27 நட்சத்திரங்களுக்கும் நன்மை தரும் பலன்கள் + பரிகாரங்கள் ! கேது தரும் அதிர்ஷ்டம் - !

/idhalgal/balajothidam/beneficial-benefits-remedies-all-27-stars-luck-given-by-ketu

16. விசாகம்

இது 1, 2, 3-ஆம் பாதங்களை துலா ராசியிலும், நான்காம் பாதத்தை விருச்சிக ராசியிலும் கொண்டது. இதன் சாரநாதர் குரு. இந்த விசாக நட்சத்திரத்தில் குரு அமர்ந்தால், அங்கு கேது+குரு எனும் அமைப்பு ஏற்படும்.

இஷ்ட தெய்வம்: இவர்கள் தன்னிச்சையாக, சித்தர்களை வணங்குவர். அதுவும் சித்தர்களின் சமாதி, குகை போன்ற இடங்கள் அல்லது மிகப் பள்ளமான ஆழ்ந்த இடங்களில் அமைந்திருக்கும் அவ்விடங்களை அடைய, கடுமையான பயணத்தையும் மேற்கொள்வர்.

குணம்: இவர்களுக்கு எப்போதும், "விபத்து நேர்ந்துவிடுமோ, தன் பிற்காலம் என்னாகும்' என்று மனம் சஞ்சலப்பட்டுக் கொண்டே இருக்கும்.

பெண்களானால், தங்களின் மாங்கல்யத்துக்கு ஏதேனும் விபரீதம் நேர்ந்துவிடுமோ எனும் சந்தேகத் தோடும், பயத்துடனும் காலம் தள்ளுவர்.

s

அதிர்ஷ்டமும் தொழிலும்: இவர்கள் மருத்துவ நாட்டம் உடையவர்கள். அதிலும் குறிப்பாக ஆயுர்வேத, சித்த மருத்துவத்துறையில் வெகு ஈடுபாடு கொள்வர். பெண்கள் மருத்துவத்தில் சிறப்புத்தகுதி பெறுவர். அறுவை சிகிச்சை நிபுணராவர். ஒரு அறிவு கிரகமான குருவின் காலில், ஞான காரகனாகிய கேது செல்லும்போது ஆசிரியர், பேராசிரியர் பணியில் சிறப்புப் பெறுவர். சிலர் பெண்கள் பள்ளி, கல்லூரிகளிலும், சிலர் அறுவை சிகிச்சைத் தேர்வு நடத்தும் மருத்துவப் பேராசிரியர்களாகவும் மிளிர்வர். நிர்வாக அதிகாரியாக பதவி வகிப்பர். சிலர் திருமணப் பிரிவுகளைத் தடுக்கும் "கவுன்சிலிங்' வேலை செய்வர். சிலர் தற்கொலை, மனப் பிறழ்வு போன்றவற்றை சீராக்கும் மனோ தத்துவ வைத்தியராக இருப்பர். இவ்வமைப்பில் கேது, குரு சம்பந்தம் இருப்பதால், அதில் சாரநாதர் குரு சுபத்தன்மையுடன் இருந்தால், இவ்வமைப்பு ஜாதகர்கள் மக்களைத் துயரத்திலிருந்து மீட்கும் பணியைச் செவ்வனே

16. விசாகம்

இது 1, 2, 3-ஆம் பாதங்களை துலா ராசியிலும், நான்காம் பாதத்தை விருச்சிக ராசியிலும் கொண்டது. இதன் சாரநாதர் குரு. இந்த விசாக நட்சத்திரத்தில் குரு அமர்ந்தால், அங்கு கேது+குரு எனும் அமைப்பு ஏற்படும்.

இஷ்ட தெய்வம்: இவர்கள் தன்னிச்சையாக, சித்தர்களை வணங்குவர். அதுவும் சித்தர்களின் சமாதி, குகை போன்ற இடங்கள் அல்லது மிகப் பள்ளமான ஆழ்ந்த இடங்களில் அமைந்திருக்கும் அவ்விடங்களை அடைய, கடுமையான பயணத்தையும் மேற்கொள்வர்.

குணம்: இவர்களுக்கு எப்போதும், "விபத்து நேர்ந்துவிடுமோ, தன் பிற்காலம் என்னாகும்' என்று மனம் சஞ்சலப்பட்டுக் கொண்டே இருக்கும்.

பெண்களானால், தங்களின் மாங்கல்யத்துக்கு ஏதேனும் விபரீதம் நேர்ந்துவிடுமோ எனும் சந்தேகத் தோடும், பயத்துடனும் காலம் தள்ளுவர்.

s

அதிர்ஷ்டமும் தொழிலும்: இவர்கள் மருத்துவ நாட்டம் உடையவர்கள். அதிலும் குறிப்பாக ஆயுர்வேத, சித்த மருத்துவத்துறையில் வெகு ஈடுபாடு கொள்வர். பெண்கள் மருத்துவத்தில் சிறப்புத்தகுதி பெறுவர். அறுவை சிகிச்சை நிபுணராவர். ஒரு அறிவு கிரகமான குருவின் காலில், ஞான காரகனாகிய கேது செல்லும்போது ஆசிரியர், பேராசிரியர் பணியில் சிறப்புப் பெறுவர். சிலர் பெண்கள் பள்ளி, கல்லூரிகளிலும், சிலர் அறுவை சிகிச்சைத் தேர்வு நடத்தும் மருத்துவப் பேராசிரியர்களாகவும் மிளிர்வர். நிர்வாக அதிகாரியாக பதவி வகிப்பர். சிலர் திருமணப் பிரிவுகளைத் தடுக்கும் "கவுன்சிலிங்' வேலை செய்வர். சிலர் தற்கொலை, மனப் பிறழ்வு போன்றவற்றை சீராக்கும் மனோ தத்துவ வைத்தியராக இருப்பர். இவ்வமைப்பில் கேது, குரு சம்பந்தம் இருப்பதால், அதில் சாரநாதர் குரு சுபத்தன்மையுடன் இருந்தால், இவ்வமைப்பு ஜாதகர்கள் மக்களைத் துயரத்திலிருந்து மீட்கும் பணியைச் செவ்வனே செய்வர்.

கெடுபலன்கள்: கேது நின்ற சாரநாதர் குரு நீசம் மற்றும் அசுபத் தன்மையுடன் இருப்பின், இந்த ஜாதகர்கள் விவாகரத்து செய்து முடிக்கும் முதன்மை வழக்கறிஞராக இருப்பர். இவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை, உருப்படாத சிறு விஷயத்திற்காக கழற்றிவிடத் தயங்காதவர்கள். வாழ்க்கைத்துணையோடு மோதல் விஷயம் கொஞ்சம் பெரிதானால், கொஞ்சமும் தயக்கமின்றி, ஒரு பாயசத்தைப் போட அஞ்சாதவர்கள். கோவில் கோபுரக் கலசம் மற்றும் அங்குள்ள விக்ரங்களைத் திருடி, எங்காவது புதைத்து வைத்துவிட்டு, பின் நிதானமாக விற்றுவிடுவர். இதேபோல் பெரிய மாளிகை, பங்களாக்களில் திருடச் செல்லும்போது, இடர் தரும் காவலாளிகளைக் கொல்லவும் தயங்கமாட்டார். "கொலையும் செய்வாள் பத்தினி' என்று கூறுவதெல்லாம் இந்த அமைப்புக்கு சரிப்பட்டு வரும்.

நாடி ஜோதிடம்: நாடி ஜோதிடம குருவை ஜாதகராக வரிக்கும். எனில் பிரிவினைத் தன்மையுடைய கேது சம்பந்தம் பெறும்போது, வாழ்வியலில் நிறைய பிரிவினையை சந்திக்கக் கூடும். அது உறவு, செயல், சொல், செல்வம் என எதுவாகவும் இருக்கலாம்.

பரிகாரம்: பள்ளத்தில் அமைந்துள்ள விநாயகரை வணங்கவேண்டும். காளஹஸ்தி கோவிலில் பாதாள விநாயகர் உள்ளார். மேலும் சித்தர்களைத் தேடி வணங்கவும், சித்தர் பீடங்கள், சாது மடங்கள், கோசாலைகள் போன்ற இடங்களுக்கு உணவு தானியம், சர்க்கரை போன்ற இனிப்பு மற்றும் எரிபொருள் (கேஸ் அடுப்பு) செலவுக்கு தனியாகப் பணம் கொடுக்கலாம். நம்மாழ்வாரை வணங்கவும்.

17. அனுஷம்

இது விருச்சிக ராசியில் அமைந்துள்ளது. இதன் சாரநாதர் சனி. இந்த அனுஷ நட்சத்திரத்தில் கேது அமர்ந்திருந்தால், அங்கு கேது+சனி என்ற அமைப்பு உருவாகும்.

இஷ்ட தெய்வம்: இவர்கள் அனேகமாக எல்லை தெய்வங்களை வணங்குவர். முனீஸ்வரர், பத்ரகாளி, மதுரைவீரன், மாகாளி அம்மன்கள் என இவர்கள் வழிபாடு அமையும்.

குணம்: இவர்கள் எப்போதும் தங்கள் எதிரிகள் குறித்த பயம் கொள்வர். எந்த நேரத்திலும் யாராவது தன்னை வெட்டிப் போட்டுவிட்டுப் போய்விடுவார்களோ என மிக சந்தேகம் கொள்வர். பெண்களானால், தங்களை அழித்துவிடுவார்களோ என எப்போதும் பதட்டப்படுவர். இவ்வமைப் பிலுள்ள மூன்று பாவர் சேர்க்கையும், ஜாத கரை எப்போதும் உயிர் பயம் கொள்ளச் செய்யும்.

அதிர்ஷ்டமும் தொழிலும்: கேதுவின் சாரநாதர் சனி உச்சம் அல்லது சுபத்தன்மை பெறின் இவர்கள் ஆகச் சிறந்த கிரிமினல் வழக்கறிஞராக இருப்பர். தீவிரவாதிகளை சுட்டுப் பொசுக்கும் தைரியமான இராணுவ, காவல் அதிகாரியாக மிளிர்வர். சுரங்கங்களை சொந்தமாக வைத்திருப்பர். எண்ணெய் தோண்டியெடுக்கும் நிறுவன உரிமையாளர் அல்லது முதன்மை அதிகாரியாக இருப்பர். கொலையை துப்புத் துலக்கும் நிபுணராக பாராட்டுப் பெறுவார். எஃகு போன்ற கனரகப் பொருட்களின் தொழில் சார்ந்தவர். தோல் தொழிற்சாலை உரிமையாளர். சனி, கேது இணைவு எப்போதும் துர்நாற்றக் குறியீடு. எனவே இந்த கிரக சம்பந்தம், தோல், மாசு (பொல்யூஷன்) சுத்திகரிப்பு, வடிகால் வாரியம் போன்ற இனங்களில் நல்ல பதவி கொடுக்கும்.

கெடுபலன்கள்: கேது நின்ற சாரநாதர் சனி நீசம் மற்றும் அசுபத்தன்மையடைந்தால், ஜாதகர் மிகவும் கொடூர குணம் கொண்டவ ராக இருப்பார். பழி பாவத்துக்கு அஞ்ச மாட்டார். கொலை செய்வதென்பது "ஜஸ்ட் லைக் தட்' எனும்விதமான சாதாரண விஷய மாக இருக்கும். பழிவாங்கும் குணம், கற்பழிப்பு, கொள்ளை என இன்ன பிற விஷயம் மற்றும் தீவிரவாதியாகவும், காவல் துறையின் குற்றப்பரம்பரை லிஸ்ட்டிலும் இருப்பார்.

நாடிஜோதிடம்: கேதுவை தடை, தாமத்துக்கு உரியவராகவும், சனியை தொழில் காரகனாகவும் குறிப்பிடுகிறது. இதனால் இவர்கள் எந்தத் தொழில் தொடங்கினாலும் உருப்படுவதற்கு வாய்ப்பு மிகக் குறைவு. தொழிலின் தடைக்கு இவரின் சகோதரர்களே காரணமாவர். மேலும் ஜாத கரின் முட்டாள்தனமும், முன்கோபமும் தொழிலை இழுத்து மூடவைத்துவிடும்.

பரிகாரம்: கண்டிப்பாக இவர்கள் ஆஞ்சனேயரை வணங்கவேண்டும். பத்ரகாளி போன்ற காளி, துர்க்கையை வணங்குவது நல்லது. குங்குமம், எலுமிச்சை மற்றும் நவதானியங்கள் சேர்ந்த பிரசாதத்தைப் படைத்து வணங்கலாம். பூசலார் நாயனரை வணங்கவேண்டும்.

18. கேட்டை

இது விருச்சிக ராசியில் நிறைந்துள்ளது. இதன் சாரநாதர் புதன். கேட்டை நட்சத்திரத்தில் கேது நின்றால், அங்கு கேது+புதன் எனும் அமைப்புண்டாகும்.

இஷ்ட தெய்வம்: இவர்களுக்கு நரசிம்மர் வழிபாடு மிகப் பிடிக்கும். சிலர் வேலுடன் உள்ள முருகரை வழிபட மிக ஆர்வம் கொள்வர்.

குணம்: இவர்களுக்கு சந்தேகம், கோபம் எல்லாம் வெளியில் உள்ளவர்களிடம் வராது. குடும்பத்துக்குள், கூடப் பிறந்தவர்கள்,

தாய்மாமன், மனைவி வீட்டார் என எப்போதும் சந்தேகம் கொள்வர். "எல்லா பயல்களும் நம்மைப்பற்றி வம்பு பேசி, குடியைக் கெடுக்கி நான்கள்' என பொருமித் தீர்ப்பர். இதனால் சொந்த பந்தங்களுடன் ஒட்டி உறவாடாமல் தனிமரமாக இருப்பர்.

அதிர்ஷ்டமும் தொழிலும்: கேது நின்ற சாரநாதர் புதன் செழிப்பாக, சுபமாக இருந்தால், இவர்கள் மிகச் சிறந்த வழக்கறிஞ ராக இருப்பர். அதுவும் மனை, சொத்து சம்பந்த வில்லங்கக் கேஸ்களை ஊதித் தள்ளிவிடுவர். இவர்கள் எந்த விஷயத்தையும் வெட்டிப் பிரித்து சீராக்குவதில் வல்லவர்கள். அதனால் அணைக்கட்டு கட்டுவது, பாலம் அமைப்பது, பூமியை வெட்டி சுரங்கப்பாதை சீராக்குவது, ரயில் தண்டவாளம் போடுவது, பாய்லர் தொழிற்சாலை, மிகத்திறமையான தையல் கலைஞர், பத்திரிகை, அச்சுத்துறை, பத்திரிகை ஆர்ட்டிஸ்ட், விளம்பரப்பிரிவு, தகவல் தொடர்புக் கருவிகளைக் கையாள்வது என மிக வேறுபாடான தொழிலில் சிறப்பும் கவனமும் பெறுவர்.

கெடுபலன்கள்: இவர்கள் தங்கள் கெடுபலன்களை மிக பாலிஷாக, நேர்த்தியாகச் செய்வர். இதற்கு சாரநாதர் புதன் கெட்டிருக்கவேண்டும். "மனையைப் பிரித்து விற்கிறேன்' என அதில் நூறு தில்லாங்கடி வேலை செய்வர். இதேபோல் போலிப்பட்டம் தயாரிப்பதில் வல்லவர்களாக இருப்பர். போலி நோட்டுகள் அச்சடிக்கும் திறமை கொண்டவர்கள். அமெரிக்க டாலர் அச்சடித்து, அமெரிக்காவைத் திணறடிப்பர். பிறர் மனையைத் தன் பெயருக்கு, எளிதாக, ஒரு பைசா செலவில்லாமல் மாற்றிவிடுவர். உயிரோடு இருக்கிற ஆள்மீது இன்ஷூரன்ஸ் தொகை வாங்கிவிடுவர். பத்தாங்கிளாஸ் பெயிலானவருக்கு, சுளுவாக ஒரு டாக்டர் பட்டம் அச்சடித்து கையில் கொடுத்துவிடுவர். இவர்கள் செய்யும் புத்திசாலித்தனமான ஃப்ராடு வேலைகளைப் பார்த்து, காவல்துறையே அரண்டுபோய்விடும்.

நாடிஜோதிடம்: புதன் அறிவையும், கேது எதிர்மறைத் தன்மையையும் குறிக்கும். எனவே இவ்வமைப்பு ஜாதகர்கள் அறிவை, அழிப்பதற்கும் வேண்டாத செயல்களுக்குமே பயன்படுத்துவர். இவர்களுக்கு எதையுமே மறைமுகமாக, யாருக்கும் தெரியாமல் ரகசியமாகச் செயல்படுவது மட்டுமே தெரியும்.

அதுவும் ஒரு பொருளை, செயலைப் பிரிப்பது என்பதில் கொள்ளைப் பிரியம். இந்த மாதிரி ஆட்கள்தான் தம்பதிகளைப் பிரிப்பதில் முதன்மை வகிப்பர்.

பரிகாரம்: இவ்வவைப்பு உடையவர்கள் கண்டிப்பாக விஷ்ணு துர்க்கையை வணங்கவேண்டும். நிறைய பருப்புகளை உடைத்து கிச்சடிபோல் செய்து நிவேதனம் செய்யுங்கள். படிப்புத் தடை உடையவர்களின் தேவையறிந்து உதவுவது நல்லது. தொண்டரடிப் பொடியாழ்வாரை வணங்கவேண்டும்.

(அடுத்த இதழில்

மூலம், பூராடம், உத்திராடம்....)

செல்: 94449 61845

bala230824
இதையும் படியுங்கள்
Subscribe