மாட்டுத் தொழுவத்தை மாட்டுக் கொட்டகை, கட்டுத் துறை, மாட்டுப் பண்ணை என்று பல பெயர் களில் அழைக்கி றோம். மனிதன் நலமாக வாழவேண்டும். அதற்கு அவன் வாழ்கின்ற வீடும் வளமாக வாஸ்து விதிகளின்படி அமையவேண்டு மல்லவா? அதுபோல் கால்நடைகளும் நோய் நொடியின்றிப் பால் சுரக்கவேண்டு மெனில் வாஸ்து விதிகளின்படி மாட்டுத் தொழுவத்தையும் வளமாக அமைக்க வேண்டும்.

மாட்டுத் தொழுவம் அமைக்கும்போதே, அங்கு நீர்வளம், நிலவளம் உள்ளதா? மேடான பகுதியா? கழிவுநீர் கால்வாய் (சாக்கடை) உள்ளதா என்பதையெல்லாம் முதலில் ஆராயவேண்டும்.

மேலும், முட்புதர்கள் மண்டிய இடம், விஷச் செடிகள் வளர்கிற இடம், நிலத்தில் பாறைகள் ஆங்காங்கே உள்ள இடம் இவற்றையெல்லாம் கூர்ந்து கவனிக்கவேண்டும்.

மழைக்காலத்தில் தண்ணீர் தேங்காத இட மாகத் தேர்வுசெய்ய வேண்டும். மேய்ச்சல் விடும் நிலமானது வடக்கு அல்லது தெற்குத் தாழ்வாக அல்லது சற்று சரிவாக அமைவது வளர்ச்சியைக் கூட்டும். தெற்கு அல்லது மேற்கு சற்று உயரமாக இருப்பது அல்லது மலைகள் சூழ்ந்திருப்பது லாபத்தை இரட்டிப்பாக்கும். அங்கு மாட்டுப்பண்ணை அமைப்பின் ஐஸ்வர்யம் பெருகும்; நிலைக்கும்.

Advertisment

ஆலயம், ஆசிரமம், தோட்டம், பண்ணை என எதுவாயினும், வடமேற்கில்தான் (வாயு பாகத்தில்) பசுத் தொழுவம் கட்டவேண்டும் என சில வாஸ்து நூல்கள் வலியுறுத்துகின்றன.

சிலர் ஈசான பாகத்தில் அமைக்கலாம் என்றும் சொல்கிறார்கள். அங்கு, பந்தல் கொடி போடுவதுகூட தவறாகும். மாட்டுத் தொழுவம் அமைக்கும்போது ஈசான பாகம் மூடப்படும். இதனால் கட்டட உரிமை யாளர் பாதிக்கப்படுவார். பசுக்கள் ஒவ்வொன்றாக விற்பனையாகும். திருடுபோகவும் வாய்ப்புண்டு. எனவே ஈசான பாகம் ஏற்றதல்ல.

Advertisment

dd

மாட்டுத் தொழுவம் கன்னி பாகத்தில் அமைப்பதே மிகச் சிறப்பு. சிலர் அக்கினி பாகத்தில் அமைக்கச் சொல்கிறார்கள்.

அங்கு பசுத் தொழுவம் அமைக்கும்போது, பசுக் காம்புகளில் புண் வரும். பசுவின் மடிக்காம்பு மட்டுமல்ல; பால்மடியும் வற்றும். நோய் தொற்றும். பெண்மணிகளின் நலம் கெடும். இதை அனுபவத்தில் கண்டிருக் கிறேன். மாட்டுத் தொழுவம் அமைக்கும் இடத்தை ஒன்பது பாகமாகப் பிரிக்கும் போது குபேர பாகம், இந்திர பாகம், கன்னி பாகம், வருண பாகம், வாயு பாகத்தில் மாட்டுத் தொழுவம் அமைக்கலாம். குறிப்பாக- வடதிசையில்- மாட்டுத் தொழுவம் தென்திசையில்- குப்பைத் தொட்டி மேற்கு திசையில்- எருமைத் தொழுவம் கிழக்குத் திசையில்- ஆட்டுத் தொழுவம் வடகிழக்கில்- தானியக் களஞ்சியம் தென்கிழக்கில்- விவசாய வரவு- செலவு அறை தென்மேற்கில்- வைக்கோல் போர் வடமேற்கில்- வண்டிக் கொட்டகை என அமைத்து, பிரம்ம பாகத்தை திறந்த வெளியாக விடுவது நல்லது என்றும் வாஸ்து நூல்கள் வ-யுறுத்து கின்றன. கால்நடைகள் மேய்ச்சலுக்குப் போகும் போதும், திரும்பி வருகின்றபோதும், இந்திர பாகத்தில் வாயில் அமைப் பது உத்தமமாகும்.

மாட்டுத் தொழுவத்தை வடக்குத் தெற்காக அமைக்கவும். கிழக்கினில் உதயமாகும் சூரியனின் வெப்பமானது இலகுவாக மேற்கில் வெளியேறும் வண்ணம் அதிகம் திறந்த வெளி விடவேண்டும். மேலும் மாடுகளின் முக மானது கிழக்குப் பார்த்தி ருக்குமாறு கட்டுவது உத்தமம். வடக்கு மற்றும் கிழக்கினில் "கூபா புல்' வளரச் செய்யலாம். தெற்கு, மேற்கினில் புங்கமரங்களை வளர்ப்பது, மாடுகளின் ஆரோக்கியத்திற்கு மேலும் நன்மையளிக்கும்.

கூடுமானவரை தொழு வத்தில் சூரியஒளியும், இயற்கைக் காற்றும் நன்கு பரவும் வண்ணம் விசாலமாகக் கட்டப்பட வேண்டும். இரவினில் வெளிச்சம் அறவே இல்லாமலிருப்பதும் தவறு.

மிதமான மின்விளக்கின் ஒளி பரவவேண்டும்.

பகல்வேளை தொடங்கி மாலைவரை மாடுகளை மேய்ச்சல் நிலத்திற்கு விட வேண்டும். அந்த இடைவெளி நேரத்தில் தினமும் சாணம் மற்றும் கோமியம் ஆகியவற்றை அப்புறப்படுத்தி சுத்தம் செய்யவேண்டும். மூலிகை கலந்த சாம்பிராணி தூபம் தொழு வமெங்கும் பரவவேண்டும்.

மாட்டுத் தொழுவம் அமையும் இடத்திற் குத் தெற்கு- மேற்கில் உயர்ந்தமலைத் தொடர் அமைவதும், வடக்கு- கிழக்கில் நீர்நிலைகள் அமைவதும் சிறப்பாகும்.

செல்: 94431 46912