நான் சொந்த வீடு கட்ட முடியுமா? அடுத்து வரும் சனி தசை எப்படியிருக்கும்? -பெருமாள், திருக்கோவிலூர்

பதில்: பரணி நட்சத்திரம், மேஷ ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்த உங்களுக்கு சொந்த வீட்டுக்கு காரகனான சுக்கிரன் ஆட்சிபெற்றிருப்பது சிறப்பான அமைப்பு என்பதால் சொந்த வீடு யோகம் உண்டு. 4-ஆம் அதிபதி சனி என்ற காரணத்தினால் கட்டிய வீட்டை வாங்கக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். சுக்கிரன் ஏழாம் அதிபதி என்ப தால் சொத்துகள் வாங்குகின்றபொழுது கூட்டாக முயற்சிக்கவும்; நல்லது நடக்கும். 1-5-2024 பிறகு நல்ல வாய்ப்புகள் கிடைக் கும். தற்போது குரு தசையில் ராகு புக்தி 12-9-2025 முடிய நடப்பதால் அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு செய்வது நன்மையைத் தரும். அடுத்து வரும் சனி தசையில் குடும்ப ஒற்றுமை சற்று பாதிக்கும். நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

aa

கடந்த நான்கு ஆண்டுகளாக திருமணத்திற்கு முயற்சி செய்கின்றோம். திருமணம் எப்போது நடைபெறும்? -சீனிவாசன்

பதில்: பூராட நட்சத்திரம், தனுசு ராசி, கடக லக்னத்தில் பிறந்த உங்கள் மகளுக்கு 7-ஆம் அதிபதி சனி- கேது சேர்க்கைப் பெற்றிருப்பது சாதகமற்ற அமைப்பாகும். 7-ஆம் அதிபதி சனி என்ற காரணத்தால் திருமணம் அமைய தாமதமாகிறது. பெண்களுக்கு களத்திரகாரன் என வர்ணிக்கப்படக்கூடிய செவ்வாய்- சூரியன் சேர்க்கைப்பெற்று லாப ஸ்தானத்தில் இருப்பது சிறப் பான அமைப்பு என்ற காரணத்தால் திருமணத் திற்குபிறகு வாழ்க்கை நன்றாக இருக்கும். தற்போது செவ்வாய் தசையில் சுக்கிர புக்தி 29-11-2024 முடிய நடக்கிறது. அடுத்து சூரிய புத்தி வரும் தருவாயில் வரும் நவம்பருக்கு பிறகு திருமணம் கைகூடக் கூடிய வாய்ப்புகள் உண்டு. சனி- கேது சேர்க்கைப் பெற்றிருப்பதாலும் குரு வக்ர கதியில் இருப்பதாலும் சொந்தத்தில் திருமணத் திற்காக வரன் பார்க்காமல் அந்நியத்தில் பார்ப்பது நல்லது.

நான் B.Com, M.Com படிப்பினை முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளேன். அரசு வேலைக்கு முயற்சித்து வருகிறேன். நான் அரசு வேலைக்கு செல்வேனா? -ருக்மணி, வேலூர்

பதில்: ஆயில்ய நட்சத்திரம், கடக ராசி, மிதுன லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 10-ஆம் அதிபதி குரு 8-ல் மறைந்து 8-ஆம் அதிபதி சனி 10-ல் அமைந்து 8, 10-க்கு அதிபதிகள் பரிவர்த்தனை பெற்ற காரணமாக முத-ல் ஒரு தற்கா-க பணியில் இருந்து அதன் பிறகு ஒரு நிரந்தர பணியில் அமரக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். 10-ஆம் அதிபதி குரு என்ற காரணத் தால் வங்கிப்பணி, பணப் புழக்கமுள்ள துறையில் வேலைக்காக முயற்சிசெய்வது நன்மையை தரும். வரும் 1-5-2024-க்குபிறகு நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். புதன் வக்ரகதியில் இருப்பதால் ஒருசில தடைகள், படித்த துறையைவிட வேறு ஏதாவது துறையில் பணி கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. 10-ஆம் அதிபதி குரு என்ற காரணத்தால் அரசுஉதவி பெறக்கூடிய இடங்களில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

எனக்கு இன்னும் குழந்தை பாக்கியமில்லை. மருத்துவரிடம் சிகிச்சை நடந்துகொண்டு இருக்கிறது. கருப்பை பிரச்சினை உள்ளது. குழந்தை பாக்கியம் எப்போது? -ரேஷ்மா, பெங்களூர்

பதில்: திருவோண நட்சத் திரம், மகர ராசி, மிதுன லக்னத் தில் பிறந்த உங்களுக்கு கேந்திர ஸ்தானமான 4-ல் குரு இருப் பது நல்ல அமைப்பு என்றா லும் 5-ஆம் அதிபதி சுக்கிரன்- கேது நட்சத்திரத்தில் இருப்ப தால் தேவையில்லாத இடையூறு கள் ஏற்படுகிறது. 5-ஆம் அதிபதி சுக்கிரன் 5-ஆம் வீட்டை பார்ப்பதால் விரைவில் ஒரு நல்லது நடக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வரும் 1-5-2024-க்குபிறகு கோட்சாரத்தில் ராசிக்கு 5-ல் குரு வரும் தருவாயில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தற்போது குரு தசையில் சனி புக்தி 1-6-2026 முடிய நடப்ப தால் விரைவில் நல்லது நடக்க குலதெய்வ வழிபாடு மேற் கொள்வது, கால பைரவரை வழிபாடு செய்வது நல்லது. உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் நீசம்பெற்று இருப்பதால் ஹார்மோன்கள் தொடர்புடைய உடல் உபாதைகள் காரணமாக குழந்தை பாக்கியம் தடைபடுகிறது. இயற்கை உணவுகளை உட்கொள்ளவும்; விரைவில் நல்லது நடக்கும்.

எனக்கு உடல்நலம், ஆரோக்கியம், ஆயுள் பற்றி கூறவும்? -ரமணி.

பதில்: திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்த உங்களுக்கு பிறக்கின்றபொழுதே புதன், சனி வக்ரகதியில் இருப்பதும், கடந்த காலங்களில் கேது தசை நடைபெற்றதும் சாதகமற்ற அமைப்பாகும். தற்போது சுக்கிர தசையில் சுக்கிர புக்தி 11-5-2024 முடிய நடப்பதால் ஆரோக்கிய பாதிப்புகள் சற்று குறையும். சுக்கிரன் 6-ல் இருந்தாலும் பாவக ரீதியாக 5-ல் இருப்பதால் ஆரோக்கியத்தில் நல்லமுன்னேற்றம் இருக்கும். சனி, புதன் வக்ரகதியில் இருப்பதால் எதிலும் சற்று முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது, உணவு விஷயத்தில் சற்று கவனமுடன் இருப்பதன்மூலம் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கமுடியும்.

என் மைத்துனருக்கு இரண்டாவது திருமணம் எப்போது நடைபெறும்? அவருடைய மறுமண வாழ்க்கை எப்படியிருக்கும்?

பதில்: கிருத்திகை நட்சத்திரம், மேஷ ராசி, கும்ப லக்னத்தில் பிறந்த ஜாதகருக்கு சுக்கிரன் ஆட்சி பெற்றிருப்பது நல்ல அமைப்பு என்றாலும் 7-ஆம் வீட்டில் சனி, ராகு, செவ்வாய், குரு போன்ற கிரகங்கள் அமைந்தது சாதகமற்ற அமைப்பாகும். பாவ கிரகங்கள் 7-ல் இருந்ததால் மணவாழ்வில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது குரு தசையில் சனி புக்தி 10-5-2025 முடிய நடப்ப தால் அடுத்து வரவுள்ள புதன் புக்தி காலத்தில் மறுமணத்திற்காக முயற்சித்தால் நல்லது நடக்கும். 7-ல் பாவ கிரகங்கள் இருப்பதால் திருமணம் அமைந்தாலும் வாழ்வில் விட்டுக்கொடுத்து செல்லவேண்டிய ஜாதகம் ஆகும்.