12 ராசிகளின் ஆதிமுதல் அந்தம்வரை... தனுசு மேல்மருவத்தூர் எஸ். கலைவாணி

/idhalgal/balajothidam/beginning-end-12-signssagittarius-melamaruvathur-s-kalaivani

னித வாழ்வில் மாண்புகளையும், அவர் களின் வாழ்வியல் நிகழ்வுகளையும், நிகழ்வி னால் ஏற்படும் விளைவுகளையும், துல்லிய மாக எடுத்துரைக்கும் ஏக சக்தியான ஜோதிட வியலில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த ராசியாக தனுசு ராசி விளங்குகின்றது.

இது காலபுருஷனின் ஒன்பதாம் பாவக மாக அமைந்துள்ளது. மேலும் ஆண் ராசியாக வும், பஞ்சபூத தத்துவத்தில் நெருப்பாகவும் திகழ்கின்றது. மேலும் உபய ராசியாகி, தர்ம திரிகோண மாக ஆளுமையுடன் விளங்குகின்றது.

அதோடு மட்டுமல்லாமல் நவகிரகங்களில் மாபெரும் சுப கிரகமாக கருதப்படும் குருவின் ஆளுமைக்கு உட்பட்ட, திரிகோண ஸ்தானங் களான ஒன்பதாவது இடத்திற்கு பொறுப் பேற்றுள்ளது.

360 டிகிரி வானியல் சுற்றுவட்டப் பாதையில் 240 டிகிரிமுதல் 270 டிகிரி வரை தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.

இங்கு அதிசூட்சமம் வாய்ந்த கேதுவின் நட்சத்திரமான மூலமும், சுகங்கள் அனைத் தையும் சுகித்தே தீரவேண்டும் என்கின்ற சுக்கிரனின் நட்சத்திரமான பூராடமும், நீதிக்கும், நேர்மைக்கும், ஆளுமைக்கும், உரித் தான சூரியனின் நட்சத்திரமான உத்திராடமும் அமைந்து, இந்த ராசியினை மேலும் வளமுள்ளதாக அமையப்பெற்றுள்ளது.

இவர்கள் எந்த விஷயத்தையும் மாறுபட்ட கோணத்தில் அணுகும் ஆற்றல் பெற்றவர்கள். தொடர்ந்து போராடி வெற்றிபெறும் வல்லமை உடையவர்கள்.

தனக்காரகன் என்று போற்றப்படும் குருவின் ஆளுமைக்கு உட்பட்ட ராசி என்பத னால் இவர்கள் பெரும்பாலும் பணத்தின் பின்பு

னித வாழ்வில் மாண்புகளையும், அவர் களின் வாழ்வியல் நிகழ்வுகளையும், நிகழ்வி னால் ஏற்படும் விளைவுகளையும், துல்லிய மாக எடுத்துரைக்கும் ஏக சக்தியான ஜோதிட வியலில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த ராசியாக தனுசு ராசி விளங்குகின்றது.

இது காலபுருஷனின் ஒன்பதாம் பாவக மாக அமைந்துள்ளது. மேலும் ஆண் ராசியாக வும், பஞ்சபூத தத்துவத்தில் நெருப்பாகவும் திகழ்கின்றது. மேலும் உபய ராசியாகி, தர்ம திரிகோண மாக ஆளுமையுடன் விளங்குகின்றது.

அதோடு மட்டுமல்லாமல் நவகிரகங்களில் மாபெரும் சுப கிரகமாக கருதப்படும் குருவின் ஆளுமைக்கு உட்பட்ட, திரிகோண ஸ்தானங் களான ஒன்பதாவது இடத்திற்கு பொறுப் பேற்றுள்ளது.

360 டிகிரி வானியல் சுற்றுவட்டப் பாதையில் 240 டிகிரிமுதல் 270 டிகிரி வரை தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.

இங்கு அதிசூட்சமம் வாய்ந்த கேதுவின் நட்சத்திரமான மூலமும், சுகங்கள் அனைத் தையும் சுகித்தே தீரவேண்டும் என்கின்ற சுக்கிரனின் நட்சத்திரமான பூராடமும், நீதிக்கும், நேர்மைக்கும், ஆளுமைக்கும், உரித் தான சூரியனின் நட்சத்திரமான உத்திராடமும் அமைந்து, இந்த ராசியினை மேலும் வளமுள்ளதாக அமையப்பெற்றுள்ளது.

இவர்கள் எந்த விஷயத்தையும் மாறுபட்ட கோணத்தில் அணுகும் ஆற்றல் பெற்றவர்கள். தொடர்ந்து போராடி வெற்றிபெறும் வல்லமை உடையவர்கள்.

தனக்காரகன் என்று போற்றப்படும் குருவின் ஆளுமைக்கு உட்பட்ட ராசி என்பத னால் இவர்கள் பெரும்பாலும் பணத்தின் பின்பு ஓடுவது தவிர்க்கப்படுகின்றது.

இந்த ராசிக்கு ஜோதிடவியலில் அளிக்கப் பட்டுள்ள சின்னம் வில் அம்பு. எனவே எல்லா போராட்டங்களையும், இவர்கள் வாழ்வில் கடந்துசென்று வெற்றிபெறுவார்கள்.

இவர்களில் பெரும்பாலானோர் பூர்வீகத் தின் தற்பெருமையை, தான் பேசுகின்ற இடத்தில் அங்கங்கே நிலை நிறுத்திக் கொள்வார்கள். மேலும் ஆளுமை, சுறுசுறுப்பு போன்றவை இவர்கள் உடன்பிறந்த குணங்களாகும்.

இவர்களுள் சற்று தாமதமாக மண வாழ்க்கை அமைத்துக்கொள்பவர்களுக்கு பெரும்பாலும் மண வாழ்வின் பெரிய சிக்கல்கள் இருப்பதில்லை, ஆனால் சீக்கிரமாக மண வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் பல இன்னல்களை அனுபவிக்கும் சூழல் உருவாவதைக் கண்கூடாக காண முடிகிறது.

இவர்கள் உடல் உழைப்பை விரும்பு வதில்லை. சிறிய தோல்வி வந்தால்கூட துவண்டுவிடும் குணம் படைத்தவர்கள்.

ff

இவர்களில் பெரும்பாலானோருக்கு புத்திரம் சார்ந்த பிரச்சினைகள் இருப்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக தெரிகின்றது.

ஆனால் அந்த புத்திரர்களால் இவர்கள் இனம் காணப்பட்டு பெருமை அடையும் யோகிதைகள் பெற்றவர்கள்.

தனுசு ராசி மற்றும் லக்னங்கள் லக்னம் மற்றும் நான்காம் அதிபதியாகிய குரு, இரண்டில் நீசமாகி, எட்டில் உச்சமடையும் சூழல் உருவாகும், இரண்டில் நீசமாவத னால் பேச்சின்மூலம் பல இடர்பாடுகளை யும், குடும்பத்தில் சிறு நெருடலையும், வருமானத்தினால் ஒரு திருப்தியான சூழல் இல்லாத நிலையும், ஏற்படுத்தும். மேலும் நான்காம் அதிபதி இரண்டில் நீசமாவது குடும்பத்திற்காக தன் சுகத்தை தியாகம் செய்யும் சூழல் உருவாகும். மேலும் லக்னம் மற்றும் நான்காம் அதிபதி எட்டில் உச்சமாவதனால் இவர்களுக்கு மறைமுகமான சொத்து சேர்க்கையும், சில தேவையில்லாத பிரச்சினைகளுக்கு தானாக சென்று இடம்பெறும் சூழலையும் இவர்கள் உருவாக்கிக் கொள் வார்கள்.

இரண்டு மற்றும் மூன்றாம் அதிபதியான சனி, ஐந்தில் நீசமாகி, 11-ல் உச்சமாகும் நிலை ஏற்படும். இந்த நிலையானது குழந்தைகள் மற்றும் குடும்பத்திற்காக தனது வருமானத்தை தியாகம் செய்வார் கள். மேலும் மூன் றாம் அதிபதி ஐந்தில் நீசம் என்பது தனது வல்லமையை யும், ஆளுமையும், குழந்தைகளுக்காக விட்டு தரும் சூழல் உருவாகும். மேலும் பூர்வீக சொத்து விஷயங்களில் சற்று இடர்பாடுகளும், இளைய சகோதரத்தின் வழியில் சிற்சில இடர்பாடுகளும் வரும்.

அதோடு 11-ல் உச்சமாகும் சூழல் இருப்பதனால் வருமானத்தை ஒரு பெரும் சொத்தாக மாற்றக்கூடிய வல்லமை இவர்களுக்கு அமையும்.

ஐந்து மற்றும் 12-ஆம் அதிபதி செவ்வாய் இரண்டில் உச்சமாகி எட்டில் நீசமாகும் சூழல் தனுசு ராசி லக்னங்களுக்கு ஏற்படும். இந்நிலை குழந்தைகளின் வளர்ச்சியினால் குடும்பம் தலை தூக்குவதை எடுத்துரைக்கின்றது. மேலும் 12- ஆம் அதிபதி இரண்டில் உச்சமாவது விரையத்தையும் சுட்டிக்காட்டுக்கின்றது. அதோடு மட்டுமல்லாமல் 12-ஆம் அதிபதி எட்டில் நீசமாவது சயன சுகத்தில், உட- யல் சார்ந்த சுகங்களில் சில இடர்பாடு கள் உருவாகும் என்பதையும் சுட்டிக் காட்டுகின்றது.

ஆறு மற்றும் பதினோராம் அதிபதியான சுக்கிரன் பத்தில் நீசமாகி நாளில் உச்சம்பெறும் சூழல், இவர்கள் ஓர் இடத்தில் கைகட்டி வேலை செய்யும் சூழலை மறுக்கும் தன்மையை எடுத்துரைக்கின்றது. மற்றவர்களுக்கு அடிமையான தொழிலை இவர்கள் செய்யமாட்டார்கள் என்பதனையும், சொத்துகளின்மூலம் பெரும் சுகத்தை அனுபவிக்கும் சூழலையும் எடுத்து உரைக்கின்றது.

ஏழு மற்றும் பத்தாம் அதிபதியாகிய புதன் இவர்களுக்கு பத்தில் உச்சமாகி நான்கில் நீசமாகும் சூழல் அமையும். இந்நிலை கலத்திரத்தின்மூலம் ஒரு இணக்கமான சூழல் மற்றும் சுகங்கள் புறக் கணிக்கப்படும் என்பதனையும், தொழிலின் மூலம் சுகங்கள் பெருமளவு ஏற்படும் என்பதனையும் சுட்டிக் காட்டுகின்றது. இவர்களுக்கு சுய தொழிலின்மூலம் பெறும் பெயர் மற்றும் புகழ் அடையும் சூழல் அமைவதை இது எடுத்துரைக்கின்றது.

அஷ்டமாதிபதி சந்திரன் ஆறில் உச்சமாகி 12லில் நீசமாவது நோய் மற்றும் கடன் சார்ந்த பிரச்சினைகளில் பெருமளவு இடர்பாடுகள் இருக்காது என்பதனை உணர்த்துகின்றது. இது ஒரு சிறப்பான தன்மையினை குறிக்கும்.

ஒன்பதாம் அதிபதி சூரியன் 5-ல் உச்சம் பதினொன்றில் நீசமாகும் சூழல் தனுசு ராசிக்கு இயல்பாகவே அமையப்பெற்றுள்ளது. இதன்பொருட்டு பூர்வீகம் சார்ந்து ஒரு பெரும் பின்பலம் இவர்களுக்கு இருக்கும், பூர்வீக சொத்து மற்றும் பெருமைகள் போன்றவை இவர்களுக்கும் இவர்களின் குழந்தைகளுக்கும் சென்று சேரும் என்பதனை குறி காட்டுகின்றது. ஒன்பதாம் அதிபதி 11-ல் நீசமாவது இந்தக்காலகட்டத்தில் சேர்க்கப்படும் சொத்துக்கள் பெரும்பாலும் மூன்றாவது தலைமுறையை சென்றுசேர்வது தடுக்கப் படுகின்றது.

தனுசு ராசி தொழில் மற்றும் பணியிடங் களில் வில் அம்பு சின்னத்தினை லோகோவாக பயன்படுத்த தொழில் சிறக்கும்.

மூல நட்சத்திரம் என்றால் வஞ்சி மரமும், பூராடம் என்றால் பலாசு என்கின்ற பலாமரமும்.

உத்திராடம் என்றால் எருக்கன் செடியும் வாழ்வியலில் வழிபடும் சூழலை ஏற்படுத்திக் கொண்டால் பொருளாதார சம்பந்தப்பட்ட விஷயத்தில் பெரும் உயர்வினை அடைய முடியும்.

தனுசு ராசிக்கான லால் கிதாப் பரிகாரங்கள்

தொடர்ந்து 43 நாட்களுக்கு செம்பு நாணயங்களை ஓடும் நீரில் விட துரதிஷ்டம் நீங்கும்.

தந்தையின் படுக்கை, ஆடைகள் மற்றும் உடமைகள் இவர்களுக்கு அதிர்ஷ்டம் தருபவை.

கேட்பவர்களிடம் இல்லையென்று சொல்லாமல் இயன்றதை தர்மம் செய்யவும்.

திங்கள் அல்லது வெள்ளிக்கிழமைகளில் ஆலயத்திற்கு நெய், தயிர், அல்லது கற்பூரம், வாங்கிக்கொடுத்து வருவது நல்வாழ்வு தரும்.

வீட்டின் முற்பகுதியில் மஞ்சள்நிற பூ பூக்கும் செடிகளை வளர்ப்பது அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும்.

வியாழக்கிழமைகளில் ஹரி வம்ச புராணம் படிப்பது நல்லது அரச மர பிரதட்சணம் வழிபாடு நன்மை தரும்.

இவர்கள் தந்தையினை மனம் கோணாமல் பார்த்துக்கொள்வது இவர்களின் வாழ்வில் எல்லா சுபிட்சத்தையும் அளிக்கும்.

செல்: 80563 79988

bala230224
இதையும் படியுங்கள்
Subscribe