22. திருவோணம்

இது மகர ராசியில் அமைந் துள்ளது. இதன் சாரநாதர் சந்திரன். திருவோண நட்சத்திரத்தில் கேது நின்றால் அங்கு கேது+சந்திரன் எனும் இணைவிருக்கும். இஷ்ட தெய்வம்: இவர்கள் வாராஹி போன்ற உக்கிரமான பெண் தெய்வங்களை வழிபடு வதில் அதிக ஈடுபாடு கொண்டவர் கள்.

குணம்: இவர்களுக்கு தண்ணீர் என்றால் மிக அச்சம் கொள்வர். எங்காவது கடல், ஆறு, நதியின் அருகேகூட செல்லமாட்டார்கள். "தவறி தண்ணீரில் விழுந்து விடுவோம்; ஏதாவது ஆகிவிடும்' என பலத்த சந்தேகம் கொள்வர். இந்த சந்தேகம் பலிப்பதுபோல அவ்வப்போது குளியலறையில் வழுக்கி விழுந்துவிடுவர்.

அதிர்ஷ்டமும் தொழிலும்: கேது நின்ற சாரநாதர் சந்திரன் சுபத்தன்மையுடன் இருப்பின், இவர்கள் தண்ணீர் சார்ந்த தொழிலில் முதலாளிகளாக இருப்பர். விவசாய நிலச்சுவான்தாராக அமைவார். பெட்ரோல் பங்க் சொந்தக் காரராக பரிமளிப் பர். எண்ணெய் நிறுவனம் வைத்தி ருப்பர். தண்ணீரை சுத்திகரித்து, குடிநீர் நிலையம் நிறுவுவார். சிலர் சாராயக்கடையில் மேற்பார்வை செய்பவராக இருப்பர்.

Advertisment

ss

ஆயுர்வேத சோப்புகள் தயாரிப்பர். உணவு- குறிப்பாக பழமையான அரிசி, நவதானியங் களைக் கொண்டு உணவு தயார்செய்யும் நிறுவனம் நடத்துவர். ஆரோக்கிய குடிநீர் பானம் தயாரித்து விற்பனை செய்வர். மீன் உணவுகளில் பிரமாதப்படுத்துவர். தினுசு தினுசான ஐஸ்க்ரீம் தயாரித்து விற்பார். சாரநாதர் சந்திரன் சுபத்தன்மை பெற்று கேது சம்பந்தம் ஏற்படும்போது, அங்கு பழங்கால ருசியான உணவு தயாரிப்பு தன்னிச்சையாக உண்டாகும்.

கெடுபலன்கள்: கேது நின்ற சாரநாதர் சந்திரன் நீசம் பெற்றால், இவர்கள் மனப்பிறழ்வு நோய் கொள்வர். இவர்களுக்கு கண்டிப்பாக எண்ணக் குழப்பமும், மனத் தடுமாற்றமும் உண்டாகும். தான் என்ன செய்கிறோம் என இவரால் நிச்சயிக்க இயலாது. எப்போது சுறுசுறுப்பின்றி, சோம்பலாக, ஒரே இடத்தில் ஆணியடித்ததுபோல் அமர்ந்துகொள்வர். மிக பயப்படுவர். மனத்திருப்தியின்றி மனக்குறையுடன் வாழ்நாள் செல்லும்.

Advertisment

நாடி ஜோதிடம்: நாடி ஜோதிடம் சந்திரனை தாயாக பாவிக்கிறது. இந்த சாரநாதர் சந்திரன் சுபமாக இருப்பின், ஜாதகரின் தாய் மிகுந்த தெய்வ பக்தியுடன், ஒரு ஞானியைப்போல் இருப்பார். சந்திரன் நீசமானால் ஜாதகரது தாய் மனப்பிறழ்வுடன் அமைவார்.

பரிகாரம்: இவர்கள் கன்னியாகுமரி பகவதியம்மனை வணங்கவேண்டும். அருகிலுள்ள காளிக்கு, அபிஷேகத்திற் குப் பால், பன்னீர், இளநீர், சந்தனம் கொண்டு வணங்கி, அவளை ஆற்றுப்படுத்தி அவளருள் பெறவேண்டும். பொய்கை ஆழ்வாரை வணங்கவும்.

23. அவிட்டம்

இந்த நட்சத்திரத்தின் 1, 2-ஆம் பாதங்கள் மகரத்திலும், 3, 4-ஆம் பாதங்கள் கும்பத்திலும் விழுந்துள்ளது. இதன் சாரநாதர் செவ்வாய் ஆவார். அவிட்ட நட்சத்திரத்தில் கேது நிற்பின், அங்கு கேது+செவ்வாய் எனும் அமைப்புண்டாகும்.

இஷ்ட தெய்வம்: இவர்கள் வேலுடன் கூடிய முருகரை வணங்குவர். வேறு சிலருக்கு பைரவரை தினுசு தினுசாக வழிபடுவது மிகப் பிடிக்கும்.

குணம்: இவர்கள் எப்போதும் மரண, உயிர் பயம் கொண்டிருப்பர். ஏதாவது வியாதி வந்துவிடுமோ அல்லது விபத்து ஏதேனும் ஏற்பட்டுவிட்டால் என் செய்வது என்றும், தொழிற்சாலையில் வேலை செய்துகொண்டிருக்கும்போது பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ எனவும் அச்சமும் சந்தேகமும் மிகுதியாகப் பொதிந்திருக்கும்.

அதிர்ஷ்டமும் தொழிலும்: கேது ஒரு பாவ கிரகம். இடம் கொடுத்த சனியும் படுபாவ கிரகம். சாரம் கொடுத்த செவ்வாய் மிகமிகப் பாவர். இதில் சாரநாதர் உச்சம் அல்லது சுபத்தன்மையுடன் இருந்தால், ஜாதகர் ரியல் எஸ்டேட் தொழிலில் மிகச் சிறப்புடன் இருப்பார். குறிப்பாக, மனையை மொத்தமாக வாங்கிப் பிரித்து விற்கும் தொழில் நல்லவிதமாக நடக்கும். இரும்பு வாகனங்களைப் பிரித்துப்போட்டு, பழுதுபார்க்கும் வேலை மிகப் பிடிக்கும். தோல் பொருட்களைப் பதப்படுத்தி, அதனைக் கொண்டு பல பொருட்களைத் தயாரிக்கும் சொந்தத் தொழிற்சாலை நடத்துவர். சிலர் அதில் வேலை செய்வர். விவசாயக் கருவிகள் விற்பனை, அதில் பழுதுபார்ப்பது, வாடகைக்கு விடுவது போன்ற தொழிலில் ஈடுபாடு காட்டுவர். சிலர் சுரங்கம் அல்லது அதுபோன்ற பள்ளத்தாக்கு இடங்களில் வேலை செய்வர். இக்கட்டான இடங்களிலும் மின்சார வசதி ஏற்படுத்திக்கொடுக்கும் பணி செய்வர். சிலர், இராணுவத்தில், பனி மூடியிருக்கும் சூழலில், கடுமையான விதத்தில் பணிபுரிய வேண்டியிருக்கும். கேது நின்ற சாரநாதர் உச்சமானாலும்கூட, இந்த இணைவு மூன்று பாவர்களைக் கொண்டது. ஆதலால் இந்த ஜாதகர்களால் மென்மையான, அழகான, அமைதியான, சுகமான தொழில், வேலை செய்ய முடியாது. இருட்டான, அழுக்கு, நாற்றம் பிடித்த குகை போன்ற இடத்தில் மட்டுமே தொழில், வேலைவாய்ப்பு கிடைக்கும்.

கெடுபலன்கள்: கேது நின்ற சாரநாதர் செவ்வாய் நீசம் மற்றும் அசுபத் தன்மையுடன் இருந்தால், இவர்கள் சாராயக் கடையில் வேலை செய்வது, செருப்பு தைப்பது, கழிவுநீர் அகற்றி சுத்தம் செய்வது, சிறையிலிருப்பது, மாமிசக் கடையில் வேலை மற்றும் சவக்கிடங்கில் வேலை என மற்றவர் அஞ்சும், அகலும் வேலைகளைச் செய்வர்; எல்லாவற்றையும்விட இவர்கள் பயங்கரமான தீவிரவாதிகளாக மாறிவிடுவர். கொள்ளை, கொலை என எதற்கும் அஞ்சமாட்டார்கள். துப்பாக்கி, அரிவாள், வெடிகுண்டு எல்லாம், இவர்களுக்கு விளையாட்டுப் பொருள்கள்போலத் தெரியும். இவர்களின் உண்மை நிலை தெரிந்தவர்கள், இவர்களைக கண்டவுடன் அடுத்த தெரு வழியாக ஓட்டமெடுப்பர். போலீஸ் மட்டுமல்ல; இராணுவம்கூட இவர்களால் துன்பப்படும். இந்த கிரக சம்பந்தம் மிகப்பொல்லாத இணைவாகும்.

நாடிஜோதிடம்: கேது தடை, பிரிவினை என்றும், செவ்வாய் ஆயுதம், விபத்து, பிரிவினை என்றும், சனி வினைகள் என்றும் கூறும். இந்த மூன்றும் இணையும்போது என்னவாகும் என தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.

பரிகாரம்: இந்த இணைவிற்கு பைரவரை விட்டால் வேறு பரிகாரமில்லை. செவ்வாய்க்கிழமைகளில், எள் சாதம், பருப்பு சாதம், கொள்ளு சுண்டல் என எதையாவது பிரசாதமாகப் படைத்து நன்கு வணங்கிவிட்டு, விநியோகம் செய்துவிடுங்கள். இவ்விதம் பைரவரை நம்பிக்கையுடன் வணங்கும்போது ஜாதகர் "சம்பவம்' செய்யாமல் இருப்பார். பூதத்தாழ்வாரை வணங்கவேண்டும்.

24. சதயம்

இது கும்ப ராசியில் முழுமையாக அமர்ந்துள்ளது. இதன் சாரநாதர் ராகு. கேதுபகவான் சதய நட்சத்திரம் எடுத்து நின்றால் அங்கு கேது+ராகு எனும் இணைவு அமையும்.

இஷ்ட தெய்வம்: இவர்களுக்கு காவல் தெய்வமும், குலதெய்வமும் மட்டுமே பிடிக்கும். மற்ற தெய்வங்கள் "நமக்கு செட் ஆகாது' என்று உறுதியாகக் கூறுவர்.

குணம்: மற்றவர்களுக்கு ஏதேதோ சந்தேகமும் பயமுமிருக்க, இவர்களில் பெரும்பாலோருக்கு அரசியல் சார்ந்து பயமிருக்கும். எவன் எப்போது நம்மைப் போட்டுத் தள்ளிவிடுவானோ என அஞ்சுவர். அல்லது தனது நாற்காலியை வேறு யாராவது பறித்துக்கொள்வார்களோ எனும் பதட்டம் இருந்துகொண்டேயிருக்கும். வெளியாட்கள், வெளிநாட்டு ஆட்கள்மூலம், தன்னுடைய வேலைக்கு ஆப்பு வந்துவிடுமோ என சந்தேகம் கொள்வர்.

அதிர்ஷ்டமும் தொழிலும்: கேது நின்ற சாரநாதர் ராகு சுப சம்பந்தம் கொண்டிருப்பின் இவர்கள் அணுசக்தித் துறை, துப்பறியும் வேலை, தேர்தல் கமிஷன், அரசியலமைப்பு சட்டம், வெளிநாட்டுத் துறை ஏற்றுமதி- இறக்குமதித்துறை, வெளிநாட்டு வர்த்தகம், விஞ்ஞானம, வானியல் துறை, தட்பவெப்பப் பிரிவு, பங்கு வர்த்தகம், மொழிபெயர்ப்பு வேலை, தோல் தொழிற்சாலை, அகதிகள் முகாம் நிர்வாகம், வெளிநாட்டுப் பயணம், அரசியல் என இத்தொழில்களில் ஈடுபடுவர். கெடுபலன்கள்: கேது நின்ற சாரநாதர் அசுபத் தன்மை அடைந்தால், ஜாதகர் வெளிநாட்டுக்கு கள்ள விசா, பாஸ்போர்ட் எடுத்து ஆள் அனுப்புவது உலகில் புழக்கத்திலுள்ள பணத்தைப் போலியாக அச்சிடுவது, உயர்தரமான போதை மருந்தை கடத்துவது, கொலைசெய்ய பக்கவாக ஸ்கெட்ச் போடுவது, லஞ்சப் பணத்தைக் கைமாற்றுவது, ஓட்டுப்போட பணம் கொடுப்பதில் கில்லாடித்தனம், பழையகால பொருட்கள், சாமி சிலைகளைக் கடத்துவது, நிறைய பெண்களைத் திருமணம் செய்வது, அரசியலில் இம்சை கொடுப்பவர்களைப் போட்டுத் தள்ளுவது என இதையும் செய்வார்; இதற்கு மேலேயும் செய்வார்.

நாடிஜோதிடம்: கேது பிரிவினையும், சனி மூத்த சகோதரனையும், ராகு விபத்து, பில்லி சூனியத்தையும் குறிப்பிடுகிறது. எனவே ஜாதகர் ஏதோவொரு கோபத்தில் உடன் பிறந்த அண்ணனுக்கு சூனியம் வைத்துவிடுவார். அல்லது ஒரு விபத்தை ஏற்படுத்திவிடுவார்.

பரிகாரம்: இந்த கிரகச் சேர்க்கை மிக மோசமானது; பொல்லாதது. எனவே யோக நரசிம்மரை வணங்கவேண்டும். கூடவே வாராஹி அம்மனை எலுமிச்சை, குங்குமம் கொண்டு வணங்குவது மிகவும் நல்லது. மேலும் பைரவரையும் வணங்கவும். குலதெய்வ வழிபாடும், தியானம் செய்வதும், வாழ்க்கைப் பாதையை நெறி பிறழாமல் இருக்கச் செய்யும். திருநாவுக்கரசரை வணங்கவும்.

(அடுத்த இதழில் பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி)

செல்: 94449 61845