ர்ப்பு நிறைந்த ராசியாகக் கருதப்படும் கன்னி ராசி, கால புருஷனுக்கு ஆறாவது ராசியாக மிளிர்கின்றது.

இது 360 டிகிரி வானியல் சுற்று வட்ட பாதையில், 150 டிகிரிமுதல், 180 டிகிரிவரை, விஸ்தரித்து உள்ளது.

இதற்கு முழுப் பொறுப்பையும் ஏற்கின்றார் புதன். பெயருக்கு ஏற்றார் போலவே இது ஒரு பெண் ராசியாகும். அதோடு பஞ்சபூதத்தில் நிலமாக திடம்பெறும் ராசி, மேலும் அர்த்த திரிகோணமாகவும், உபய லக்னமாகவும், உருவெடுத்து அமர்ந்துள்ளது.

kanni

Advertisment

இதன் சின்னமாக கன்னிப் பெண்ணை அர்ப்பணித்து உள்ளது ஜோதிடவியல் என்ற பொழுதிலும் இதற்கு "எ' என்ற சின்னமும் மேலை நாடுகளில் வழங்கப்பட்டுள்ளது.

அதீத அறிவின், ஆழமான வடிவியல் இந்த புதன். புத்தி கூர்மையின் புனரமைக்க முடியாத புதையல், உடலின் நரம்பு மண்டலமும், உடல்முழுக்க அழகியலின் ஆர்ப்பரிப்பில் அமைந்துள்ள தோலின் முழு வடிவமும், உள்ளுறுப்புகளில் குடலும் ,இந்த புதன் தான்.

இந்த புதன் ஆட்சி, உச்சம், மூலத்திரிகோண பலம், நிறைந்த ராசியாகவே இந்த கன்னி ராசி அமைந்துள்ளது.

பொதுவாகவே இந்த கன்னி ராசியில் லக்னங்களில் பிறந்தவர்கள் அறிவும், கணிதத் தன்மையுடன் கூடிய ஆளுமையும், முன் யோசனையும், சற்று கலகத் தன்மையும், புது சிந்தனையும், உடையவர்களாக இருப்பார்கள்.

யாரையும் ஒரு புள்ளியில் நிறுத்தும் கருத்தியல் சிந்தனையும், வசீகரம் மற்றும் பேச்சுத் திறனும், உடையவர்களாக அமைந்திருப்பார்கள்.

உபய லக்னங்களிலேயே சற்று முரண்பட்டவர்கள் இவர்கள். அதீத புத்தி கூர்மையுடைய புதனின் வீட்டில், அதிகாரத்தை பறைசாற்றும் சூரியனின் நட்சத்திரமான உத்திரமும், மனக்கிலேசங்களுக்கு உட்படுத்தும் சந்திரனின் அஸ்தம், வீரத்தையும், வீரியத்தையும், நிலைநாட்டும் செவ்வாயின் நட்சத்திரமான சித்திரை ஆகியவற்றின் கூட்டானது, இவர்களின் தனித்தன்மையை நிலை நிறுத்தும் தன்மையினை நம்மை உணரச் செய்கின்றது.

கன்னி லக்ன அதிபதி புதன் லக்னத்திற்கும், பத்தாம் இடத்திற்கும், பொறுப்பேற்று லக்னத்தில் உச்சம் பெற்று ,ஏழில் நீசம் அடையும் சூழலை உருவாக்குகின்றது, இந்த நிலையானது தன்னை எங்கும் விட்டுக் கொடுக்காத சூழலும், தன்னைச் சார்ந்த இடத்தில் என்றும் தனக்கே வெற்றி என்ற சூழ்நிலையையும், உருவாக்கி விடுவார்கள். பத்தாம் அதிபதியும் லக்னத்தில் உச்சம் பெறும் சூழல், இவர்கள் தொழில் சார்ந்த விஷயங்களில் ஒரு பெரிய நிலையை எட்டுவதற்கான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்கும் .இவர்கள் நினைக்கும் படி மணவாழ்க்கை மிகச் சிறப்பாக அமைவது, பிற கிரகங்களின் சேர்க்கையும், பார்வையும், கொண்டே தீர்மானிக்க முடியும்.

இவர்களின் வீட்டில் குழந்தைகள் சம்பந்தமான பிரச்சனைகள் நிச்சயமாக அமைப்பெறுவதோடு, ஒரு கன்னிப் பெண் இறந்த வம்சா வழியாக இவர்களின் பூர்வீகம் அமையப் பெறுவதை அனுபவத்தில் காண முடிகின்றது.

சமூகத்தில் இவர்களுக்கான இடத்தை அடைவது சற்று கடினப்பட்டு அடைய முடிகின்றது. அதோடு நண்பர்கள் வட்டத்திலும், களத்திரவழி உறவுகளின் விஷயத்திலும், பண விஷயத்திலும் சற்று கவனமுடன் இருப்பது இவர்களை மேலும் சிறப்புறச் செய்யும்.

இரண்டு மற்றும் ஒன்பதாம் அதிபதி சுக்கிரன், தனது வீட்டில் நீசம் ஆகி ஏழில் உச்சமடையும் சூழல் இவர்களுக்கு அமையும்.

இந்நிலையானது வருமானம் தன்னால் சிலர் விரயங்களை சந்திக்கும் சூழலை கொடுக்கும். என்பதை உணர்த்துகின்றது. மேலும் இவர்களுக்கான பொருளாதார சூழல் தன் மூலம் நிச்சயமாக ஒரு சரிவை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதை கவனத்தில் கொள்வது சிறப்பு.

வருவாயில் சிறுபகுதியினை சமூகத்திற்கு அர்ப்பணிக்க பொருளாதாரச் சூழல் சீர்படும் அதோடு தந்தை வழி உறவுகளிடம் சற்று அனுசரித்து செல்வது இவர்களுக்கு சிறப்பினைத் தரும், இவர்களுக்கு திருமணத்திற்குப் பிறகு சில பாக்கியங்கள் கைகூடும்.

மூன்றாம் மற்றும் எட்டாம் அதிபதி, ஐந்தில் உச்சம் பெற்றும், 11 இல் நீசமும் அடைவார், இந்த சூழல் குலதெய்வம் சார்ந்த ஒரு மர்மமும், இளைய சகோதரத்துடன் ஆன சில ஒத்து வராத தன்மைகளையும், பங்காளிகளுடன் இடர்பாடுகளையும், சுட்டிக்காட்டுகின்றது. நிலம் சம்பந்தமான வில்லங்கங்கள் ஆகியவற்றை எதிர்கொள்ளும் சூழலையும் இவர்களுக்கு உருவாக்கும்.

லக்னத்திற்கு நாலு மற்றும் ஏழாம் அதிபதி குரு, ஐந்தில் நீசம் 11 உச்சம் என்ற சூழல் உருவாகும். தன் கனவு மற்றும் ஆசைக்காக சில விஷயங்களை விட்டுக் கொடுக்கும் சூழல் இவர்களின் வாழ்வில் அடிக்கடி நிகழ்ந்து கொண்டே இருக்கும். மேலும் ஏழாம் அதிபதி 11-ல் உச்சம் பெறுவது இருதார யோகத்தையும், தந்துவிடும்.

அதோடு மனைவி வழியின் மூலம் சில சொத்து சேர்க்கைகளும், இவர்களுக்கு அமைய வாய்ப்புகள் உருவாகும். இவர்கள் தங்களின் சொத்துகளை தங்களின் குழந்தைகளுக்காகவும், அவர்களின் கல்வி, வாழ்வு, போன்றவைகளுக்காகவும், ஒரு பகுதியினை இழக்கும் சூழல் உருவாகும்.

ஐந்து மற்றும் ஆறாம் அதிபதி சனி எட்டில் நீசம், இரண்டில் உச்சம், ஐந்தாம் அதிபதி இரண்டில் உச்சம் பெறுவது மிகச் சிறப்பு, இது தன் சொல் கேட்டு வழி நடக்கும் குடும்பம், மற்றும் குழந்தைகளையும், தன் குழந்தைகளின் பிறப்புக்குப் பிறகு ஏற்படும் வருமானம் சார்ந்த உயர்வினையும் கூறும். அதுவே எட்டில் நீசம் அடைவது இவர்கள் சார்ந்த சிறிய நெருடல்களை எடுத்துரைக்கும். அதோடு ஆறாம் அதிபதி எட்டில் நீசம் பெறுவது சிறப்பு என்றா லும், இரண்டில் உச்சம் அடைவது எதிரியினால் வருமானத் தடையும், உணவின் மூலம் சில நோய்களை எதிர் நோக்கும் சூழலையும் உணர்த்துகின்றது. எனவே உணவுக் கட்டுப்பாடும், உணவு சார்ந்த கவனமும், இவர்கள் வாழ்வில் தேவை என்பதனை புரிந்து கொள்வது சிறப்பு.

பதினோராம் அதிபதி சந்திரன் மூன்றில் நீசம் ஒன்பதில் உச்சம் இந்த சூழல் இவர்களின் சொத்துக்கள் மற்றும் மூத்த சகோதரனின் நிலையானது இல்லங்களில் குடும்பத்தை நிலை நிறுத்துவதை உணர்த்தும்.மேலும் கன்னி ராசிக்கு உண்டான சற்று காமம் நிறைந்த தன்மையினால் குடும்பத்தில் ஏற்படக்கூடிய சில சச்சரவுகளை இது சுட்டிக்காட்டுகின்றது. அதோடு இவர்கள் இவர்களின் மூத்த சகோதரருக்கு விட்டுக் கொடுத்துச் செல்வார்கள். மேலும் அனுசரித்தும் செல்ல வேண்டும் என்பதே சரியான நிலையாகும்.

பன்னிரண்டாம் அதிபதி சூரியன் இரண்டில் நீசம் எட்டில் உச்சம், இந்நிலை யானது இவர்களுக்கு ஏற்படும் சுகம் சார்ந்தும், நித்திரை சார்ந்தும், பிரச்சனைகளையும், தனது விரயத்தின் சூழல் ஒரு கட்டுக்குள் இருப்பதையும், அனாவசியமாக பணத்தை இவர்கள் இரைப்பவர்கள் இல்லை என்பதையும், சுட்டிக் காட்டுகின்றது.

இவர்கள் பொருளாதாரத்திலும், தொழில் மற்றும் பணியிடங்களில் சிறக்கவும், கன்னி ராசியின் சின்னமாக கன்னிப் பெண்ணின் உருவத்தை லோகாவாக பயன்படுத்தலாம்.

மேலும் பொருளாதாரத்தில் சிறப்படைய உத்திர நட்சத்திரம் என்றால் வேலமரமும்.

ஹஸ்தம் நட்சத்திரம் என்றால் வில்வ மரமும்.

சித்திரை நட்சத்திரம் என்றால் மருத மரத்தையும் வழிபடுவது மேலும் சிறப்பினை அளிக்கும்.

கன்னி ராசிக்கான லால் கிதாப் பரிகாரங்கள்

கன்னி ராசி பெண் குழந்தைகளாக இருந் தால் அவர்களுக்கு மூக்குத்தி அனுபவிப்பது குடும்பத்திற்கு வளம் சேர்க்கும்.

மழை பெய்யும் பொழுது மொட்டை மாடி அல்லது வீட்டின் மேல் கூரையில் மழை நீர் ஒரு பாத்திரத்தில் விழும் படி வைக்க வீட்டிற்கு அதிர்ஷ்டம் உண்டாகும்.

வீட்டில் வழிபாடு செய்யும் இடத்தை அடிக்கடி மாற்றக்கூடாது.

புத்தாடை அணியும் முன் அவற்றில் கொஞ்சம் கங்காஜலம் அல்லது தீர்த்தாகரச னம் மந்திரம் ஜெபிக்கப்பட்ட தண்ணீரை அந்த ஆடையில் சிறிது தெளித்த பின் அணிந்து வர என்றும் ஆடை அணிகலனுக்கு இவர்களுக்கு குறை இருக்காது. சனி கிரக சாந்தி செய்துகொள்ளவும்.

மது, புகையிலை போன்ற போதை பழக்கங் களை முற்றிலும் தவிர்ப்பது வாழ்வில் உயர்வினை தரும்.

புதன்கிழமை அன்று ஒரு மண் மூடியில் அகல் விளக்கு வைத்து அதை ஓடும் நீர் அல்லது கடலில் விடவும்.

பச்சை நிற கர்சிப்பை கையில் எப்பொழு தும் வைத்துக்கொள்வது பெரும் அதிர்ஷ்டத் தினை அளிக்கும்.

செல்: 80563 79988