மனித வாழ்வின் வளர்ச்சிக்கு, மாபெரும் வழி வகுத்தலித்த ஜோதிடவியலில், ஒன்பதாம் இடமான ஆன்மிகம் சார்ந்த இடத்திற்கும், மோட்சத்தைக் குறிக்கும் 12-ஆமிடத்திற்கும், பொறுப்பேற்று அமர்ந்திருக்கும் குருவின் இரண்டாம் வீடு மீனம் ஆகும்.
இது சுபத்தின் சுபமான குருவின் வீடாகும். காலபுருஷனுக்கு மோட்ச ஸ்தானமாக 12-ஆம் வீடு அமைந்துள்ளது.
மேலும் பெண் ராசியாக பஞ்சபூத தத்துவத்தில் நீராகி, அமைதியான தோற்றத்துடன் அமர்ந்து, ஆட்சி செய்கின்றது.
இது கடலும், கடலை சார்ந்த இடத்தையும், குறிக்கின்ற நீரினை குறிப்பிடும் இடமாக திகழ்கின்றது.
அதோடு மட்டுமல்லாமல் இது உபய ராசிகளிலேயே மாறுபட்ட குணத்துடன் அமையப்பெற்ற உபய ராசியாகும்.
மோட்ச திரி குணமாகி, ஆழ்ந்து அமர்ந்தும், ஆர்ப்பரிப்பில் லாமல் அமர்ந்துள்ளது.
இது 360 டிகிரி வானியல் சுற்றுவட்டப் பாதையில் 330 டிகிரி முதல் 360 டிகிரிவரை தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.
இங்கு தனக்காரர்களின் பூரட்டாதி, கர்மகாரர்களின் உத்திரட் டாதி, அதிபுத்திசாலியான புதனின் ரேவதி என்கின்ற கூட்டு அதில் நுட்பம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.
உடலில் தத்துவத்தில் இரண்டு பாகங்களையும் குறிக்கும் இடமாக இந்த மீனம் அமர்ந்துள்ளது.
மீனம் அறிவாற்றலிலும், குருத்தன்மையுடனும், எப்பொழுதும் மாண்புடன் திகழும் ராசியாக பிரதிபலிக்கின்றது.
மேலும் நான்காவது உபய ராசியாக அமைந்துள்ளது.
இயல்பிலேயே பேச்சாற்றல் மிகுந்த இவர்கள் சின்ன சின்ன விஷயத்தில் கூட குற்றம் கண்டுபிடிக்கும் ஆற்றல் பெற்றவர்கள்.
என்னதான் குருவின் வீடாகவே இருந்தாலும் அங்கு புதன் ரேவதியும், சனியின் உத்திரட்டாதியும், சமயம் வரும்பொழுது பழிவாங்கும் தன்மையினை இவர்களுக்குள் விதைத்து வைத்திருக்கும்.
இவர்கள் எப்பொழுதுமே ஒரு கற்பனை உலகில் மிதப்பவர்களாக இருப்பார் கள். தயாள குணமும், பொறுமையும், தன்னம்பிக்கையும், உடையவர்கள்.
இவர்களுக்கு தங்களின் ரகசியத்தை கட்டி காப்பாத்தும் திறன் அறவே இருக்காது. சமயத்திற்கு ஏற்றார்போல் மாறிவிடும் தன்மை பெற்றவர்கள்.
இவர்கள் மற்றவர்களின் குரூர போதனையையும் கெட்ட சவகாசத்திற்கும் எளிதில் அடிமையாகி விடுவார்கள்.
இவர்களுக்கு அதீத சிறுபிள்ளைத்தனம் இருந்துகொண்டே இருக்கும். எவ்வளவு சீக்கிரம் மற்றவர்களின் மனதில் இடம் பிடிக்கின்றார்களோ அவ்வளவு சீக்கிரம் அவர்களிடம் இருந்து பிரிவினையும் பெற்றுக்கொள்ளும் ஆற்றல்மிக்கவர்கள்.
குருவின் ஆளுமையில் பிறந்த இவர்கள் பணத்தைவிட மனித மனத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள்.
அவமானப்படுத்திய நபரை வாழ்வின் இறுதிவரை தன்னிடம் சேர்த்துக் கொள்ள மறுக்கும் ஒரு ராசி இந்த மீன ராசியாகும்.
இவர்களுக்கு கொடுக்கப்படும் மரியாதையும், கௌரவமும், எந்த இடத்திலும் பாதித்துவிடவே கூடாது என்பதினில் மிகவும் உறுதியுடன் இருப்பார்கள்.
மற்றவர்களுக்கு அறிவுரை கூறியே இவர்களின் வாழ்வின் பெரும் பகுதியை கடத்திவிடுவார்கள். இவர்களின் அறிவும் ஆற்றலும் பிறருக்கே அதிக அளவில் பயன்படும்.
மீன ராசியில் பலருக்கு சற்று தாமதமான திருமணம் நடப்பதைக் காண முடிகின்றது.
உபய ராசியிலுக்கே உண்டான எதிர்மறை என்று சொல்லக்கூடிய களத்திரம் சார்ந்த பிரச்சினைகள் இவர்களின் வாழ்வில் வேரூன்றி இருப்பதைக் காணமுடிகிறது.
லக்னம் மற்றும் பத்தாம் இடத்திற்கு பொறுப்பேற்றுள்ள குருபகவான் லக்னத்திற்கு ஐந்தில் உச்சமாகி, 11-ல் நீசமாகும் சூழல் இவர்களுக்கு அமைய பெற்றிருக்கும்.
லக்னத்திற்கு ஐந்தில் உச்சமாகும் சூழல் இருப்பதனால் இவர்களின் குழந்தை பிறப்பிற்குப் பிறகு இவர்களின் வாழ்வில் பெரும் முன்னேற்றத்தை அடைவார்கள் என்பது உறுதியாகின்றது.
அதோடு மட்டுமல்லாமல் இவர்களின் பூர்வீகத்திற்காக இவர்களுடைய சில ஆசைகளையும், தியாகம் செய்யும் சூழல் இவர்களுக்கு அமைய பெற்றிருக்கும்.
லக்னாதிபதி மற்றும் பத்தாம் அதிபதி 11-ல் நீசமாவது சொத்து கள் சார்ந்து பெரிய பின்புலம் இருக்காது என்பதனை உணர்த்துகின்றது. மேலும் 10-ஆம் அதிபதி 11-ல் நீசமாவதனால் பெரும் லாபம் என்கின்ற நிலையை இவர்கள் எட்டுவது சற்று சிரமத்திற்கு உள்ளாகின்றது.
மேலும் இவர்களின் மூத்த சகோதரன் பெரும்பாலும் இவர்களுடன் இனக்கமற்ற சூழலில் பயணிப்பார்கள் என்பது திண்ணம் ஆகின்றது.
மீன லக்னத்திற்கு இரண்டு மற்றும் ஒன்பதாம் அதிபதி செவ்வாய் தன் லக்னத்திற்கு ஐந்தில் நீசமாகி 11-ல் உச்சமாகும் சூழல் அமையப் பெற்றிருக்கும். இந்த சூழலானது இரண்டாம் அதிபதி ஐந்தில் நீசம் என்னும் சூழல் இவர்களின் குழந்தைகள் இவர்களின் பேச்சைக் கேட்க மாட்டார்கள் என்பது உறுதியாகின்றது. மேலும் ஒன்பதாம் அதிபதி 11-ல் உச்சமாவது தந்தைவழி சொத்துகளின்மூலம் ஒரு நல்ல நிலையை அடைவார்கள் என்பதும் பாக்கிய அதிபதி 11-ல் உச்சமாவது இருதார யோகத்தை உருவாக்கும் வாய்ப்புகளை அமைத்துக்கொடுக்கும் என்பதும் உறுதியாகின்றது.
மேலும் இரண்டாம் அதிபதி பதினொன்றில் உச்சம் என்னும் சூழல் வாக்கின்மூலம் அதாவது- பேச்சின்மூலம் இவர்கள் பணத்தை சம்பாதிப்பா ர்கள் என்பதும் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.
மூன்று மற்றும் எட்டாம் அதிபதி சுக்கிரன் தன் வீட்டில் உச்சமாகி ஏழில் நீசமாகும் சூழல் அமையும். மூன்றாம் அதிபதி லக்னத்தில் உச்சமாவது அதீத தைரியத்தையும், பிறரின் மனவேதனையை புரிந்துகொள்ளும் ஆற்றலையும், மனம் சார்ந்த பயணத்தையும் இவர்களின் வசம் இட்டு செல்லும்.
அதோடு எட்டாம் அதிபதி லக்னத்தில் உச்சமாவது பிறரின் இன்னலுக்காக தன்னை வருத்திக்கொள்ளும் சூழலும், பிறரை முன்னேற்றும் ஏணியாக இவர்கள் மாறும் சூழலையும் எடுத்துரைக்கின்றது.
எட்டாம் அதிபதி சுக்கிரன் தன்னில் உச்ச மாவது இவர்களுக்கு நீண்ட ஆயுள் என்பதைக் குறிகாட்டுகின்றது. மேலும் ஏழில் நீசமாவது ஒரு தரப்பில் நெருடலை தந்தாலும் சில விஷயங்களில் இவர்களுக்கு வாய்ப்புகளையும், வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுக்கும்.
நான்கு மற்றும் ஏழாம் அதிபதி புதன் தன்னில் நீசமாகும் சூழல் இவர்களுக்கு திருமண வாழ்வில் சில இடர்பாடுகளையும் மனரீதியான சில பிரச்சினைகளையும் தரும் சூழலை இயல்பிலேயே உபய லக்னமாக அமர்ந்து ஏற்படுத்திக் கொள்கின்றது. அதோடு நான்காம் அதிபதியும் தன்னில் நீசமாவதனால் இவர்கள் இவர்களின் சுகத்துக்காக பெரும்பாலும் பாடுபடாமல் பிறரின் சுகத்திற்காக பாடுபடும் சூழலை ஏற்படுத்தி இந்த பிரபஞ்சமும், இயற்கையும் அளித்துள்ளது.
ஐந்தாம் அதிபதி சந்திரன் மூன்றில் உச்சமாகி ஒன்பதில் நீசமாகும் சூழல் இவர்களுக்கு ஏற்படும். இவர்களின் தந்தைவழியில் இருக்கும் பெண்களுக்கு கருப்பை சார்ந்த பிரச்சினைகளும் நீரின் ஆளுமை கொண்ட உள்ளுறுப்புகளான கிட்னி, யூரின் ப்ளாடர் போன்ற உறுப்புகளில் சிறு பாதிப்புகளும் இருப்பதற்கு வாய்ப்புகள் இருக்கும்.
மேலும் ஐந்தாம் அதிபதி மூன்றில் உச்சமாவது குழந்தைகள்மூலம் அதிர்ஷ்டத்தை அடையும் சூழலை எடுத்துரைக்கின்றது.
ஆறாம் அதிபதி சூரியன் இரண்டில் உச்சமாகி எட்டில் நீசமாகும் சூழல் அமையப்பெறும் இந்த சூழ்நிலையானது உழைப்பு, பேச்சின்மூலம் உழைத்து, பணம் ஈட்டும் சூழலை மேலும் உறுதிப்படுத்துகின்றது.
ஆறாம் அதிபதி எட்டில் நீசமாவது எந்த நோயினாலும் பெரும் பாதிப்பினை இவர்கள் அடைந்துவிட முடியாது என்பதையும், வருகின்ற நோய்க்கு நீண்ட நாள் மருந்து உட்கொள்ளும் சூழல் பெரும்பாலும் இவர்களுக்கு அமைவது இல்லை என்பதையும் எடுத்துக்காட்டுகின்றது.
மீன ராசியினர் பொருளா தாரத்திலும் பணி சார்ந்த இடங்களிலும், இரண்டு மீன்களின் சின்னத்தை அமைத்துக்கொள்வது உயர்வினை தரும்.
மீன ராசியினர் பொருளாதாரத்தில் மேம்படுவதற்கு பூரட்டாதி நட்சத்திரம் என்றால் வேம்பு மரமும். உத்திரட்டாதி என்றால் இலுப்பை மரமும்.
ரேவதி நட்சத்திரம் என்றால் எட்டி மரத்தையும் பராமரிப்பதன்மூலமும், வழிபடுவதன் மூலமும், பொருளாதார தன்னிறைவு அடைய முடியும்.
மீன ராசிக்கான லால் கிதாப் பரிகாரங்கள் சட்டையில் உள் பாக்கெட்டில் சிவப்பு நிற சுவஸ்திக் படம் வைத்துக் கொள்ளவும்.
பிறர் முன்னிலையில் குளிக்கக்கூடாது.
மொட்டை போட்டால் முழுக்க மொட்டை அடிக்காமல் கொஞ்சம் பிடரியில் குடிமை வைத்துக்கொள்வது சிறப்பு. வீட்டில் துளசி வளர்க்கக்கூடாது.
வீட்டின் வழிபாட்டு அறையை சுத்தமாக வைத்துக்கொள்ளவும். ஆலயத்தை தூய்மைப்படுத்தும் பணியில் கலந்து கொள்வதும் நல்லது.
வீட்டின் முன்புறம் கழிவு நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவும். கோழிகளுக்கு இறைபோடுதல் நன்மை பயக்கும். குருமார்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பது நன்மை அளிக்கும்.
மீனம் நீரின் தன்மைகள் சூழ்ந்த பஞ்சபூத தத்துவத்தில் அமைந்திருப்பதனால் இவர்களுக்கு திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயத்திற்கு சென்றுவருவது பெரும் சிறப்பினை அளிக்கும்.
(முற்றும்)
செல்: 80563 79988