27 நட்சத்திரங்களுக்கும் நன்மை தரும் பலன்கள் + பரிகாரங்கள் ! கேது தரும் அதிர்ஷ்டம் ! -

/idhalgal/balajothidam/beneficial-benefits-remedies-all-27-stars-ketu-brings-luck-dr-r-mahalakshmi-0

13. அஸ்தம்

இது கன்னி ராசியில் உள்ளது. இதன் சாரநாதர் சந்திரன் ஆவார்.

அஸ்த நட்சத்திரத்தில் கேது நிலைகொண்டிருந்தால், அங்கு கேது+சந்திரன் எனும் நிலை உருவாகும்.

இஷ்ட தெய்வம்: இவர்கள் விஷ்ணு துர்க்கை அல்லது மாரியம்மனை இஷ்ட தெய்வமாகக் கொள்வர்.

குணம்: இவர்கள் தண்ணீரில் கண்டம் எனும் கருத்தில் தீவிர நம்பிக்கை யாளர்கள். எனவே கடல், ஆறு, குளம், அருவி என தண்ணீர் சார்ந்து மிகுந்த பயமும் சந்தேகமும் கொள்வர். அதற்கேற்றாற்போல், இவர்கள் மோசமான தண்ணீர் குடித்து அவ்வப்போது வயிற்றுப்போக்குக்கு ஆளாவர்.

ss

அதிர்ஷ்டமும் தொழிலும்: கேது எனும் கிரகம் எதையும் ஆழ்ந்து யோசிக்கும் தன்மையுடையது. சந்திரன் மனோகாரகன். எனவே இவ்வமைப்பில் பெரும்பாலோர் மனோதத்துவ மருத்துவராக இருப்பர். சிலர் பெண்களின் வைத்தியத்தில் சிறப்புத் தகுதி பெற்றிருப்பர். சிலர் செவிலியர் பணியில் சேவை செய்வர். பெண்களுக்கான சிறைச்சாலை வேலை இருக்கும். சித்த, ஆயுர்வேத வைத்தியத் துறையில், எண்ணெய்ப் பிழிதல் போன்ற வைத்திய முறையைக் கையாள்பவராகப் பணியாற்றுவர். நீர்ப்பாசனத் துறையில் அணைக் கட்டுகளை சீரமைக்கும் பணி கிடைக்கும். ஐஸ்கட்டி தயாரிக்கும் தொழிற்சாலை யில் வேலை செய்வர். பெட்ரோல், டீஸல் போடும் இடத்தில் வேலை கிடைக் கும். பால் பொருட்களான பால்கோவா, ஐஸ்க்ரீம், மோர், லஸ்ஸி இவை சார்ந்த இடத்தில் வேலை செய்வர்.

கெடுபலன்கள்: இவர்கள் எப்போதும் சற்று குழம்பிய நிலையில் அலைவர்.

எப்போதும் ஒரு சந்தேகம் தலை விரித் தாடும். இந்த சந்தேகம் பயம் தரும். பயம் உடல்நலனைக் கெடுக்கும். பின் தன்னிச்சை யாக மருத்துவமனையில் சேர்ந்துவிடுவர். அப்புறமாக, "பார்த்தியா... நான் பயந்த மாதிரியே ஆ

13. அஸ்தம்

இது கன்னி ராசியில் உள்ளது. இதன் சாரநாதர் சந்திரன் ஆவார்.

அஸ்த நட்சத்திரத்தில் கேது நிலைகொண்டிருந்தால், அங்கு கேது+சந்திரன் எனும் நிலை உருவாகும்.

இஷ்ட தெய்வம்: இவர்கள் விஷ்ணு துர்க்கை அல்லது மாரியம்மனை இஷ்ட தெய்வமாகக் கொள்வர்.

குணம்: இவர்கள் தண்ணீரில் கண்டம் எனும் கருத்தில் தீவிர நம்பிக்கை யாளர்கள். எனவே கடல், ஆறு, குளம், அருவி என தண்ணீர் சார்ந்து மிகுந்த பயமும் சந்தேகமும் கொள்வர். அதற்கேற்றாற்போல், இவர்கள் மோசமான தண்ணீர் குடித்து அவ்வப்போது வயிற்றுப்போக்குக்கு ஆளாவர்.

ss

அதிர்ஷ்டமும் தொழிலும்: கேது எனும் கிரகம் எதையும் ஆழ்ந்து யோசிக்கும் தன்மையுடையது. சந்திரன் மனோகாரகன். எனவே இவ்வமைப்பில் பெரும்பாலோர் மனோதத்துவ மருத்துவராக இருப்பர். சிலர் பெண்களின் வைத்தியத்தில் சிறப்புத் தகுதி பெற்றிருப்பர். சிலர் செவிலியர் பணியில் சேவை செய்வர். பெண்களுக்கான சிறைச்சாலை வேலை இருக்கும். சித்த, ஆயுர்வேத வைத்தியத் துறையில், எண்ணெய்ப் பிழிதல் போன்ற வைத்திய முறையைக் கையாள்பவராகப் பணியாற்றுவர். நீர்ப்பாசனத் துறையில் அணைக் கட்டுகளை சீரமைக்கும் பணி கிடைக்கும். ஐஸ்கட்டி தயாரிக்கும் தொழிற்சாலை யில் வேலை செய்வர். பெட்ரோல், டீஸல் போடும் இடத்தில் வேலை கிடைக் கும். பால் பொருட்களான பால்கோவா, ஐஸ்க்ரீம், மோர், லஸ்ஸி இவை சார்ந்த இடத்தில் வேலை செய்வர்.

கெடுபலன்கள்: இவர்கள் எப்போதும் சற்று குழம்பிய நிலையில் அலைவர்.

எப்போதும் ஒரு சந்தேகம் தலை விரித் தாடும். இந்த சந்தேகம் பயம் தரும். பயம் உடல்நலனைக் கெடுக்கும். பின் தன்னிச்சை யாக மருத்துவமனையில் சேர்ந்துவிடுவர். அப்புறமாக, "பார்த்தியா... நான் பயந்த மாதிரியே ஆயிட்டுது. ஆஸ்பத்திரிக்கு வந்துட்டேன் பார்' என புலம்புவர். இதற்குக் காரணம் இவர்கள்தான் என்பதை ஒப்புக்கொள்ளமாட்டார்கள். அவ்வப் போது குறும்பு செய்து, வம்பு பேசி குடும் பத்துக்குள் சண்டையும் இழுத்துவிடுவர். இவரது குடும்பத்தினர் மிகவும் பாவம். இவரைக் கூட்டிப் போய் சிறையில் தள்ளிவிடலாமா என சுற்றியுள்ளவர்கள் ஆங்காரம் கொள்வர்.

நாடி ஜோதிடம்: கேது பிறழ்வை யும், சந்திரன் தாயாரையும் குறிக்கும். எனவே இவ்வமைப்பு ஜாதகர்களின் தாயார் சற்றே புத்தி பேதலித்ததுபோல நடந்துகொள்வர். சிலசமயம் சம்பந்தப் பட்ட ஜாதகர்களே ஒரு மாதிரியாக விழித்துக்கொண்டு அலைவர்.

பரிகாரம்: பட்டீஸ்வரம் துர்க்கையை வணங்கவும். அம்பாள் அபிஷேகத்திற்குப் பால் கொடுக்கவும். கரூர்- கருவூராரை வணங்கவும்.

14. சித்திரை

சித்திரை நட்சத்திரத்தின் 1, 2-ஆம் பாதங்கள்

கன்னி ராசியிலும், 3, 4-ஆம் பாதங்கள் துலா ராசியிலும் பரவியுள்ளன. இதன் சாரநாதர் செவ்வாய். இந்த நட்சத்திரத்தில் கேது அமர்ந்திருந்தால் அங்கு கேது+செவ்வாய் எனும் அமைப்பு ஏற்படும்.

இஷ்ட தெய்வம்: இவர்களுக்கு காளி போன்ற உக்ர அம்மனை வணங்கப் பிடிக்கும்.

சிலர் வேல்கொண்டு நிற்கும் முருகப் பெருமானுக்கு அடிமையாவர்.

குணம்: இவர்களுக்கு எப்போதும் பிறர் வீண் சண்டைக்கு வந்துவிட்டால் என்ன செய்வதென்ற சந்தேகம் இருந்துகொண்டே இருக்கும். சிலர் மனைவி செமத்தியாக அடித்துவிட்டால் என்னாகும் என கற்பனை சந்தேகத்தில் கிலி பிடித்து அலைவர். இவர் களின் குணத்தன்மை எப்படி இருக்குமெனில், "கோபம் வரும்; ஆனா வராது' எனும் நிலை யில் இருக்கும். கோபம், வீரம் இவற்றை வெளியே காண்பிக்க இயலாமல் எல்லாரை யும் சந்தேகப்படுவர்.

அதிர்ஷ்டமும் தொழிலும்: இவர்களின் கேது நின்ற சாரநாதர் செவ்வாய் சுபத்தன்மை பெற்று நின்றால், இவர்கள் சார்ந்த இனங் களில் நல்லறிவு உடையவர்கள் பூமியைப் பிரித்து விற்பனை செய்வதில் வல்லவராக இருப்பர். பூமியில் கிணறு தோண்டுவது. போர் போடுவது, பூமியில் எந்த இடத்தில் தண்ணீர் இருக்கிறதென கண்டுபிடிப்பது, பூமியை வாங்கி அதில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவது, நிலத்துக்கடியில் விளையும் காய்கறி களை வேளாண் செய்வதில் நாட்டம், சிலர் மிருகங்களுக்கு வைத்தியம் செய்யும் வேலை போன்றவற்றில் தேர்ச்சி பெற்றிருப்பர். திருமண சேவை மையம் நடத்துவர்.

கெடுபலன்கள்: சித்திரை நட்சத்திரத்தில் கேது நின்று, அதன் சாரநாதர் செவ்வாய் கெட்டிருந்தால், இந்த ஜாதகருக்கு கல்யாணம் என்ற ஒரு நிகழ்வு நிறைவாக இராது. தம்பதி களுக்குள் அடிக்கடி கைகலப்பு ஏற்பட்டு, அவ்வப்போது காவல் துறையின் முகத்தை தரிசிக்க வேண்டியிருக்கும். வியாபாரத்திலும், ஒரே தொழிலைச் செய்தோமா, நல்லபடியாக காலம் கழித்தோமா என இருக்காது. ஆரம்பிக்கும் ஒவ்வொரு தொழிலிலும் ஏதோவொரு ஏழரையை இழுத்துவிட்டு, அதை ஒருவழி பண்ணிவிடுவார். தொழில், வேலை கையில் பிடிபடாமல் நழுவிக் கொண்டேயிருக்கும். இதேநிலை திருமண வாழ்விலும் உண்டாகும்.

நாடிஜோதிடம்: நாடி ஜோதிடக் கணக்குப்படி செவ்வாய் எனும் சாரநாதர் காலில் கேது எனும் பிரிவினை கிரகம் செல்லும்போது, அடிக்கடி மாங்கல்ய நிலை மாற்றும்படி இருக்கும். சிலர் கணவனை மாற்றுவார்கள்; சிலர் மனைவியை மாற்று வார்கள். திருமண முடிச்சென்பது மிகப் பிரிவினையுடன் அமையும்.

பரிகாரம்: வள்ளி, தெய்வானையுடன் கூடிய முருகரை வணங்கவும். அங்காரக சதுர்த்தியன்று முருகரையும், விநாயகரையும் வணங்கவும். உடைத்த பருப்புக் குறுணை இனிப்பு செய்து வணங்கவும். தம்பதிகள் பிரிந்து போகுமளவுக்கு வம்பு பேசாமல் இருக்கவும். இசைஞானி நாயனாரை வணங்கவும்.

15. சுவாதி

இது துலா ராசியில் அமர்ந்துள்ளது. இதன் சாரநாதர் ராகு ஆவார். எனில் சுவாதி நட்சத்திரத்தில் கேது நின்றால் அங்கு கேது+ராகு எனும் இணைவு ஏற்படும்.

இஷ்ட தெய்வம்: கருமாரியம்மன், சமயபுரம் மாரியம்மன், புன்னைநல்லூர் அம்மன் என இவ்வித அம்மன்களை வணங்க மிக இஷ்டப்படுவர்.

குணம்: இவர்களுக்கு பெண்கள்மீது கொஞ்சமும் நம்பிக்கையிராது. கூடவே வியாபாரப் பங்குதாரர்களை சுத்தமாக நம்ப மாட்டார்கள். சக வணிகர்களை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பர். கொடுக்கல்- வாங்கல் விஷயங்களில் மிக சந்தேகம் கொள்வர். கால ஓட்டத்தில் பிற மனிதர்கள் இவரிடமிருந்து சற்று விலகிநிற்பர்.

அதிர்ஷ்டமும் தொழிலும்: உலகில் ஒரு பழமையான பழமொழி இருக்கிறதல்லவா! "ஆயிரம் பொய்சொல்லி ஒரு கல்யாணம் செய்யலாம்' என்று வரும் வாக்கியம்தான் இவர்களின் ஜிவநாடி. இதை வைத்துதான் பிழைப்பு நடத்துவர். இரு சக்கர வாகனம் ஒன்றை வைத்துக் கொண்டு திருமணம் முடிப்பவராக இருப்பர். அல்லது ஒரு ஆபிஸ் போட்டு அதில் திருமண ஏற்பாடு செய்பவராக காலம் ஓட்டுவர். ஒரு பத்திரிகையை ஆரம்பித்து, அது முழுக்க திருமணத் தகவல்கள் தரும்விதமாக நடத்துவர். கைபேசியில் தகவல் பக்கம் ஆரம்பித்து, கல்யாணம் முடிவது பற்றி முழுக்கமிடுவர். பத்திரிகைமூலம் திருமணம் பற்றிப் பேசுவர். ஆக, ஏதோவொரு விதத்தில் காதல் கல்யாணம், கலப்புக் கல்யாணம், இருதார மணம், விவாகரத்து விவாகம் என லட்சம் பொய் கூறி திருமண விஷயத்தை உண்டு இல்லையென செய்துவிடுவர். மேலும் வணிகத்தில் வெளிநாட்டுத் தொடர்பை ஏற்படுத்த உதவும் பங்குதாரர்களை அமைத்துக் கொடுப்பர். அசைவ சமையல் செய்ய ஏதுவான திருமண மண்டபம் கட்டுவர். ஆக, சுவாதி எனும் ராகு சார நட்சத்திரத்தில் அமர்ந்த கேது, திருமணம், வியாபார வணிகம் என இவை சார்ந்த இனங்களில், முழு ஈடுபாட்டென எதிர்மறைத் தன்மையாக செயல்புரிவார்.

கெடுபலன்கள்: ராகுவின் நட்சத்திரம் வாங்கி அமரும் கேது, பெண்களைக் கொண்டு கீழ்த்தரமாக வேலை செய்ய வைப்பார். போதைப்பொருள் விற்பனைக் குப் பெண்களைப் பயன்படுத்துவார். அரசாங்கத்தால் தடை செய்யப் பட்ட போதைப்பொருள் விற்பனையில் கொடிகட்டிப் பறப்பார். பெண்களை வெளிநாட்டுக்குக் கடத்துவார். வெளிநாட்டுப் பெண்களையும் ஏமாற்றுவார். திருமணம் என்ற பெயரில், நிறைய பெண்களுக்கு துரோகம் செய்வார். இம்மாதிரி மனிதர்களிடம், சாதாரண ஆட்கள் நெருங்கவே அச்சம் கொள்வர். பெண்களுக்கு இவ்வமைப்பு இருப்பின் வெறுக்கத்தக்க செயல்களைச் செய்வர். இச்செயல்களுக்கு இடம் கொடுத்த சுக்கிரன் நீசமாக இருத்தல் வேண்டும்.

நாடிஜோதிடம்: சுக்கிரனின் வீட்டில், ராகு எனும் கொடுமையான சாரத்தில், கேது எனும் பாவ கிரகம் செல்லும்போது, திருமண பந்தம் என்பது மிகக் கொடுமை யானதாகவும், விஷம் கக்குவதுபோன்றும் அமையும். ஒன்று, அதிலேயே மூழ்கி, கீழ்த்தரமான வாழ்வு வாழ்வர். அல்லது அதிலிருந்து பிரிந்து வெளியேறி விடுவர்.

பரிகாரம்: திருமீயச்சூர் ஆலயத்திலுள்ள 12 நாகர்களுக்கு அபிஷேகம் செய்து அர்ச்சனை செய்யவேண்டும். அருகிலுள்ள கோவில்களில் இரு பாம்புகள் இணைந்த மூர்த்தத்துக்கு பாலாபிஷேகம் செய்து, கற்கண்டு போன்ற இனிப்புகளுடன் வணங்கவும். காரைக்கால் அம்மையாரை வணங்கவும்.

(அடுத்த இதழில் விசாகம், அனுஷம், கேட்டை....)

செல்: 94449 61845

bala160824
இதையும் படியுங்கள்
Subscribe