நான் மிகுந்த பொருளாதார நெருக்கடியி லும் கடன் பிரச்சினைகளிலும் சிக்கி தவிக்கிறேன். எனக்கு மூன்று பெண் குழந்தைகள் இருக்கி றார்கள். எனக்கு உதவிசெய்வதற்கு யாரும் இல்லை. தற்கொலை முயற்சிக்குகூட முயன்றுள்ளேன். என் கடன் பிரச்சினைகள் தீருமா? ஏதாவது உதவிகள் கிடைக்குமா? நல்ல கௌரவமான வாழ்க்கை அமையுமா? என் பிரச்சினைகள் தீர எந்த தெய்வத்தை வணங்குவது, என்ன பரிகாரம் செய்வது என்று கூறுங்கள்? -மணிவேல், விளம்பார் கிராமம்.
பதில்: மிருகசீரிஷ நட்சத்திரம், மிதுன ராசி, மகர லக்னத்தில் பிறந்த உங்களுக்கு லக்னாதிபதி சனி, சூரியனுக்கு 7-ல் அமையப்பெற்று லக்னத்திற்கு 11-ல் வக்ரகதியில் இருப்பது அவ்வளவு சிறப்பு அல்ல. தற்போது சனி தசையில் சனிக்கு 8-ல் இருக்கக்கூடிய புதன் புக்தி 11-6-2026 முடிய நடக்கிறது. இதன் காரணமாக எதிர் நீச்சல்போட வேண்டிய ஒருநிலை இருக்கிறது. சனி பாதக ஸ்தானத்தில் இருப்ப தால் சனி தசையில் நீங்கள் எதிர்பார்க்கக் கூடிய வருவாய் அடைய இடையூறுகள் ஏற்படுகிறது. சனி வக்ரகதியில் இருப்பதால் உங்கள் பெயரில் கடன் வாங்காமல் குடும்ப உறுப்பினர் கள் பெயரில் கடன் வாங்குவது நல்லது. குரு பார்வை 6, 8 ஆகிய ஸ்தானங் களுக்கு இருப்பதால் நீங்கள் வாங்கிய கடனை அடைக்கக்கூடிய சக்தி கண்டிப்பாக கிடைக்கும். மனம் தளராமல் குலத்தெய்வத்தை வழிபாடு செய்யவும். தற்போது சனி தசை நடப்பதால் பைரவர் வழிபாடு, ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.
(பெண்) நான் அரசு வேலைக்கு முயற்சி செய்துகொண்டி ருக்கின்றேன். எனக்கு அரசு வேலை கிடைக்குமா? என் குடும்ப கஷ்டம் தீருமா என்று கூறுங்கள்?
பதில்: மூல நட்சத்திரம், தனுசு ராசி, மேஷ லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 10-ஆம் அதிபதி சனி 2-ல் செவ்வாய் சேர்க்கைப் பெற்றுள்ளது. சனி- செவ்வாய் சேர்க்கை இருந்தால் உங்களது முன்கோபத்தால் தேவையில்லாத இடையூறுகள் ஏற்படும். உங்கள் ஜாதகத்தில் சூரியன் உச்சம்பெற்று சுக்கிரன் ஆட்சிபெற்று இருப்பது நல்ல அமைப்பாகும். சனி- செவ்வாய் சேர்க்கைப் பெற்றிருப்பதால் நிர்வாக சம்பந்தப்பட்ட பணிக்கான முயற்சி கள் வெற்றியைத் தரும். சூரியன் உச்சம் பெற்றிருப்பதால் அரசுவழி ஆதரவுகள் கிடைக்கும். தற்போது 8-ல் இருக்கக் கூடிய கேது புக்தி 20-12-2024 முடிய நடப்பதால் அதன்பின் வரக்கூடிய சூரிய தசையில் வாழ்வில் சில நல்ல மாற்றங் கள் ஏற்படும். விநாயகர் வழிபாடு மேற் கொள்ளவும்.
கடந்த மூன்று வருடங்களாக வருமானமில்லாமல் இருக்கிறேன். இந்த நிலைமை எப்போது மாறும் என்று கூறுங்கள்? -ஜெயகுமார், மதுரை.
பதில்: கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, தனுசு லக்னத்தில் பிறந்த உங்களுக்கு தற்போது சுக்கிர தசையில் வக்ரகதியில் இருக்கக்கூடிய புதன் புக்தி நடக்கிறது. விருச்சிக ராசியில் பிறந்த உங்களுக்கு தற்போது அர்த்தாஷ்டமச் சனி நடப்பது சுமாரான அமைப்பு என்றாலும் தற்போது குரு 7-ல் இருப்பதால் படிப்படியான வளர்ச்சிகள் உண்டு. 10-ஆம் அதிபதி வக்ரகதியில் இருப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் எதிர்நீச்சல் போட்டால்தான் வெற்றியடைய முடியும். தற்போது நடைபெறக் கூடிய புதன் புக்தி முடிந்து அடுத்து வரக்கூடிய கேது புக்தி முடிந்து அதன்பின் வரக்கூடிய சூரிய மகா தசையில் நல்ல முன்னேற்றங்கள் இருக்கும். தனுசு லக்னத் தில் பிறந்த உங்களுக்கு அடுத்து வரக்கூடிய சூரிய தசைமுதல் வாழ்வில் நல்லமுன்னேற் றங்கள் இருக்கும். புதன் புக்தி நடப்பதால் விஷ்ணு வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
எனக்கு திருமணம் எப்போது நடக்கும்? -கோபிநாத், சென்னை.
பதில்: புனர்பூச நட்சத்திரம், மிதுன ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 7-ல் சனி இருப்பதால் திருமணம் தாமதமாகிறது. தற்போது புதன் தசையில் சந்திர புக்தி நடக்கிறது. வரும் 9-12-2024 முதல் 7-ஆம் அதிபதி செவ்வாய் புக்தி நடக்கின்றபோது திருமணம் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. 7-ல் சனி இருப்பதால் உறவில்லாமல் அந்நியத்தில் வரன் பார்ப்பது மிகவும் நல்லது. குறிப்பாக சனி 7-ல் இருப்பதால் சம வயது உள்ள பெண்ணை திருமணத்திற்காக வரன் பார்ப்பதன்மூலமாக ஒரு நல்லது நடக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. குல தெய்வ வழிபாடு தொடர்ந்து மேற் கொள்ளவும்.
நான் 30 வருடமாக சுயதொழில் செய்துவந்தேன். தற்போது வேலைக்குச் செல்கிறேன். சரியான வருமானமில்லை. எனக்கு நிரந்தர தொழில் வாய்ப்பு அமையுமா? எப்போது நல்ல வருமானம் கிடைக்கும் என்று கூறுங்கள்? -கோவிந்த ராஜ், கும்பகோணம்.
பதில்: சுவாதி நட்சத்திரம், துலா ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 10-ஆம் அதிபதி சுக்கிரன், சனி வீட்டில் இருப்பது, பாவகரீதியாக 7-ல் இருப்பது சாதகமான அமைப்பு என்றாலும் 8-ல் நீசம்பெற்ற புதன் தசை கடந்த காலத்தில் நடந்ததும் தற்போது கேது தசை நடப்பதும் சொந்தத் தொழில் யோகத்தை பங்கப்படுத்தக்கூடிய அமைப்பாகும். குறிப்பாக 8-ல் நீசம் பெற்ற தசையில் தொழில் செய்தால் முன்னேற்றம் இருக்காது. தற்போது 12-ல் இருக்கக்கூடிய கேது தசை நடப்பதால் உங்களிடம் இருக்கும் பணத்தை போடாமல் கிடைக்கும் வாய்ப்புகளைத் தற்போது பயன்படுத்திக் கொள்ளவும்.
2031-ல் காலம் கடந்து வரக்கூடிய சுக்கிர தசையில் உங்களுக்கு ஒரு அனுகூலத்தை தரக்கூடிய வாய்ப்புகள் உண்டு. அவசரப் படாமல் தற்போதைக்கு கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவும். எதிர்காலத்தில் கேது தசை முடிந்து சுக்கிர தசை வருகின்றபொழுது உறவினர்கள் ஆதரவுடன் தொழிலமைப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. கேது தசை முடியும் வரை அவசரப்படாமல் இருப்பது மிக மிக நல்லது. கேது தசை நடப்ப தால் விநாயகர் வழிபாடு செய்யவும்.