ப் கேள்வி: என் எதிர்காலம் பற்றி கூறுங்கள்? -பழனிவேல், நாமக்கல்.

பதில்: உத்திராட நட்சத்திரம், தனுசு ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்த உங்களுக்கு தற்போது ஏழரைச்சனி முடிந்திருப்பதால் வருகின்ற நாட்கள் ஏற்றங்கள் இருக்கும். தற்போது உங்களுக்கு ஜென்ம லக்னத்திலுள்ள சனி வக்ரம்பெற்ற தசை நடப்பதால் உடல் பலவீனம், கை, கால் வலி, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கக்கூடிய நிலை ஏற்படலாம். தற்போதைக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு எதிலும் பொறுமையோடு செயல்படுவது குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து கூட்டாக ஏதாவது செய்வது நன்மையை தரும்.

aa

Advertisment

ப் கேள்வி: எனக்கு உடல்நிலை எப்போது சரியாகும் மற்றும் எனக்கு சொந்தத் தொழில், சொந்த வீடு அமைய வாய்ப்பு இருக்கிறதா என்று கூறுங்கள்? -செல்வம், தஞ்சாவூர்.

பதில்: அவிட்ட நட்சத்திரம், கும்ப ராசி, கடக லக்னத்தில் பிறந்த உங்களுக்கு ஆயுள்காரகன் சனி பாக்கிய ஸ்தானமான 9-ல் அமையப்பெற்றது நல்ல அமைப்பாகும். குரு பார்வை 6, 8-ஆம் வீடுகளுக்கு இருப்பதால் உடல் உபாதைகள் ஏற்பட் டாலும் அதிலிருந்து விரைவில் குணமாகக் கூடிய ஒரு அதிர்ஷ்டங்கள் உண்டு. தற்போது ஏழரைச்சனி ஜென்மச் சனி நடப்பதாலும், ஆறாம் வீட்டில் இருக்கக்கூடிய புதன் தசையில் புதன் புக்தி 20-1-2025 வரை நடப்பதாலும் சிறுசிறு உடல் உபாதைகள் ஏற்பட்டபடி இருக்கும். 2025 தொடக்கத்தில் ஜென்மச்சனி முடியும் தருவாயில் சுயபுக்தியும் முடியும் என்பதால் வாழ்வில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். 6-ஆம் பாவத்தில் இருக்கக்கூடிய தசை நடப்ப தால் சொந்தத்தொழில் செய்வதைவிட கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது நல்லது. நான்காம் அதிபதி சுக்கிரன் 5-ல் இருப்பதால் கண்டிப்பாக சொந்த வீடு அமையும் அதிர்ஷ்டங்கள் உங்களுக்கு உண்டு. புதன் தசை சுக்கிர புக்தியில் நல்லது நடக்கும்.

ப் கேள்வி: என் தந்தை சமீபத்தில் இறந்துவிட்டார். தாயின் உடல்நிலையும் கவலைகிடமாக உள்ளது. என் ஜாதகப்படி அவர் பிழைப்பாரா என்று கூறுங்கள்? -கல்பனா, சிதம்பரம்.

பதில்: ஆயில்ய நட்சத்திரம், கடக ராசி, மகர லக்னத்தில் பிறந்த உங்களுக்கு தந்தைக்காரகன் சூரியன் ராகு நட்சத்திரத் தில் அமையப் பெற்றது சாதகமற்ற அமைப்பாகும். நான்காம் அதிபதி செவ்வாய் 4-ல் ஆட்சி பெற்று, தாய் காரகன் சந்திரன் 7-ல் ஆட்சி பெற்றிருப் பது தாய்க்கு உங்கள் ஜாதக ரீதியாக சாதகமான அமைப்புதான். இறை வழிபாடு மேற்கொள்ளவும். ஆரோக்கியம் முன்னேற்றம் ஏற்படும். தாயின் ஜாதகம் பலவீனமாக இருந்தால் அதை பொறுத்து பலன்கள் மாறுபடலாம். உங்கள் ஜாதகரீதியாக தாய்க்கு சிறப்பாக இருக்கிறது.

ப் கேள்வி: திருமணத்திற்கு பெண் சொந்தத்தில் அமையுமா? இல்லை அந்நியத்தில் அமையுமா என்று கூறுங்கள்? -அண்ணாமலை, புதுக்கோட்டை.

பதில்: அவிட்ட நட்சத்திரம், மகர ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்த ஜாத கருக்கு 7.-ஆம் அதிபதி சுக்கிரன் 11-ல் நீச்சம் பெற்றா லும் உடன் புதன் அமையப் பெற்று நீசபங்க ராஜயோகம் ஏற்பட்டிருப்பது சிறப்பான அமைப்பு. புதன் ஆட்சி, உச்சம் பெற்றதாலும் சூரியன் 10-ல் ஆட்சிபெற்று திக்பலம் பெற்றிருப்ப தாலும் உறவு, தூரத்து உறவில் நல்ல வரன் அமையக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்கள் உண்டு. தற்போது ராகு தசை 5-3-2024 முடிய நடப்பதால் உறவினர்களிடம் மனஸ்தாபங்கள் இருந்தாலும் அடுத்து வரக்கூடிய குரு மகா தசையில் உறவினர்களிடம் சுமூகமான சூழ்நிலை உண்டாகும். மண வாழ்வில் சிறப்பான நிலை உண்டாகும்.

ப் கேள்வி: அரசு உத்தியோகம் கிடைக்குமா, திருமணம் எப்போது நடக்கும் என்று கூறுங்கள்? -சங்கர், பெங்களூர்

பதில்: மக நட்சத்திரம், சிம்ம ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 10-ஆம் அதிபதி சூரியன் லக்னத்தில் அமையப்பெற்று தற்போது சூரிய மகா தசையில் சனி புக்தி 1-10-2023 முடிய நடக்கிறது. அடுத்து வரக்கூடிய புதன் புக்தி காலத்தில் அரசு, அரசு உதவி பெறக்கூடிய இடங்களில் ஒரு நல்ல வேலை வாய்ப்பு அமையும். ஏழாம் அதிபதி சுக்கிரன், 11-ல் நீச்சம் பெற்றாலும் சுக்கிரன்- புதன் பரிவர்த்தனை பெற்றதும் களத்திர காரகன் செவ்வாய் உச்சம் பெற்றதும் நல்ல அமைப்பாகும். புதன் புக்தி காலத்தில் ஒரு நல்ல வேலை, சிறப்பான திருமண வாழ்க்கை அமைய வாய்ப்புண்டு. குரு- சனி வக்ரகதியில் இருப்பதால் தாமதிக்காமல் திருமணத்திற்கு முயற்சிசெய்வது நல்லது. நான்கு கிரகங்கள் பரிவர்த்தனை பெற்ற ஜாதகம் என்ற காரணத்தினால் ஒரு இடமாற்றத் தின் மூலமாக வளர்ச்சி அடையக்கூடிய ஒரு அதிர்ஷ்டங் கள் உண்டு. 2024 தொடக்கத்தில் நல்லது நடக்கும்.

ப் கேள்வி: கணவன்- மனைவிக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு பிரிந்திருக்கிறார்கள். இருவரும் சேர வாய்ப்பு இருக்கிறதா? இப்போது என்ன தசை என்ன புக்தி நடக்கிறது என்று கூறுங்கள்?

பதில்: பூச நட்சத்திரம், கடக ராசி, தனுசு லக்னத்தில் பிறந்த ஜாதகருக்கு ஜென்ம லக்னத்திற்கு 7-ஆம் அதிபதி புதன் வக்ரம் பெற்றிருப்பதும், 2-ஆம் அதிபதி சனி வக்ரம் பெற்றிருப்பதும் களத்திரன் சுக்கிரன் வக்ரம் பெற்று ராகு சேர்க்கைப் பெற்றிருப்பதும் நல்ல அமைப்பு இல்லை, களத்திரக்காரகன் அல்லது ஏழாம் அதிபதி ராகு சேர்க்கைப் பெற்று ராகு தசை, புக்தி நடைபெற்றால் அக்காலத்தில் இல்லற வாழ்வில் ஒற்றுமை குறைவு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. ராகு- சுக்கிரன் ராசி மற்றும் நவாம்சத்தில் இணைந்து இருப்பதால் தேவையற்ற பிரச்சினைகள் உண்டாகிறது. 2025 மார்ச்சில் ராகு புக்தி முடிந்து குரு புக்தி ஆரம்பிக்கின்றபொழுது தற்போது இருக்கக்கூடிய சிக்கல்கள் குறையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. 3 கிரகங்கள் வக்ரம் பெற்றிருப்ப தால் மண வாழ் வில் விட்டுக் கொடுத்து சென்றால்தான் வாழ்வில் ஏற்படும் நெருக் கடிகளை சமாளிக்க முடி யும். குலதெய்வ வழிபாடு செய்யவும்.

ப் கேள்வி: என் மகளுக்கு திருமணம் எப்போது நடக்கும்? தனியார் வேலை, அரசு உத்தியோகம் அல்லது வெளிநாட்டு வேலை இதில் எது அமையும் என்று கூறுங்கள்? -ரவி, கோவை

பதில்: உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்த உங்கள் மகளுக்கு 14-6-2023 முதல் கேது தசை நடக்கிறது. ஏழாம் அதிபதி சனி 6-ல் இருப்பதால் சொந்தமில்லாமல் அந்நியத்தில் திருமணம் முயற்சிகள் மேற்கொண்டால் கேது தசையில் 10-11-2023 முதல் நடக்க இருக்கக்கூடிய சுக்கிர புக்தியில் திருமணம் அமைய வாய்ப்புண்டு. ஜென்ம லக்ன ராசிக்கு 2 அல்லது 7-ல் கேது இருந்தால்தான் திருமணம் அமைய இடையூறுகள் ஏற்படும். கேது 10-ல் இருப்பதால் சொந்தமில்லாமல் அந்நியத்தில் முயற்சிப்பது நல்லது. உங்கள் மகள் ஜாதகத்தில் 10-ஆம் அதிபதி சுக்கிரன் 12-ஆம் அதிபதி சந்திரன் சேர்க்கைப்பெற்று இருப்பதால் வெளியூர், வெளிநாடு தொடர்புடைய பணிகள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தற்போது நடைபெறுவது கேது தசை என்ற காரணத்தினால் கிடைக்கும் வாய்ப்புகளை தற்போதைக்கு பயன்படுத்திக் கொண்டால் எதிர்கால வாழ்க்கை சிறப்பாக இருக்கும். செவ்வாய் வக்ரகதியில் இருப்பதால் தற்போது திருமண முயற்சிகள் மேற்கொண்டு திருமணத்தை முடித்துக்கொள்வது நல்லது. ஏழாம் அதிபதி சனி என்பதாலும் செவ்வாய்- ராகு சாரம் பெற்றிருப்பதாலும் சொந்தத்தைவிட அன்னியத்தில் வேற்று ஜாதியாக இருந்தாலும் பரவாயில்லை. திருமணத்தை முடித்துக்கொள்வது தற்போதைக்கு சிறப்பு. எதிர்காலத்தில் சுக்கிர மகா தசை வருகின்றபொழுது வாழ்க்கை நிலை மிகச்சிறப்பாக இருக்கும்.