சீற்றம் நிறைந்த காலபுருஷனுக்கு முக்கியத்துவம் வாய்ந்த திரிகோணங்களில் ஒன்றான ஐந்தாம் பாவகத்தின் பெரும் பொறுப்பேற்றுள்ளது சிம்மம்.

இது 360 டிகிரி வானியல் சுற்றுவட்ட பாதையில் 120 டிகிரிமுதல் 150 டிகிரிவரை விஸ்தரித்துள்ளது. இது நெருப்பு ராசியாகி, ஸ்திர ராசியாகி, ஆண் ராசியாகவும் ஆளுமை யுடன் அமைந்துள்ளது.

மேலும் இந்த ராசியின் ராசிநாதன் நவகிரகங்களுக்கும் தலைமை ஏற்று ஆதிக்கம் செலுத்தக்கூடிய, ஆண்மக்காரகன் என்ற போற்றுதலுக்குரிய, கண் காணக்கூடிய தெய்வமாக, மக்களால் ஆதிகாலம் தொட்டே ஏற்றுக்கொள்ளப்பட்ட, சூரியனாக, தகித்து கதிர்வீசி காத்து நிற்கின்றார்.

பொதுவாகவே இந்த சிம்ம ராசி லக்னங்களில் பிறந்தவர்கள் ஆளுமையும், அதிகாரமும், கௌரவத் தன்மையும், முன்னிலை வகிக்கும் பண்பும், உடையவர்களாக இருப்பார்கள்.

Advertisment

ss

இவர்கள் தனித்தன்மை உடையவர்களாக திகழ்வார்கள். இயல்பிலேயே புத்திசாலித்தனத் துடன் பேசும் இவர்களை புரிந்துகொள்வது கடினம்.

இந்த ராசியில் ஞானக்காரகன் கேதுவின் நட்சத்திரமான மகம், உலக சுகங்களை வாரி வழங்கக்கூடிய சுக்கிரனின் நட்சத்திரமான பூரம், ஆளுமையிலும், அந்தஸ்தையும் அளிக்கும் சூரியனின் நட்சத்திரமான உத்திரம் ஆகிய கூட்டு, மிகவும் வலிமைவாய்ந்த இடமாக சிம்மத்தை நிலை நிறுத்துகின்றது.

அடர் காட்டிற்கு ஆளுமையினை அருளும் சிங்கத்தை சின்னமாகக்கொண்டு சீற்றத்துடன், சிறந்து விளங்குகின்றது இந்த சிம்மம்.

லக்னாதிபதி சூரியன் மூன்றில் நேசமாகி, ஒன்பதில் உச்சம்பெறும் நிலை உருவாகும். சிம்மம் ஸ்திர லக்னம் என்பதனால் 9-ஆமிடம் பாதகமாக அமையும். அங்கேயே லக்னாதிபதி உச்சம் அடைவது பாதகத்தை நோக்கி பயணிக்கும் சூழல்களில் தானே மாற்றிக்கொள்வார்கள் என்பதனை உறுதிப்படுத்துகின்றது. இவர்கள் ஒப்பந்தம், தொலைத்தொடர்பு, இளைய சகோதரன், சிறு தூரப்பயணம், வீரியம், ஆழ் மனம், மாமனார் போன்ற சூழ்நிலைகளின்மூலம் சில இடர்பாடுகளைச் சந்திக்க வேண்டியது இருக்கும். இந்த விஷயங்களில் கவனத்துடன் இருப்பது சிறப்பினை தரும். மேலும் ஒன்பதில் உச்சம் என்பது சிறப்பு என்றாலும்கூட, ஒருசில விஷயங்களில் பாதகங்களாகவும் மாறுவதற்கு வாய்ப்புகள் உண்டு என்பதனை கவனத்தில் கொள்ளவேண்டும். தந்தைவழி சுபிக்ஷங்கள் சற்றேற குறைய சிறப்பாகவே இருக்கும்.

இரண்டாம் மற்றும் 11-ஆம் அதிபதி புதன் இரண்டில் உச்சமடைந்து எட்டில் நீசமாகும் சூழல் இருப்பதால் இவர்கள் பேச்சும், அணுகு முறையும் மற்றோரை கவரும் வண்ணமும் ஆதாரத்துடன் இருக்கும், இரண்டாம் அதிபதி இரண்டிலேயே ஆட்சி, உச்சம், மூலத்திரி கோணம் அடைவதனால் பேச்சு வல்லமை வாய்ந்தவர்களாக இருப்பார்கள். அதேபோல் எட்டில் நீசமாவது இவர்களின் பேச்சில் சற்று இலைமறை காய்போல இருக்கும் என்பது உறுதியாகின்றது. மேலும் வழக்குசார்ந்த இவர் களின் பேச்சை வெற்றியினை கொடுக்கும். எட்டில் நீசம்பெறும் புதன் இவர்கள் வம்சா வழியில் பத்திரம் சம்பந்தமான வில்லங்கத்தை ஏற்படுத்தி இருக்க வாய்ப்புகள் அதிகம் என்பதனையும் சுட்டிக் காட்டுகின்றது. மேலும் மறைமுகமான சொத்து சேர்க்கைகளும், மறைமுக உறவுகளும் இவர் களுக்கு அமைய வாய்ப்பு கள் ஏராளம்.

மூன்றாம் அதிபதி மற்றும் பத்தாம் அதிபதி இரண்டில் நீசமாகி எட்டில் உச்சம். இந்த சூழ்நிலையானது தொழில்சார்ந்த விஷயங்களில் குடும்பத்தாரின் முடிவு சிறப் பானதாக இருக்காது. மேலும் வெளியில் இருக்கும் ஆழ்ந்த நட்புரீதியான தொடர்புகள் குடும்பத்தில் இவர்களுக்கு அமையப் பெறாது.

நான்கு மற்றும் ஒன்பதாம் அதிபதி செவ்வாய் 12-ல் நீசம் என்பதனால் இவர்களுக்கு பூர்வீக சொத்தின்மூலம் சில தகராறுகளை சந்திக்க வேண்டியது இருக்கும். மேலும் தந்தைவழி சொத்தில் பெரும் பகுதியை தந்தைமூலமே விரயமாவதற்கு வாய்ப்புகள் உண்டு. மேலும் இந்த விரயம்மானது மருத்துவ செலவாகவும் இருக்கலாம்.

ஐந்து மற்றும் எட்டாம் அதிபதி குரு ஆறில் நீசம், 12-ல் உச்சம். இவர்களுக்கு குலதெய்வம் சார்ந்த பிரச்சினைகளும், குழந்தைகள் சார்ந்த மருத்துவ செலவுகளும் ஏற்படுவதைத் தவிர்க்கமுடியாது. மேலும் குழந்தைகளின் வாழ்வியல் பயணத்தில் இவர்கள் சற்று கண்டிப்புடன் இருப்பது சிறப்பு.

ஆறு மற்றும் ஏழாம் அதிபதியான சனி பகவான் மூன்றில் உச்சமாகி ஒன்பதில் நீசமாகும் சூழ்நிலை உருவாகின்றது. ஆறாம் அதிபதி மூன்றில் உச்சமடைவது, தொலைத்தொடர்பு மற்றும் தொடர்புகளின்மூலம் சில பிரச்சினைகளைச் சந்திக்கும் சூழலையும், ஏழாம் அதிபதி மூன்றில் உச்சமடைவது, சமூகம், நட்பு மற்றும் களத்திரம் ஆகியோரின் உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும், அதன்மூலம் சில இடர்பாடுகளைச் சந்திக்கும் சூழ்நிலையும் ஏற்படுத்தும்.

அதோடு ஆறு மற்றும் ஏழாம் அதிபதி தொழில்காரகனாகி ஒன்பதில் நீசமடைவது, களத்திரத்தின்மூலம் ஏற்படும் முரண்பாடுகளை எடுத்துரைப்பதோடு, தந்தையாருக்கு சரியான தொழில் சூழல் உருவாகாத சூழ்நிலையையும் சுட்டிக் காட்டுகின்றது.

சிம்ம ராசிக்காரர்களின் பொருளா தார வளர்ச்சிக்கும் பணி மற்றும் தொழில்சார்ந்த உயர்வுகளுக்கும், இந்த ராசியின் சின்னமான சிங்கத்தை லோகோவாக அமைத்துக்கொள்வதும் ஒரு உயர்வினை தரும்.

மேலும் மகம் பலாமரமும், பூரம் அரளிச்செடியும், உத்திரம் வேல மரத்தையும் வழிபட்டு வருவதன்மூலம் பொருளாதார உயர்வினை ஏற்படுத்திக் கொள்ளமுடியும்.

சிம்ம ராசிக்கான லால் கிதாப் பரிகாரங்கள்

1. முக்கியமான நிகழ்ச்சிகள் அல்லது இன்டர்வியூகள், பிசினஸ் மீட்டிங்களுக்கு கலந்துகொள்ளும்முன் கொஞ்சமாவது உணவு அருந்திவிட்டு செல்வது அதிர்ஷ்டத்தைத் தரும்.

2. மனைவியின் சகோதரர்கள், மருமகள், தங்கை மற்றும் அக்காள் மகன்கள் இவர் களுடன் நல்ல உறவை தேடுங்கள்.

3. ஒரு செம்பு நாணயம் அல்லது டாலரை கழுத்தில் ஒரு நூலில் கோர்த்து அணிந்துகொள்வது செல்வ நிலையை மற்றும் தொழில், வேலை உயர்வைத் தரும்.

4. கண்பார்வையற்ற பத்து பேருக்கு ஏதேனும் ஒரு ஞாயிற்றுக்கிழமைகளில் இனிப்பு பண்டம் வாங்கி கொடுத்தால் வாழ்வில் வளம் சேரும்.

5. உங்களின் பொருளாதார நிலைக்கேற்ற ஏதேனும் ஒரு சேவை நிலையத்திற்கு, அன்னதான மன்றத்திற்கு, அரிசி, பருப்பு தானம் வழங்குவது சிறப்பு.

6. மது மற்றும் மாமிசம் உண்பதைக் குறைத்துக்கொள்வது வாழ்வில் பெரும் சுபிக்ஷத்தைத் தரும்.

செல்: 80563 79988