படையல் தேங்காய் உடையும் பலன்கள்! மணிமொழி (சப்தரிஷி நாடி ஜோதிடர்)

/idhalgal/balajothidam/benefits-broken-coconut-manimozhi-sabhatarishi-nadi-astrologer

முன்னோர்கள் காலத்திலிருந்து, கோவில்கள், குலதெய்வ வழிபாடு, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, இஷ்ட தெய்வ வழிபாடு, விரதநாட்கள், சுபகாரியம் செய்ய தொடங்குதல் என இன்னும் பலவிதமான வழிபாடுகள் செய்யும் நாட்களில் தேங்காய், பழம், பத்தி, சூடம், சாம்பிராணி, பழங்கள், மலர் மாலைகள், பட்சணங்கள், பொங்கல் சாதம் போன்றவை வைத்துப் படையில் போட்டு தாங்கள் தொடங்கும் காரியம் நஷ்டம், தடைகள் இல்லாமல் லாபகரமாக, நன்மையாக நடந்து முடியவேண்டுமென்று வழிபாடு செய்வது வழக்கம்.

படையல் வழிபாட்டில் பலவிதமான பொருட்களை வைத்தாலும் அவற்றில் முக்கியத்துவம் பெறுவது தேங்காய்தான். தேங்காயை உடைக்கும்போது, அது உடைந்த நிலையைக்கொண்டு நாம் தொடங்கும் காரியத்தின் பலன்களை அறிந்துகொள்ளமுடியும்.

படையலில் வைக்கும் தேங்காயைத் தண்ணீரில் நன்கு கழுவி, எத்தனைத் தேங்காய் வைத்தாலும் அதில் ஒரு காய்க்கு மஞ்சள் தடவி அதை சாம்பிராணிப் புகையில் காட்டி, எந்த தெய்வத்திற்கு என்ன கோரிக்கை வைக்கிறோமோ அந்த தெய்வத்தை வணங்கி, மஞ்சள் தடவிய தேங்கா

முன்னோர்கள் காலத்திலிருந்து, கோவில்கள், குலதெய்வ வழிபாடு, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, இஷ்ட தெய்வ வழிபாடு, விரதநாட்கள், சுபகாரியம் செய்ய தொடங்குதல் என இன்னும் பலவிதமான வழிபாடுகள் செய்யும் நாட்களில் தேங்காய், பழம், பத்தி, சூடம், சாம்பிராணி, பழங்கள், மலர் மாலைகள், பட்சணங்கள், பொங்கல் சாதம் போன்றவை வைத்துப் படையில் போட்டு தாங்கள் தொடங்கும் காரியம் நஷ்டம், தடைகள் இல்லாமல் லாபகரமாக, நன்மையாக நடந்து முடியவேண்டுமென்று வழிபாடு செய்வது வழக்கம்.

படையல் வழிபாட்டில் பலவிதமான பொருட்களை வைத்தாலும் அவற்றில் முக்கியத்துவம் பெறுவது தேங்காய்தான். தேங்காயை உடைக்கும்போது, அது உடைந்த நிலையைக்கொண்டு நாம் தொடங்கும் காரியத்தின் பலன்களை அறிந்துகொள்ளமுடியும்.

படையலில் வைக்கும் தேங்காயைத் தண்ணீரில் நன்கு கழுவி, எத்தனைத் தேங்காய் வைத்தாலும் அதில் ஒரு காய்க்கு மஞ்சள் தடவி அதை சாம்பிராணிப் புகையில் காட்டி, எந்த தெய்வத்திற்கு என்ன கோரிக்கை வைக்கிறோமோ அந்த தெய்வத்தை வணங்கி, மஞ்சள் தடவிய தேங்காயை முதலில் உடைக்கவேண்டும். இதனை ஆரூடத் தேங்காய் என்பார்கள்.

cc

ஆரூடத் தேங்காய் இரண்டு பிளவாக சரியாக உடைந்தால் நாம் தொடங்கும் காரியம் எந்த தடையுமில்லாமல் நன்மையாக நடந்து முடியும்.

தேங்காய் அழுகிப் போயிருந்தால் நினைத்த காரியம் நடக்காது; வேண்டுதல் பலிக்காது.

தேங்காய் சுக்கல், சுக்கலாக ஒழுங்கற்ற நிலையில் உடைந்தாலோ, தேங்காய்சில்லு தெறித்து விழுந்தாலோ அந்த காரியத்தில் பலவித கஷ்டமும் நஷ்டமும் பிரச்சினைகளும் உண்டாகி காரியம் தடைப்படும்.

தேங்காய் உடைக்கும்போது அது கையைவிட்டு நழுவிக் கீழேவிழுந்தால், எதிரிகளால் பிரச்சினைகள் உண்டாகும். காரியம் தடைப்படும். நாம் கோரியது கைவிட்டுப் போகும்.

வீடு கட்ட பூமி பூஜை செய்யும்போது தேங்காய் சுக்கல் சுக்கலாக உடைந்தாலும் அல்லது சில்லு தெறிந்து விழுந்தாலும், ஒழுங்கற்ற நிலையிலோ, அழுகிய நிலையிலோ இருந்தாலும் அந்த வருடம் வீடு அமையாது; தடைப்படும். பணம், வசதி வாய்ப்புள்ளதென்று, வீட்டைக் கட்டினால், வீட்டின் உரிமையாளருக்கு நோய், கண்டம் உண்டாகும். வீட்டைக் கட்டி முடித்து அங்கு வசித்தால் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும், அவ்வளவும் விரயமாகும். விரைவில் அந்த வீட்டை விற்றுவிட வேண்டிய சூழ்நிலை உண்டாகும். பூமி பூஜை செய்யும் போது தேங்காய் பழுதாகி உடைந்தால், அந்த வருடம் வீடு கட்டக்கூடாது. ஒரு வருடம் கடந்தபின் கட்டலாம்.

பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் சுபகாரியம் சம்பந்தமாகப் படையல் போட்டு தேங்காய் உடைக்கும்போது, அந்த தேங்காய் மேலே கூறப் பட்டதுபோல் பழுதாகி உடைந்தாலோ அல்லது அழுகிப்போய் இருந்தாலோ, அந்தத் திருமணம் தடைப்படலாம். திருமணம் முடிந்தால் அவர்கள் வாழ்க்கையில், விரைவில் துக்கம், பிரிவு, கணவன்- மனைவி ஒற்றுமையின்மை என ஏதாவதொரு குறையுடன் நிம்மதியில்லாமல் வாழ்ந்துகொண்டிருக்க நேரிடும். அந்த சம்பந்தத்தை நிறுத்திவிட்டு, வேறு சம்பந்தம் பார்த்து திருமணம் செய்யலாம்.

தேங்காய் ஆரூடம் பார்த்து சொத்துகளை வாங்கும்போது, அந்த தேங்காய் நன்கு உடையாமல், பாதகமாக உடைந்தால், அந்த சொத்துகளால் பெரிய விருத்தி ஏற்படாது. சொத்தை வாங்கியபிறகு, அதில் வில்லங்கம், வழக்கு போன்ற பிரச்சினைகள் உண்டாகலாம். அந்த நிலத்தை விற்க நினைத்தாலும் தடைகள் ஏற்படும் அல்லது குறைந்த விலைக்கு நஷ்டத்திற்கு விற்கவேண்டிய நிலை ஏற்படும்.

தொழில், வியாபாரத்தை முதலீடுசெய்து தொடங்கும்போது, தேங்காய் சரியாக உடையவில்லை யென்றால் அந்த தொழில், வியாபாரம் நன்கு நடக்காது. அதில் கடன், தடைகள், பணவிரயம் உண்டாகும். அந்தத் தொழிலாளர் தொடர்ந்து செய்யமுடியாமல், முதலீடுசெய்த பணத்தையும் இழக்கநேரிடும். அந்தத் தொழிலை நிறுத்திவிட்டு, சரியானது எதுவென்று அறிந்து, வேறு தொழிலைச் செய்யவேண்டும்.

வருடந்தோறும் வரும் ஆயுதபூஜை நாளில், அவரவர் வீட்டில் வாகனங்களை வைத்து வழிபாடு செய்யும்போது, தேங்காய் நல்லவிதமாக உடையாமல் பழுதாகி உடைந்தால் அந்த வருடம் வாகனத்தில் அடிக்கடி ஏதாவது பழுது ஏற்பட்டு, நிறைய பணம் செலவு செய்ய நேரிடும். வாடகை வருமானம் குறையும். ஆயுதபூஜை நாளில், பொருள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், வியாபாரக் கடைகள், ஸ்தாபனங் களில் படையல் போட்டு வழிபாடு செய்யும்போது, தேங்காய் பங்கமாகி உடைந்தால் அந்த வருடம் இயந்திரங்கள் பழுதாகி செலவுசெய்ய நேரும். உற்பத்தி குறையும். கடைகளில் வியாபாரம் குறையும். வேலையாட்களால் பிரச்சினைகள் உண்டாகும். பொதுவாக அந்த வருடம் நன்மை, மேன்மை, லாபமடைய முடியாது.

ஆயுதபூஜையை வீட்டிலோ, தொழிற்சாலைகளிலோ செய்யும்போது, ஆரூடத் தேங்காய் பழுதாகி உடைந்தால், மறுநாள் காலையில் புதிதாகப் படையல் போட்டு, தேங்காய் உடைத்து வழிபட்டு, வாகனங்களை எடுத்து ஓட்ட வேண்டும். தொழிற்சாலை இயந்திரங்களை இயங்கச் செய்யவேண்டும்.

வருடந்தோறும் புதுக்கணக்குத் தொடங்கும்போது செய்யும் பூஜையில் தேங்காய் பாதகமாக உடைந்தால், அந்தப் படையலை அகற்றிவிட்டு, ஒரு நாழிகை (24 நிமிடம்) கழித்து புதிதாகப் படையல் போட்டு வழிபட வேண்டும்.

தேங்காய் ஆரூடம்மூலம் நாம் காரியம் செய்யத் தொடங்கும்போதே, நமது காலம், நேரம் நன்மையாக உள்ளதா- தீமையானதா என்பதையறிந்து கொள்ளமுடியும். கால நேரம் அறிந்து செயல் பட்டு தடைகள், விரயங்களை நீக்கி செயல்பட வேண்டும்.

செல்: 93847 66742

bala200924
இதையும் படியுங்கள்
Subscribe