பரிகாரங்கள் அதைச் செய்வது அவ்வளவு எளிதல்ல. ஒவ்வொன் றுக்கும் ஒவ்வொரு பரிகாரம். ஆனால் அதை எளிமையாக செய்வது எப்படி?
கணவன்- மனைவி ஒற்றுமைக்கு வெள்ளிக்கிழமைகளில் நவகிரக சுக்கிரனுக்கு
அகல்விளக்கில் கற்கண்டு போட்டு அதில் நெய் தீபமேற்றி வழிபட லாம்.
இரண்டு சர்ப்பங்கள் இணைந்ததுபோல் இருக்கும் நாகராஜா சிலைக்கு, வெள்ளிக்கிழமை காலை (10.30-12.00) ராகு காலத்தில் மஞ்சள், குங்குமம் வைத்து செவ்வரளிப்பூ சாற்றி, அபிஷேகம் செய்து, நெய்தீபமேற்றி, தம்பதிகள் பெயருக்கு அர்ச்சனை செய்தால் தம்பதிகள் ஒற்றுமையாக, அன்யோன்யமாக வாழலாம்.
குடும்ப கஷ்டம் தீர
குடும்பத்தில் தாங்கமுடியாத கஷ்டங்கள் வந்தால், மனஅமைதி குறைந்தால், அருகிலுள்ள கோவில்களில் தீபமேற்றி வழிபடலாம்.
கடன் தொல்லை தீர
ஸ்ரீ யோக நரசிம்மரையும், ஸ்ரீ லட்சுமி நரசிம்மரையும் வழிபடவேண்டும். ஸ்ரீநரசிம்மரின் எந்த திருக்கோலத்தை தரிசித்தாலும் கடன் தொல்லைகள், பில்லி, சூனியம், ஏவல், திருஷ்டி, திருமணத்தடை விலகி நன்மை பெறலாம். இரட்டைப் பிள்ளையாருக்கு ரோகிணி நட்சத்திரத்தன்று சந்தனக்காப்பு செய்து வழிபட கடன் பிரச்சினை தீரும்.
செய்வினை தோஷம் நீங்க ஆலய திரி சூலத்தில் குங்குமம் இட்டு, எலுமிச்சைப் பழம் குத்தி வழிபட, திருஷ்டி, செய்வினை தோஷம் நீங்கும்.
சிவன்கோவிலில் கால பைரவரையும், விஷ்ணு கோவிலில் சக்கரத்தாழ் வாரையும் வழிபட செய்வினை தோஷம் நெருங்காது. ருத்ராட்சம், சாளக்கிராமம், துளசி, வில்வம் உள்ள இடத்தில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு
பரிகாரங்கள் அதைச் செய்வது அவ்வளவு எளிதல்ல. ஒவ்வொன் றுக்கும் ஒவ்வொரு பரிகாரம். ஆனால் அதை எளிமையாக செய்வது எப்படி?
கணவன்- மனைவி ஒற்றுமைக்கு வெள்ளிக்கிழமைகளில் நவகிரக சுக்கிரனுக்கு
அகல்விளக்கில் கற்கண்டு போட்டு அதில் நெய் தீபமேற்றி வழிபட லாம்.
இரண்டு சர்ப்பங்கள் இணைந்ததுபோல் இருக்கும் நாகராஜா சிலைக்கு, வெள்ளிக்கிழமை காலை (10.30-12.00) ராகு காலத்தில் மஞ்சள், குங்குமம் வைத்து செவ்வரளிப்பூ சாற்றி, அபிஷேகம் செய்து, நெய்தீபமேற்றி, தம்பதிகள் பெயருக்கு அர்ச்சனை செய்தால் தம்பதிகள் ஒற்றுமையாக, அன்யோன்யமாக வாழலாம்.
குடும்ப கஷ்டம் தீர
குடும்பத்தில் தாங்கமுடியாத கஷ்டங்கள் வந்தால், மனஅமைதி குறைந்தால், அருகிலுள்ள கோவில்களில் தீபமேற்றி வழிபடலாம்.
கடன் தொல்லை தீர
ஸ்ரீ யோக நரசிம்மரையும், ஸ்ரீ லட்சுமி நரசிம்மரையும் வழிபடவேண்டும். ஸ்ரீநரசிம்மரின் எந்த திருக்கோலத்தை தரிசித்தாலும் கடன் தொல்லைகள், பில்லி, சூனியம், ஏவல், திருஷ்டி, திருமணத்தடை விலகி நன்மை பெறலாம். இரட்டைப் பிள்ளையாருக்கு ரோகிணி நட்சத்திரத்தன்று சந்தனக்காப்பு செய்து வழிபட கடன் பிரச்சினை தீரும்.
செய்வினை தோஷம் நீங்க ஆலய திரி சூலத்தில் குங்குமம் இட்டு, எலுமிச்சைப் பழம் குத்தி வழிபட, திருஷ்டி, செய்வினை தோஷம் நீங்கும்.
சிவன்கோவிலில் கால பைரவரையும், விஷ்ணு கோவிலில் சக்கரத்தாழ் வாரையும் வழிபட செய்வினை தோஷம் நெருங்காது. ருத்ராட்சம், சாளக்கிராமம், துளசி, வில்வம் உள்ள இடத்தில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு செய்வினை அணுகாது.
பூத கண சேஷ்டைகள் விலக
வெள்ளெருக்கு விநாயகரை வீட்டு அறைகளில் கைக்கு எட்டாத உயரத்தில் வைத்திருந் தால், ஏதும் பூதகண சேஷ்டை கள் இருந்தால் நின்றுவிடும்.
பில்லி, சூனியம், ஏவல் நீங்க சக்கரத்தாழ்வார் சந்நிதியில் நெய் தீபமேற்றி 12 முறை, 48 நாட்கள் சுற்றி வழிபட தொழில், வழக்கு சாதகமாக அமையும். பில்லி, சூனியம், ஏவல் நீங்கும்.
கடன் வசூலாக
21 செவ்வாய்க்கிழமைகளில், நெய்தீப மேற்றி வழிபட கொடுத்த கடன் வசூலாகும். கொடுத்த கடன் வசூலாக பைரவர் சந்நிதியில் தொடர்ந்து 8 செவ்வாய்க்கிழமைகளில் நெய்தீபமேற்றி, சகஸ்ர நாம அர்ச்சனை செய்யவேண்டும்.
சனிபகவான் பாதிப்பு குறைய
ஜாதகப்படி சனிபகவானின் பாதிப்பு குறைய, திங்கட்கிழமைகளில் சிவ பெருமானுக்கு, பாலாபிஷேகம் செய்து, அர்ச்சனை செய்யவேண்டும். சனிக்கிழமை களில் சனிபகவான் சந்நிதியில் தேங்காய் உடைத்து, இரண்டு மூடிகளிலும் நல்லெண் ணெய் ஊற்றி, எள்ளு முடிச்சு தீபமேற்றவும்.
தீர்ப்புகள் சாதகமாக
சிவன்கோவில் வன்னி மரம், வில்வ மரத்தை 21 முறை வலம்வந்து நமது குறைகளைக் கூற, நல்ல பலன் கிடைக்கும். தீர்ப்புகள் சாதகமாகும். இம்மரங்களுக்கு நாம் கூறுவதை கேட்கும் சக்தியுள்ளதாக ஒரு ஐதீகம் உண்டு.
நோய், வறுமை நீங்க
பிரதோஷ காலத்தில், ரிஷபாரூட மூர்த்தி யாய், மகேசனை தேவியுடன் வழிபடுவோர் 1,000 அஸ்வமேத யாகங்களை செய்த பலனை பெறுவார்கள். அதிலும் ஈசானிய மூலையில் ஈஸ்வரனுக்கு காட்டப்படும் தீபாராதனையை பார்த்தால் எல்லா நோய்களும், வறுமையும் நீங்கும்.
விரைவில் திருமணம் நடக்க
மாதாமாதம் உத்திர நட்சத்திரத்தன்று, சிவனுக்கு தொடர்ந்து 11 மாதங்கள் பாலா பிஷேகம் செய்தால், விரைவில் திருமணம் நடைபெறும். ஹஸ்த நட்சத்திரத்தன்று துர்க்கைக்கு, சிவப்பு பட்டு துணி சாற்றி, சிகப்பு தாமரையை பாதத்தில் வைத்து 27 எண்ணிக்கைகொண்ட எலுமிச்சை பழ மாலை சாற்றி, குங்கும அர்ச்சனைசெய்து, அந்த குங்குமத்தை நெற்றியில் வைத்துவர உடனே திருமணம் நடைபெறும்.
காரிய சித்திக்கு
கலியுகத்தில் காரிய சித்திக்கு துர்க்கை வழிபாடு அதுவும் ராகு காலத்தில், செய்வது சிறந்தது. ராகு காலத்தில் கடைசி அரைமணி நேரமான அமிர்தகடிகை நேரமே சிறப்பான பரிகார நேரம். நெய்விளக்கு ஏற்றவும் உகந்த நேரம். ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30-6.00 மணிக்குள் துர்க்கைக்கு விளக்கேற்றி வழிபட நாம் வேண்டிய பிராத்தனைகள் நிறைவேறும்.
குடும்ப சாபம் நீங்க
வெள்ளிக்கிழமை காலை 10.30-12.00 ராகு காலத்தில் துர்க்கைக்கு தாமரை தண்டு திரிபோட்டு, நெய்விளக்கேற்றி வழிபட, தெய்வ குற்றம், குடும்ப சாபம் நீங்கும். வாழை தண்டு திரியினால் வீட்டில் தீபமேற்றினால் குலதெய்வ குற்றமும், குலதெய்வ சாபமும் நீங்கும்.
சங்கடங்கள் தீர
சங்கடஹரசதுர்த்தியில், விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி, அர்ச்சனைசெய்து வழிபட சங்கடங்கள் தீரும். பிள்ளைகளின் கல்வி நலனுக்கு சங்கடஹர சதுர்த்தியில் விநாயகருக்கு, எருக்கம் திரிபோட்டு விளக்கேற்றி வழிபட, பிள்ளைகள் கல்வியில் முன்னேறுவார்கள்.
நல்ல வேலை கிடைக்க
செவ்வாய்க்கு அதிபதியான முருகப் பெருமானுக்கு, செவ்வாய்தோறும் நெய்விளக்கேற்றி வழிபட மூன்று மாதத்தில் வேலை கிடைக்கும்.
விபத்துகளை தவிர்க்க
விபத்துகளில் இருந்து தப்பிக்க அவிட்ட நட்சத்திரத்தன்று, முருகனுக்கு வேலில் எலுமிச்சை சொருகி அர்ச்சனை செய்யவும்.
லட்சுமி கடாட்ஷம் கிடைக்க
பால், தயிர், கோமூத்திரம், சாணம் கலந்தது பஞ்சகவ்ய கலவை. இந்த பஞ்சகவ்ய கலவையை வாரம் ஒருமுறை வீடுகளில் தெளிக்க தோஷம், தீட்டு நீங்கி, லட்சுமி கடாட்ஷம் கிடைக்கும். அமர்ந்த திருக் கோலத்தில் காட்சிதரும் பெருமாள், லட்சுமி நரசிம்மர், லட்சுமி ஹயகிரீவர் ஆகியோரை தரிசித்து கேசரி, பாயசம் நைவேத்தியம் செய்ய தொழில், வியாபார விருத்தி, நிரந்தர வேலை மற்றும் லஷ்மி கடாட்சம் கிடைக்கும்.
புத்திர பாக்கியத்துக்கு
புத்திர பாக்கியம் இல்லாதோர், 6 தேய்பிறை அஷ்டமிகளில் காலபைரவருக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் விரைவில் புத்திர பாக்கியம் கிட்டும். வியாழக்கிழமைகளில் ஒருநேரம் விரதமிருந்து, மாலையில் ஆலய தட்சிணாமூர்த்திக்கு தொடர்ந்து நெய்விளக்கு ஏற்றிவர, விரதம் ஏற்ற 192 நாட்களில் கருத்தரிப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டு.
சர்ப்ப தோஷம் நீங்க
பெருமாள் கோவிலிலுள்ள கருடாழ்வார் சந்நிதியை சுற்றிவந்து, நெய்விளக்கேற்றி வழிபட சர்ப்பதோஷம், காலசர்ப்ப தோஷம் நீங்கும்.
அசுவமேத யாக பலன் கிடைக்க
வறுமையில் இருப்பவருக்கு தானம் கொடுத்தல், பூஜை நடக்காமலிருக்கும் கோவில்களில் பூஜை நடக்க உதவுதல், அனாதைப் பிணங்களின் தகனத்திற்கு உதவுதல் ஆகிய மூன்றும் செய்தால், அசுவமேத யாகம் செய்ததற்குச் சமமான பலன் கிடைக்கும்.
நல்ல காரியங்கள் நடக்க
தொழில் தடை, கணவன்- மனைவிக்கு கருத்து வேறுபாடு நீங்க, வாழ்வில் நலம்பெற, வெளிநாட்டு வேலை முயற்சி வெற்றிபெற என்ற நல்ல காரியங்கள் நடைபெற பௌர்ணமி தோறும் நடைபெறும் சத்திய நாராயணா பூஜையில் கலந்துகொள்வது நற்பலன்களைத் தரும். எத்தகைய கிரக தோஷமானாலும் தினமும் சுந்தர காண்டத்தில் ஒரு அத்தியாயம் பாராயணம் செய்வது மிக மிக நன்மை தரும்.
உயிரையும், உடலையும் பாதுகாக்கும் உடனடி நிவர்த்திப் பரிகாரங்கள்
திருக்கடையூரில் மகா மிருத்யுஞ்ஜய ஹோமம் செய்தல், ஸ்ரீ வாஞ்சியம் சென்று வாஞ்சிநாதரை தரிசிப்பது, லட்சுமி நரசிம்மர், யோக நரசிம்மரை வழிபடுவது, ஆஞ்சனேயரை வழிபடுவது ஆகும்..
நீண்ட ஆயுள்பெற
தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்து, அதற்குரிய மந்திரங்களை சொல்லிவந்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும்.
மரண பயம் நீங்க
ஒவ்வொரு மாதமும் மக நட்சத்திரத்தன்று, அகத்தியரிடம் ஆசிபெற்று, அகத்திக்கீரையை எருமை மாடுகளுக்கு கொடுக்க மரணபயம் நீங்கும்.
பாவங்கள் நீங்க
இராமேஸ்வரம் ஆலயத்தில் இருக்கும் 22 தீர்த்தங்களில் தீர்த்தமாட இயலாதவர்கள், கடல் நீரின் ஒரு பகுதியாக இருக்கும் அக்னி தீர்த்தம், ஸ்ரீ ராமர் உருவாக்கிய கோடி தீர்த்தத்தில் நீராடினாலே பாவங்கள், தோஷங்கள், பித்ரு தோஷமும் நீங்கும்.
புண்ணியம்பெற
சிறிது பச்சரிசி, எள்ளு, தினை சேர்த்து மாவாக்கி, எறும்பு புற்றுகளில் தூவினால் வாயில்லா ஜீவன்கள் உண்டு மகிழும்போது அவற்றின் வயிறு வாழ்த்த அதனால் நாம் புண்ணியம் பெறலாம்.
செல்: 98425 50844.