்து நடப்பது சிறப்பு. குறிப்பாக புதுமணத் தம்பதிகள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். திருமண சுபகாரியங் களுக்கான முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் அலர்ஜி பிரச்சினை, மனைவிக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால், எதிலும் கவனத்துடன் இருக்கவும்.

Advertisment

குரு 22-4-2023 வரை 12-லும், அதன்பின்பு ஜென்ம ராசியிலும் சஞ்சாரம் செய்வ தால், பணவரவு களில் ஏற்றத் தாழ்வுகள்தான் இருக்குமே தவிர, தாராள வரவு களை எதிர் பார்க்க முடி யாது. ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொண்டு கையில் இருப்பதை வைத்து செலவுசெய்தால் நிலைமையை சமாளிக்க முடியும். கொடுக்கல்- வாங்க -ல் பெரிய தொகைகளைப் பிறருக் குக் கடனாகக் கொடுப்பது, வாக்குறுதியளிப்பது, முன்ஜாமின் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்ப்பது உத்தமம். 2023 ஏப்ரலுக்குப்பிறகு ஜென்ம ராசியில் குரு சஞ்சரிக்கும்போது 5, 7, 9-ஆம் வீடுகளைப் பார்க்கும் என்பதால், திருமண சுபகாரிய முயற்சிகள் எளிதில் கைகூடும் யோகமும், பிள்ளைகள்மூலம் நற்பலனும் கிடைக்கும்.

சனி 10-ல் சஞ்சரிப்பதால் தொழில், உத்தி யோகத்தில் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வது நல்லது. சிறிதுகாலம் பொறுமையுடன் இருந்தால் 17-1-2023 முதல் சனி 11-ல் சஞ்சாரம் செய்யும் காலத்தில் தொழில், உத்தியோகரீதியாக நல்ல முன்னேற் றம், பொருளாதாரரீதியாக சிறப்பான நிலை ஏற்படும். ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி வணங்குவது, விநாயகரை வழிபடுவது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது நல்லது.

rr

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

தற்போது ஏற்படவுள்ள மாற்றத்தால் ராகு 12-லும், கேது 6-லும் சஞ்சாரம் செய்யவுள்ளதால் உங்கள் வாழ்வில் நல்ல தொரு மாற்றங்கள் உறுதியாக ஏற்படும். குடும்பத்தில் இருந்துவந்த பிரச்சினைகள் படிப்படியாகக் குறைந்து கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். குடும்பத்தைவிட்டுப் பிரிந்திருப்பவர் களுக்கு குடும்பத்துடன் இணையும் நிலை உண்டாகும். உற்றார்- உறவினர் களிடம் இருந்த மனக்கசப்புகள் விலகி சுமுக நிலை நிலவும். உங்கள் பலம் அதிகரித்து இதுவரை இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் முழுமையாக மறையும்.

குரு 13-4-2022 முதல் 22-4-2023 வரை 11-ல் சஞ்சாரம் செய்யவுள்ளதால், பணவரவுகள் சிறப் பாக அமைந்து குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கொடுத்த வாக்குறுதிகளைக் குறித்த நேரத்தில் காப்பாற்றமுடியும். திருமண சுபகாரியங் கள் கைகூடும். புத்திரவழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். சொந்த வீடு, வாகனம் வாங்கும் முயற்சி வெற்றிபெறும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காணலாம். தொழில், வியா பாரம் செய்பவர்கள் படிப்படி யான வளர்ச்சியை அடையமுடியும். கூட்டாளிகளும் தொழிலாளர் களும் ஆதரவாக செயல்படுவார் கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் சிந்தித்து செயல்பட்டால் எதிர்பார்க்கும் உயர்வினை அடைய லாம். குரு 22-4-2023 முதல் 12-ல் சஞ்சரிக்கவுள்ள தால் இக்காலத்தில் பொருளாதாரரீதியாக சற்று தேக்கங்கள் ஏற்படும் என்பதால், பண விஷயத்தில் சிக்கனத்துடன் இருக்கவும்.

உங்கள் ராசிக்கு சனி 9-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படமுடியும். வெளியூர்த் தொடர்புகள்மூலம் நற்பலனை அடையும் யோகமுண்டு. 17-1-2023 முதல் ஜீவன ஸ்தானமான 10-ல் சனி சஞ்சரிக்கவுள்ள காலத்தில் தொழில், வியாபாரத்தில் சிந்தித்து செயல்படுவது நல்லது. ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது நல்லது.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

தற்போது ஏற்படவுள்ள பெயர்ச்சியால் ராகு 11-லும், கேது 5-லும் சஞ்சாரம் செய்யவிருப்பதால், எதிர்நீச்சல் போட்டாவது இலக்கை அடைந்து விடுவீர்கள். எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்துவிட முடியும். பணவரவுகள் ஏற்ற- இறக்கமாக இருக்கும். தேவையற்ற செலவுகளைக் குறைத்துக்கொண்டால் மட்டுமே விரயங்களைத் தவிர்க்கமுடியும். கேது 5-ல் இருப்பதால் வயிறு பாதிப்பு, உற்றார்- உறவினர்களிடம் கருத்து வேறுபாடு, பூர்வீக சொத்துரீதியாகப் பிரச்சினை, குடும்பத்தில் பிள்ளைகளால் நிம்மதிக்குறைவு ஏற்படலாம். உணவு விஷயத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது.

13-4-2022 முதல் 22-4-2023 வரை குரு 10-ல் சஞ்சாரம் செய்வதால் தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் புதிய முயற்சிகளில் சற்று நிதானம் தேவை. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. வேலைப் பளு சற்று அதிகப்படியாக இருக்கும். உழைப்பிற்கான பலனை அடைய இடையூறு ஏற்படும். குரு 22-4-2023 முதல் 11-ல் சஞ்சரிக்க இருப்பது அற்புதமான அமைப்பென்பதால் குரு மாற்றத்திற்குப்பிறகு பண வரவுகளில் முன்னேற்றம் ஏற்படும். கடன்கள் குறையும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். தொழிலில் இருந்த பிரச்சினைகள் குறைந்து லாபம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள், ஊதிய உயர்வுகள் கிடைக்கும். தற்போது அஷ்டமச்சனி நடைபெறு வதால் உடல்நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, உற்றார்- உறவினர்களை அனு சரித்துச் செல்வது நல்லது. 29-4-2022 முதல் 12-7-2022 வரை அதிசாரமாகவும், அதன்பின்பு முழுமையாக 17-1-2023 முதல் சனி 9-ல் சஞ்சரிக்கவிருக்கும் காலத்தில் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நெருக்கடிகள் விலகும் அமைப்பு உண்டாகும். சதுர்த்தி விரதங்கள் இருப்பது, அனுமனையும், விநாயகரையும் வழிபடுவது, தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபமேற்றி, மஞ்சள்நிற வஸ்திரம் செலுத்தி வழிபடுவது நல்லது.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

சர்ப்ப கிரகப் பெயர்ச்சியால் கேது 4-லும், ராகு 10-லும் சஞ்சாரம் செய்வதும், சனி 7-ல் சஞ்சாரம் செய்வதும் அவ்வளவு சாதகமான அமைப்பென்று கூறமுடியாது. தேவையில்லாத அலைச்சல், வேலைப்பளு காரணமாக உடல் அசதி, இருப்பதை அனுபவிக்க இடையூறு ஏற்படும். உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்வது, விட்டுக்கொடுத்து நடந்துகொள்வது நல்லது. ஆடம்பர செலவுகளைக் குறைத் துக்கொள்வது உத்தமம். அசையும்- அசையா சொத்துகளால் சுபச் செலவுகளை சந்திப்பீர்கள்.

ராகு- கேது சாதகமற்று இருந்தாலும், குரு 22-4-2023 வரை 9-ல் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால், உங்களது பொருளாதார நிலை சிறப்பாகவே இருக்கும். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம்காண முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு லாபங்கள் கிடைப்பது மட்டுமின்றி தொழிலை அபிவிருத்தி செய்யும் யோகமும் உண்டாகும். கூட்டாளிகளையும், வேலையாட்களையும் அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருந்தாலும் அதற்கான ஆதாயத்தை அடைவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் ராசிக்கு 7-ல் சஞ்சரிக்கும் சனி 29-4-2022 முதல் 12-7-2022 வரை அதிசாரமாகவும், அதன்பின்பு முழுமையாக 17-1-2023 முதல் உங்கள் ராசிக்கு 8-ல் சஞ்சரித்து அஷ்டமச்சனி நடைபெறவிருப்பதால், உங்கள் உடல்நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. 2023-ஆம் ஆண்டு ஏப்ரல்வரை பல்வேறு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். என்றாலும், 22-4-2023 முதல் குரு 10-ல் சஞ்சரிக்கவுள்ளதாலும், அக்காலத்தில் அஷ்டமச்சனியும் நடக்கும் என்பதாலும் பொருளாதாரரீதியாக சற்று நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். எதிலும் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி வழிபடுவது, விநாயகரை வழிபடுவது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது நல்லது.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)

தற்போது ஏற்படவுள்ள பெயர்ச்சியால் ஜென்ம ராசிக்கு 3-ல் கேது, 9-ல் ராகு சஞ்சாரம் செய்வது மிகவும் சிறப் பான அமைப்பாகும். சனி 17-1-2023 வரை 6-ல் ஆட்சிபெற்று சஞ்சரிப்பதும் சிறப் பென்பதால் நீங்கள் நினைத்த காரியங்கள் எல்லாம் நிறைவேறி சகலவிதத்திலும் மேன்மைகளை அடைவீர்கள். இதுநாள் வரை இருந்த அலைச்சல்கள் குறைந்து மனநிம்மதி ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உற்றார்- உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். பணவரவுகள் சிறப்பாக இருந்து தேவைகள் யாவும் பூர்த்தியாகும். அசையும்- அசையா சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகள் யாவும் ஒரு முடிவுக்கு வரும். தொழில், வியாபாரம் செய்பவர் களுக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும்.

கூட்டாளிகளையும் தொழிலாளர் களையும் அனுசரித்து நடந்துகொண் டால் அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ள முடியும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்பு கள்மூலம் லாபம் கிடைக்கும். குரு உங்கள் ராசிக்கு 8-ல் 22-4-2023 வரை சஞ்சரிப்பதால், பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனமுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றி நல்லபெயர் எடுப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு இருந்த வேலைப்பளு குறைந்து உயர்வுகளும், நல்ல வாய்ப்புகளும் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு அனுகூலமான பலன் ஏற்படும். சிலர் நீண்டநாட்களாக எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைத்து குடும்பத்துடன் இணைவார்கள்.

22-4-2023 முதல் 9-ல் குரு சஞ்சரிக்க விருப்பது உங்கள் பலத்தை மேலும் அதிகரிக்கும் அமைப்பாகும். இக்காலத்தில் பொருளாதாரநிலை மிகச்சிறப்பாக இருந்து வாழ்வில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக் கடலையை மாலையாகக் கோர்த்து அணிவித்து, மஞ்சள்நிற மலர் களால் அலங்கரித்து, நெய்தீபமேற்றி வழிபடவும்.

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

தற்போது ஏற்படவுள்ள மாற்றத்தால் சர்ப்ப கிரகங்களான கேது 2-லும், ராகு 8-லும் சஞ்சாரம் செய்யவிருப்பதால், குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பிருப்ப தால் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. உற்றார்- உறவினர்களிடம் பேச்சில் பொறுமை யுடன் நடந்தால் மட்டுமே சிறுசிறு சிக்கல் களை சமாளிக்கமுடியும். உடல் ஆரோக்கியத் தில் கவனமுடன் இருப்பது, உணவு விஷயத் தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது.

13-4-2022 முதல் 22-4-2023 வரை குரு 7-ல் ஆட்சிபெற்று சஞ்சரிப்பதால் உங்களது பொளாதாரநிலை அற்புதமாக இருக்கும். கடன்கள் குறையும். திருமண சுபகாரியங்கள் எளிதில் கைகூடும். புத்திரவழியில் மகிழ்ச்சியளிக்கும் நிகழச்சிகள் நடைபெறும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்ட முதலீட்டை எடுப்பது மட்டு மின்றி, தொழிலை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புண்டு. கூட்டாளிகளின் ஆதரவால் நற்பலன்கள் அதிகரிக்கும். வேலையாட்கள் சரியான நேரத்திற்கு கிடைக்காத காரணத் தால் நீங்கள் நேரடியாக சில நேரங்களில் வேலை செய்யவேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும், வேலைப்பளு காரணமாக உடல் அசதி ஏற்படும். சனி உங்கள் ராசிக்கு 29-4-2022 முதல் 12-7-2022 வரை அதிசாரமாகவும், அதன்பின்பு முழுமையாக 17-1-2023 முதல் 6-ல் சஞ்சரிக்கவிருப்பது உங்களுக்கு மிகப் பெரிய அதிர்ஷடத்தைத் தரும் அமைப் பாகும்.

22-4-2023 முதல் குரு 8-ல் சஞ்சரிக்க விருப்பதால் பொருளாதாரரீதியாக சற்று தேக்கத்தை ஏற்படுத்தும் அமைப்பென்றா லும், 17-1-2023 முதல் சனி 6-ல் ஆட்சி பெற்று சஞ்சரிக்கவிருப்பதால் எதையும் எதிர்கொண்டு பல்வேறு வளமான பலன்களை அடைவீர்கள். ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி, கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, விநாயகரை வழிபடுவது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது நல்லது.

துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

தற்போது ஏற்படவுள்ள பெயர்ச்சியால் கேது ஜென்ம ராசியிலும், ராகு 7-லும் சஞ்சரிப்பது சற்று சாதகமற்ற அமைப்பென்ப தால் கணவன்- மனைவி விட்டுக்கொடுத்துச் செல்வது, நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வதன்மூலம் சிறுசிறு சிக்கல்களை எதிர்கொள்ள முடியும். கடந்தகால உடல் நிலை பாதிப்பு விலகுமென்றாலும், உணவு விஷயத்தில் கவனத்துடன் இருப்பது நல்லது. பெற்றோர்களின் ஆதரவுமூலம் குடும்பத்தில் நல்லது நடக்கும் வாய்ப்புண்டாகும். சனி 17-1-2023 வரை 4-ல் சஞ்சரித்து அர்த் தாஷ்டமச்சனி நடப்பதால் தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறு, அசையும் அசையா சொத்து வழியில் சுபச் செலவுகள் ஏற்படும்.

13-4-2022 முதல் 22-4-2023 வரை குரு 6-ல் சஞ்சரிப்பதால் உங்களது பொருளாதாரநிலை ஏற்ற- இறக்கமாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத் தும்போது சற்று கவனம் தேவை. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்குப் போட்டிகள் அதிகரிக்கும் என்பதால், கையிலிருக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பாதுகாத்துக் கொள்வது நல்லது. கூட்டாளிகளையும், வேலையாட்களையும் அனுசரித்துச் செல்லவும். அதிக முதலீடுகொண்ட செயல் களில் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் நிம்மதியற்ற நிலை ஏற்படும். வேலைப்பளு அதிகமாக இருப்பதால் உடல்நிலை சோர்வடையும். எடுக்கும் பணிகளைத் திறம்பட செயல்படுத்த முடியாத நிலை ஏற்படும். புதிய வேலை தேடுபவர்கள் தற்போது கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டால், எதிர்காலத்தில் நல்ல நிலையை அடையமுடியும். தற்போது சில நெருக்கடிகளை எதிர்கொண்டாலும் 22-4-2023 முதல் குரு 7-ல் சஞ்சரிக்கவிருப்பதால் பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு தாராள தனச் சேர்க்கை உண்டாகும். கடன்கள் குறையும். தொழில், உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த இடையூறுகள் விலகி நல்லது நடக்கும். விநாயகரை வழிபடுவது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது நல்லது. ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்யவும். சனிக்கிழமைகளில் சனிக்கு எள்தீபமேற்றி வழிபடுவது நல்லது.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

உங்கள் ராசிக்கு 1, 7-ல் சஞ்சரித்த சர்ப்ப கிரகங்கள் தற்போது ஏற்படும் பெயர்ச்சியின்மூலம் ராகு 6-லும், கேது 12-லும் சஞ்சாரம் செய்யவிருப்பது சிறப் பான அமைப்பாகும். உடல்நிலை சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு நல்லபெயர் எடுப்பீர்கள். சமுதாயத்தில் கௌரவப் பதவிகள் தேடிவரும். குடும்பத்தில் நிலவிய கடந்தகால கருத்து வேறுபாடுகள் படிப்படியாகக் குறைந்து கணவன்- மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். நெருங்கியவர்கள் மற்றும் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு திருப்திகரமாக அமைந்து ஏற்றங்களை அடைவீர்கள். உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் யாவும் மறையும். சனி 17-1-2023 வரை 3-ல் சஞ்சரிப்பது உங்கள் பலத்தை மேலும் அதிகரிக்கும் அமைப்பாகும்.

22-4-2023 வரை குரு 5-ல் சஞ்சரிப்பதால் பண வரவுகள் சிறப்பாக இருந்து கடன்கள் யாவும் குறையும். திருமண சுபகாரியங்கள் கைகூடும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சிலருக்கு அசையும்- அசையா சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிக்கும். கூட்டாளிகளும், தொழிலாளர்களும் உங்களுக்கு உறுதுணையாக செயல்படுவதால் அபிவிருத்தி பெருகும். எதிர்பார்க்கும் நல்ல வாய்ப்புகளும் தேடிவரும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளும், இட மாற்றங்களும் கிடைக்கப்பெற்று குடும்பத் தோடு சேர்ந்து மகிழ்வர். உயரதிகாரிகளின் ஆதரவும், உடன்பணிபுரிபவர்களின் ஒத்து ழைப்பும் மனநிம்மதியை ஏற்படுத்தும்.

17-1-2023 முதல் 4-ல் சனி சஞ்சரிக்க வுள்ளதால் அர்த்தாஷ்டமச்சனி நடைபெற விருப்பதாலும், 22-4-2023 முதல் குரு உங்கள் ராசிக்கு 6-ஆம் வீட்டில் சஞ்சரிக்கவுள்ள தாலும் இக்காலத்தில் பொருளாதாரரீதியாக நெருக்கடி, தேவையற்ற சிக்கல்கள் ஏற்பட லாம் என்பதால், சற்று முன்னெச்சரிக்கை யுடன் செயல்படுவது நல்லது. ராகு 6-ல் வலுவாக சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக் கும் பலம் கிடைக்கும். விநாயகரை வழிபடு வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது நல்லது.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

தற்போது ஏற்படும் பெயர்ச்சிமூலம் ராகு 5-லும், கேது 11-லும் சஞ்சரிப்பதால் நீங்கள் எந்த செயலில் ஈடுபட்டாலும் சற்று சிந்தித்து செயல்பட்டால் நற்பலனை அடையமுடியும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனம் எடுத்துக்கொண்டால் அன்றாடப் பணிகளில் திறம்பட செயல்படமுடியும். உணவு விஷயத்தில் மிகவும் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. பூர்வீக சொத்துரீதியாக பங்காளிகளிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படும். எவ்வளவு நெருக்கடிகள் இருந்தாலும் எதிர்நீச்சல் போட்டாவது அடையவேண்டிய இலக்கை அடைந்துவிடுவீர்கள்.

13-4-2022 முதல் 22-4-2023 வரை குரு 4-ல் சஞ்சரிப்பதால் பொருளாதாரநிலை ஏற்ற- இறக்கமாக இருக்கும் என்றா லும், எதிர்பாராத உதவிகள்மூலம் அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாகும். தொழில், வியாபாரத்தில் தற்போதுள்ள வாய்ப்புகளைத் தக்கவைத்துக்கொண்டு சற்று கடினமாக உழைத்தால் படிப்படியான முன்னேற்றங்களை அடையமுடியும். அதிக முதலீடு கொண்ட செயல்களைத் தற்காலிகமாக தள்ளிவைக்கவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு சற்று கூடுதலாக இருக்கும். உங்கள் திறமைகளை வெளிபடுத்த நல்ல சந்தர்ப்பங்கள் கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களிடம் பேச்சில் பொறுமையுடன் இருப்பது, குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது நல்லது.

ராசிக்கு 2-ல் சஞ்சரிக்கும் சனி அதிசாரமாக 29-4-2022 முதல் 12-7-2022 வரையும், முழுமையாக 17-1-2023 முதல் 3-ல் சஞ்சரிக்க இருப்பது சிறப்பென்பதால் உங்கள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படும். அதுமட்டுமல்லாமல் குரு 22-4-2023 முதல் 5-ல் சஞ்சரிக்கவிருப்பது அற்புதமான அமைப்பாகும். 2023-ல் உங்கள் வாழ்வில் மிகப்பெரிய முன்னேற் றங்கள் ஏற்படும். சுபகாரியங்கள் கைகூடும். தொழில், உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம், பொருளாதார நிலையில் மேன்மை உண்டாகும். ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி வழிபடவும். ஆஞ்சனேயரை வழிபடுவது, சனிக்கிழமைதோறும் சனி பகவானுக்கு எள்தீபமேற்றுவது நல்லது.

மகரம்

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

தற்போது ஏற்படவுள்ள நிழல்கிரகப் பெயர்ச்சியால் ராகு 4-ல், கேது 10-ல் சஞ்சாரிக்கவுள்ளது அவ்வளவு சாதகமான அமைப்பென்று கூறமுடியாது. இதே நேரத்தில் ஏழரைச்சனி நடைபெற விருப்பதும், குரு உங்கள் ராசிக்கு 3-ல் 22-4-2023 வரையும், அதன்பின்பு 4-ல் சஞ்சரிக்கவிருப்பதாலும் நீங்கள் எதிலும் நிதானமாக செயல்படவேண்டிய காலமாகும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, சிறு பிரச்சினை என்றாலும் உடனே மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது நல்லது. மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள மருத்துவக் காப்பீடு எடுப்பது உத்தமம்.

பொருளாதாரத்தில் ஏற்ற- இறக்கமான நிலையிருக்கும். பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பது, அதிக முதலீடுகொண்ட செயல்களைத் தற்போதைய காலத்தில் செய்யாமல் தவிர்ப்பது நல்லது. எந்தவொரு செய-லும் கையிருப்பைக்கொண்டு செலவு செய்வதும், கடன் வாங்குவதை முடிந்தவரை தவிர்ப்பதும் நல்லது. பொருளாதார நெருக்கடிகள் இருந்தாலும், திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் ஏற்படும், கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். வேலையாட்கள் சரியாக ஒத்துழைக்க மாட்டார்கள் என்பதால், எதிலும் முன்னின்று செயல்படுவது நல்லது. கூட்டாளிகளின் ஒத்துழைப்பு சிறப் பாக இருப்பதால், அவர்களை சார்ந்து செயல் பட்டால் அனுகூலங்களை அடையமுடியும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு காரணமாக உடல் அசதி ஏற்படும். உங்கள் பணிகளை சற்று தாமத மாக முடித்தாலும் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். உழைப்பிற்கான ஊதியம் தற்போது கிடைக்காவிட்டாலும், பணியில் மதிப்பும் மரியாதையும் இருக்கும். முடிந்தவரை கிடைக்கும் வாய்ப்புகளைத் தவறவிடாமல், எந்த பணியிலும் முனைப்புடன் செயல்பட் டால் 2023 ஜனவரிக்குப்பிறகு நல்ல வளர்ச்சியை அடையமுடியும். ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி வழிபடவும். சனி பகவானுக்கு எள் தீபமேற்றுவது நல்லது. தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

கும்பம்

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

தற்போது ஏற்படவுள்ள கிரக மாற்றத் தால் ராகு 3-லும், கேது 9-லும் சஞ்சாரம் செய்வது மிகவும் சிறப்பான அமைப்பென்ப தால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிமேல் வெற்றிகளைப் பெறுவீர்கள். நினைத்த காரியங்கள் யாவும் நினைத்தபடி நிறைவேறும். கடந்தகால அலைச்சல், டென்ஷன் எல்லாம் விலகி நிம்மதியான நிலை ஏற்படும். சிலருக்கு வெளியூர்ப் பயணங்களால் மேன்மைகள் ஏற்படும். அன்றாட செயல்களில் திறம்பட ஈடுபடுவீர்கள். கடந்தகால வீண் செலவுகள் குறையும். மனைவி, பிள்ளைகளும் சுபிட்சமாக இருப்பார்கள். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான நிலையிருக்கும். உற்றார்- உறவினர்களின் வருகையால் நற்பலன்கள் ஏற்படும். பிரிந்த சொந்தங்களும் தேடிவந்து நட்பு பாராட்டும். சொந்த பூமி, மனை, வாகனங்கள் வாங்கும் யோகம் ஏற்படும்.

குரு 22-4-2023 வரை 2-ல் ஆட்சிபெற்று சஞ்சரிப்பதால் பண வரவுகள் மிகவும் சிறப் பாக இருக்கும். கடன்கள் நிவர்த்தியாகும். மணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடிவரும். கொடுக்கல்- வாங்கலில் லாபத்தினை அடையமுடியும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றுவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியளிக்கும். கடந்தகாலங்களில் இருந்த பொருட்தேக்கங்கள் குறைந்து லாபகரமான பலனை அடையமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் கௌரவமான நிலை ஏற்படும். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக் கும். வேலைப்பளு குறையும். உங்களுக்கு ஏழரைச்சனி நடைபெறுவதால் உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, அதிக முதலீடுகளில் கவனமாக செயல்படுவது நல்லது.

குரு 22-4-2023 முதல் 3-ல் சஞ்சரிக்க விருப்பதால் பொருளாதார நிலையில் ஏற்ற- இறக்கமாக நிலை இருக்கும் என்றா லும், ராகுவின் சாதகமான சஞ்சாரத்தால் எதையும் சமாளித்து முன்னேற்றங்களை அடைவீர்கள். விநாயகரையும், ஆஞ்சனேயரையும் வழிபடுவது, சனிக்கிழமைதோறும் சனி பகவானுக்கு எள்தீபமேற்றுவது நல்லது

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

தற்போது ஏற்படும் கிரக மாறுதலால் ராகு 2-லும், கேது 8-லும் சஞ்சரிக்கவுள்ளதால் வரும் நாட்களில் எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ளவேண்டிய காலமாகும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருந்தால் சிறுசிறு பிரச்சினைகளைத் தவிர்க்கமுடியும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய காலமென்பதால் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. குடும்ப விஷயங்களை மற்றவர் களிடம் பகிர்ந்துகொள்ளாதிருப்பது உத்தமம்.

உங்கள் ராசிக்கு 11-ல் சனி 17-1-2023 வரை சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலம் ஏற்படும். தொழிலில் லாப கரமான பலனை அடையமுடியும். பொருளாதாரநிலை சிறப்பாக இருந்து அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல நிலையும், கௌரவப் பதவியை அடையும் வாய்ப்பும் உண்டாகும். சனி 17-1-2023 முதல் 12-ல் சஞ்சரிக்கவிருப்பதால், உங்களுக்கு ஏழரைச்சனி தொடங்குவதால், சனி மாற்றத் திற்குப்பிறகு ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வது, அதிக முதலீடு கொண்ட செயல்களில் கவனத்துடன் இருப்பது நல்லது.

குரு 13-4-2022 முதல் 22-4-2023 வரை ஜென்ம ராசியில் சஞ்சரித்து 5, 7, 9 ஆகிய ஸ்தானங்களைப் பார்ப்பதால், சுபகாரியங் களில் நிலவிய தடைகள் விலகி நல்லது நடக்கும். பொருளாதாரநிலை நன்றாக இருந்தாலும் எதிலும் சற்று சிக்கனத்துடன் இருப்பது, ஆடம்பர செலவுகளைக் குறைத் துக்கொள்வது நல்லது. 22-4-2023 முதல் குரு 2-ல் சஞ்சரிக்கவிருப்பது மிகவும் அற்புத மான அமைப்பென்பதால், அக்காலத் தில் ஏழரைச்சனி நடைபெற்றாலும் பணவரவு களில் அனுகூலங்கள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் சற்று முன்னேற்றங்களை அடையமுடியும். உத்தியோகத்திலுள்ள பிரச்சினைகள் விலகி நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ராகு காலத்தில் துர்க்கையம்ம னுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி, கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்யவும். விநாயகரை வழிபடுவது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது நல்லது.