பாலமுருகன் பதில்கள்!

/idhalgal/balajothidam/balamurugan-answers-49

நான் சொந்தத் தொழில் செய்யலாமா? திருமண வாழ்க்கை எப்படியிருக்கும்? -நவநீத கிருஷ்ணன், சேலம்.

பதில்: அனுஷ நட்சத்திரம். விருச்சிக ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 10-ஆம் அதிபதி சனியும், 11-ஆம் அதிபதி குருவும் பரிவர்த்தனை பெற்று இருக்கிறது. 10-ல் கேது இருப்பதால் வேலைக்கு சென்று சம்பாதிப்பதே ஒரு சிறப்பான அமைப்பாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் வெளியூர் தொடர்புகள்மூலமாக சாதகமான பலன்கள் அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தற்போது கேது தசை நடப்பதாலும் அடுத்து சுக்கிரன் 8-ல் இருந்து சுக்கிர தசை நடக்க இருப்பதாலும் சொந் தத் தொழில் செய் வதைவிட வேலைக்கு செல்வதே மிகவும் சிறப்பு. தற்போது நடக்கக்கூடிய கேது தசை முடிந்து 28-10-2024 முதல் சுக்கிர தசை வர இருப்பதால் சுக்கிரன் தொடங்கியவுடன் ஒரு சிறப்பான மணவாழ்க்கை அமையக்கூ

நான் சொந்தத் தொழில் செய்யலாமா? திருமண வாழ்க்கை எப்படியிருக்கும்? -நவநீத கிருஷ்ணன், சேலம்.

பதில்: அனுஷ நட்சத்திரம். விருச்சிக ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 10-ஆம் அதிபதி சனியும், 11-ஆம் அதிபதி குருவும் பரிவர்த்தனை பெற்று இருக்கிறது. 10-ல் கேது இருப்பதால் வேலைக்கு சென்று சம்பாதிப்பதே ஒரு சிறப்பான அமைப்பாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் வெளியூர் தொடர்புகள்மூலமாக சாதகமான பலன்கள் அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தற்போது கேது தசை நடப்பதாலும் அடுத்து சுக்கிரன் 8-ல் இருந்து சுக்கிர தசை நடக்க இருப்பதாலும் சொந் தத் தொழில் செய் வதைவிட வேலைக்கு செல்வதே மிகவும் சிறப்பு. தற்போது நடக்கக்கூடிய கேது தசை முடிந்து 28-10-2024 முதல் சுக்கிர தசை வர இருப்பதால் சுக்கிரன் தொடங்கியவுடன் ஒரு சிறப்பான மணவாழ்க்கை அமையக்கூடிய யோகம் உண்டு. 7-ஆம் அதிபதி 10-ல் இருப்பதால் திருமணத்துக்குபிறகு வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். விநாயகர் வழிபாடு மேற்கொள்ளவும்.

Q&A

எனக்கு எப்போது திருமணம் நடக்கும்? மாப்பிள்ளை அரசு பணி பார்ப்பவரா? -நந்தினி ஸ்ரீ, உடுமலைபேட்டை.

பதில்: கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 7-ஆம் அதிபதி சனி 7-ல் வலுவாக இருப்பது நல்ல அமைப்பாகும். 7-ஆம் அதிபதி சனி என்ற காரணத்தாலும் 5-ல் உள்ள களத்திரகாரகன் செவ்வாய்- கேது நட்சத்திரத்தில் இருப்பதாலும் உறவில் பார்க்காமல் அந்நியத்தில் பார்த்தால் நல்ல வாழ்க்கை அமையும். வரும் 1-5-24 முதல் ராசிக்கு 7-ல் குரு சஞ்சரிப்பதால் நல்ல வாழ்க்கை அமையும். 7-க்கு 10-ஆம் வீட்டில் சூரியன் இருப்பதும், 7-க்கு 10-ஆம் அதிபதி செவ்வாய் 7-க்கு 11-ல் இருப்பதாலும் அரசு சார்ந்த பணிகள், ஒரு கௌரவமான இடத்தில் பணிபுரியும் நபர் கணவராக வரக்கூடிய வாய்ப்புகள் உண்டு.

எனக்கு எப்போது அரசு பணி கிடைக்கும்? திருமணம் எப்போது நடக்கும்? -அப்பர், விழுப்புரம்.

பதில்: அவிட்ட நட்சத்திரம், மகர ராசி, துலா லக்னத் தில் பிறந்த உங்களுக்கு 10-ஆம் அதிபதி சந்திரன் 4-ல் உள்ளார். தற்போது 3, 6-க்கு அதிபதியான குரு தசையில் சனி புக்தி 29-6-2026 முடிய நடக்கயிருப்பதால் தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டால் விரைவில் ஒரு நல்ல மாற்றங்கள் ஏற்படும். 3, 6-க்கு அதிபதி குரு என்ற காரணத்தினால் பணப் புழக்கம் உள்ள இடங்கள், வங்கிப் பணி, மக்கள் தொடர்புடைய பணிகளுக்கு முயற்சி செய்யலாம். 2026 பிறகு புதன் புக்தி வருகின்றபொழுது நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். 7-ல் இருக்கக் கூடிய சனி புக்தி நடப்பதால் அடுத்து வரக் கூடிய புதன் புக்தி காலத்தில் திருமணம் அமையும். 7-ஆம் அதிபதி பரிவர்த்தனை பெற்றிருப்பதால் திருமண விஷயத்தில் ஒரு தடைக்குபிறகு நல்லது நடக்கும். சுக்கிரன் 2-ல் இருப்பதால் நல்ல வாழ்க்கை அமையக்கூடிய வாய்ப்புகள் உண்டு.

(பெண்) எந்த வேலையிலும் நிலைத்து நிற்க முடியவில்லை. ஒரே இடத்தில் நிலையாக பணிபுரிய என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்களா என்று கூறுங்கள்?

பதில்: அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, துலா லக்னத்தில் பிறந்த உங்களுக்கு தற்போது உங்கள் லக்னத் திற்கு 3, 6-க்கு அதிபதியான குரு வக்ர கதியில் பரிவர்த்தனை பெற்று தசை நடக்கிறது. குரு வக்ரகதியில் இருப்பதால் நீங்கள் எதிர்பார்க்கின்ற மதிப்பு, மரியாதை கிடைக்க இடையூறுகள் ஏற்படும். வயது காரணமாக கிடைக்கும் வாய்ப்புகளைத் தற்போது பயன்படுத்திக் கொள்வது நல்லது. நீங்கள் பிறக்கும் சமயத்தில் செவ்வாய் வீட்டில் சனி, ராகு இருப்பதால் உடன்பிறந்தவர்கள் உதவி எதிர்பார்க்கமுடியாது. தற்போது குரு தசை நடப்பதால் தட்சிணாமூர்த்தியை தொடர்ந்து வழிபாடு செய்யவும்; நல்லது நடக்கும்.

என் மகனுக்கு திருமணம் எப்போது நடக்கும் என்று கூறுங்கள்? -விஜயராமு, பள்ளிக்கரணை.

பதில்: புனர்பூச நட்சத்திரம், கடக ராசி, மகர லக்னத்தில் பிறந்த உங்கள் மகனுக்கு 7-ஆம் அதிபதி சந்திரன் ஆட்சி பெற்று களத்திரகாரகன் சுக்கிரன் உச்சம் பெற்றிருப்பது அற்புதமான அமைப்பு ஆகும். மே 1-ஆம் தேதிக்கு பிறகு குரு லாப ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்ய இருப்ப தால் நல்ல வாழ்க்கை அமையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. 5-ல் கேது இருப்பதால் தொடர்ந்து குலதெய்வ வழிபாடு, விநாயகர் வழிபாடு மேற்கொள்ளவும்; நல்லது நடக்கும்.

bala100524
இதையும் படியுங்கள்
Subscribe