க சிறந்த கலைகளில் ஒன்றான ஜோதிட கலையில், வல்லமையுடன் காலபுருஷனுக்கு எட்டாம் பாவகத்திற்கு பொறுப் பேற்றுள்ளது, வீரியமிக்க செவ்வாயின் வீடான விருச்சிகம்.

இது வீரியத்தையும், வீரத்தையும், போர்க்களத்தையும் பறைசாற்றும் செவ்வாயின் இரண்டாவது ராசியாகும்.

இந்த ராசிக்கு தன் உடலை யும், தன் உயிரையும், தன் சந்ததிக்கு உணவாக அர்ப்பணிக்கச் செய்யுமாக சிறந்த தேள் உடைய உருவத்தை சின்னமாக வழங்கியுள்ளது.

மேலும் நீர் ராசியாகி, பெண் ராசியாக மிளிர்ந்து, 360 டிகிரி வானியல் சுற்றுவட்ட பாதையில் 210ளி முதல் 240ளி வரை தன் ஆளுமைக்குள் கொண்டு வந்து அமர்ந்துள்ளது.

Advertisment

இது மோட்ச திரிகோணங்களில் ஒன்றாக அமையப்பெற்றுள்ளது. கால புருஷனுக்கு எட்டாம் பாவகமாக அமர்ந்து, ரகசியப் பெட்டகமாக ஒளிர்ந்து, மறைந்து கொண்டு உள்ளது.

cc

இங்கு குருவின் விசாகம், சனிபகவானின் அனுஷம், புதனின் கேட்டை என்கின்ற நட்சத்திரங்கள் அமைந்துள்ளது. வேகமும், வீரியமும், போர்க்குணமும் கொண்ட செவ்வாயின் வீட்டில், அறிவுக்கு அதிபதியான குருவின் நட்சத்திரமும், புத்திக்கும், அதிநுட்ப ஆற்றலுக்கும், அதிபதியான புதன் நட்சத்திரமும், தர்மத்தின் வழிகாட்டியும், கருமத்தின் வழிகாட்டியுமான, சனிபகவானின் நட்சத்திரமும் அமைந்து இந்த ராசியில் ஆகச் சிறந்த ஆளுமையை நம்மிடையே எடுத்துரைக்கின்றது.

மேலும் சனிபகவானின் அனுஷம், இங்கு நடு நட்சத்திரமாக அமைந்து நீதியின் வசம் ஈட்டுச் செல்ல எத்தனைக்கின்றது.

பூமிகாரர்களான செவ்வாய், இவர்களின் ராசிநாதனாக வருவதால் சிறிய அளவிலாவது சொத்து இவர்களுக்கு இருக்கும். இவர்களின் ராசி நாதனே ஆறாம் அதிபதியாகவும் அமைவத னால், இவர்களில் பலருக்கு ரத்த அழுத்தமும், ரத்தம் சார்ந்த நோயின் தாக்கமும் இருக்கும். இவர்கள் எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் அயராது உழைப்பினால் முன்னேற நினைப்பார்கள். ஆடம்பரமாக வாழவேண்டும் என்கின்ற எண்ணம் இவர்களிடையே அதீதமாக இருக்கும்.

உழைப்பு மட்டுமல்லாமல் சேமிப்பிலும் இவர்களின் ஈடுபாடு அலாதியாக இருக்கும். இவர்களிடம் எப்பொழுதும் ஒரு சிடுசிடுப்பும், என்ன வாழ்க்கை இது என்கின்ற மனப்பாங்கும் இருந்துகொண்டே இருக்கும். இவர்கள் எளிதில் யாரையுமே நம்பிவிட மாட்டார்கள். இவர் களின் நடுத்தர வயதிற்கு பின்புதான் இவர்களின் வாழ்வில் வசந்தம் வந்துசேரும்.

லக்னம் மற்றும் ஆறாம் அதிபதியான செவ்வாய் 3-ல் உச்சம்பெற்று ஒன்பதில் நீசம் பெரும் சூழல் உருவாகும் நிலை அமையப்பெற்ற இவர்கள், தந்தைவழி சார்ந்த நல்ல விஷயங்களை அனுபவிக்க தடையாக இருக்கும். மேலும் மாஸ்டர் டிகிரி மேற்கொள்ளும்பொழுது சிறு தடைகளும் உருவாகும். தந்தை உறவுகள் எப்பொழுதுமே ஒரு இடர்பாட்டுடனே பயணிப்பார்கள், தன் தைரியத்தை வைத்துக்கொண்டே எதிலும் முன்னேறுவார்கள். இவர்களுக்கு பயணத்தின்மூலம் லாபம் கிட்டும். அதோடு ஒப்பந்தங்களும் இவர்களுக்கு சிறப்பினைத் தரும்.

லக்னாதிபதி ஒன்பதில் நீசம். தந்தையின்மீது சிறு கவனம் இருப்பது சிறப்பு. மேலும் தந்தை மற்றும் தாயினை தன்னுடன் வைத்து பராமரிப்பதனால் வாழ்வில் பல உயரங்களை இவர்களால் எட்டிவிட முடியும்.

இரண்டு மற்றும் ஐந்தாம் அதிபதி மூன்றில் நீசமாகி ஒன்பதில் உச்சமாகும் சூழல் அமையும். இந்நிலையானது இவர்களின் வருமானத்தில் இணைய சகோதரத்திற்கு சில செலவுகள் செய்ய நேரும். மேலும் பேச்சில் கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதனை நினைவுபடுத்துகின்றது. இரண்டாம் அதிபதி ஒன்பதில் உச்சமாகும்பொழுது தந்தை சார்ந்த விஷயத்தில் விட்டுக்கொடுத்து செல்லவேண்டும் என்பதனை இரண் டாம் பாவகமும் உணர்த்துகின்றது.

இவர்களின் குடும்பத்தில் இவர்களை காட்டிலும் இவர் உடன்பிறந்தவர்களுக்கே அதீத முக்கியத்துவம் அளிக்கப்படுவதை காணமுடியும்.

மூன்று மற்றும் நான்காம் அதிபதி சனிபகவான் ஆறில் நீசமாகி 12-ல் உச்சமாகும் சூழல் உருவாகும் இந்த நிலையானது தொடர்புகளின்மூலம், ஒருவருடன் ஒருவர், மேற்கொள்ளும் தொடர்புகளின் மூலம், விரயத்தை சந்திக்கும் சூழல் உருவாகலாம்.

இவர்களுக்கு நிலம் சம்பந்தப்பட்ட ஒரு வழக்கு நிச்சயமாக வாழ்நாளில் இருக்கும். மேலும் அடிவயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும்.

நான்காம் அதிபதியும் சனிபகவானா கவே உருபெற்று அமைந்திருப்பதனால், தாயாருக்கு ஒரு மருத்துவச் செலவு ஏற்படலாம் என்பதனை சுட்டிக் காட்டுகின்றது.

ஏழு மற்றும் பன்னிரண்டாம் அதிபதி சுக்கிரன் ஐந்தில் உச்சமாகி 11-ல் நீசமாகும் சூழல் இந்த விருச்சிக ராசிக்கு அமையும். இது இவர்களின் களத்திரத்தின்மூலம் இவர்களின் பூர்வபுண்ணியம் நிலைபெறும் என்பதனை உணர்த்துகின்றது. இந்த ராசியில் திருமணத்திற்குப் பின்பே இவர் களின் பூர்வீகத்தில் கிடைக்கக்கூடிய மரியாதையும், வருமானமும், இவர்களுக்கு அங்கீகரிக்கப்படும். அதோடு பதினொன்றில் நீசமாவது மனைவியின்மீது வாங்கப்படும் சொத்துகளின்மீது இடர்பாடுகள் உருவாக லாம் என்பதனை உணர்த்துகின்றது.

எட்டு மற்றும் 11-ஆம் அதிபதி புதன் ஐந்தில் நீசமாகி 11-ல் உச்சமடையும் சூழல் உருவாகும். இந்நிலையானது இவர்களின் பூர்வீகத்தில் பொதிந்துள்ள ரகசியத்தினை சுட்டிக் காட்டுகின்றது. மேலும் அஷ்ட மாதிபதி பதினோராம் இடத்தில் உச்சம் பெறுவதனால் சில நேர்மையற்ற வழியில் சொத்துகள் சேர்க்கும் சூழ்நிலையை எடுத்துரைக்கின்றது.

லக்னத்திற்கு ஒன்பதாம் அதிபதி லக்னத்தில் நீசமாகி ஏழில் உச்சமாகும் சூழல் உருவாகும். இது திருமணத்திற்கு பின்பே இவர்களின் பாக்கியம், வேலை செய்யும் என்பதனை எடுத்துரைக்கின்றது. மேலும் தன்னைவிட தன் வாழ்க்கைத் துணையே இவர்களின் பெற்றோரின் மீதான ஆளுமையை காட்டுவார்கள் என்று தெரியப்படுத்துகின்றது.

பத்தாம் அதிபதியான சூரியன் 12-ல் நீசம், ஆறில் உச்சம். இந்நிலை மறைமுக வருமானத்தை மீண்டும் உறுதிப்படுத்து கின்றது. மேலும் இதன்மூலம் ஏற்படும் செலவினையும் ஆணித்தரமாக சுட்டிக் காட்டுகின்றது.

மனோ காரகனான சந்திரன் இவர்களின் ராசியிலேயே நீசம் அடைவதனால் முடிவெடுப்பதில் பெரும் தடுமாற்றத் தையும், மற்றவர்களை நம்புவதில் பெரும் இடரையும் மேற்கொள்ளும் ராசியில் முதல் ராசியாக விருச்சிகம் திகழ்கின்றது. இந்த நிலையில் இருந்து விடுபடுவதற்கு ஒவ்வொரு பௌர்ணமியன்று இரவும் இவர்கள் உண்ணும் உணவினை பச்சரிசி சாதமாக மாற்றி ஒரு நாழிகை அதாவது 24 நிமிடங்கள் நிலவு ஒளியில் வைத்து பின்பு அந்த சாதத்தை உண்டுவர மனரீதியான பிரச் சினைகளும், பாக்கியம்ரீதியான பிரச்சினைகளும், முடிவெடுக்கும் திறனில் ஆளுமையும், உருவாகி சிறப்படைவார்கள்.

தொழில் மற்றும் பணியிடங்களில் உயர்வினை அடைய இந்த ராசியின் சின்னமான தேள் உருவத்தை லோகோவாக பயன்படுத்த சிறப்பினை அடையமுடியும்.

பொருளாதாரரீதியான இடர்கள் விலக விசாக நட்சத்திரம் என்றால் மகிழ மரமும், அனுஷ நட்சத்திரம் என்றால் பிராய் மரமும்.

கேட்டை நட்சத்திரம் என்றால் மாமரத்தையும் பராமரித்தும் வழிபட்டும் வருவதனால் பொருளாதாரத்தில் பெரும் சிறப்பினை அடையமுடியும்.

விருச்சிக ராசிக்கான லால் கிதாப் பரிகாரங்கள்

வீட்டில் மண்ணால் செய்யப்பட்ட பாத்திரத்தில் தேன் அல்லது குங்குமம் வைத்திருப்பது அதிர்ஷ்டத்தை தரும்.

தினமும் காலையில் கொஞ்சம் தேன் சாப்பிடுவது நலம் தரும்.

அரசமரம் மற்றும் முள் செடிகளை வெட்டக்கூடாது.

செவ்வாய்க்கிழமைகளில் விரதமிருப்பது நல்லது.

பால் காய்ச்சும்பொழுது பொங்கி வடியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

செவ்வாய்க்கிழமையன்று தேன், குங்குமம், சிவப்பு ரோஜா இவற்றை ஓடும் நீர் அல்லது கடலில்விட துரதிஷ்டங்கள் நீங்கும்.

மூத்த சகோதரனிடம் மரியாதையாக நடந்துக்கொள்ளுங்கள்.

செவ்வாய்க்கிழமைகளில் அனுமனுக்கு செந்தூரம் மற்றும் ஆடை சாற்றி வழிபட வறுமை, கடன், நோய் நீங்கி நலவாழ்வு கிட்டும்.

செவ்வாய் பூமிகாரகன் என்பதனால் காலையில் தினமும் பூமியை தொட்டு வணங்கி விட்டு பிற வேலைகளை செய்யும் பொழுது மாபெரும் சிறப்பினை இந்த விருச்சிக ராசி யினால் தொட்டுவிட முடியும் என்பதே திண்ணம்.

செல்: 80563 79988