12 ராசிகளின் ஆதிமுதல் அந்தம்வரை... கும்பம் மேல்மருவத்தூர் எஸ். கலைவாணி மேல்மருவத்தூர் எஸ். கலைவாணி

/idhalgal/balajothidam/beginning-end-12-signs-aquarius-melamaruvathur-s-kalaivani-melmaruvathur-s

வாழ்வியலுக்கு வழி அமைத்து பாதை பகுத்தறித்த ஜோதிடவியலில், கர்ம காரகன் என்றும், கர்மா காரகன் என்றும், ஆயுள்காரகன் என்றும், போற்றப்படும் நீதி அரசனாகிய, சனிபகவானின் இரண்டாவது வீடாக இந்த கும்பம் அமைந்துள்ளது.

காலபுருஷனுக்கு பதினோராம் இடத்திற்கு பொறுப்பேற்று, கால புருஷனின் பாதகஸ்தானத்திற்கும் பொறுப்பேற்றுள்ளது இந்த கும்பம்.

மேலும் ஆண் ராசியாகி, பஞ்சபூத தத்துவத்தில் புயல் காற்றாகி, ஆளுமையுடன் காணப்படுகின்றது. மேலும் ஸ்திர ராசியாக இடம் பெற்றுள்ளது.

இது கர்ம திரிகோணங்களில் ஒன்றாகவும் மிளிர்கின்றது. 360 டிகிரி வானியல் சுற்றுவட்டப் பாதையில் 300 டிகிரிமுதல் 330 டிகிரிவரை தன்பால் ஈர்த்து வைத்துள்ளது.

இங்கு வீரிய காரகன் செவ்வாயின் அவிட்டம், போக காரகன் ராகுவின் சதயம், தன காரகன் குருவின் பூரட்டாதி ஆகியவையின் கூட்டானது கும்பத்தை அதி மர்மம், ஆளுமை திறனும் உடையதாக நிலைப்படுத்தப்பட்டுள்ளது.

கர்ம காரகன் வீட்டில் வீரிய காரகன், போக காரகன், தனகாரகன் என்கின்ற கூட்டு பெரும் சிறப்பை அளித்துள்ளது.

காற்றில் புயல் என்பதால் இவர்களின் செயலும் புயலுக்குப் பின்வரும் அமைதி போன்று இருக்கும்.

இவர்களின் திறமைகள் பெரும்பாலும் பிறரால் அங்கீகரிக்கப்படுவதை இல்லை. எதையும் கடைசி நொடியில் பார்த்துக்கொள்ளலாம் என்கின்ற அலட்சியம் மிக்கவர்களாக இருப் பார்கள்.

தொழிலில் பெரும் சிறப்பை அடையும் வல்லமை பெற்றவர்களாக இவர்கள் அமைந் திருப்பார்கள்.

இவர்கள் கனிவுடன் இருப்பதோடு ஆர்வம் மிக்க சிந்தனையாளர்களாகி, விசித்திரமான குணங்களை உடையவர்களாகவும்,

வாழ்வியலுக்கு வழி அமைத்து பாதை பகுத்தறித்த ஜோதிடவியலில், கர்ம காரகன் என்றும், கர்மா காரகன் என்றும், ஆயுள்காரகன் என்றும், போற்றப்படும் நீதி அரசனாகிய, சனிபகவானின் இரண்டாவது வீடாக இந்த கும்பம் அமைந்துள்ளது.

காலபுருஷனுக்கு பதினோராம் இடத்திற்கு பொறுப்பேற்று, கால புருஷனின் பாதகஸ்தானத்திற்கும் பொறுப்பேற்றுள்ளது இந்த கும்பம்.

மேலும் ஆண் ராசியாகி, பஞ்சபூத தத்துவத்தில் புயல் காற்றாகி, ஆளுமையுடன் காணப்படுகின்றது. மேலும் ஸ்திர ராசியாக இடம் பெற்றுள்ளது.

இது கர்ம திரிகோணங்களில் ஒன்றாகவும் மிளிர்கின்றது. 360 டிகிரி வானியல் சுற்றுவட்டப் பாதையில் 300 டிகிரிமுதல் 330 டிகிரிவரை தன்பால் ஈர்த்து வைத்துள்ளது.

இங்கு வீரிய காரகன் செவ்வாயின் அவிட்டம், போக காரகன் ராகுவின் சதயம், தன காரகன் குருவின் பூரட்டாதி ஆகியவையின் கூட்டானது கும்பத்தை அதி மர்மம், ஆளுமை திறனும் உடையதாக நிலைப்படுத்தப்பட்டுள்ளது.

கர்ம காரகன் வீட்டில் வீரிய காரகன், போக காரகன், தனகாரகன் என்கின்ற கூட்டு பெரும் சிறப்பை அளித்துள்ளது.

காற்றில் புயல் என்பதால் இவர்களின் செயலும் புயலுக்குப் பின்வரும் அமைதி போன்று இருக்கும்.

இவர்களின் திறமைகள் பெரும்பாலும் பிறரால் அங்கீகரிக்கப்படுவதை இல்லை. எதையும் கடைசி நொடியில் பார்த்துக்கொள்ளலாம் என்கின்ற அலட்சியம் மிக்கவர்களாக இருப் பார்கள்.

தொழிலில் பெரும் சிறப்பை அடையும் வல்லமை பெற்றவர்களாக இவர்கள் அமைந் திருப்பார்கள்.

இவர்கள் கனிவுடன் இருப்பதோடு ஆர்வம் மிக்க சிந்தனையாளர்களாகி, விசித்திரமான குணங்களை உடையவர்களாகவும், உன்னத மானவர்களாகவும், பெரும்பாலும் உண்மை யின் வசம் நிற்பவர்களாகவும் இருப்பார்கள். இவர்களுக்கு சற்று கூச்ச சுபாவம் நிறைந்து காணப்படும். சிறந்த பேச்சு வன்மையும், உணர்ச்சி கரமாக பேசும் தன்மையும், எதையும் மாற்றி அமைக்கும் பேச்சு திறனும் கொண்டவர்கள். அதோடு மட்டுமல்லாமல் சிறந்த படைப்பாற் றல் கொண்டவர்கள். தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் சற்று தயக்கம் காட்டு வார்கள்.

தொழிலில் உலக நிபுணத்துவம் பெற்று காணப்படுவார்கள். இவர்கள் அதிரும் இசை அல்லாமல் மனதை வருடும் இசையின்பால் தன்னை ஒப்படைத்து எப்பொழுதும் இசை தொடர்புடன் காணப்படுவார்கள்.

எவருமே எட்டி விடமுடியாத துறையில் உச்சத்தை அடையும் ஆற்றல் பெற்றுள்ளது இந்த கும்பம்.

லக்னம் மற்றும் 12-க்கு பொறுப்பேற்ற சனிபகவான் மூன்றில் நீசம், ஒன்பதில் உச்சமும்பெற்று திகழும் சூழல் உருவாகும்.

லக்னாதிபதி மூன்றில் நீசமாகும் சூழல் இருப்பதனால் தொடர்புகள், சிறுதூரப் பயணம், இளைய சகோதரன், கான்ட்ராக்ட் போன்ற சூழ்நிலையில் கவனத்துடன் இருப் பது சிறப்பினைத் தரும்.

லக்னாதிபதி ஒன்பதில் உச்சமாவது பெரும் பாக்கியம்கொண்டு திகழும் சூழ்நிலையை உருவாக்கும். மேலும் ஸ்திரத்திற்கு ஒன்பதாம் இடம் பாதகம் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இந்த விதத்தில் லக்னாதிபதி ஒன்பதில் பாதகம் என்ற சூழ்நிலை பாதகத்தை நோக்கி இவர்களே சென்று அமர்ந்துகொள்வார்கள் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகின்றது.

இரண்டு மற்றும் பதினோராம் அதிபதி குரு, ஆறாம் இடத்தில் உச்சமாகி, 12-ஆமிடத்தில் நீசமாகும் சூழல் உருவாகும். இரண்டாம் அதிபதி ஆறில் உச்சம்பெறுவது வருமானத் தில் ஒரு பெரும் பகுதியினை செலவின் வசம் இட்டு செல்லும் நோக்கு இவர்களுக்கு இயல்பாகவே அமைய பெற்றிருக்கும். அதோடு மட்டுமல்லாமல் ஆறாம் இடத்தில் உச்சமாகி 12-ஆம் இடத்தில் நீசமாகும் சூழல் மருத்துவம் சார்ந்த ஒரு பெரும் தொகையை இவர்களின் வம்சாவழியில் விரையம் செய்ய வாய்ப்புகள் அதிகம். அதோடு மட்டுமல்லாமல் ஆறாம் இடம் தொழிலையும் சுட்டிக்காட்டும். இந்த தொழிலின்மூலம் வருகின்ற வருமானத்தை விரயத்தின் வசம் இட்டு செல்லும் இயல்பு இவர் களுக்கு இயற்கையாகவே அமைந்திருக்கும்.

ff

தன காரகன் ஆகிய குரு தன் வீடான மற்றொரு வீட்டில் நீசமடைவது இவர்கள் பொருள் சார்ந்த பெரிய ஈர்ப்பு அல்லாத சூழ்நிலையை உருவாக்கி விடும்.

சேமிப்பு சார்ந்த விஷயத்தில் பின்தங்கி காணப்பட இதுவும் ஒரு சூழலை அமைத்து விடும்.

மூன்று மற்றும் பதினோராம் இடத்தை ஆளுகின்ற செவ்வாய் தன் வீட்டிற்கு 12-ல் உச்சமாகி தன் வீட்டிற்கு ஆறில் நீசமாவது இவர்களின் வம்சாவழியில் பங்காளிகள் சார்ந்த பிரச்சினையும், மாமனாரின்மூலம் பிரச்சினையும், இருப்பதைக் சுட்டிக் காட்டுகின்றது. மூன்றாம் அதிபதி ஆறில் நீசமாவது மீண்டும் தொடர்புகளின்மூலம் பெரிய வருவாயை எட்டி விட முடியாது என்பதை உணர்த்துகின்றது.

12-ல் உச்சமாகும் சூழல் உருவாவதனால் இளைய சகோதரத்தின்மூலமும், தொடர்பு களின்மூலமும், ஒரு விரயத்தை எட்டும் சூழலை உருவாக்கி விடுகின்றது.

நான்கு மற்றும் ஒன்ப தாம் அதிபதி சுக்கிரன் இரண்டில் உச்சமாகி எட்டில் நீசமாகும் தன்மை அமைந்திருக்கும், நான்காம் அதிபதி இரண் டில் உச்சமாவதனால், தாயாதிவழி சுகங்களும், தாயாதி வழியின்மூலம் கிடைக்க பெறும் வருமானம் மற்றும் வரவுகளும் இவர்களுக்கு சிறப்பினை அளிக்கும்.

அதோடு மட்டுமல்லாமல் ஒன்பதாம் அதிபதியும் இரண்டில் உச்சம் பெறுவது தந்தையின்மூலம் கிடைக்கப்பெறும் தன வரவு இவர்களை சுபிக்சத்தின் வாசம் இட்டு செல்லும். கூடவே தந்தையின் சொத்தின்மூலம் ஒரு பாதகத்தை அனுபவிக்கும் சூழலும் இவர்களுக்கு அமையப்பெறும்.

ஐந்து மற்றும் எட்டாம் அதிபதி இரண்டில் நீசமாகி எட்டில் உச்சமாகும் சூழல் உருவாகும் இந்த நிலையானது புதன் அஷ்டமாதிபதியாகி இரண்டில் நீசமாவதால் பத்திரம் சார்ந்த பிரச்சினைகள் இவர்களின் குடும்பத்தில் இருப்பதற்கு வாய்ப்புகள் மிக அதிகம்.

எட்டாம் அதிபதி எட்டிலேயே உச்சம் என்ற சூழல் இவர்கள் நீண்ட ஆயுளுடன் இருப்பார்கள் என்பதை உணர்த்துகின்றது.

மேலும் சிறு சிறு அவமானங்களை தங்களின் வாழ்க்கையில் சந்தித்தே ஆக வேண்டும் என்கின்ற சூழ்நிலையும் எடுத்துரைக் கின்றது.

ஐந்தாம் அதிபதி எட்டில் உச்சம். புத்திரர் களின் வழியில் சிலர் கசப்பான சம்பவங்களை எதிர்கொள்ளவேண்டியது இருக்கும்.

ஆறாம் அதிபதி சந்திரன் நான்கில் உச்சமாகி பத்தில் நீசமாகும் சூழல் எதிரியாக நினைக்கும் சிலரின் மூலமாகவே வரவையும், எதிரியை ஜெயிக்கும் சூழலும் இவர்களுக்கு இயல்பாகவே அமைந்திருக்கும்.

தங்களின் கருத்திற்கு மாற்றுக் கருத்துடன் இருப்பவர்களின்மூலம் இவர்கள் தொழிலை அமைத்துக்கொள்வார்கள்.

ஏழாம் அதிபதி சூரியன் மூன்றில் உச்சமாகி ஒன்பதில் நீசமாகும் சூழல் இவர்களுக்கு உருவாகும். இவர்களின் களத்திரத்தின்மூலம் பெரும் தைரியத்தையும், அனுசரணையும், இவர்களில் பலர் பெற்று விடுகின்றார்கள்.

இவர்களின் களத்திரம் பெரும்பாலும் தந்தை யின் வாழ்வியல் வழக்கங்களை பின்பற்றுவதில் பெரிய சுணக்கங்களை காட்டுபவர்களாக அமைந்துவிடுகின்றார்கள்.

கும்ப ராசி லக்னக்காரர்கள் பொருளா தாரத்தை மேம்படுத்திக் கொள்வதற்கு, பணியிடங்களில், கும்ப ராசியின் சின்னமாகிய பூரண கும்பத்தை பயன்படுத்துவதன்மூலமும், வீட்டில் பூரண கும்பம் வைத்து வழிபடுவதன் மூலமும் பெரும் சிறப்பினை அடைய முடியும்.

அவிட்ட நட்சத்திரம் என்றால் கடம்ப மரமும், சதய என்றால் மாமரமும், பூரட்டாதி என்றால் வேம்பு மரத்தையும் வழிபடுவதன்மூலமும், பராமரிப்பதன்மூலமும், பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்திக்கொள்ள முடியும்.

கும்ப ராசிக்கான லால் கிதாப் பரிகாரங்கள் கையிலோ, கழுத்திலோ, தங்க நகை அணிவது அதிர்ஷ்டத்தைத் தரும்.

குங்குமப்பூ அரைத்து குழைத்து நெற்றியில் திலகமிட்டுவர நிறைந்த செல்வத்தை அடைந்து விடமுடியும்.

மாதம் ஒருமுறை குளிக்கும் நீரில் கொஞ்சம் பால் கலந்து குளித்துவந்தால் பீடைகள் நீங்கும்.

சதுர வடிவமான வெள்ளி டாலரை நூல் அல்லது செயினில் கோர்த்து கழுத்தில் அணிந் தால் வேலை அல்லது தொழிலில் உயர்ந்த நிலை கிட்டும்.

வெள்ளியை உருக்கி நான்கு சிறு உருண்டை களாக செய்து அதை ஒரு பேப்பர் அல்லது கவரில் போட்டு சட்டை பையில் வைத்திருந்தால் செல்வம் பெருகும்.

வீட்டில் மேல்பகுதி அல்லது மொட்டை மாடியில் மறந்தும்கூட பெட்ரோல் அல்லது டீசல் போன்ற எரிபொருள்களை வைத்திருக் கக்கூடாது.

(தொடரும்)

செல்: 80563 79988

bala080314
இதையும் படியுங்கள்
Subscribe