மானிடவியலுக்கு வழிகாட்டும் ஜோதிடவியலில், கர்மத்திற்கு சம்பந் தப்பட்டே எல்லா நிகழ்வுகளும் நடக் கின்றது, என்பது நாம் ஓரளவிற்கு அறிந்த ஒன்றே. கர்மாவிற்கும், கருமத் திற்கும், பொறுப்பேற்ற, நீதிமான் சனி பகவானின் முதல் ராசி இந்த மகர ராசி ஆகும்.

காலபுருஷனுக்கு கருமஸ்தானம் ஆகிய பத்தாம் இடத்திற்கு பொறுப் பேற்று அமைந்துள்ளது.

மேலும் இது பெண் ராசியாகி, பஞ்சபூத தத்துவத்தில் நிலமாகவும், திகழ்கின்றது. அதோடு மட்டுமல்லாமல் சர ராசியான பயணிக்கும் தன்மையில் தன்னை மிளிர செய்கின்றது. இது தர்மத் திரிகோணங்களில் ஒன்றாக விளங்குகின்றது.

00

Advertisment

360 டிகிரி வானி யல் சுற்றுவட்ட பாதையில், 270 டிகிரிமுதல், 300 டிகிரிவரை தன்னை விஸ்தரித் துள்ளது.

இங்கு அதி உன்னதம் வாழ்ந்த சூரியனின் உத்திரா டம், மனோகாரகன் சந்திரனின் திருவோணம், வீரிய காரகன் செவ்வாயின் அவிட்டம் ஆகிய நட்சத்திரங்கள் இணைவது இந்த மகர ராசி இணை ஆகச்சிறந்த வல்லமையின் வசம் இட்டு சென்றுள்ளது.

இங்கு ஆயுள்காரகள் சனிபகவானின் வீட்டில், ஆண்மகாரகன் சூரியன், அதிகார காரகன் செவ்வாய், மனோகாரகன் சந்திரன், அமையப்பெற்று, சதுப்பு நிலமாகி இருப்பதனால், இவர்கள் ஆழ்ந்த அமைதி யைப் பெற்றிருப்பது சாத்தியமாகின்றது.

Advertisment

இவர்களில் பெரும்பாலானோர் செல்வம் நிறைந்த இல்லத்தில் பிறந்தாலும், வளரும் சூழலில் வறுமை யின் வசம் சென்றே மீண்டும் செல்வ நிலைக்கு திரும்பு கின்றனர்.

இவர்கள் தங்களையும், தங்களின் ஆளுமையும், அதிகமாக பகிர்ந்து கொள்ள மாட்டார்கள்.

அதீத சகிப்புத்தன்மை கொண்டவர்கள் என்பவர்கள் மகர ராசியின் பிறந்தவர்கள் மட்டுமே. இவர்களுக்கு காதல் பெரும்பாலும் சுகம் அளிப்பதில்லை. இவர்கள் பிறருக்காக தன்னை அர்ப்பணித்து தனது சுக- துக்கங் களை தியாகம் செய்யும் ஆற்றல்மிக்கவர்கள்.

பழகக்கூடிய எவரையும் நேரடியாக வெறுக்கத் தெரியாதவர்கள், புரிதல் மிகுந்தவர்கள். மேலும் கடின உழைப்பாளிகள். எல்லாரையும் சந்தேகித்து பின்பு அவர்களிடமுள்ள சூழ்நிலை தனக்கு ஒத்துவந்தால் மட்டுமே நட்பாகி கொள்வார்கள்.

பிடிவாதம் அதீதமாக உள்ளவர்கள், மிக நேர்த்தி யான வாழ்வியல் தன்மை உடையவர்கள்.

மேலும் மாந்திரீகத்தில் உச்சத்தை எட்டக்கூடிய ராசியாக இந்த மகர ராசி அமையப்பெற்றுள்ளது. புராணக் காலத்தில் ராகு மகரத்தில் இருந்து அதர்வண வேதத்தை கற்றார் என்ற ஒரு செய்தி பகிரப்படுகின்றது. சனி ராகு அங்கே உச்சம்பெறும் செவ்வாய் போன்ற சூழ்நிலைகள் மாந்திரீகத்தின் உச்சத்தை எட்டும் அளவிற்கு இவர்களை வழிவகைப்படுத்தும்.

மேலும் உத்தராயணம் பிறப்பெடுக்கும் ராசியாக, அதி முக்கியத்துவம் வாய்ந்த ராசியாக இந்த மகரம் வீற்றிருக்கின்றது.

உயிர்களின் தோற்றமாக விளங்கக்கூடிய மாதமாக தை மாதம் விளங்குகின்றது. இந்த தை மாதத்தின் ஆளுமையை பெற்ற ராசியாகவும் இந்த மகரம் அமர்ந்துள்ளது.

லக்னம் மற்றும் இரண்டாம் அதிபதி சனிபகவான் நாளில் நீசமாகி, பத்தில் உச்சமாகும் சூழல் உருவாகும். தனக்கான சுகங்களை தாயார்வழி உறவு ஆகிய சூழ-ல் தன்னை அடக்கி செல்லும் சூழல் உருவாகும்.

அதேபோன்று இரண்டாம் அதிபதியும் நாளில் நீசம் என்பத னால் தனது பேச்சின்மூலம் சில உன்னதமான சுகங்களை இழக்க நேரிடும்.

மேலும் உணவு கட்டுப்பாடு இல்லாமல், ஆரோக்கியத்தையும், கெடுத்துக் கொள்வார்கள். பத்தில் உச்சம்பெறும் சனிபகவான் எதார்த் தமாகவே உழைப்பினால் உயரும் தன்மை பெற்றவர்கள் என்பதனா லும், சனி பத்தோடு சம்பந்தப்படு வதாலும் தொழிலின்மூலம் பெறும் உயர்வினை அடைவார்கள்.

இரண்டாம் அதிபதி பத்தில் உச்சம் என்றும் சூழலும் அதீத வருவாயை தொழிலின்மூலம் இவர்கள் பார்ப்பார்கள் என்ப தனை மேலும் உறுதிப்படுத்து கின்றது.

லக்னம் மற்றும் இரண்டாம் அதிபதி சனி பகவானாகி தொழிலிடத்தில் உச்சம்பெறும் சூழ்நிலை இருப்பதனால், இவர்களின் பெயரிலேயே அல்லது இவர்கள் முதலாளித்துவத்தோடு அமரும் சூழ்நிலையை குறைத்துக் கொண்டால் தொழிலில் இன்னும் சில சிறப்புகளை இவர்களால் அடைய முடியும் என்பது உறுதி.

மூன்று மற்றும் 12-ஆம் அதிபதி ஆகிய குருபகவான் இவர்களின் லக்னத்தில் நீசமாகி ஏழில் உச்ச மாகும் சூழல் உருவாகும். இந்த சூழ்நிலையானது தனகாரகன் என்று போற்றப்படும் குரு பகவான் லக்னத்தில் நீசமாவதனால் இவர்கள் பணத்தினால் ஏமாற்றத்தை அடைவார்கள். மேலும் மூன்றாம் அதிபதியே லக்னத்தில் நீசம் என்னும் சூழல் வரும்பொழுது ஒப்பந்தம், இணைவு, காண்ட்ராக்ட் போன்ற சூழல்கள் இவர்களுக்கு பெரும் சிறப்பினை அளிப்பது இல்லை. அதோடு தூக்கம் மற்றும் உட-யல் சார்ந்த சில பிரச்சினைகள் இவர்களுக்கு இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.

நான்கு மற்றும் பதினோராம் அதிபதி செவ்வாய் பகவான், லக்னத்தில் உச்சமாகி ஏழில் நீசமாகும் சூழல் உருவாகும், நாலாம் அதிபதி லக்னத்தில் உச்சம் ஆவதனால் எல்லா சுகங்களும் ஏற்க தகுதியான ஒரு வல்லமை பெற்ற வர்கள் என்பது உறுதியாகின்றது. மேலும் வாகனம், வீடு காலி இடங்கள், போன்ற சுகங்கள் இவர்களை வந்தடையும். அதோடு மட்டுமல்லாமல் தாய்யாதிவழி உறவு களின்மூலம் லாபங்களையும், பெறுவார்கள் பெரும் லாபங் கள் பெரும்பாலும் இவர்கள் அனுபவிக்க முடியாது. 11லிஆம் அதிபதி ஏழில் நீசமாகும் சூழல் இவர்களில் களத்திரம் சார்ந்த விஷயத்தில் பெரும் சிறப்பினை ஏற்படுத்தும்.

இவர்களுக்கு வாழ்வில் பல பல இன்னல்கள் வந்தாலும் ஏழாம் இடத்தின் துணைக்கொண்டே எல்லாவற்றையும் வெல்லும் யோகிதைப் பெற்ற ஒரு ராசியாக மகரம் திகழ்கின்றது.

லக்னத்திற்கு ஐந்து மற்றும் பத்தாம் அதிபதியாகிய சுக்கிரன் யோகாதிபதியாகி, மூன்றில் உச்சமாகி, ஒன்பதில் நீசமாகும் சூழல் அமையப்பெறும், இந்நிலையானது தனது வாரிசுகளே தனது பலமாக எண்ணி வாழும் ஆற்றல் பெற்றவர்கள் பெரும்பாலும் மகர ராசிக்காரர்களுக்கு முதல் குழந்தை பெண் குழந்தையாக பிறந்துவிட்டால் இவர்களின் செல்வ வளர்ச்சியினை யாராலும் தடுக்க முடியாது என்பது உண்மை.

இவர்களின் வம்சாவழியில் இவர்கள் அனுபவித்த தந்தைவழி சொத்துக்களை முழுவதுமாக பெரும்பாலும் இவர்களின் வாரிசுகளுக்கு சேர்வது கிடையாது.

லக்னத்திற்கு ஆறு மற்றும் ஒன்பதாம் அதிபதியான புதன் மூன்றில் நீசமாகி ஒன்பதில் உச்சமாகும் சூழல் உருவாகும். இவர்களின் தந்தை வழியிலுள்ள உறுப்பினர்களுக்கு ஒரு தீர்க்கமுடியாத நோயின் பிடியில் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். மேலும் இவர்கள் கடன் சார்ந்தும் பயணித்து இருப்பார்கள். அதோடு ஆராய்ச்சி போன்ற சூழ்நிலையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்கள் இவர்களின் வம்சாவழியில் இருப்பார்கள்.

புதன் மூன்றில் நீசமாகும்பொழுது இவர்கள் பத்திரம், பாண்டு போன்றவற்றில் வில்லங்கம் ஏற்பட்டு அதை தீர்ப்பதற்கு பெரும் முயற்சி மேற்கொள்ள வேண்டியது இருக்கும்.

லக்னத்திற்கு ஏழாம் அதிபதி சந்திரன் 11-ல் நீசமாகி ஐந்தில் உச்சம்பெறும் சூழல் உருவாகும். எல்லா பாவகங்களில் இயக்கங் களும் தடைப்பட்டாலும், மகர லக்னத்திற்கு ஏழாம் அதிபதியின் துணைகொண்டே பல வெற்றி களை குவிக்க முடியும் என்பது திண்ணம்.

நட்பு, ஆளுமை, உறவுகள் போன்ற சூழலில் ஒருசில சமயம் வஞ்சிக்கப்பட்டாலும், களத்திரத்தின்மூலம் காப்பாற்றப்படும் ராசி யாக மகர ராசி அமைந்துள்ளது.

ஏழாம் அதிபதி 11-ல் நீசமாகும்பொழுது பெரும் சொத்துக்கள் இவர்களின் மனைவி களின் பெயரில் இல்லாமல் இருப்பது எடுத்துக் காட்டப்படுகின்றது.

லக்னத்திற்கு எட்டாம் அதிபதியாகிய சூரியன் நாளில் உச்சமாகி, பத்தில் நீசமாகும் சூழல் உருவாகும், சூரியன் பத்தில் நீசமாகும் சூழலை குறித்தே இவர்கள் தொழில் நிலையத் தில், தன்னை முதலாளித்துவதோடு நிர்ணயிக் கக் கூடாது என்பதனை மறுபடியும் கூறிக் கொள்கின்றேன். அதோடு மட்டுமல்லாமல் அஷ்டமாதிபதி நாளில் உச்சம் என்பதனால் மறைமுகமாக ஏற்படுகின்ற வருமானத்தின் மூலம் பெரும் சொத்துக்களை ஏற்படுத்திக் கொள்வார் என்பது உறுதியாகின்றது.

சூரியன் பத்தில் நீசம் என்கின்றபொழுது இவர்கள் தொழில் ஆரம்பிக்கும் பொழுதும் பணிகளுக்காக சில தொகைகளை கட்டும் பொழுது தந்தையின் கைகளால் வாங்குவதைத் தவிர்ப்பது சிறப்பு.

முக்கியமான ஒன்றை கவனத்தில் கொள்வதுவேண்டும் சர ராசிக்கு 11-ஆமிடம் பாதகம் என்று கூற்றின்படி செவ்வாய் தனது வீட்டிலேயே உச்சம்பெறும் சூழல் நாம் அறியாமலேயே பாதகம் செய்பவர்களை நம் அருகில் வளர விட்டுக் கொண்டிருப்பது இந்த மகர ராசியை பொறுத்தவரை அதிகமாக காணப்படுகின்றது. எனவே ஆழ்ந்து ஆராய்ந்து சில நட்புகளை தன்வசம் சேர்த்துக்கொள்வது மற்றும் சில உறவுகளை தன்வசம் சேர்த்துக் கொள்வது பெரும் பலனையும் ஆழ்ந்த எச்சரிக்கையையும் உங்களுக்கு அளிக்கும்.

மேலும் செவ்வாய், சனி, இயல்பாகவே இவர் களுக்கு தொடர்புபெறும், என்பதனால் ராகு திசையில் செவ்வாய் புக்தியிலும், சனி மற்றும் செவ்வாய் தொடர்புபெறும் தசா புக்திகளிலும், சற்று கவனத்துடன் இருப்பது சிறப்பினைத் தரும்.

பொருளாதாரரீதியான உயர்விற்கு உத்தி ராட நட்சத்திரம் என்றால் எருக்கன் செடியும்.

திருவோணம் நட்சத்திரம் என்றால் வன்னி மரமும், அவிட்ட நட்சத்திரம் என்றால் கடம்ப மரத்தையும், பராமரிப்பது மற்றும் வழிபடுவதன் மூலம் பணவரவினை ஏற்படுத்திக்கொள்ளலாம்.

மகர ராசிக்கான லால் கிதாப் பரிகாரங்கள் சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் ஏழைகள் மற்றும் யாசகர்களுக்கு, வாழைப்பழம், பருப்பு,

ஸ்வீட், தானம் செய்ய விபத்துக்கள், எதிர் பாராத ஆபத்துக்களில் இருந்து காக்கும்.

பாலும், சக்கரையும், கலந்து ஆல மர வேரில் விடவும், இதிலிருந்து மண் எடுத்து நெற்றியில் இட்டுக் கொள்ள செல்வ வளம் நிறைந்த வாழ்வு கிட்டும்.கேது கிரகத்திற்கு சாந்தி செய்து கொள்ளவும். கருப்பு, நீல நிறம், ரோஸ் நிற ஆடை களைத் தவிர்ப்பது சிறப்பு.

ஏதேனும் ஒரு சனிக்கிழமையில் கொஞ்சம் பால் மற்றும் ஒரு வெள்ளி நாணயத்தை கிணற்றில் போடவும், இது துரதிஷ்டத்தை நீக்கி வாழ்வில் வளம் சேர்க்கும். கிழக்கு நோக்கிய வாசல் உள்ள வீடு இவர்களுக்கு அதிர்ஷ்டமாக திகழும்.

(தொடரும்)

செல்: 80563 79988