7. புனர்பூசம்
இந்த நட்சத்திரம் மிதுனம் மற்றும் கடக ராசி யில் பரவியுள்ளது.
புனர்பூசம் குரு சாரம் பெற்றது. இந்த நட்சத் திரத்தில் கேது நின்றால், அங்கு கேது+ குரு எனும் அமைப்பு உருவாகும்.
இஷ்ட தெய்வம்: இவர்களுக்குப் பெரும்பாலும் சித்தர்களை வணங்க மட்டுமே பிடிக்கும். சித்தர்களின் பீடங் களைத் தேடியலைந்து வழிபாடு செய்வர்.
குணம்: இவர்களுக்கு கோவில், தெய்வ வழிபாட்டில் சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும். "இந்த ஐயர் ஒழுங்காக மந்திரம் சொல்கிறாரா இல்லை தவறாகச் சொல்கிறாரா' என்றெல் லாம் யோசிப்பர். இதுபோல் தர்மம், சாஸ்திரம், சடங்குகள், விசேஷங்கள் போன்ற விஷயங்களில் மிகுந்த சந்தேகம் இருக்கும். இதுபோன்ற தெய்வ சந்தேகம் இருப்பதால்தானோ என்னவோ, இவர்கள் சித்தர்கள் பக்கம் திரும்பிவிடு வார்கள் போலும்.
அதிர்ஷ்டம் தொழிலும்: கேது எனும் ஞான காரக கிரகம், குரு எனும் புத்திப்பூர்வ சாரம் எடுத்துச் செல்லும் போது, இவர்களில் நிறைய ஜாதகர்கள் ஆசிரியர், பேராசிரியர், ஆராய்ச்சி யாளராக இருப்பர். சமய சொற்பொழி வராக இருப்பர். ஜோதிடராகும் வாய்ப் புண்டு. சித்தர் மடங்களின் பொறுப் பாளராக வேலை செய்வார். நிறைய கோவில்கள், தெய்வீகத் தலங்களுக்குப் பயணம் செய்து, அவை பற்றிய அரிய செய்திகளை மக்களுக்குத் தெரிவிப்பர். இதுபோல் பத்திரிகைத் துறையில் உண்மையை எழுதுகிறவன் என்று பெயரெடுக்க, மிக ஆசைப்படுவர். சில தர்மஸ்தாபனங்களை நிர்வகிக்கும் அதிகாரியாக சிலர் பொறுப்பு வகிப்பர்.
குழந்தைகள் ஆரோக்கியம் சார்ந்த நிறுவனங்களில் முதன்மை வகிப்பர். பொதுவாக இந்த புனர்பூச நட்சத்திரத் தில் கேது நிற்கும்போது ஜாதகர் பிறருக்கு போதனைகள் செய்யும் வழியில் வாழ்வர்; சம்பாதிப்ப
7. புனர்பூசம்
இந்த நட்சத்திரம் மிதுனம் மற்றும் கடக ராசி யில் பரவியுள்ளது.
புனர்பூசம் குரு சாரம் பெற்றது. இந்த நட்சத் திரத்தில் கேது நின்றால், அங்கு கேது+ குரு எனும் அமைப்பு உருவாகும்.
இஷ்ட தெய்வம்: இவர்களுக்குப் பெரும்பாலும் சித்தர்களை வணங்க மட்டுமே பிடிக்கும். சித்தர்களின் பீடங் களைத் தேடியலைந்து வழிபாடு செய்வர்.
குணம்: இவர்களுக்கு கோவில், தெய்வ வழிபாட்டில் சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும். "இந்த ஐயர் ஒழுங்காக மந்திரம் சொல்கிறாரா இல்லை தவறாகச் சொல்கிறாரா' என்றெல் லாம் யோசிப்பர். இதுபோல் தர்மம், சாஸ்திரம், சடங்குகள், விசேஷங்கள் போன்ற விஷயங்களில் மிகுந்த சந்தேகம் இருக்கும். இதுபோன்ற தெய்வ சந்தேகம் இருப்பதால்தானோ என்னவோ, இவர்கள் சித்தர்கள் பக்கம் திரும்பிவிடு வார்கள் போலும்.
அதிர்ஷ்டம் தொழிலும்: கேது எனும் ஞான காரக கிரகம், குரு எனும் புத்திப்பூர்வ சாரம் எடுத்துச் செல்லும் போது, இவர்களில் நிறைய ஜாதகர்கள் ஆசிரியர், பேராசிரியர், ஆராய்ச்சி யாளராக இருப்பர். சமய சொற்பொழி வராக இருப்பர். ஜோதிடராகும் வாய்ப் புண்டு. சித்தர் மடங்களின் பொறுப் பாளராக வேலை செய்வார். நிறைய கோவில்கள், தெய்வீகத் தலங்களுக்குப் பயணம் செய்து, அவை பற்றிய அரிய செய்திகளை மக்களுக்குத் தெரிவிப்பர். இதுபோல் பத்திரிகைத் துறையில் உண்மையை எழுதுகிறவன் என்று பெயரெடுக்க, மிக ஆசைப்படுவர். சில தர்மஸ்தாபனங்களை நிர்வகிக்கும் அதிகாரியாக சிலர் பொறுப்பு வகிப்பர்.
குழந்தைகள் ஆரோக்கியம் சார்ந்த நிறுவனங்களில் முதன்மை வகிப்பர். பொதுவாக இந்த புனர்பூச நட்சத்திரத் தில் கேது நிற்கும்போது ஜாதகர் பிறருக்கு போதனைகள் செய்யும் வழியில் வாழ்வர்; சம்பாதிப்பர்.
கெடுதல்: கேது எனும் குழப்ப கிரகம், குரு எனும் உறுதியான கிரக சாரத்தில் செல்லும் போது, அங்கு எண்ணக் குழப்பமும், முடிவுகள் எடுப்பதில் தாமதமும், தவறான முயற்சிகளும் வருவதால், வாழ்க்கை நிலை சற்று சிக்கலாகிவிடும். தினப்படி வாழ்க்கையில் எந்தப் பக்கம் போவதென தெரியாமல் திணறி, எப்போதும் ஒரு முட்டுச் சந்தில் நிற்கும் நிலை ஏற்படும். சில சூழ்நிலைகளில், நல்லதோ- கெட்டதோ, ஏதோவொரு முடிவையெடுத்து, அதில் ஸ்த்ர மாக நிற்கவேண்டும். அது தரும் பலன்களை தைரியமாக ஏற்றுக்கொள்ளவும் வேண்டும். இந்த ஜாதகர்கள் முடிவெடுப்பதில் கோழையாக இருப்பதால், வாழ்வு இவர்கள் கையிலிருந்து நழுவிப் போய்க்கொண்டே இருக்கும்.
நாடி ஜோதிடம்: கேது குறுக்குபுத்தியைக் குறிப்பார். குரு நேர்மறை சிந்தனைக்குரியவர். இதன் சம்பந்தம் ஜாதகரை எப்போதும் மனப் போராட்டத்தில் சிக்கவைக்கும். இதுபோல் எந்த யோசனையையும் உடனே நம்பமாட்டார்கள். மிகவும் அலசி ஆராய்வர். இது சிலசமயம் ஆசிரியர்கள், மதகுருமார்கருடன் பிணக்கை ஏற்படுத்தும்.
பரிகாரம்: சித்தர்களை வணங்குவது நல்ல பலன் தரும். காஞ்சிபுரம் சித்ரகுப்தன் ஆலயம் சென்று வணங்கலாம். சித்தர்கள் மடத்தில் மடாதிபதி அல்லது அங்கு பணிபுரி வோருக்கு மஞ்சள் சார்ந்த பொருட்களைக் கொடுக்கவும். வைத்தீஸ்வரன் கோவில் தன்வந்திரி பகவானை வணங்கவும்.
8. பூசம்
இந்த நட்சத்திரம் கடக ராசியில் உள்ளது. இதன் சாரநாதர் சனி. பூச நட்சத்திரத்தில் கேது நின்றால், அங்கு கேது+சனி எனும் நிலை ஏற்படும்.
இஷ்ட தெய்வம்: இவர்கள் முனீஸ்வரன், பேச்சியம்மாள், மதுரை வீரன் போன்ற உக்ரமான காவல் தெய்வங்களை வணங்கு வதில் பெரு விருப்பமுடையவர்கள்.
குணம்: இவர்களுக்கு எப்போதும் தங்கள் ஆயுள் விஷயத்தில் குழப்பமும் பயமும் அடைவர். செத்துவிட்டால் என்ன செய்வதென்று தானும் பயந்து, சுற்றியுள்ளவர்களையும் இம்சை செய்வர். யாராவது கொலைசெய்து விடுவார்களோ எனும் அச்சமும் வாட்டி வதைக்கும். இதுபோல் உயிர், உடல், நோய் சார்ந்த அச்சம் மிக அதிகமாக இருக்கும்.
அதிர்ஷ்டம் தொழிலும்: கேது ஒரு குறுகிய இருட்டுக் கிரகம். சனியும் அவ்வாறே குணமுடையவர். இந்த ஒருமித்த காரகம் கொண்ட சம்பந்தம் ஏற்படும்போது, அவை சார்ந்த தொழில் ஈடுபாடு வருவது சகஜம். எனவே சாரநாதர் சனி உச்சம் அல்லது சுபமானால் சுரங்கம் சம்பந்த வேலைகள் மிகப்பொருத்தமாக அமையும். அதுபோல் குழாய் பதித்தல், பாலங்கள் கட்டுதல், கால்வாய் களப்பணி, அணைகட்டுவது, கிணறு, குளம், நீர்த்தேக்கம் அமைப்பது, பெட்ரோல் எடுக்கும் வேலை, நிலக்கரி தோண்டுவது என இவை சம்பந்த பணிகளில், அவர்களையும் அறியாமல் மிக ஈடுபாடு கொள்வர். இதே வேலையில் மிக முதன்மை அதிகாரியாகவும் இருப்பர். அல்லது மண் தோண்டும் கீழ்மட்ட ஊழியராகவும் இருப்பர்.
கெடுபலன்கள்: இவர்களின் பயமே இவர்களை ஒழுங்காக வாழவிடாது. தன் நிழல் கண்டு, தானே பயப்படும் தோழைகள். ஒவ்வொருவரும் தான் உயிரோடு இருப்போம் எனும் பெரு நம்பிக்கையால்தான் நாட்களை நகர்த்திச் செல்கிறார்கள். இந்த நம்பிக்கை தான் உலகை சுழல் வைக்கிறது. ஆனால் இந்த ஜாதகர்களுக்கு ஆயுள்மீது பயம் ஏற்படுவதால், வாழ்வே சுணக்கமாகி விடுகிறது. இந்நிலைக்கு சாரநாதர் சனி நீசமாவதே காரணமாகும்.
நாடிஜோதிடம்: கேதுவை குறுக்கத்துக் குரியவர் என்றும், சனியை ஆயுள்காரகன் என்றும் நாடி ஜோதிடம் கூறுகிறது. எனவே ஆயுள் பயமுடையவர்கள். மேலும் கேதுவை சந்தேக குணமுடையவர் என்றும், சனியை பணியாளர் என்றும் பகர்கிறது. எனவே இவ்வமைப்பு ஜாதகர்கள், எப்போதும் வேலை செய்வோர்மீது சந்தேகப்பட்டுக் கொண்டே இருப்பர்.
பரிகாரம்: கீழ்ப்பெரும்பள்ளம் நாகநாத சுவாமி கோவிலுக்குச் சென்று வணங்கலாம். இவ்வமைப்புள்ளவர்கள் அவ்வப்போது எருமை மாட்டிற்கு அகத்திக்கீரை கொடுத்துவந்தால் ஆயுள் பற்றிய பயம் நீங்கும். திருவாரூர் கமல முனியை வணங்கவும்.
9. ஆயில்யம்
இந்த நட்சத்திரம் கடக ராசியில் உள்ளது. இதன் சாரநாதர் புதன் ஆவார். ஆயில்ய நட்சததிரத்தில் கேது பகவான் நின்றால், அது கேது+புதன் எனும் கணக்காகும். கேது ஞானகாரகன்; புதன் புத்திகாரகன்.
இஷ்ட தெய்வம்: இவர்கள் பெரும்பாலும் பெருமாளை வணங்குவார்கள். அதனினும் குறிப்பாக, பெருமாளுக்கு சேவை செய்த ராமனுஜர், ஆண்டாள், நம்மாழ்வார், பெரியாழ்வார் போன்ற வைஷ்ணவத் தொண்டரடியார்களை வணங்குவதில் ஈர்ப்பிருக்கும்.
குணம்: கணக்கு, வழக்கு, வியாபார விஷயங்களில் வெகு சந்தேகம் ஏற்படும். வணிகத்தில், பற்றுவரவைத் தவறாகக் காட்டி, பணத்தை ஏமாற்றிவிடுவார்களோ எனும் பதட்டம் இருந்துகொண்டே இருக்கும். இன்னொரு புறமாக, எங்கெல்லாம் கேது, புதன் சம்பந்தம் உண்டாகிறதோ, அங்கெல்லாம் காதல் என்ற விஷயம் வந்து அமர்ந்துகொள்ளும். ஏற்கெனவே நம்ம ஆள் குழப்பவாதி. இதில் காதல் விஷயத்தில் மிக பயப்படுவார். எந்த நேரம் காதல் ஆப்பு வைத்துவிடுமோ எனும் சந்தேகம் இருந்துகொண்டே இருக்கும்.
அதிர்ஷ்டமும் தொழிலும்: இவர்களுக்கு நிறைய மொழிகள் தெரிந்திருக்க வாய்ப்புண்டு. இதனால் வெகுஜனத் தொடர்பு அதிகரிக்கும். இந்த தொடர்பில் காதல் விஷயங்களும் உண்டு எனத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. இவர்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகமுண்டு. எனவே இவ்வமைப்பு சார்ந்தோர். நகைச்சுவை எழுத்தாளர், நடிகர் என இவ்வித தொழில்களில் மிளிர்வர். மொழிமாற்றத் திரைப்படங்கள், புத்தகம் எழுதுவர். பின்னணி குரல் கொடுப்பர். குழந்தைகள் சார்ந்த கை வைத்தியம், இயற்கை வைத்திய நிபுணராக இருப்பார். மனோத்துவத் துறையில் இருப்பார். தோட்ட விதைப் பண்ணை சேகரிப்பதில் விருப்பமுள்ளவர். ஆதலால் அதனைச் சார்ந்து தொழில்புரிவார். சிலர் துளசித் தோட்டம்மூலம் தொழில் செய்வர்.
கெடுபலன்கள்: கேதுபகவான் ஆயில்ய நட்சத்திரத்தில் செல்லும்போது அவ்வமைப்பு விவேகமற்ற, வெளியே சொல்லமுடியாத எண்ணக் குவியலைத் தரும். பெரும்பாலும் அது ஆண்- பெண் நட்பு சம்பந்தமானதாக இருக்கும். சிலருக்கு தாம் முழுமைத்தனத்துடன் இருக்கிறோமா எனும் கிலி அவ்வப்போது எட்டிப் பார்க்கும். மேலும் நிறைய காதல் விஷயங்கள் வாழ்வில் குறுக்கிட்டுக்கொண்டே இருப்பதால், நாளடைவில் அவரவர் இவர்களைப் பார்த்தாலே ஓடிவிடுவர். அதுசரி; அவரவர் மனைவிகளின் பாதுகாப்பு அவரவருக்கு முக்கியம்தானே! மேலும் கல்வித்தடை ஏற்படும். இதனை நீசமான சாரநாதர் புதன் செவ்வனே செய்வார்.
நாடிஜோதிடம்: புதன் தாய்மாமனையும், கேது பிரிவையும் குறிப்பர்.
எனவே இவ்வமைப்பாருக்கு தாய்மாமனுடன் கெமிஸ்ட்ரி ஒத்து வராது. கேது குறுக்குதலையும், புதன் தாவரத்தையும் குறிப்பர். எனவே தாவரங்கள், செடி, மரத்தினை சின்னஞ்சிறு தொட்டியில் வளர்த்து ரசிப்பர். ஆலமரம், அரசமரம் இதனையும் கையகல இடத்தில் வளர்க்கும் நுணுக்கும் தெரிந்தவர்கள்.
பரிகாரம்: பள்ளிகொண்ட பெருமாளை வணங்கலாம். காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் திருக்கோவில் வழிபாடு நல்லது. வட பொய்கைநல்லூர் கோரக்கர் சித்தரை வணங்கவும்.
(அடுத்த இதழில் மகம், பூரம், உத்திரம்....)
செல்: 94449 61845