ப் கேள்வி: மருத்துவக்கல்வி படிக்க முடியுமா? உள் நாட்டிலா அல்லது வெளி நாட்டிலா என்று கூறுங்கள்? -எழிலரசி மாசிலாமணி.

பதில்: பரணி நட்சத்திரம், மேஷ ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்த ஜாதகிக்கு 4-ஆம் அதிபதி செவ்வாய் 8-ல் மறைந்து இருந்தாலும் குருபார்வையுடன் இருப்பது நல்லது. சூரியன்- புதன் இணைந்து நான்காம் வீட்டை பார்ப் பதால் மருந்து, மருந்து தொடர் பான கல்விக் கான யோகங் கள் உண்டு. சூரியன்- செவ் வாய் இணைந்து நான்காம் வீட்டி லிருந்து அல்லது 10-ல் வலுவாக இருந்தால்தான் மருத்துவத்தில் எளிதில் வாய்ப்புகள் கிடைக்கும். செவ்வாய் 8-ல் இருப்பதால் எதிர்நீச்சல் போட்டுதான் அனுகூலங்கள் அடைய வேண்டிய நிலை இருக்கும். சிம்ம லக்னத்தில் பிறந்த ஜாதகிக்கு 12-ஆம் அதிபதி சந்திரன் 9-ல் இருந்து 9-1-2023 முதல் சந்திர தசை நடப்பதால் வெளிநாடு, வெளிமாநிலங்களில் நல்ல வாய்ப்பு கிடைப்பதற்கான யோகங்கள் உண்டு. பிறந்த ஊரைவிட படிப்புக்காக வெளியூர் செல்லக்கூடிய வாய்ப்புகள் ஏற்பட லாம். முயற்சிக்கவும்; நல்லது நடக்கும்.

aa

Advertisment

ப் கேள்வி: எனக்கு எப்போது திருமணம் நடக்கும் என்று கூறுங்கள்? -தர்மராஜ், திருச்சி, உறையூர்.

பதில்: பூரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, கன்னி லக்னத்தில் பிறந்த உங்களுக்கு களத்திர காரகன் சுக்கிரன்- கேது நட்சத்திரத்திரமான மகத்தில் இருப்பதும், ஏழாம் அதிபதி வக்ரம் பெற்றிருப்பதும், சூரியன்- ராகு சேர்க்கைப் பெற்று கிரகணம் மாதத்தில் பிறந்திருப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் திருமணம் நடைபெற இடையூறுகள் ஏற்படுகிறது. 7-ஆம் அதிபதி குரு சனி சாரம் பெற்ற காரணத் தால் உறவு இல்லாமல் அந் நியத்தில் பார்ப் பது, வேற்று ஜாதி பெண்ணை திருமணத்திற்காக பார்ப்பது நற்பலன் தருவதற்கான வாய்ப்புகள் உண்டு. தற்போது கேது தசையில் ராகு புக்தி 10-7-2023 முதல் நடப்பதால், 2024 ஜூலைக்குப்பிறகு குரு புக்தி நடக்கின்றபொழுது நல்ல வாய்ப்புகள் உண்டு. குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளவும்.

ப் கேள்வி: எந்த வேலையிலும் 2 மாதங் களுக்குமேல் பணிபுரிய முடியவில்லை. என்ன செய்வதென்று கூறுங்கள்? -ஜோதி, சேலம்.

Advertisment

பதில்: அவிட்ட நட்சத்திரம், கும்ப ராசி, துலா லக்னத்தில் பிறந்த உங்களுக்கு குரு- சனி வக்ரம் பெற்றிருப்பதாலும், பிறக்கின்றபோதே சூரியன் நீசம்பெற்று ராகு நட்சத்திரத்தில் இருப்பதும் நல்ல அமைப்பு அல்ல. எதிர்நீச்சல் போடவேண்டிய ஜாதகம் ஆகும். கடந்த மூன்று வருடங்களாக உங்களுக்கு ஏழரைச்சனி நடப்பதும் அவ்வளவு நல்ல அமைப்பு இல்லை. கடந்த காலங்களில் உங்களுக்கு வக்ரம்பெற்ற குரு தசை, வக்ரம்பெற்ற சனி தசை நடத்தும் சாதகமற்ற அமைப்பு ஆகும். தற்போது புதன் தசையில் சுக்கிர புக்தி 11-10-2025 முடிய நடப்பதால் ஒரு சில நல்ல வாய்ப் புகள் கிடைக் கும். ஏழரைச் சனி நடப்பதா லும் தசை புக்தி சாதகமாக இருப்பதால் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்வது நல்லது. சனிக்கு பரிகாரமாக ஆஞ்சனேயர் வழிபாடு, விநாயகர் வழிபாடு, உடல் ஊனமுற்ற வர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது சிறப்பு.

ப் கேள்வி: இவருக்கு எப்போது நிரந்திர வேலை கிடைக்கும், திருமணம் எப்போது நடக்கும் என்று கூறுங்கள்?

பதில்: பூரட்டாதி நட்சத்திரம், கும்ப ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 10-ஆம் அதிபதி சூரியன் லக்னத்தில் இருந்தா லும் பாவக ரீதியாக 12-ல் இருக்கிறது. இதனால் வெளியூர்மூலமாக ஒருசில அனுகூலங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தற்போது ஜென்ம லக்னத் தில் அமையப்பெற்ற புதன் தசையில் சனி சந்திர புக்தி 21-8-2024 முடிய நடப்பதால் நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. ஜாதகருக்கு ஏழரைச் சனியில் ஜென்மச்சனி நடப்பதால் தற்போது கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டால் 2025 மே மாதத்திற்கு பிறகு ஒரு நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். விருச்சிக லக்னத்தில் பிறந்த ஜாத கருக்கு 7-ஆம் அதிபதி சுக்கிரன் 11-ல் நீசம் பெற்று நவாம்சத்தில் ஆட்சிபெற்றதால் நீசபங்க ராஜயோகம் பெற்றுள்ளதால் திருமண விஷயங்களில் தடைக்குப்பிறகு அனுகூலங்களை ஏற்படுத்தக் கூடிய அமைப்பாகும். 2-ல் ராகு இருப்பதும், பாவகரீதியாக 2-ல் சனி அமைந்திருப்பதும் சாதகமற்ற அமைப்பு என்ற காரணத்தால் அமையும் வாழ்க்கையில் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. தற்போது சந்திர புக்தி நடப்பதால் நல்ல வாய்ப்புகள் கிடைக் கும். தற்போது கோட்சாரத்தில் ஜென்ம ராசிக்கு 3-ல் உள்ள குரு ஏழாம் வீட்டை பார்ப்பதால் இந்த ஆண்டு இறுதிக்குள் நல்ல வாழ்க்கை அமைந்தாலும் இரண்டாம் பாகம் பாதிக்கப்பட்டு இருப்ப தால் பேச்சில் பொறுமையோடு இருந்து விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. ஏழரைச்சனி நடப்பதால் சனிக்கு பரிகாரம் மேற்கொள்வது நல்லது.

ப் கேள்வி: இந்த ஜாதகத்திலுள்ள தோஷங்கள் அதற்கான பரிகாரங்கள் என்ன என்று கூறுங்கள்? -ரமணி அய்யர், தொப்பூர்.

பதில்: பூச நட்சத்திரம், கடக ராசி, கடக லக்னத்தில் பிறந்த ஜாதகிக்கு சனி, சந்திரன், சுக்கிரன் ஆட்சிபெற்று இருப்பதும், செவ்வாய்- சூரியன் உச்சம் பெற்றிருப்பதும் மிகச் சிறப்பான அமைப்பாகும். குரு நீசம் பெற்றாலும் உடன் சனியும் செவ்வாயும் இருந்து நீசபங்க ராஜயோகம் பெற்றிருப்பதும் உன்னதமான அமைப்பாகும். எதிர்காலத்தில் சிறப்பான வாழ்க்கை உண்டாகும். நன்றாக இருக்கக்கூடிய ஜாதகத்துக்கு நீங்களே தோஷம் பரிகாரம் என்று மனதை அலைபாய விடாமல் தேவை யற்ற கருத்து களை கேட்டு குழப்பிக் கொள் ளாமல் இருக்க வும். இஷ்ட தெய்வத்தை வழிபடுவது, குலதெய்வ வழிபாடு மேற் கொள்வது வளமான வாழ்க்கையை தரும்.

ப் கேள்வி: எப்போது நல்ல காலம் பிறக்கும் என்று கூறுங்கள் ஐயா? -பாலமுருகன், தூத்துக்குடி

பதில்: சதய நட்சத்திரம், கும்ப ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்த உங்களுக்கு தற்போது 28-1-2028 முடிய சனி மகா தசை நடக்கிறது. ரிஷப லக்னத்தில் பிறந்த உங்களுக்கு துர்ஸ்தானம் மறைவு ஸ்தானம் என வர்ணிக்கப்படக்கூடிய 8-ல் சனி அமையப்பெற்று தசை நடப்பதால் எதிர் நீச்சல் போடவேண்டியது இருக்கும். சனி தர்மகர்மாதிபதி என்றாலும் எட்டில் இருப்பதாலும் 3-ஆவது தசையாக சனி தசை நடப்பதாலும் உழைப்புக்கான பலனை அடைய இடையூறுகள் ஏற்படும். 8-ல் இருக் கக்கூடிய சனி தசை நடப்பது மட்டுமில்லாமல் தற்போது ஏழரைச்சனியும் இணைந்து நடப்பதால் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படுகிறது. 2025 மார்ச் மாதத்தில் திருக்கணிதப் படி ஜென்மச்சனி முடிகின்றபொழுது வாழ்வில் ஒரு நல்ல மாற்றங்கள் ஏற்படும். தற்போது நடக்கக்கூடிய சனி தசையைவிட சதயத்தில் பிறந்த உங்களுக்கு அடுத்துவரும் புதன் தசை யில் ஒரு சிறப்பான ஒரு காலமாக இருக்கும்.

ப் கேள்வி: தற்போது சனி தசையில் சுயபுக்தி நடக்கிறது. குடும்பம், தொழில், பூர்வீகச் சொத்து பற்றி சொல்லவும்? -கணேசமூர்த்தி, ராமநாதபுரம்.

பதில்: உத்திராட நட்சத்திரம், மகர ராசி, கடக லக்னத்தில் பிறந் தவர்களுக்கு தற்போது 17-6-2024 முடிய சனி தசையில் சுய புக்தி நடக்கிறது. கடந்த காலங்களில் உங்களுக்கு நடைபெற்ற வக்ர குரு தசைவிட தற்போது நடைபெறும் சனி மகா தசை சுய புக்திக்கு பிறகு வாழ்வில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். சனி 9-ல் இருந்தாலும் பாவ ரீதியாக 8-ல் இருப்பதால் சொந்த தொழில் செய்வதை விட கிடைக்கும் வாய்ப்பு களை பயன்படுத் திக் கொள்வது நல்லது. ஏழரைச் சனியும் சனி தசை சுய புக்தி யும் நடப்பதால் இரண்டு வருடங் களுக்கு நிதானத் தோடு இருக்க வும். 5-ஆம் அதி பதி செவ்வாய்- கேது சேர்க்கைப் பெற்று இருப்பதால் பூர்வீகச் சொத்து வகையில் தேவையற்ற கருத்து வேறுபாடு கள், கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது நல்லது.