கிரக பார்வை பலன்கள்! -அஸ்ட்ரோ பாபு

/idhalgal/balajothidam/benefits-planet-vision-astro-babu

கிரக பார்வை பாகம் - 1

கிரகப் பார்வைகள் என்பது என்ன?

சூரிய வட்டப் பாதையில் இயங்குகின்ற கிரகங்கள் ஒன்றை ஒன்று பார்த்துக் கொள்கி றதா என்ன? இதற்கு, ஒரு கிரகத்தின் கதிர் வீச்சைத்தான் பார்வைகள் என்று சொல்கிறார்கள். அப்படி பார்த்தோமானால் பல்லாயிர கணக்கான மையில்களுக்கு அப்பால் இருக்கும் கிரகம் தன கதிர் வீச்சை பூமியில் செலுத்தும்போது, பூமியில் இருக்கும் ஜீவராசிகள் அனைத்திருக் கும் பொதுவாகத்த்தானே கிடைக்கவேண்டும். அப்படி கிடைத்தால் அனைவரும் ஒரே குண செயல்பாடுகளை உடையவர்களாகத்தானே இருப்பார்கள்? நிஜத்தில் அவ்வாறு இல்லையே. இது ஏன்?' இது போன்ற கேள்விகள் என் மனதில் எழுந்த வண்ணமே இருந்தன.

இந்த கேள்விகளை என்னுள் விதைத்துத் தேடி, என் குருமார்களின் உதவியோடு நான் உணர்ந்த விஷயங்களை இங்கே கொடுத்து இருக்கிறேன்,.

குரு 5, 7, 9, சனி 3, 7, 10 செவ்வாய் 4, 7, 8 மற்ற கிரகங்கள் அனைத்திற்கும் 7-ஆம் பார்வை. இது

கிரக பார்வை பாகம் - 1

கிரகப் பார்வைகள் என்பது என்ன?

சூரிய வட்டப் பாதையில் இயங்குகின்ற கிரகங்கள் ஒன்றை ஒன்று பார்த்துக் கொள்கி றதா என்ன? இதற்கு, ஒரு கிரகத்தின் கதிர் வீச்சைத்தான் பார்வைகள் என்று சொல்கிறார்கள். அப்படி பார்த்தோமானால் பல்லாயிர கணக்கான மையில்களுக்கு அப்பால் இருக்கும் கிரகம் தன கதிர் வீச்சை பூமியில் செலுத்தும்போது, பூமியில் இருக்கும் ஜீவராசிகள் அனைத்திருக் கும் பொதுவாகத்த்தானே கிடைக்கவேண்டும். அப்படி கிடைத்தால் அனைவரும் ஒரே குண செயல்பாடுகளை உடையவர்களாகத்தானே இருப்பார்கள்? நிஜத்தில் அவ்வாறு இல்லையே. இது ஏன்?' இது போன்ற கேள்விகள் என் மனதில் எழுந்த வண்ணமே இருந்தன.

இந்த கேள்விகளை என்னுள் விதைத்துத் தேடி, என் குருமார்களின் உதவியோடு நான் உணர்ந்த விஷயங்களை இங்கே கொடுத்து இருக்கிறேன்,.

குரு 5, 7, 9, சனி 3, 7, 10 செவ்வாய் 4, 7, 8 மற்ற கிரகங்கள் அனைத்திற்கும் 7-ஆம் பார்வை. இது ஜோதிட நூல்கள் உரைக்கின்ற விஷயம்.

dd

நான் ஏற்கெனவே என்னுடைய கட்டுரைகளில் தொடர்ந்து எழுதிவருகிற விஷயம் ஜோதிடம் என்பது எங்கோ மோடி மஸ்தான் வேலை செய்கிறது என்றில்லாமல் ஜோதிடம் இயங்குவது நம்முள்தான் பிரபஞ்ச சக்தியில் ஒவ்வொரு கிரகத்தின் சக்திகளும் கலந்தேதான் இருக்கிறது, மிக எளிதாக உரைப்பின், ஒரு 4 அல்லது 5 ரசாயனங் கள் ஒன்றாக கலக்கும்போது ஒவ்வொரு ரசாயனமும் தனித்தன்மையையும் அதே நேரத்தில் ஒன்றாக இணையும்போது ஒரு பொது தன்மையையும் தோற்றுவிக்கும்தானே. அவ்வாறே தான் சூரிய வட்ட பாதையில் ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு சக்தியை பிரபஞ்சத்தில் வெளிப்படுத்திகொண்டே இருக்கிறது. அவ்வாறு வெளிப்படுத்தும் சக்திகளின் மூலத்தில் இருந்துதான் நாம் தோன்றி இருக்கிறோம்.

அவ்வாறு நம் மூல சக்திகளே நாம் இருக்கும் பூமி இயங்குகிற சூரிய பாதையின் தாக்கம், இந்த கிரக உற்பத்தியான நம்முள், எவ்வாறு வெளிப்படுகிறது என்பதன் கணக்கே ஜோதிடம் அன்றி வேறில்லை.

அவ்வாறு இயங்கும் கிரக செயல்பாடுகளை தான் கிரக காரகங்களாக மூல நூல்களில் நம் பாட்டன் முப்பாட்டன் குறிப்பிட்டுள் ளனர்.

இந்த காரங்கள் செய்லபாடுகளாக வெளிப்படுவதுதான் பார்வைகள் என குறிப்பிட்டுள்ளனர்.

கிரகப் பார்வை குருவுக்கு 5, 7, 9 சனி 3, 7, 10 செவ்வாய் 4, 7, 8 மற்ற கிரகங்களுக்கு 7-ஆம் பார்வை. ஏன் இப்படி, குரு 5, 7, 9 இயல்பான மற்றும் பொதுவான குருவின் குணாதிசியங்கள் ஆவண. நல் ஒழுக்கம், கல்வி, பராம்பரியம் காத்தல், நற்பெயர், குழந்தை, தனம் அல்லது பொருள் இவை தானே.

5 என்பது குழந்தை. நம் பராம்பரியம் தானே. குழந்தை பெறுவதற்கு உண்டான விந்தணுவின் வலிமையை கொணர்வது, நம் பராம்பரியத்தை காத்து அடுத்த சந்ததிக்கு அனுப்புவது, ஆசை போன்றவைதானே. இதுவும் குருவின் குணாதியங்கள்தானே.

7 நம் எதிரே உள்ள அனைத்துமே 7-ஆமிடம் தானே, நற்பெயர் நற்குணங்கள் பிரயோகப்படுவது 7-ஆம் இடத்திற்கு தானே. 7-ஆம் இடம் தானே இவற்றை தீர்மானமும்.

9 பாக்கியமாம், பாக்கியம் என்ற வகையில் கிடைத்தல் என பொருள் கொள்ளலாம் அல்லவா? அவ்வாறு கிடைக்க நற்குணம், நற்செயல், திடடமிடல் செயல்படுத்தல் போன்றவை தேவைதானே? அதற்கு நம் மூலையில் சிந்திக்கும் திறன் செயல்படும் திறன் ஆகியவையும் குருவின் குணாதிசயங்களே.

இந்த குணாதிசயங்கள் தான். குரு தான் இருக்கும் இடத்திலிருந்து செயல் படுத்துவார். இதைத்தான் பார்வை என்றனர்.

உதாரணமாக விருச்சிகத்தில் குரு இருப்பின் தன குண காரகமான 5-ஆமிடம், மீனம், 7-ஆமிடம் ரிஷபம் 9-ஆமிடம் கடக ராசி நிலைகளை அந்த ராசிக்கு உண்டான லக்ன, ஆதிபத்தியங்களை கொண்டும் தன் காரகங்களை, மூன்று குணாதிசயங்களை தான் இருக்கும் இடத்திலிருந்து வெளிப்படுத்துவார். இது பார்வை என உரைத்து இருக்கின்றனர். நம் முன்னோர் இதுபோலவேதான் சனிக்கும் 3, 7, 10-ஆம் பார்வைகள் சனி கர்மாக்காரகன். ஒரு கர்மம் செய்வதற்கு தன் முனைப்பு, 3-ஆமிடம் செயல்படுகிற 7-ஆமிடம் செய்யும் கர்மம் 10-ஆமிடம் என கொண்டு சனிதான் இருக்கும் இடத்திலிருந்து இந்த குணாதிசயங்களை வெளிப் படுத்துவார்.

அதேதான் செவ்வாய்க்கும் 4, 7, 8 செவ்வாய் ரத்தகாரகன் வீரியத்தை குறிப்பவன் என்பார். 4-ஆமிடம் என்பது தாய் ஸ்தானம்கூட. தன் இரத்த விருத்தியையும் அதன் செயல்பாடான சுகம் குணம், கற்பு போன்றவற்றையும் 7-ஆமிடமான செயல்படுகிற இடத்தையும் 8-ஆமிடமானா உழைப்பு, செயல்படுகிற தன்மை அல்லது விதம் போன்றவற்றை தன் குணாதிசயங்களை வெளிப்படுத் துவார்.

மற்ற கிரகங்களுக்கு அந்த கிரக காரகங்கள் செயல்படும் இடமான 7-ஆமிடத்தை பார்வையாக கொடுத்து இருக்கிறார்கள். ஒரு கிரகம் தன் செயல்பாட்டை செய்கிறது எனில் அதில் நம் எதிர் இருக்கும் தன்மைகளுக்கு தானே. நம் எதிர் இருக்கும் அனைத்துமே 7-ஆமிடம்தானே.

இவற்றைத்தான் பார்வைகள் என் சொல்லப்பட்டிருக்கிறது. நீங்களும் சோதித்து பாருங்களேன்.

நண்பர்களே. செல்: 73394 44035

bala080923
இதையும் படியுங்கள்
Subscribe