ராகு காலம், எமகண்டம் பற்றி நமக்குத் தெரியும். அதுபோல குளிகை நேரமும் உண்டு. அது என்னவென்று அறிவோமா? அதற்கு ஒரு கதையும் உண்டு.
இராவணன் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தான். அவன் மகிழ்ச்சிக்குக் காரணம் அவன் தந்தையாகப் போகிறான். தன்னுடைய அசுரகுல குருவான சுக்கிராச்சாரியாரிடம் சென்றான் இராவணன்.
"எனக்குப் பிறக்கப்போகும் குழந்தை, பல வித்தைகளில் ஜித்தனாக இருக்கவேண்டும். எவராலும் வெல்லமுடியாத வலிமை கொண்டவனாக இருக்கவேண்டும். எந்த நேரத்தில் குழந்தை பிறந்தால், நான் எதிர்பார்க்கும் ஆற்றலுடன் திகழ்வான் என்பதைக் கணித்துச் சொல்லுங்கள். இது பேராசையல்ல குருவே. ஒரு தந்தையின் நியாயமான ஆசை'' என்றான்.
"இராவணா'' உன் எதிர்பார்ப்பில் தவறில்லை. சாதாரண குடிமகனே தன் பிள்ளை நாடாளப் பிறக்கவேண்டுமென்று எண்ணும்போது, நீயோ வேந்தன். இலங்கை மாமன்னன். மயனின் மாப்பிள்ளை. சிவனருள் பெற்றவன். துயரத்தையும் தோல்வி களையும் அறியாதவன். எதிரிகளை நடுங்கச் செய்பவன். தயாளன். உடலாலும் உள்ளத்தா லும் வல்லமை கொண்டவன். பிறக்கப் போகும் உன் மகனும் இத்துணை ஆற்றல் களைக் கொண்டவனாகத் திகழவேண்டு மென்று நீ எதிர்பார்ப்பதில் தவறொன்றும் இல்லை. நானும் நீ சொல்ல வந்ததை சொல்லும்முன்பே ஞானத்தால் அறிந்தேன். குழந்தை பிறக்கவேண்டிய நேரத்தைக் கணித்துக் கொண்டுதான் இருந்தே
ராகு காலம், எமகண்டம் பற்றி நமக்குத் தெரியும். அதுபோல குளிகை நேரமும் உண்டு. அது என்னவென்று அறிவோமா? அதற்கு ஒரு கதையும் உண்டு.
இராவணன் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தான். அவன் மகிழ்ச்சிக்குக் காரணம் அவன் தந்தையாகப் போகிறான். தன்னுடைய அசுரகுல குருவான சுக்கிராச்சாரியாரிடம் சென்றான் இராவணன்.
"எனக்குப் பிறக்கப்போகும் குழந்தை, பல வித்தைகளில் ஜித்தனாக இருக்கவேண்டும். எவராலும் வெல்லமுடியாத வலிமை கொண்டவனாக இருக்கவேண்டும். எந்த நேரத்தில் குழந்தை பிறந்தால், நான் எதிர்பார்க்கும் ஆற்றலுடன் திகழ்வான் என்பதைக் கணித்துச் சொல்லுங்கள். இது பேராசையல்ல குருவே. ஒரு தந்தையின் நியாயமான ஆசை'' என்றான்.
"இராவணா'' உன் எதிர்பார்ப்பில் தவறில்லை. சாதாரண குடிமகனே தன் பிள்ளை நாடாளப் பிறக்கவேண்டுமென்று எண்ணும்போது, நீயோ வேந்தன். இலங்கை மாமன்னன். மயனின் மாப்பிள்ளை. சிவனருள் பெற்றவன். துயரத்தையும் தோல்வி களையும் அறியாதவன். எதிரிகளை நடுங்கச் செய்பவன். தயாளன். உடலாலும் உள்ளத்தா லும் வல்லமை கொண்டவன். பிறக்கப் போகும் உன் மகனும் இத்துணை ஆற்றல் களைக் கொண்டவனாகத் திகழவேண்டு மென்று நீ எதிர்பார்ப்பதில் தவறொன்றும் இல்லை. நானும் நீ சொல்ல வந்ததை சொல்லும்முன்பே ஞானத்தால் அறிந்தேன். குழந்தை பிறக்கவேண்டிய நேரத்தைக் கணித்துக் கொண்டுதான் இருந்தேன்.
ஆனால்...'' என்று இழுத்தார் சுக்கிராச்சாரியார்.
"என்ன தயக்கம்? "ஆனால்' என்னும் வார்த் தையை உங்களிடம் நான் எதிர்பார்க்கவில்லை. தயக்கமின்றி சொல்லுங்கள். என்ன பிரச் சினை?'' என்றான் இராவணன்.
"நல்ல கிரகங்கள் எல்லாம் ஒரே ராசிக் கட்டத்தில் வந்தால் நல்லது. எப்படிப் பார்த்தாலும் அந்தமாதிரி ஒரு நேரம் அமை யாமல் இருக்கிறது. நானும் கணித்துக் கணித்துப் பார்க்கிறேன். யோசித்தே என் தலைவெடித்துவிடும்போல் இருக்கிறது. சுப கிரகங்களை ஒட்டுமொத்தமாக சிறையில் அடைத்தால் என்ன என்றுகூட தோன்று கிறது.'' புன்னகைத்தவாறே சொன்னார் சுக்கிராச்சாரியார்.
வேடிக்கையாக சொன்ன வார்த்தை வினையாகிப் போனது. "நீங்கள் சொல்வதும் சரிதான். நவ கிரகங்களையும் ஒன்றாக சிறையில் தள்ளினால்தான் நான் நினைத்தது நடக்கும். சரியான நேரத்தில் ஆலோசனை கூறிய தங்களுக்கு நன்றி. ஆனால் நவ கிரகங் களில் நீங்களும் ஒருவராக இருப்பதால் உங்களையும் சிறைப்பிடிக்கிறேன்'' என்றான் இராவணன்.
சுக்கிரன் என்று அழைக்கப்படும் சுக்கிராச்சாரியாரையும் சிறையில் தள்ளினான்.
நவ கிரகங்களையும் ஒரே சிறையில் அடைத் தான். இந்த நிலைக்குக் காரணமே சுக்கிராச் சாரியார்தான் என்பதால் அவரை மற்ற கிரகங்கள் திட்டித் தீர்த்தனர்.
"சிவனையே பாதாள உலகத்தில் வாழச் செய்தவன் நான். என்னை இராவணன் இந்த சிறையில் தள்ளிவிட்டான். எல்லாம் உங்களால்தான். உங்களை "அசுரகுரு' என்று அழைப்பது சரியாகத்தான் இருக்கிறது. திறமை இருக்கும் அளவுக்கு அறிவு வேண்டாமா? அவன்தான் ஆணவக்காரன் ஆயிற்றே! தன்னைவிட உயர்ந்தவன் இருக்கக்கூடாதென்று நினைப்பவன் இராவணன். அவனிடம் போயா நம் பெருமைகளைச் சொல்வது? அறிவுக் களஞ்சியமய்யா நீர்'' என்றார் சனீஸ்வரர்.
"நான் என்னவோ சொகுசாக இருப் பதைப்போலவும், நீங்கள்தான் துயரப் படுவதைப்போலவும் அல்லவா பேசிக் கொண்டிருக்கிறீர்கள்? வரம் கொடுத்தவன் தலையிலேயே கை வைப்பவன் இராவணன் என்பதை சற்று மறந்து, அவனுக்கு ஆலோசனை சொன்னேன். இப்போது அனுபவிக்கிறேன்" என்றார் சுக்கிரன்.
மண்டோதரி பிரசவ வலியால் துடித்தாள். சுகப்பிரசவம் ஆவதில் சிக்கல்தான் என்று வைத்தியர்கள் சொல்வதாக சிறைக் காவலாளிகள் பேசிக்கொண்டார்கள்.
"சுக்கிரசாரியாரே'' உங்களுக்குத் தெரியாதா? எல்லா கிரகங்களும் ஒன்று சேர்ந்தால் அதை "கிரகயுத்த' நேரம் என்பார்கள். அப்படியிருக்கும்போது எதற்காக இப்படியொரு யோசனையைச் சொன்னீர்கள்?
இப்போது பாருங்கள்... "மண்டோதரி பிரசவிக்க முடியாமல் வலியால் வேதனைப் படுகிறாள். அவளுக்கோ அல்லது குழந்தைக்கோ ஏதாவது பாதிப்பானால் இராவணன் நம் அனைவரையும் தொலைத்துவிடுவான்'' என்றார் சனீஸ்வரர்.
"அசுரர் தலைவனிடமிருந்து தப்பிக்க வழியிருக்கிறதா?'' என்றார் குரு பகவான்.
"புதிதாக ஒரு உயிரை உண்டாக்கினால் இராவணனின் வாரிசு பிழைக்கும்'' என்று கூறி, தியானத்தில் அமர்ந்து, தன் உடலி-ருந்த சக்தியைத் திரட்டி ஓர் அழகான குழந்தையை உருவாக்கினார் சனீஸ்வரர். அந்தக் குழந்தைக்கு குளிகன் என்று பெயரிட்டார்.
"ஒன்பது கிரகங்கள் ஒன்றுசேர்ந்து கிரகயுத்தமாக இருந்தாலும், குளிகன் பிறந்ததால் இனி இந்த குளிகன் பிறந்த நேரம் மட்டும் பிரச்சினையில்லாதது. வானிலிருக்கும் மேகத்தைக் காற்று கலைத்துவிடுவதுபோல், இந்தக் குழந்தை பிறந்த இதேநேரத்தில் மண்டோதரிக்கு'' சுகப்பிரசவம் ஆகிவிட்டது. இனி பயமில்லை மண்டோதரிக்கு'' என்றார் சனீஸ்வரர்.
"நமக்கும்தான்'' என்றார் சுக்கிரர்.
சனியின் மைந்தன் குளிகை என்பதால் குளிகைக் காலத்தினை சனியின் ஆதிக்க நேரம் என்பார்கள்.
சனியின் ஆதிக்க நேரமான அவரது மைந்தன் குளிகைக்கான நேரத்தில் நல்ல காரியங்களைச் செய்தால் சனீஸ்வரன் மனம் மகிழ்ந்து மேன்மேலும் நல்ல காரியங்களைச் செய்ய அருள்புரிவார்.
குளிகை நேரத்தில் கெட்ட காரியங்களைச் செய்தால் அந்த காரியங்களைத் திரும்பத் திரும்ப செய்யவைத்து கெடுதலான பலன்களைக் கொடுப்பார். இதையே "சனியைப்போல கொடுப்பாரும் இல்லை; கெடுப்பாரும் இல்லை' என்று கூறினார்கள்.
குளிகை நேரத்தில் ஒரு செயலைத் தொடங்கினால் வளர்ந்துகொண்டே போகும்.
சனியின் ஆதிக்க நேரம் அது. அந்த நேரத்தில் அசுப நிகழ்ச்சிகளைத் தவிர்க்கவேண்டும்.
குளிகை நேரத்தில் செய்யக்கூடாதவை
குளிகை நேரத்தில் ஒரு செயலைத் தொடங்கினால் வளர்ந்துகொண்ட போகும். கடன் வாங்குவது, வீட்டை உடைப்பது, இறந்தவர் உடலை எடுப்பதுபோன்ற அசுப காரியங்களை குளிகை நேரத்தில் செய்யாமலிருக்க வேண்டும். பெண் பார்க்கச் செல்வதைத் தவிர்க்கலாம். கூடுமானவரை அறுவை சிகிச்சையை குளிகை நேரம் முடிந்ததும் செய்யலாம்.
திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர். எல்லாரது வாழ்விலும் கட்டாயம் நடக்கவேண்டிய சுபநிகழ்ச்சி. திருமணம் என்ற சுப நிகழ்ச்சியை மட்டும் விதிவிலக்காக குளிகை இல்லாத நேரத்தில் செய்வது நல்லது. மீறிச் செய்தால், திரும்பத் திரும்ப திருமணம் செய்வதுபோல அமைந்துவிடும்.
குளிகை நேரத்தில் செய்யவேண்டியவை
இந்த நேரத்தில் கடனைத் திரும்பக் கொடுப்பது, வீடு, நகை வாங்குவது, நகை அணிவது, வீடு கிரகப்பிரவேசம் செய்வது போன்ற சுபநிகழ்ச்சிகளைச் செய்தால், தொடர்ந்து செய்வதாக அமையும். எந்தவித தங்குதடையுமின்றி சுபமாக முடியும்.
நாம் செய்யும் வீண் செலவுகளை சுபகாரியச் செலவுகளான வீடு வாங்குதல், நகை வாங்குவது, நகை அணிவது, வீடு கிரகப்பிரவேசம் செய்வது, தான தருமங்கள் போன்றவற்றை குளிகை நேரத்தில் செய்தால், சனியின் மைந்தனான குளிகன் அவற்றைத் தொடர்ந்து செய்யும்படி அமைத்துக் கொடுப்பான்.