கேள்வி: எனக்கு இரண்டாவது திருமணம் எப்போது நடக்கும் என்று கூறுங்கள்?

பதில்: மூல நட்சத்திரம், தனுசு ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்த உங்களுக்கு சுக்கிரன் உச்சம் பெற்றிருப்பதால் திருமண வாழ்க்கைரீதியாக அனுகூலங்கள் அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. 7-ஆம் அதிபதி செவ்வாய் 11-ஆம் அதிபதி குரு சேர்க்கைப்பெற்று 11-ல் இருப்பதால் இரண்டாவது திருமணத்திற்கான வாய்ப்புகள் உண்டு. உங்களுக்கு கேது நட்சத்திரத்தில் அமையப்பெற்ற சந்திர தசையில் நடப்பதால் தற்போது சில இடர்பாடுகள் ஏற்பட்டுள்ளது. வரும் 23-8-2023 முதல் சந்திர தசையில் சுக்கிர புத்தி நடைபெறுவதால் மறுமணத்திற்கான முயற்சிகள் மேற்கொண்டால் நல்லது நடக்கும். தற்போது நடைபெறும் சந்திர தசைவிட அடுத்து வரக்கூடிய செவ்வாய் தசையில் இல்லற வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

aa

கேள்வி: என் மகள் ஒ.ஆ.ந. தேர்வில் தேர்ச்சி பெறுவாரா, அரசு வேலை கிடைக்குமா, திருமணம் எப்போது நடைபெறும் என்று கூறுங்கள்? -பாலசுப்ரமணியன்

பதில்: திருவோண நட்சத்திரம், மகர ராசி, மகர லக்னத்தில் பிறந்த உங்கள் மகளுக்கு குரு சனி வக்ரகதியில் இருக்கிறது. சூரியன் நீசம்பெற்று உள்ளது. இதுபோல அமைப்பு வாழ்வில் எதிர்நீச்சல் போடவேண்டிய ஜாதகம் ஆகும். நிலையான வேலை அமைய இடையூறுகள் ஏற்படும். சிலகாலம் தற்காலிக பணியில் இருந்து அதன்பிறகு ஒரு நல்ல நிலை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. போட்டி தேர்வுகளில் பங்கு பெறவும்.

அரசு, அரசு சார்ந்த துறையில் ஒரு நல்ல வாய்ப்பு. வாய்ப்புக்கு முயற்சித்தால் முதலில் தற்காலிக பணிகள் கிடைத்து சிறிது காலம் கழித்து நல்ல நிலை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. களத்திர ஸ்தானமான 7-ல் ராகு இருப்பதும் களத்திர காரகன் செவ்வாய்- கேது சாரம் பெற்று இருப்பதும், தற்போது 23-11-2026 முடிய ராகு தசை நடப்பதும், அடுத்து வரக்கூடிய குரு மகா தசையும் குரு கேது சாரம் பெற்று இருப்பதும் இல்லற வாழ்க்கைக்கு சாதகமான அமைப்பு என கூறமுடியாது. திருமண வாழ்வில் விட்டுக்கொடுத்து சென்றால் மட்டுமே வாழ்க்கை நன்றாக இருக்கும். விரைவில் திருமணம்செய்து கொண்டாலும் 2026 வரை 7-ல் உள்ள ராகு தசை நடப்பதால் இல்லற வாழ்வில் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும்.

கேள்வி: என் மகனின் நேரம் எப்படியிருக்கிறது, அவருக்கு வேலையில் ஏதாவது பிரச்சினை வருமா

பதில்: ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி, மேஷ லக்னத்தில் பிறந்த உங்கள் மகனுக்கு தற்போது குரு மகா தசையில் செவ்வாய் புக்தி 12-2-2024 முடிய நடக்கிறது. குரு, சனி வக்ரகதியில் இருக்கும்போது பிறந்ததால் செய்யக்கூடிய பணிகளின் எதிர்நீச்சல்போட வேண்டிய நிலை இருக்கும். சந்திரனுக்கு 10-ஆம் வீட்டில் சூரியன், செவ்வாய் இருப்பதால் நல்ல நிர்வாக திறன், நல்ல பதவி வகிக்கக்கூடிய யோகங்கள் உண்டு. தற்போது கோட்சார கிரகநிலை சரியில்லாத காரணத்தினால் வேலையில் சில இடர்பாடுகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதி இல்லை. குரு தசை யில் குருவுக்கு 8-ல் இருக்கக் கூடிய செவ் வாய் புக்தி தற்போது நடப்பதாலும், அடுத்து சூரி யன் வீட்டில் இருக்கக்கூடிய ராகு புக்தி நடத்த இருப்பதாலும் வேலையில் நெருக்கடியில் இருக்கும் அனைத்தையும் சமாளிக்கக்கூடிய பலம் கிடைக்கும். தற்போது கிடைக்கும் வாய்ப்புகளை தக்கமுறையில் பயன்படுத்திக் கொண்டு வேலையில் உடன் இருப்பவர்களை அனுசரித்துசென்றால் அனைத்தையும் சமாளித்துவிடலாம். பிறரை நம்பி பணம் கொடுக்காமல் இருப்பது மிகமிக நல்லது. ஆஞ்சனேய வழிபாடு, விநாயகர் வழிபாடு மேற்கொள்ளவும்; நல்லது நடக்கும்.

கேள்வி: என் மகளுக்கு திருமணம் எப்போது நடக்கும் என்று கூறுங்கள்? -சங்கர், பெங்களூர்

பதில்: ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி, கும்ப லக்னத்தில் பிறந்த உங்கள் மகளுக்கு 2-ல் சனி கேது, எட்டில் சூரியன் ராகு இருப்பது கடுமையான தோஷமாகும். களத்திர காரகன் செவ்வாய் கடகத்தில் நீசம் பெற்றாலும் நவாம்சத்தில் உச்சம்பெற்று இருப்பது சாதகமான அமைப்பாகும். உங்கள் மகளுக்கு ஒரு சாதகமான அமைப்பு என்னவென்றால் ராகு தசை முடிந்து 7-8-2022 முதல் குரு தசை தொடங்கிவிட்டதுதான். தற்போது குரு தசை நடப்பதால் விரைவில் நல்லது நடக்கும். திருமணம் நடைபெற்ற பிறகு கணவர் வழி உறவினர் கள் உடன் இருப்பவர் களிடம் பேசு கின்றபொழுது சற்று பொறுமை யோடு இருந் தால் இல்லற வாழ்க்கை இனிமையாக அமையும். குறிப்பாக 2-ல் பாவ கிரகம் இருப்பது 7-க்கு 2-ஆம் இடமான 8-ல் பாவ கிரகம் இருப்பது சாதகமற்ற அமைப்பாகும். இதனால் உடன் இருப்பவர்களை அனுசரித்துச்செல்வது, திருமணம் நடைபெற்ற பிறகு கணவர்வழி உறவினரிடம் பேசுகின்றபோது சற்று பொறுமையோடு இருப்பது நல்லது.

கேள்வி: என் திருமணம் எப்போது நடக்கும் என்று கூறுங்கள்? -லட்சுமி நாராயணன், சென்னை.

பதில்: அவிட்ட நட்சத்திரம், கும்ப ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்த உங்கள் மகனுக்கு 7-ல் சனி ஆட்சிபெற்று இருப்பது நல்ல அமைப்பாகும். சுக்கிரன் 9-ல் இருந்தாலும் கேது நட்சத் திரத்தில் அமை யப்பெற்று கேது சேர்க்கைப் பெற்று இருப் பது சற்று சாதக மற்ற அமைப் பாகும். தற்போது குரு தசையில் சுக்கிர புத்தி 8-9-2025 முடிய நடப்பதால் திருமணம் முயற்சிகள் மேற்கொண்டால் இந்த ஆண்டிலே நல்லது நடக்கக்கூடிய வாய்ப்பு கள் உண்டு. சுக்கிரன் கேது சாரம் பெற்று இருப்பதால் உறவில்லாமல் அந்நியத்தில் முயற்சிக்கவும்; நல்லது நடக்கும். குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது மிகவும் சிறப்பு.

கேள்வி: என் திருமணம் எப்போது நடக்கும்? பெண் சொந்தமா அல்லது அசலா என்று கூறுங்கள்? -கார்த்திகேயன், திருநெல்வே-

பதில்: அஸ்த நட்சத்திரம், கன்னி ராசி, மீன லக்னத்தில் பிறந்த உங்கள் மகனுக்கு 7-ஆம் அதிபதி புதன் 8-ல் ராகு சாரம் பெற்று உள்ளார். களத்திரகாரகன் சுக்கிரன் பாக்கிய ஸ்தனமான 9-ல் இருப்பது சிறப் பான அமைப்பாகும். குரு வக்ரகதியில் இருப்பதால் சொந்தத்தில் அமைவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. குறிப்பாக குரு வக்ரம் பெற்றால் பாரம் பரியத்தை கடைபிடிக்க முடியாது. உறவில் அமை வது சற்று கடினம். ஏழாம் அதிபதி புதன் ராகு சாரம் பெற்று இருப்பதால் அண்ணி யத்தில் பார்ப்பது மிகவும் சிறப்பு. தற்போது சனி புக்தி நடந்தாலும் சனி புதன் சாரம் பெற்று இருப்பதால் திருமணம் முயற்சிகள் மேற்கொண்டால் விரைவில் நல்லது நடக்கும். ஜெனன காலத்தில் குரு வக்ரகதியில் இருப்பதால் ஆவணி மாதத்திற்குப் பிறகு குரு வக்ரம் பெறும் காலத்தில் திருமணம் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உண்டு.

கேள்வி: எனக்கு எப்போது திருமணம் நடைபெறும் என்று கூறுங்கள்? -மூர்த்தி, திருச்சி.

பதில்: மிருகசீரிஷ நட்சத்திரம், மிதுன ராசி, தனுசு லக்னத்தில் பிறந்த உங்கள் மகனுக்கு ராகு- கேது பிடிக்குள் அனைத்து கிரகமும் அமையப்பெற்று சூரியன் வீட்டில் சனி, ராகு இருப்பது பிதுர்வழி தோஷத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். ஜாதகத்தில் 7-ஆம் அதிபதி புதன் களத்திரகாரகன் சுக்கிரன் பரிவர்த்தனை பெற்றி இருப்பதால் திருமண யோகம் இருந்தாலும் பிதுர் வழி தோஷத்தால் தடைப்படுகிறது. குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளவும். 1-4-2024 முதல் சனி தசையில் சுக்கிர புக்தி நடக்கும்பொழுது வேற்று ஜாதி பெண்ணை திருமணத்திற்காக முயற்சித்தால் இறையருளால் நல்லது நடக்க வாய்ப்பு உண்டு.

கேள்வி: கடந்த 4 வருடங் களாக எல்லா பரிகாரமும் செய்து முடிக்கப்பட்டு விட்டது. ஆனா லும் திருமணம் நடைபெறவில்லை. எப்போது திருமணம் நடைபெறும் என்று கூறுங்கள்? -சேகர், காஞ்சிபுரம்

பதில்: அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்த உங்களுக்கு லக்னமும் ஜென்ம நட்சத்திரமும் கேது நட்சத்திரத்தில் அமைந்தது அவ்வளவு சாதகமான அமைப்பு அல்ல. 7-ஆம் அதிபதி சனி 12-ல் மறைந்ததும் சாதகமற்ற அமைப்பாகும். 7-ஆம் அதிபதி சனி என்பதாலும், குரு ராகு சாரம் பெற்று இருப்பதாலும் வேற்று ஜாதிப் பெண்ணை திருமணத் திற்காக முயற்சித்தால் அணு கூலங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. தற்போது செவ்வாய் தசை யில் சுக்கிர புக்தி 16-8-2023 முடிய நடப்பதால் குலதெய்வ வழி பாடு மேற் கொள்ள வும் நல்லது நடக் கும்.