ன்னுடைய மகன் தற்போது இ.ஊ முடித்துவிட்டு குறைந்த சம்பளத்தில் வேலை செய்துவருகிறார். நிறைவான சம்பளத்தில் நல்ல வேலை எப்போது கிடைக்கும்? எந்த வயதில் திருமணம் செய்யலாம்? -பத்மா, திருநெல்வேலி.

பதில்: சதய நட்சத்திரம், கும்ப ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்த உங்கள் மகனுக்கு 10-ல் சுக்கிரன் ஆட்சிபெற்றிருப்பது மிகவும் அற்புதமான அமைப்பாகும். குரு- புதன் இணைந்திருப்பதால் வாழ்வில் படிப்படியான வளர்ச்சிகள் உண்டு. தற்போது குரு தசையில் கேது புக்தி 13-9-2024 முடிய நடப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் 13-9-2024-க்கு பிறகு சுக்கிர புக்தி வருகின்றபொழுது வாழ்வில் நல்ல முன்னேற்றங்கள் இருக்கும். திருமணம் கைகூடும். கும்ப ராசியில் பிறந்த ஜாதகருக்கு தற்போது ஏழரைச்சனி நடப்பதால் கிடைக்கும் வாய்ப்புகளைத் தற்போது பயன்படுத்திக்கொண்டால் விரைவில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். சனி நீசம்பெற்று இருப்பதால் எதிர்நீச்சல் போடவேண்டிய நிலை இருந்தாலும் எதிர்காலத்தில் ஒரு நல்ல நிலையினை அடைவார்.

என் மகனுடைய அலுவலகத்தில் அவருக்கு பதவி உயர்வு வழங்க வேண்டியுள்ளது, ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்குமுன்பு அது ஒத்தி வைக்கப்பட்டது. அவரது பதவி உயர்வு எப்போது கிடைக்கும் என்று பதிலளிக்கவும்? -ரங்கராஜன், கும்பகோணம்.

aa

Advertisment

பதில்: பரணி நட்சத்திரம், மேஷ ராசி, மிதுன லக்னத்தில் பிறந்த உங்கள் மகனுக்கு தற்போது ராகு தசையில் சந்திர புக்தி 15-12-2024 முடிய நடக்கிறது. 10-ஆம் அதிபதி 7-ல் ஆட்சிபெற்றிருப்பது சிறப் பான அமைப்புதான். மே 1 முதல் குரு தன ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கின்றபொழுது கண்டிப்பாக பதவி உயர்வுகள் கிடைக்கும். நடப்பது ராகு தசை என்பதால் அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது நற்பலனை தரும்.

(ஆண்) வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை. எது தொடங்கினாலும் தடங்கல்கள் ஏற்படுகிறது. இந்த நிலை எப்போது சரியாகும்? என்ன பரிகாரம் செய்வது?

பதில்: விசாக நட்சத்திரம், விருச்சிக ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்த உங்களுக்கு குரு, செவ்வாய் ஆகிய கிரகங்கள் ஆட்சி பெற்றிருப்பது நல்ல அமைப்புதான். செவ்வாய், சுக்கிரன் லக்னத்திற்கு 9-ஆம் வீட்டில் அமையப்பெற்று தற்போது 9-ல் உள்ள சுக்கிர தசை 1-8-2035 முடிய நடக்கிறது. பாதக ஸ்தானத்திலுள்ள சுக்கிர தசை என்ற காரணத்தினால் பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் இருந்தால் நல்ல முன்னேற்றங் கள் உண்டாகும். நீங்கள் பிறக்கின்றபொழுதே சந்திரன் நீசம்பெற்றிருப்பதாலும், சந்திரன் வீட்டில் கேது இருப்பதாலும் சிறு சிறு விஷயத்தைகூட பெரிதாக நினைத்து கவலைப்படுகிறீர்கள். பெருமாள் வழிபாடு செய்வது, குலதெய்வ வழிபாடு மேற்கொள்வதன்மூலம் வாழ்வில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும்.

எனது மகன் படிப்பில் மந்தமாக உள்ளார். எதிர்காலம் எவ்வாறு இருக்கும்?

பதில்: உத்திராட நட்சத்திரம், மகர ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்த உங்கள் மகனுக்கு 4-ஆம் அதிபதி சூரியன் கேந்திரம் பெற்று குரு பார்வை பெறுவதாலும் கல்வி காரகன் புதன் குரு வீட்டில் இருப்பதாலும் படிப்பில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தற்போது 8-ல் உள்ள செவ்வாய் தசை நடப்பதாலும் ஏழரைச் சனி நடப்பதாலும் படிப்பில் மந்தநிலை உள்ளது. 2025 மார்ச்சுக்குபிறகு ஏழரைச்சனி முடிகின்றபொழுது படிப்பில் சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஜாதகருக்கு படிப்புக்காக எதிர்காலத்தில் ஒரு இடம் மாற்றம் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உண்டாகி அதன் மூலம் வளர்ச்சி ஏற்படலாம். முருக வழிபாடு மேற்கொள்வது நற்பலனை தரும்.

இவருக்கு அரசாங்க வேலை கிடைக்குமா? திருமணம் எந்த வயதில் செய்யலாம்?

பதில்: ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி, மகர லக்னத்தில் பிறந்த ஜாதகருக்கு லக்னத்துக்கு 10-ஆம் அதிபதி சுக்கிரன் வக்ரகதியில் உள்ளார். அது மட்டுமில்லாமல் குரு, சனி பரிவர்த்தனை பெற்றிருக்கிறது. இரு கிரங்கள் பரிவர்த்தனை பெற்றிருந்தால் முதலில் ஒரு பணி அதன்பிறகு வாழ்வில் ஒரு உயர்வுகள் உண்டாகும். சூரியன் 12-ல் இருப்பதாலும் தற்போது குரு தசை நடப்பதாலும் பணம் தொடர்புடைய, பணப்புழக்கம் தொடர்புடைய இடங்களில் வேலைக்காக முயற்சிசெய்வது, வங்கிப் பணி, மக்களுக்கு சேவை செய்யக்கூடிய பணிகளில் வேலைக்காக முயற்சிசெய்வது நல்லது. அரசு வேலை கிடைக்காவிட்டாலும் அரசு சார்ந்த இடங்களில் முயற்சிசெய்தால் நற்பலன் அடைய வாய்ப்புகள் உண்டு.

எனக்கு எப்போது திருமணம் நடைபெறும்? அரசு பணி கிடைக்க வாய்ப்பு எப்போது ஏற்படும்? -கௌரிசங்கர், திருவாரூர்.

பதில்: அவிட்ட நட்சத்திரம், கும்ப ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 10-ல் சனி ஆட்சிபெற்று உடன் சந்திரன் இருப்பது அற்புதமான அமைப்பு ஆகும். சூரியன், புதன், குரு சேர்க்கைப் பெற்றிருப்பது சிறப்பு என்பதால் படிப்பில் சாதிக்கக்கூடிய யோகம், உங்களின் தனித்திறனை நன்கு வளர்த்துக்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சனி, சந்திரன் சேர்க்கை பெற்றிருப்பதால் உங்களுக்கு தனியார்துறை, வெளியூர், வெளிநாடுகள் மூலமாக அனுகூலங்கள் அடையக்கூடிய வாய்ப்புகள் அதிகம். 7-ஆம் அதிபதி பரிவர்த்தனை பெற்றிருப்பதால் திருமண விஷயத்தில் ஒரு தடைக்கு பிறகு அனுகூலங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. தற்போது குரு தசையில் சூரிய புக்தி 4-8-2024 முடிய நடக்கிறது. அடுத்து 7-ஆம் அதிபதி நட்சத்திரத்தில் அமையப்பெற்ற சந்திர புக்தி நடக்கும் பொழுது திருமணம் கைகூடக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு.

எனக்கு அரசு பணி கிடைக்குமா அல்லது தனியார் துறையில் வேலை கிடைக்குமா? எனக்கு திருமணம் எப்போது நடைபெறும்? -விஜயலட்சுமி, வடலூர்.

பதில்: உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, துலா லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 10-ஆம் அதிபதி சந்திரன்- சனி, கேது சேர்க்கைப்பெற்று 6-ஆம் வீட்டில் இருக்கிறது. தற்போது 6-ல் உள்ள கேது தசை நடப்பதால் பிறந்த ஊரைவிட வெளியூர், வெளிமாநிலங்களில் வேலைக்காக முயற்சிசெய்வது, கிடைக்கும் வாய்ப்புகளைத் தற்போது பயன்படுத்திக்கொள்வது நல்லது. பொதுவாக கேது தசையில் பெரிய வளர்ச்சி இருப்பது கஷ்டம். உங்களுக்கு எதிர்காலத்தில் 2029-க்கு பிறகு சுக்கிர தசை வரும். அப்பொழுதுதான் ஒரு நிரந்தர பணி அமையக்கூடிய அதிர்ஷ்டங்கள் உங்களுக்கு உண்டு. கிரகணத்தை ஒட்டிய காலத்தில் பிறந் திருப்பதால் நீங்கள் தனியார் துறையில் முயற்சித்தால் வளமான பலன்கள் கிடைக்கும். 7-ஆம் அதிபதி நீசம் பெற்றிருப்பதாலும் சந்திரன்- கேது சேர்க்கைப் பெற்று தற்போது கேது தசையில் சந்திர புக்தி நடப்பதாலும் திருமண சம்பந்தப்பட்ட விஷயத்தில் தடை, இடையூறுகள், திருமணம் அமைந்தாலும் ஒற்றுமை குறைவுகள் ஏற்படும். குரு புக்தி தொடங்குகின்றபொழுது குறிப்பாக 2026-ல் திருமண முயற்சிகள் மேற்கொள்வது உறவில்லாமல் அந்நியத்தில் வரன் பார்ப்பது நற்பலனை தரும். திருமணம் அமைந்தாலும் கேது தசை முடியும்வரை மண வாழ்வில் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.