எனது மகனுக்கு 2-ஆவது திருமணம் நடைபெறுமா? எப்போது நடைபெறும்? -மகாதேவன், தொப்பூர்.
பதில்: சுவாதி நட்சத்திரம், துலா ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்த உங்கள் மகனுக்கு சுக்கிரன் ஆட்சி பெற்றிருப் பது நல்ல அமைப்பு என்றாலும் உடன் சந்திரன் இருப்பது ஒருசில தடைக்குப் பிறகு அனுகூலத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். உங்கள் மகன் ஜாதகத்தில் 7-ஆமதிபதி செவ்வாய் 4-ல் அமையப்பெற்று 4-ஆம் அதிபதி சூரியன் 7-ல் அமையப்பெற்று 4, 7 பரிவர்த்தனை பெற்றபோது பிறந்திருக் கிறார். 7-ஆமதிபதி பரிவர்த்தனை பெற்றிருக்கின்றபொழுது பிறப்பவர்கள் பெரும்பாலும் திருமண வாழ்வில் ஒரு தடை ஏற்பட்டு அதன்பிறகு நல்லது நடக்க வாய்ப்பு உண்டு. தற்போது குரு தசையில் ராகு புக்தி 12-7-2025 முடிய நடக்கிறது. அடுத்த வருடம் மே மாதத்திற்குபிறகு ஜென்ம ராசிக்கு 9-ஆம் வீட்டில் குரு சஞ்சரிக்கின்றபொழுது சனி தசையில் சுயபுக்தி நடக்கும். அந்த தருணத்தில் நல்ல வாழ்க்கை அமையக்கூடிய வாய்ப
எனது மகனுக்கு 2-ஆவது திருமணம் நடைபெறுமா? எப்போது நடைபெறும்? -மகாதேவன், தொப்பூர்.
பதில்: சுவாதி நட்சத்திரம், துலா ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்த உங்கள் மகனுக்கு சுக்கிரன் ஆட்சி பெற்றிருப் பது நல்ல அமைப்பு என்றாலும் உடன் சந்திரன் இருப்பது ஒருசில தடைக்குப் பிறகு அனுகூலத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். உங்கள் மகன் ஜாதகத்தில் 7-ஆமதிபதி செவ்வாய் 4-ல் அமையப்பெற்று 4-ஆம் அதிபதி சூரியன் 7-ல் அமையப்பெற்று 4, 7 பரிவர்த்தனை பெற்றபோது பிறந்திருக் கிறார். 7-ஆமதிபதி பரிவர்த்தனை பெற்றிருக்கின்றபொழுது பிறப்பவர்கள் பெரும்பாலும் திருமண வாழ்வில் ஒரு தடை ஏற்பட்டு அதன்பிறகு நல்லது நடக்க வாய்ப்பு உண்டு. தற்போது குரு தசையில் ராகு புக்தி 12-7-2025 முடிய நடக்கிறது. அடுத்த வருடம் மே மாதத்திற்குபிறகு ஜென்ம ராசிக்கு 9-ஆம் வீட்டில் குரு சஞ்சரிக்கின்றபொழுது சனி தசையில் சுயபுக்தி நடக்கும். அந்த தருணத்தில் நல்ல வாழ்க்கை அமையக்கூடிய வாய்ப்புகள் உண்டு.
எனது பேத்திக்கு அடிக்கடி ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படுகிறது. ஜாதகத்தில் தோஷம் உள்ளதா? அவள் நன்றாக படிப்பாளா? தோஷம் ஏதாவது இருப்பின் பரிகாரம் கூறவும்? -வைத்தியநாதன், கடலூர்.
பதில்: திருவோண நட்சத்திரம், மகர ராசி, மீன லக்னத்தில் பிறந்த உங்கள் பேத்தியின் ஜாதகத்தில் சூரியன், சுக்கிரன், சனி, குரு போன்ற கிரகங்கள் வலுவாக இருப்பது நல்ல அமைப்பா கும். திருவோணத்தில் பிறந்த பெண்ணுக்கு தற்போது ஏழரைச் சனி நடப்பதால் சிறு சிறு உடல் உபாதை கள் ஏற்படுகிறது. கெடுதி கிடையாது. ஜாதகத்தில் சூரியன்- ராகு சேர்க்கைப் பெற்றிருப்பது தந்தைவழி உறவினர் வகையில் ஒரு நிம்மதி குறைவை ஏற்படுத் தும் அமைப்பாகும். ஜாதகத்தில் புதன்- செவ்வாய் பரிவர்த்தனை பெற்றிருப்பதால் தாய்- தந்தையருக்கு ஒரு இட மாற்றத்திற்கு பிறகு நல்லது நடக்க வாய்ப்புண்டு. மகர ராசியில் பிறந்த குழந்தைக்கு 29-3-2025-ல் ஏழரைச்சனி முடிகின்றபொழுது நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கு. நன்றாக படிப்பார். சூரியன்- ராகு சேர்க்கைப் பெற்றிருப்பதால் அம்மன் வழிபாடு மேற்கொள்வது, குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது, பூர்வீகத்தைவிட வேற்றிடங்களில் இடமாறி இருப்பது நன்மை தரும்.
எனக்கு திருமண யோகம் உள்ளதா என்று கூறுங்கள்? -சந்தானகிருஷ்ணன், திருச்சி.
பதில்: உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, மகர லக்னத்தில் பிறந்த உங்களுக்கு லக்னத்திற்கு 7-ஆம் அதிபதி சந்திரன் 3-ல் குரு வீட்டில் இருப்பது நல்ல அமைப்பு என்றா லும் களத்திரகார கன் சுக்கிரன் ஆட்சி பெற்றாலும் ராசி நவாம்சத்தில் சூரியன்- சுக்கிரன் சேர்க்கை பெற்றிருப்பது அஸ்தங்க தோஷமாகும். சூரியனுக்கு மிக அருகில் சுக்கிரன் இருக்கின்றபொழுது ஒரு நல்ல வாழ்க்கை அமைய இடையூறுகள் ஏற்படுகிறது. சுக்கிரன் ராகு சாரம் பெற்று ராகு சேர்க்கைப் பெற்றிருப்பதால் சொந்தமில்லாமல் அந்நியத்தில் திருமண முயற்சிகள் மேற்கொண்டு விட்டுக்கொடுத்து சென்றால் வாழ்க்கை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
திருமணம் எப்போது நடைபெறும் என்று கூறுங்கள்? -சுரேஷ், சுரண்டை.
பதில்: அஸ்த நட்சத்திரம், கன்னி ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 7-ஆமதிபதி செவ்வாய் லாப ஸ்தானத்தில் இருந்து, குரு பார்வை ஏழாம் வீட்டுக்கு இருப்பது சிறப்பான அமைப்பாகும். சுக்கிரன் தன ஸ்தானமான 2-ல் இருப்பது ஏற்றமிகுந்த பலன்களைத் தரக்கூடிய அமைப்பாகும். தற்போது குரு தசையில் புதன் புக்தி நடப்பதால் விரைவில் திருமணம் கைகூடக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. பிறக் கின்றபொழுது சூரியன், புதன், கேது சேர்க்கைப் பெற்றிருப்பது பூர்வபுண்ணிய தோஷமாகும். உங்களுக்கு நல்லது நடக்க உறவினர்களே இடையூறாக இருக்கிறார்கள். உறவில்லாமல் அந்நியத்தில் வரன் பார்த்தால் இந்த ஆண்டு இறுதிக்குள் நல்லது நடக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங் களுக்கு சென்றுவருவது நன்மை தரும்.
உடல் ஆரோக்கியம் எப்படியிருக்கும்? புதன் தசை நன்மை தருமா? -விஜயசாமூண்டிஸ்வரி, ராமநாதபுரம்.
பதில்: சதய நட்சத்திரம், கும்ப ராசி, கடக லக்னத்தில் பிறந்த உங்களுக்கு ஜென்ம லக்னத்திலுள்ள புதன் தசை 27-1-2023 முதல் நடக்கிறது. உங்கள் ஜாதகத்தில் சனி பரிவர்த்தனை பெற்றிருப்பதாலும் செவ்வாய் 10-ல் ஆட்சி பெற்றிருப்பதாலும் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். லக்னத் தில் புதன்- குரு நட்சத்திரத்தில் இருப்பதால் தற்போது நடைபெறக் கூடிய புதன் தசையில் படிப் படியான வளர்ச்சிகள், நல்லமுன்னேற் றங்கள் உண்டா கும். கும்ப ராசி யில் பிறந்த உங்களுக்கு திருக்கணிதப்படி 29-3-2025-ல் ஏழரைச் சனியில் ஜென்மச்சனி முடிந்தபிறகு வாழ்வில் நல்ல முன்னேற்றங் கள் உண்டாகும். தற்போது ஏழரைச் சனி நடப்பதால் ஆஞ்சனேயர் வழிபாடு, பெருமாள் வழிபாடு மேற்கொள்வ தன் மூலம் ஒருசில வளமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு.