என் திருமணம் எப்பொழுது நடக்கும்? நடப்பு தசையில் தொழில் லாபகரமாக இருக்குமா என்று கூறுங்கள்? -சாயி, சென்னை.
பதில்: பூர நட்சத்திரம், சிம்ம ராசி, கும்ப லக்னத்தில் பிறந்த ஜாதகருக்கு லக்னத்திற்கு 7-ல் ராகு இருந்து ராகு தசையில் சுயபுக்தி 29-3-2025 முடிய நடக்கிறது. 7-ல் ராகு இருப்பதாலும், களத்திரகாரகன் சுக்கிரன்- கேது நட்சத்திரமான அஸ்வினியில் இருப்பதாலும் திருமண வாழ்க்கையில் விட்டுக்கொடுத்து செல்லவேண்டிய ஜாதகமாகும். தற்போது சுயபுக்தி நடப்பதால் ராகு தசை சுயபுத்திக்குபிறகு அதாவது 29-3-2025-க்குபிறகு குரு புக்தி காலத்தில் திருமண முயற்சிகள் மேற்கொண்டால் நல்லது நடப்பதற்கான வாய்ப்புகள் ஜாதகரீதியாக உண்டு. 7-ல் ராகு இருப்பதால் அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது நல்லது. தற்போது 7-ல் இருக்கக்கூடிய ராகு தசை நடப்பதால் எதிலும் சுயமாக செயல் படாமல் மற்றவர்களுடன் கூட்டுசேர்ந்து செயல்பட்டால் தொழில்ரீதியாக ஒருசில அனுகூலங்கள் உண்டு. அதிலும் குறிப்பாக தற்போது ராகு தசையில் சுயபுக்திக்கு அடுத்து ராவுக்கு 8-ல் இருக்கக்கூடிய குரு புக்தியும், நீச சனி புக்தியும் நல்லதல்ல. ராகு தசை யில் புதன் புக்தி வரும் நேரம் முதல் தான் அனுகூலமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு.
எனது மகனுக்கு திருமணம் எப்பொழுது நடக்கும்? பெற்றோர் பார்த்துவைக்கும் திருமணமா அல்லது விருப்ப திருமணமா என்று கூறுங்கள்? -ப்ரதீபா, விழுப்புரம்.
பதில்: கிருத்திகை நட்சத்திரம், ரிஷப ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்த ஜாதகருக்கு 7-ஆம் அதிபதி சுக்கிரன் 6-ல் இருப்பதால் திருமணம் சற்று தாமதமாகக்கூடிய ஒரு சூழல் ஜாதகரீதியாக இருக்கிறது. சுக்கிரன் சுயசாரம் பெற்றிருப்பதால் ஜாதகருக்கு திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். அது மட்டுமில்லாமல் பெற்றோர் பார்த்து வைக்கக்கூடிய வரன் அமையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சுக்கிரன் சுயசாரம் பெற்றுடன் இருக்கக்கூடிய புதனும் சுக்கிரன் சாரம் பெற்றிருப்பதால் நல்ல வாழ்க்கை அமையும். தற்போது ராகு தசையில் குருபுக்தி நடக்கிறது. ராகு தசையில் புதன் புக்தி நடக்கும் தருவாயில் திருமணம் நடைபெறக் கூடிய வாய்ப்புகள் உண்டு. தற்போது உங்கள் மகனுக்கு 21 வயது என்பதால் திருமணத்தில் அவசரம் காட்டாமல் சற்று பொறுமையாக செய்வது நல்லது.
எனக்கு எப்பொழுது நிரந்திர வேலை அமையும்? அரசாங்க வேலையா அல்லது தனியார் வேலையா? திருமணம் எப்பொழுது நடக்கும் என்று கூறுங்கள்? -கிரிவாஷ், சேலம்.
பதில்: மிருகசீரிஷ நட்சத்திரம், மிதுன ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்த ஜாதகருக்கு 10-ஆம் அதிபதி சூரியன் கேந்திர ஸ்தானமான 7-ல் செவ்வாய் சேர்க்கைப் பெற்றிருப்பது சிறப்பான அமைப்பாகும். செவ்வாய்- சுக்கிரன் பரிவர்த்தனை பெற்றிருப்பதால் முதலில் ஒரு தற்காலிக பணியில் இணைந்து சிறிது காலம் கழித்து நிரந்தரபணியில் உட்காரக் கூடிய வாய்ப்புகள் உண்டு. செவ்வாயின் லக்னத்தில் பிறந்திருப்பதால் முன்கோபத்தை குறைத்துக்கொண்டால் ஒரு வளமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. 10-ஆம் அதிபதி சூரியன் என்ற காரணத்தினால் அரசு, அரசு உதவி பெறக் கூடிய இடங்களில் வேலைக்காக முயற்சி செய்தால் நல்லது நடக்க வாய்ப்பு உண்டு. 7-ஆம் அதிபதி சுக்கிரன் 6-ஆம் அதிபதி செவ்வாயுடன் பரிவர்த்தனை பெற்றிருப்ப தால் திருமண விஷயத்தில் முதலில் ஒரு சிறு தடை, தடைக்குப்பிறகு நல்லது நடக்க வாய்ப்புண்டு. தற்போது குரு தசையில் சுக்கிர புத்தி 29-3-2027 முடிய நடப்பதால் திருமண முயற்சிகளை நீங்கள் மேற்கொண்டால் இந்த ஆண்டு இறுதிக்குள் நல்லது நடக்க வாய்ப்புண்டு. பிறக்கின்றபோது சனி நீசம்பெற்றிருப்பதால் வேலைவாய்ப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் முதலில் சில இடையூறுகளை சந்தித்து அதன்பிறகு ஒருநல்ல நிலையை அடையக்கூடிய வாய்ப்பு கள் உண்டு.
என் மகளின் ஜாதகத்தில் 7-ல் ராகு இருக்கிறது அப்படியிருந்தால் ராகு- கேது தோஷம் என்றும், ராகு- கேது தோஷமுள்ள வரனைதான் பார்க்கவேண்டும் என்று கூறுகிறார்கள்; அப்படியா? -கீர்த்தி, ஈரோடு.
பதில்: சர்ப கிரகங்களான ராகு- கேது இருவரும் நிழல் கிரகங்கள் ஆகும். குறிப்பாக பின்னோக்கி செல்லக்கூடிய இந்த இரு கிரகங்களும் ஒருவர் ஜாதகத்தில் ஒருவருக்கொருவர் 7-ல் இருப்பார்கள். பொதுவாக லக்னத்திற்கு 7-ஆம் பாவம் களத்திர ஸ்தானமாகும். 7-ல் ராகு- கேது இருந்தால் அதனை ராகு- கேது தோஷ மென்று கூறுவார்கள். அப்படி ராகு- கேது தோஷமிருந்தால் இருந்தாலே கெடுதி கிடையாது. ஒருவர் ஜாதகத்தில் 7-ல் ராகு இருந்தாலும் அல்லது கேது இருந்தாலும் திருமணத்துக்குபிறகு உடனடியாக வரக் கூடிய காலத்தில் அதாவது திருமண வயது என கூறக்கூடிய 25 வயதிலிருந்து அடுத்து வரக்கூடிய 15 வருடத்திற்குள் 40 வயதுக்குள் 7-ல் இருக்கக்கூடிய ராகு தசை அல்லது 7-ல் உள்ள கேது தசை வந்தால்தான் கெடுதி. அதுவே அந்த தசை வராவிட்டால் எந்தவித பாதிப்பும் இல்லை. ஒருசில ஜாதகத்தில் 7-ல் ராகு அல்லது கேது இருந்தாலும் அது பாவகரீதியாக 6-ல் இருக்கலாம். அப்படி இருக்கின்றபொழுது கெடுதி செய்யாது. எடுத்தவுடனே 7-ல் ராகு இருக்கிறது. கெடுதியென பொதுவாக கூறிவிடக்கூடாது. இதன்காரணமாக நிறைய பேர் வாழ்வில் நல்லது நடக்க இடையூறுகள் ஏற்படுகிறது.
எனது மகன் மீன ராசியில் பிறந்து உள்ளார். தற்போது ஏழரைச்சனி நடக்கிறது, திருமணம் செய்யலாமா? -அமுதா நெல்லை.
பதில்: ஒரு ராசியில் அதிக காலம் தங்கும் கிரகமான சனி பகவான் ஒரு ராசியில் 2.5 வருட காலம் தங்குவார். ஜென்ம ராசிக்கு 12-ஆம் வீடு, ஜென்ம ராசி, 2-ஆம் வீடு ஆகிய ஸ்தானங்களில் கோட்சாரத்தில் சனி இருக்கின்றபொழுது ஏழரைச்சனி என்று கூறுவோம். ஏழரைச்சனி காலத்தில் வேலைப்பளு சற்று கூடுதலாக இருக்கும். அலைச்சல் அதிகரிக்கும். நாம் நேர்மையாக செயல்பட்டால் எந்த விதத்திலும் பாதிப் பில்லை. சனி ஒரு நீதி கிரகம் என்பதால் நாம் தவறுகள் செய்கின்றபொழுது தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும். குறிப்பாக ஏழரைச் சனி காலத்தில் திருமணம் செய்யக்கூடாது என்று கிடையாது. உங்கள் மகன் ஜாதகத் தில் 7-ஆம் அதிபதி தசை புக்தியோ, சுபகிரகங் களுடைய தசை புக்தியோ நடைபெற்றால் தாராளமாக திருமணம் செய்யலாம். சுக்கிரனின் தசை புக்தி சுக்கிரனுடன் தொடர்பு டைய கிரகமுடைய தசை புக்தி நடைபெற்றா லும், கோட்சாரத்தில் குரு சாதகமாக இருந்தா லும் குறிப்பாக 2, 5, 7, 9, 11-ல் குரு சஞ்சரிக்கின்றபொழுது திருமணம் செய்யலாம்.