எனக்கு திருமணம் எப்போது நடைபெறும்? அரசு வேலைக்கும் செல்லும் வாய்ப்புகள் இருக்கிறதா அல்லது சுய தொழில் செய்யலாமா? -அசோகன், ராசிபுரம்.

பதில்: கிருத்திகை நட்சத்திரம், ரிஷப ராசி, தனுசு லக்னத்தில் பிறந்த உங்களுக்கு ஜென்ம லக்னத்தில் சனி, 2-ல் ராகு, 8-ல் சுக்கிரன்- கேது சேர்க்கைப் பெற்றிருப்பதால் திருமண தாமதமாகிறது. பொதுவாக சுக்கிரன்- கேது சேர்க்கைப் பெற்றிருந்தால் திருமணத்தடை, தடங்கல் ஏற்படும். உங்களுக்கு 2-ல் இருக்கக்கூடிய ராகுவின் தசை நடக்கிறது. இதன்காரணமாக திருமணம் அமைய இடையூறுகள் ஏற்படுகிறது. ராகு தசை 5-11-2026 வரை இருக்கிறது. அதற்குள் திருமணம் அமைந்தாலும் ராகு தசை முடியும்வரை விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும். உங்கள் ஜாத கத்தில் 10-ஆம் அதிபதி புதன் பாக்கிய ஸ்தானமான 9-ல் இருப்பது நல்ல அமைப்பாகும். புதன் 9-ல் இருக் கின்ற காரணத்தால் கல்வி சார்ந்த துறை, கம்ப்யூட்டர் துறையில் பணிபுரிய வாய்ப்பு உண்டு. லக்னாதி பதி குரு உச்சம் பெற்றிருப்ப தால் வங்கிப் பணி போன்றவற்றில்கூட முயற்சி செய்ய லாம். தற்போது நடக்கக்கூடிய ராகு தசையைவிட அடுத்து வரக்கூடிய குரு தசையில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். குரு 8-ல் இருப்பதால் சொந்தத் தொழில் செய்யாமல் வேலைக்கு செல்வது நல்லது.

எனக்கு இதுவரை திருமணம் நடைபெறவில்லை. திருமணம் எப்போது நடைபெறும்? எப்படிபட்ட வரன் அமையும்? திருமண வாழ்க்கை எப்படி யிருக்கும்? -அரவிந்த், சென்னை.

பதில்: பூர நட்சத்திரம், சிம்ம ராசி, மிதுன லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 7-ல் சனி இருப்பதாலும் களத்திரகாரகன் சுக்கிரன் நீசம்பெற்று இருப்பதாலும் திருமணம் தாமதமாகிறது. 7-ல் சனி இருந்தாலும் சுக்கிரன் பரிவர்த்தனை பெற்றிருப்பதால் தடைக்குப்பிறகு திருமண யோகம் சிறப் பாக இருக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்கள் ஜாதகத்தில் சந்திரனுக்கு 7-ல் ராகு அமையப்பெற்று ராகு தசை 6-3-2033 முடிய நடைபெறுவதால் சொந்தமில்லாமல் அந்நியத்தில் வரன் பார்த்து அமைத்துக்கொள்வது நல்லது. திருமணம் அமைந் தாலும் நடப்பது ராகு தசை என்பதால் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. தற்போது லக்னாதி பதியான புதன் புக்தி நடப்பதால் இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு நல்லது நடக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்ளவும்.

Advertisment

ss

அடுத்து வரும் கேது தசையில் உடல்நலம் பாதிக்கப்படுமா? பொருளாதாரநிலை எப்படியிருக்கும்? -ரங்கசாமி, நம்பியூர்.

பதில்: ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 2-ல் சனி வக்ரம்பெற்று ராகு உடனிருப்பது சாதகமற்ற அமைப்பாகும். தற்போது உங்களுக்கு புதன் தசையில் சனி புக்தி 2-1-2025 முடிய நடக்கிறது.

அடுத்து உங்களுக்கு 8-ல் இருக்கக்கூடிய கேது தசை நடைபெற உள்ளது. கேது நின்ற வீட்டு அதிபதி குரு வக்ரகதியில் அமையப்பெற்றிருப்பதாலும் ரிஷப லக்னம், ரிஷப ராசிக்கு 8-ல் கேது இருந்து கேது தசை நடைபெற இருப்பதாலும் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது மிகமிக நல்லது. நீங்கள் பிறந்தது போர் நடந்த நேரமாகும். அதற்கு ஏற்றவாறு ஜாதகத்தை கணித்து உள்ளோம். ரிஷப லக்னம், ரிஷப ராசிக்கு 8-ல் கேது இருந்து கேது தசை நடைபெறுவது ஒரு சாதகமற்ற அமைப்பு என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, பண விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது நல்லது. குரு வக்ரகதியில் இருப்பதால் பிறரை நம்பி பணம் கொடுக்கக்கூடிய விஷயங்களில் சற்று எச்சரிக்கையாக இருப்பது உத்தமம். கேது- குரு வீட்டிலிருந்து கேது தசை நடைபெற இருப்பதால் ஆன்மிகப் பணிகள் மேற் கொள்வதன்மூலமாக ஆரோக்கியத்தில் அனுகூலங்கள் இருக்கும்.

எனது உடல் ஆரோக்கியம் எப்படி யிருக்கும்? பரிகாரம் கூறவும்? -கண்ணன், கும்பகோணம்.

பதில்: பூச நட்சத்திரம், கடக ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்த உங்களுக்கு லக்னத்திற்கு 3-ல் உள்ள சந்திர தசையில், வக்ரகதியிலுள்ள சுக்கிர புக்தி 2-7-2024 முடிய நடக்கிறது. ரிஷப லக்னத்திற்கு 3-ஆம் அதிபதி தசையை ஒரு சிறப் பான தசை என சொல்ல முடியாது. உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருப்பது, பெருமாள் வழிபாடு மேற் கொள்வதன் மூலமாக ஆரோக்கியத் தில் முன்னேற் றம் இருக்கும். தற்போது நடக்கக்கூடிய சந்திர தசையை விட 2-1-2025 முதல் நடைபெற இருக்கக்கூடிய செவ்வாய் தசை உங்களுக்கு சற்றுமுன்னேற் றத்தை தரக்கூடியதாக இருக்கும். செவ்வாயும், சனியும் பரிவர்த்தனை பெற்று இருப்பதால் ஆரோக்கியத்தில் சற்று முன்னேற்றம் இருக்கும்.

நான் சொந்த நிலம் வாங்குவேனா? வீடு கட்டு வேனா? -நந்தகோபால், காட்டுக்கட்டை (சேலம்).

பதில்: கிருத்திகை நட்சத்திரம், ரிஷப ராசி, மேஷ லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 4-ஆம் அதிபதி சந்திரன் உச்சம்பெற்றிருப்பதும், சுக்கிரன் உச்சம் பெற்றிருப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. செவ்வாய் ஆட்சி பெற்றிருந்தாலும் உடன் சனி இருப்பதால் பூமி, மனை போன்றவை அமைவதில் சற்று தாமதநிலை உண்டாகும். 4-ஆம் அதிபதி சந்திரன் என்ற காரணத்தாலும் செவ்வாய்- சனி சேர்க்கை பெற்று கேது சாரம் பெற்று இருப்பதாலும் உங்கள் பெயரில் மட்டும் முயற்சிக்காமல் மனைவி, பிள்ளைகளை இணைத்துக் கொண்டு முயற்சித்தால் அதிலும் குறிப்பாக பெண்கள் பெயரில் முயற்சித்தால் நல்லது நடக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தற்போது சனி தசையில் சனி புக்தி 16-9-2024 முடிய நடைபெறு வதால் அடுத்து வரக்கூடிய புதன் புக்தி காலத்தில் வீடு கட்டுவதற்கான முயற்சிகளை கூட்டாக மேற்கொண்டால் நல்லது நடக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. சனி நீசம் பெற்றிருப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, காலபைரவரை வழிபாடு செய்வது நன்மை தரும்.

என் மகனின் திருமணம் மற்றும் அவரின் எதிர்காலம் பற்றியும் ஏதாவது பரிகாரம் செய்ய வேண்டுமா என்றும் கூறவும்? -ஸ்ரீதரன், கோவை.

பதில்: கிருத்திகை நட்சத்திரம், மேஷ ராசி, துலா லக்னத்தில் பிறந்த உங்கள் மகனுக்கு 7-ஆம் அதிபதி செவ்வாய் ஆட்சிபெற்று, குரு- சுக்கிரன் சேர்க்கைப் பெற்றிருப்பது சிறப் பான அமைப்பு என்பதால் மனவாழ்கை சிறப்பாக இருக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்கள் மகன் ஜாதகத்தில் லக்னத்தில் ராகு, 7-ல் கேது இருந்தாலும் பாவக ரீதி யாக ராகு 12-லும், கேது 6-லும் இருப்பதால் பெரிய கெடுதி யில்லை. தற்போது ராகு தசையில் சனி புக்தி 16-6-2025 முடிய நடப்பது சற்று சாதகமற்ற அமைப் பாகும். சனி வக்ரகதியில் இருப்பதால் தேவையற்ற இடையூறுகள் இருக்கும்.

அடுத்து வரக்கூடிய புதன் புக்தியில் நல்ல வாழ்க்கை அமையக் கூடிய வாய்ப்புகள் உண்டு. நடப்பது ராகு தசை என்பதால் அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்ளவும். திருமணத்துக் குப்பிறகு வாழ்க்கையானது மிகச் சிறப்பாக இருக்கும். பாவகரீதியாக ராகு 12-ல் இருப்ப தால் வெளியூர், தொடர்புகள்மூலமாக அனுகூலமான பலன்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உண்டு.

திருமணத்திற்கு வரன் பார்க்கும்போது சந்திரன் கேது சேர்க்கைப்பெற்ற ஜாதகத்தை பார்க்க வேண்டுமா? ராகு தசை சந்திர புக்தியில் திருமணம் செய்யலாமா? வரும் வரன் அரசாங்க உத்தியோகம் பார்ப்பவரா? -காயத்ரி, புதுகோட்டை.

பதில்: திருவோண நட்சத்திரம், மகர ராசி, தனுசு லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 7-ஆம் அதிபதி புதன் லாப ஸ்தானமான 11-ல் அமையப்பெற்று இருப்பது நல்ல அமைப்பாகும். புதன் குரு நட்சத்திரத்தில் அமையப்பெற்று இருப்பதால் எதிர்காலத்தில் நல்ல வாழ்க்கை அமையக்கூடிய வாய்ப்புகள், ஒரு நல்ல அந்தஸ்தான வரன் அமையக் கூடிய யோகமானது உண்டு. ஜாதகத்தில் சந்திரன்- கேது சேர்க்கைப் பெற்றிருந்தாலும் சந்திரனை கேது தாண்டிவிட்டதால் பெரிய கெடுதி கிடையாது. குறிப்பாக சந்திரன் இருப்பது திருவோண நட்சத்திரம் 4-ஆம் பாதம். கேது இருப்பது திருவோண நட்சத்திரம் 2-ஆம் பாதம். சந்திரன்- கேது சேர்க்கைப் பெற்ற காரணத் தினால் சந்தி ரன்- கேது சேர்க் கைப்பெற்ற ஜாதகம்தான் பார்க்கவேண்டும் என்று கிடையாது. தற்போது 8-ல் இருக்கக்கூடிய ராகு தசை 7-3-2027 முடிய நடக்கிறது. ராகு தசை நடப்பதால் திருமணம் அமைந்தாலும் ராகு தசை முடியும் வரை உடனிருப்பவர்களை சற்று அனுசரித்துச்செல்வது மிகவும் நல்லது. குறிப்பாக 8-ல் ராகு இருந்து ராகு தசை நடைபெற்றால் திருமணம் ஆனாலும் கணவர்வழி உறவினரிடம் ஒற்றுமைக் குறைவு ஏற்படலாம். அடுத்து சந்திரன் வீட்டில் ராகு இருப்பதால் தாய்க்கு உடம்பு பாதிப்புகள், வயது மூத்த பெண்களிடம் தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படலாம். பேச்சில் நிதானத் தைக் கடைப் பிடித்தால் இருக்கும் பிரச்சினைகளைச் சமாளிக்க முடியும். அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.