ப் கேள்வி: என் மகனுக்கு திருமணம் எப்போது நடக்கும் என்று கூறுங்கள்? -சேகர், செய்யாறு.
பதில்: கிருத்திகை நட்சத்திரம், மேஷ ராசி, கடக லக்னத்தில் பிறந் தவர். உங்கள் மகனுக்கு 7-ஆம் அதிபதி சனி வக்ரகதியில் இருப்பது நல்ல அமைப்பில்லை. சூரியன்- ராகு, சந்திரன் சேர்க்கைபெற்று கிரகண ஏற்பட்ட மாதத்தில் பிறந்திருப்பது கிரகண தோஷமாகும். கேது சாரம் பெற்று ராகு தசை நடப்பதால் திருமணம் நடைபெற இடையூறுகள் ஏற்படுகிறது. ஏழாம் அதிபதி சனி என்ற காரணத் தாலும், ராகு- கேது சாரம் பெற்ற ராகு தசை என்ற காரணத்தாலும் உறவில்லாமல் அந்நியத்தில் திருமணத்திற்காக முயற்சி செய்ய வும். விரை வில் திருமணம் நடைபெற்றா லும் 30-9-2026 முடிய ராகு தசை நடப்பதால் அடுத்துவரும் குரு தசையில் தான் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். ராகு தசை நடப்பதால் அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு நன்மை தரும்.
ப் கேள்வி: என் மகளுக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியமில்லை. எப்போது குழந்தை பிறக்கும் என்று கூறுங்கள்? -பானுமதி, சென்னை.
பதில்: கிருத்திகை நட்சத்திரம், ரிஷப ராசி, தனுசு லக்னத்தில் பிறந்த உங்கள் மகளுக்கு 9-ல் ராகு கேது நட்சத் திரமான மகத்தில் அமையப் பெற்று தசை நடப்பதும், அதில் சனி- கேது நட்சத்திரத்தில் அமையப்பெற்று புக்தி நடப்பதும் நல்லதல்ல. கேது நட்சத்திரத்தில் அமையப்பெற்ற தசை புக்தி நடைபெற்றால் குழந்தை பாக்கியம் உண்டாக இடையூறுகள் உண்டாகும். ராகுவும் கேது சாரம் பெற்று சனியும் கேது சாரம் பெற்று இருப்பது சாதக மற்ற அமைப் பாகும். புத்திர காரகன் குரு தனது சுயசாரம
ப் கேள்வி: என் மகனுக்கு திருமணம் எப்போது நடக்கும் என்று கூறுங்கள்? -சேகர், செய்யாறு.
பதில்: கிருத்திகை நட்சத்திரம், மேஷ ராசி, கடக லக்னத்தில் பிறந் தவர். உங்கள் மகனுக்கு 7-ஆம் அதிபதி சனி வக்ரகதியில் இருப்பது நல்ல அமைப்பில்லை. சூரியன்- ராகு, சந்திரன் சேர்க்கைபெற்று கிரகண ஏற்பட்ட மாதத்தில் பிறந்திருப்பது கிரகண தோஷமாகும். கேது சாரம் பெற்று ராகு தசை நடப்பதால் திருமணம் நடைபெற இடையூறுகள் ஏற்படுகிறது. ஏழாம் அதிபதி சனி என்ற காரணத் தாலும், ராகு- கேது சாரம் பெற்ற ராகு தசை என்ற காரணத்தாலும் உறவில்லாமல் அந்நியத்தில் திருமணத்திற்காக முயற்சி செய்ய வும். விரை வில் திருமணம் நடைபெற்றா லும் 30-9-2026 முடிய ராகு தசை நடப்பதால் அடுத்துவரும் குரு தசையில் தான் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். ராகு தசை நடப்பதால் அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு நன்மை தரும்.
ப் கேள்வி: என் மகளுக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியமில்லை. எப்போது குழந்தை பிறக்கும் என்று கூறுங்கள்? -பானுமதி, சென்னை.
பதில்: கிருத்திகை நட்சத்திரம், ரிஷப ராசி, தனுசு லக்னத்தில் பிறந்த உங்கள் மகளுக்கு 9-ல் ராகு கேது நட்சத் திரமான மகத்தில் அமையப் பெற்று தசை நடப்பதும், அதில் சனி- கேது நட்சத்திரத்தில் அமையப்பெற்று புக்தி நடப்பதும் நல்லதல்ல. கேது நட்சத்திரத்தில் அமையப்பெற்ற தசை புக்தி நடைபெற்றால் குழந்தை பாக்கியம் உண்டாக இடையூறுகள் உண்டாகும். ராகுவும் கேது சாரம் பெற்று சனியும் கேது சாரம் பெற்று இருப்பது சாதக மற்ற அமைப் பாகும். புத்திர காரகன் குரு தனது சுயசாரம் பெற்று இருப்பதும், 5-ஆம் அதிபதி செவ்வாய் பரிவர்த்தனை பெற்று இருப்ப தாலும் விரைவில் நல்லது நடக்கக்கூடிய யோகமுண்டு. 23-1-2024 முதல் புதன் புக்தி நடக்கக்கூடிய காலத்தில் குழந்தை பாக்கியம் உண்டாக வாய்ப்பு உண்டு. அம்மன் வழிபாடு மேற்கொள்வது, குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
ப் கேள்வி: எனது பெயரிலுள்ள வீட்டை எப்போது எந்த புக்தியில் விற்பது என்று கூறுங்கள்? -சங்கீதா, ஈரோடு
பதில்: மக நட்சத்திரம், சிம்ம ராசி, மகர லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 4-ஆம் அதிபதி செவ்வாய் திரிகோண ஸ்தானமான 5-ல் இருப்பதும், சுக்கிரன் லக்னத்தில் இருப்பதும் நல்ல அமைப்பாகும். இன்றைய சூழ்நிலையில் ஒரு அசையா சொத்து களை வாங்குவது என்பது ஒரு கடினமான ஒரு விஷயமாகும். இந்த நிலையில் உங்கள் பெயரிலுள்ள வீட்டை விற்கவேண்டும் என்று கேட்டு உள்ளீர்கள். உங்களுக்கு தற்போது சந்திர தசையில் ராகு புக்தி 15-4-2024 முடிய நடக்கிறது. சந்திர தசையில் ராகு புக்தி நடப்பதால் எந்த ஒரு முயற்சியிலும் தேவையற்ற குழப்பங்கள் இருந்து கொண்டி ருக்கும். 2024 ஏப்ரலுக்குபிறகு குரு புக்தி வரு கின்றபொழுது வீடு விற்க முயற்சித்தால் ஒரு சாதகமான பலன்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. 8-ல் சந்திரன் இருந்து தசை நடைபெறுவதால் தேவையற்ற மன உளைச்சல்கள் எந்த செயல் செய்கிறீர்கள் என்று தெரியாமல் செய்யக்கூடிய நிலை இருக்கும் என்பதால் எது செய்வது என்றாலும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்படுவது நல்லது.
ப் கேள்வி: இந்த வருடம் எந்த மாதம் எனக்கு திருமணம் நடக்கும், எந்த மாதத்தில் ஆசிரியர் வேலை கிடைக்கும், அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர் வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா என்று கூறுங்கள்? -ரவீந்திரன், தூத்துக்குடி
பதில்: திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி, கடக லக்னத்தில் பிறந்த உங்களுக்கு குரு- சனி இணைந்து கன்னியில் அமைந்தது அவ்வளவு நல்ல அமைப்பு அல்ல. குரு- சனி கன்னி ராசியில் அமைந்தது பிரம்மஹத்தி தோஷ மாகும். இதன் காரணமாக பலரது வாழ்வின் திருமண வாழ்க்கைரீதியாக நற்பலன் அடைய இடையூறுகள் ஏற்பட்டு இருக்கிறது. 1981-ல் பிறந்த உங்களுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டு தோஷத்தை ஏற்படுத்திய சனி மகா தசை 3-2-2027 முடிய நடப்பதால் திருமணம் நடைபெற இடையூறுகள் ஏற்படுகிறது. ஏழாம் அதிபதி சனி என்ற காரணத்தினால் உறவு இல்லாமல் அந்நியத்தில் ஒரு வாழ்க்கைக்கு முயற்சித் தால் 2024 ஜூலைக்குப்பிறகு குரு புக்தி காலத்தில் நல்லது நடக்க வாய்ப்பு உண்டு. 10-ஆம் அதிபதி உச்சம் பெற்று இருப்ப தால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் பாவக ரீதியாக செவ்வாய் 8-ல் இருப்பதால் ஒரு நல்லது நடக்க இடையூறுகள் உண்டாகிறது. சனி- புதன் பரிவர்த்தனை பெற்று இருப்பதால் 2027-க்குபிறகு வரக்கூடிய புதன் மகா தசையில் ஒரு சிறப்பான வாய்ப்பு கள் உங்களுக்கு கிடைக்கும். அதுவரை கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்வது நல்லது. புதன் தசை காலத்தில் கல்வித்துறையில் நல்ல பெயர் வாங்கக்கூடிய அமைப்பு, ஒரு அனுகூலமான பலன்கள் அடையக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்கள் உண்டு. குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது சிறப்பு.
ப் கேள்வி: திருமணம் எப்போது நடக்கும், வேலை எப்போது கிடைக்கும், நேரம் எப்படியிருக்கிறது என்று கூறுங்கள்? -அசோகன், ஆத்தூர்.
பதில்: கிருத்திகை நட்சத்திரம், ரிஷப ராசி, தனுசு லக்னத்தில் பிறந்த உங்களுக்கு லக்னத் தில் சனி, 2-ல் ராகு, 8-ல் கேது இருந்து தற்போது ராகு மகா தசை 5-11-2026 முடிய நடப்பது சாதகமற்ற அமைப்பாகும். சனியும் பாவரீதியாக 2-ல் இருக்கிறது. இதன்காரணமாக ஒரு நல்ல வாழ்க்கை அமைய இடையூறுகள் ஏற்படுகிறது. நீங்கள் பேச்சில் நிதானத்தோடு இருந்தால் உறவில்லாமல் அந்நியத்தில் ஒரு நல்லது நடக்க வாய்ப்பு உண்டு. தற்போது ஏதாவது ஒரு வாழ்க்கை ஏற்பட்டாலும், 2026-ல் குரு மகா தசை வருகின்றபொழுது வாழ்வில் ஒரு நல்லது நடக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. 2, 3 வருடங்களுக்கு அமையும் வாழ்க்கையில் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. ஒருசிலருக்கு இந்த மாதிரி ராகு தசை நடைபெறுகின்றபொழுது திருமணம் நடைபெற்றாலும் ஜாதகர் ஒரு ஊரில் மனைவி ஒரு ஊரில் இருக்கக்கூடிய நிலை உண்டாகிறது. ராகு தசை முடியும்வரை ஒரு ஒற்றுமையான குடும்ப வாழ்க்கை அமைவதற்கான யோகங்கள் மிகமிக குறைவு.
ப் கேள்வி: அரசு வேலை எப்போது கிடைக்கும் என்று கூறுங்கள்? -புஷ்பராணி, திண்டிவனம்.
பதில்: உத்திர நட்சத்திரம், கன்னி ராசி, மிதுன லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 10-ஆம் அதிபதி குரு 11-ல் அமைந்திருந்து 29-11-2022 முதல் குரு மகா தசை நடக்கிறது. 10-ஆம் அதிபதி குரு என்ற காரணத்தால் பணப்பழக்கம் தொடர்புடைய பணி, மக்களுக்கு சேவை செய்யக்கூடிய பணி, வங்கிப் பணிகளுக்கு முயற்சிக்கலாம். அரசு சார்ந்த இடங்களில்கூட நன்மை கிடைக்கும். பொதுவாக 10-ஆம் வீட்டில் சூரியன் வலுவாக இருந்தால்தான் அரசு வேலை எனக்கூறவேண்டும். உங்கள் ஜாதகத் தில் 10-ஆம் அதிபதி குரு என்ற காரணத் தால் தற்போது குரு தசை நடப்பதால் நல்ல வாய்ப்பு கள் கிடைக்கும். பொறுமையாக முயற்சிக்கவும். லக்னாதி பதி புதன் வலுவாக இருப்பதால் கல்வித்துறையில் முயற்சித்தால்கூட ஒருசில சாதக பலன்களை அடையமுடியும். தற்போது கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டால் படிப்படியான வளர்ச்சியினை அடையமுடியும். பைரவர் வழிபாடு மேற்கொள்ளவும்; நல்லது நடக்கும்.
ப் கேள்வி: என் தந்தைவழி சொத்தில் எனது பங்கு மற்றும் வெளி இடங்களி-ருந்து எனக்கு வரவேண்டிய பணம் எப்போது கிடைக்கும் என்று கூறுங்கள்? -அசோகன், ஆத்தூர்.
பதில்: கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, கும்ப லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 9-ஆம் அதிபதி சுக்கிரன் 12-ல் இருந்தாலும் நட்பு வீட்டில் இருப்பதும், 5-ஆம் அதிபதி புதன் 10-ல் இருப்பதும், தந்தை காரகன் சூரியன் லாப ஸ்தானத்தில் இருப்பதும் சிறப்பான அமைப்பாகும். உங்களுக்கு தந்தைவழியில் கிடைக்க வேண்டிய பொருளாதார ஆதாயங்கள் விரைவில் கிடைக்கக்கூடிய யோகமுண்டு. உங்களுக்கு தற்போது சந்திர தசை நடப்பதால் தேவையற்ற மனகுழப்பங்கள் இடையூறுகள் ஏற்படுகிறது. சந்திரன் நீசம்பெற்று தசை நடப்பதாலும் சந்திரன் 6-ஆம் அதிபதி என்பதாலும் உங்களுக்கு நல்ல பலன் அடைய இடையூறுகள் ஏற்படு கிறது. தற்போது சுக்கிர புக்தி நடப்பதால் உங்கள் முயற்சிகளை மேற்கொண்டால் 2024 தொடக்கத்தில் நல்ல பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. 16-3-2025 முதல் செவ்வாய் தசை நடக்கும் காலத்தில் ஒரு வளமான பலன்கள் உண்டாகும். பெருமாள் வழிபாடு மேற்கொள்ளவும்.