எனக்கு அரசு பணி வேலை கிடைக்குமா? திருமணம் எப்போது நடைபெறும்? -லோகேஷ், ராணிப்பேட்டை.
பதில்: பரணி நட்சத்திரம், மேஷ ராசி, கன்னி லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 10-ஆம் அதிபதி புதன் வக்ரகதியில் 12-ல் உள்ளார். குரு, சனி வக்ரகதியில் இருக்கும்பொழுது பிறந்து உள்ளீர்கள். தற்போது ராகு மகா தசை நடப்பதால் வெளியூர் தொடர்புடைய பணி, பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியக்கூடிய வாய்ப்புகள் உண்டு. மூன்று கிரகங்கள் வக்ரகதியில் இருப்பதால் எந்த வேலைக்குச் சென்றாலும் அடிக்கடி மாற்றங்கள் ஏற்படக்கூடிய ஒரு சூழல் உங்கள் ஜாதகத்தில் இருக்கிறது. கிடைக்கும் வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்வது, அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது நன்மையைத் தரும்.
7-ஆம் அதிபதி பரிவர்த்தனை பெற்றபோது பிறந்திருப்பதால் திருமண விஷயத்தில் முதலில் ஒரு தடை, தடைக்குப்பிறகு அனுகூலங்கள் உண்டு. 7-ஆம் அதிபதி நீசம்பெற்று வக்ரகதியில் இருப்பதும், சுக்கிரன் நீசம்பெற்று இருப்பதும் சாதகமற்ற அமைப்பாகும். தற்போது ராகு தசை நடப்பதால் உறவில்லாமல் அந்நியத்தில் வரன் பார்ப்பது நல்லது. மே மாதத்துக்குபிறகு நல்லவாய்ப்புகள் அமையும்.
என் ஜாதகப்படி நான் மேஷ லக்னம், ரிஷப ராசியில் பிறந்தேன். கோட்சாரப்படி கும்ப சனி தன் 10-ஆம் பார்வையாக என் ஜாதகத்திலுள்ள 8-ஆம் பாவகத்தை பார்வையிடுவதால் என் உடல்நிலை பாதிக்கப்படுமா? -விஸ்வம், திருவதிகை.
பதில்: நீங்கள் பிறந்த நேரப்படி துல்லியமாக கணிக்கின்றபொழுது ரிஷப ராசி, ரிஷப லக்னம், மிருகசீரிட நட்சத்திரம்
எனக்கு அரசு பணி வேலை கிடைக்குமா? திருமணம் எப்போது நடைபெறும்? -லோகேஷ், ராணிப்பேட்டை.
பதில்: பரணி நட்சத்திரம், மேஷ ராசி, கன்னி லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 10-ஆம் அதிபதி புதன் வக்ரகதியில் 12-ல் உள்ளார். குரு, சனி வக்ரகதியில் இருக்கும்பொழுது பிறந்து உள்ளீர்கள். தற்போது ராகு மகா தசை நடப்பதால் வெளியூர் தொடர்புடைய பணி, பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியக்கூடிய வாய்ப்புகள் உண்டு. மூன்று கிரகங்கள் வக்ரகதியில் இருப்பதால் எந்த வேலைக்குச் சென்றாலும் அடிக்கடி மாற்றங்கள் ஏற்படக்கூடிய ஒரு சூழல் உங்கள் ஜாதகத்தில் இருக்கிறது. கிடைக்கும் வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்வது, அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது நன்மையைத் தரும்.
7-ஆம் அதிபதி பரிவர்த்தனை பெற்றபோது பிறந்திருப்பதால் திருமண விஷயத்தில் முதலில் ஒரு தடை, தடைக்குப்பிறகு அனுகூலங்கள் உண்டு. 7-ஆம் அதிபதி நீசம்பெற்று வக்ரகதியில் இருப்பதும், சுக்கிரன் நீசம்பெற்று இருப்பதும் சாதகமற்ற அமைப்பாகும். தற்போது ராகு தசை நடப்பதால் உறவில்லாமல் அந்நியத்தில் வரன் பார்ப்பது நல்லது. மே மாதத்துக்குபிறகு நல்லவாய்ப்புகள் அமையும்.
என் ஜாதகப்படி நான் மேஷ லக்னம், ரிஷப ராசியில் பிறந்தேன். கோட்சாரப்படி கும்ப சனி தன் 10-ஆம் பார்வையாக என் ஜாதகத்திலுள்ள 8-ஆம் பாவகத்தை பார்வையிடுவதால் என் உடல்நிலை பாதிக்கப்படுமா? -விஸ்வம், திருவதிகை.
பதில்: நீங்கள் பிறந்த நேரப்படி துல்லியமாக கணிக்கின்றபொழுது ரிஷப ராசி, ரிஷப லக்னம், மிருகசீரிட நட்சத்திரம் வருகிறது. தற்போது உங்களுக்கு புதன் தசையில் செவ்வாய் புக்தி நடக்கிறது. உங்கள் ராசிக்கு 10-ல் சஞ்சரிக்கக்கூடிய சனி ஒருசில அனுகூலமான பலன்களைத் தரக்கூடிய வாய்ப்புகள் உண்டு. ரிஷப லக்னம், ரிஷப ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு வரும் 7-8-2024 முதல் புதன் தசையில் 8-ல் உள்ள ராகு புக்தி தொடங்கு கின்றபொழுது உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, அம்மனின் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது நல்லது.
பொதுவாக கோட்சார பலனை நிர்ணயம் செய்கின்றபொழுது சந்திரனை மையப்படுத்திதான் பார்க்கவேண்டும். ஜெனன ஜாதக கிரகங்களை பார்ப்பதற்குதான் லக்னத்தை மையப்படுத்தி பார்க்கவேண்டும்.
என்னுடைய பேரன் வயது 11, இன்னும் குழந்தையைபோலவே இருக்கிறான். பேச்சு சுத்தமாக வரவில்லை. எப்போது பேசுவான். என்ன பரிகாரம் செய்யவேண்டும்? -சக்திவேல், உடுமலைபேட்டை.
பதில்: பரணி நட்சத்திரம், மேஷ ராசி, மீன லக்னத்தில் பிறந்த உங்கள் பேரனுக்கு கல்வி காரகன் புதன்- சந்திரன் சேர்க்கைப்பெற்று 2-ல் உள்ளது. உங்கள் பேரன் பிறக்கின்றபோது சூரியன்- கேது சேர்க்கைப்பெற்று அமாவாசையன்று பிறந்துள்ளார். அதுவும் குறிப்பாக கிரகண அமாவாசையாகும். கிரகண நேரத்தில் பிறந்து கடந்த காலங்களில் சூரிய தசை நடந்த காரணத்தாலும் தற்போது தேய்பிறை சந்திர தசை நடக்கின்ற காரணத்தாலும் ஜாதகருடைய நடவடிக்கைகள், அவரு டைய செயல்பாடுகள், பேச்சு போன்றவை தாமதமாகிறது. சந்திரன் பலவீனமாக இருந்து சந்திர தசை நடப்பதால் பெருமாள் வழிபாடு மேற்கொள்வது, தாய்வழி குலதெய்வத்தை வழிபாடு செய்வது நன்மையைத் தரும். 2025 ஏப்ரலுக்கு பிறகு ஒருசில நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும்.
எனது மகனுக்கு திருமணம் தடைப்பட்டு கொண்டிருக்கிறது. திருமணம் எப்போது நடக்கும்? -சீனிவாசன், வேலூர்.
பதில்: பூரட்டாதி நட்சத்திரம், கும்ப ராசி, தனுசு லக்னத்தில் பிறந்த உங்கள் மகனுக்கு 7-ஆம் அதிபதி புதன் 6-ல் அமையப்பெற்று, களத்திரகாரகன் சுக்கிரன்- கேது நட்சத்திரத்தில் இருப்பதால் நல்ல வாழ்க்கை அமைய இடையூறுகள் ஏற்படுகிறது. சனி பார்வை புதனுக்கு இருப்பதும் சாதகமற்ற அமைப்பாகும். தற்போது புதன் தசையில் சந்திர புக்தி 17-5-2024 முடிய நடக்கிறது. 7-ல் உள்ள செவ்வாய் புக்தி அடுத்து வரவுள்ளதால் மே மாதத்திற்குபிறகு திருமணம் முயற்சிகள் மேற்கொண்டால் நல்லது நடக்க வாய்ப்பு உண்டு. திருமணத்தடை நீங்க குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளவும்.
எனக்கு வேலை வாய்ப்பு எப்படியுள்ளது. அரசு வேலை முயற்சி பண்ணலாமா அல்லது வெளிநாட்டு வேலை அமைப்பு உள்ளதா அல்லது சுய தொழில் செய்யலாமா? -முத்துராமலிங்கம்.
பதில்: சதய நட்சத்திரம், கும்ப ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 10-ஆம் அதிபதி சுக்கிரன் 9-ல் கேது சேர்க்கைப்பெற்றிருப்பதால் வேலைக்கு சென்று சம்பாதிக்கக்கூடிய ஜாதகமாகும். உங்கள் ஜாதகத்தில் 10-ஆம் வீட்டில் சூரியன், புதன் அமையப்பெற்று இருப்பது நல்ல அமைப்பாகும். உங்களுக்கு தற்போது 7-ல் ஆட்சிபெற்ற சனி தசை நடக்கிறது. சனி 7-ல் இருந்தாலும் அவர் பாவகரீதியாக 8-ல் இருப்பதாலும் சிம்ம லக்னத்தில் பிறந்திருப்பதாலும் லக்னாதிபதி சூரியனுக்கு சனி பகைவர் என்ற காரணத்தால் வாழ்வில் எதிர்நீச்சல் போட்டு முன்னுக்குவர வேண்டிய ஜாதகமாகும். 10-ல் சூரியன் இருப்பதால் அரசு, அரசு உதவி பெறக்கூடிய இடங்களில் தாமதமான அனுகூலங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. தற்போது கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு உங்கள் தனித் திறனை வளர்த்துக்கொண்டு வந்தால் விரைவில் ஒரு நல்ல நிலையினை அடைய முடியும். ஏழரைச் சனி நடப்பதாலும் சனி மகா தசை நடப்பதாலும் ஆஞ்சனேயர் வழிபாடு, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, காலபைரவரை தரிசிப்பதன் மூலம் வளமான பலனை அடையமுடியும்.
எனக்கு சரியான வேலை அமையவே இல்லை. எப்போது நிரந்தர வேலை அல்லது அரசுப்பணி கிடைக்கும்? -வெங்கட்ராகவன், கும்பகோணம்.
பதில் திருவோண நட்சத்திரம், மகர ராசி, மேஷ லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 10-ஆம் அதிபதி சனி 9-ல் வக்ரகதியில் இருப்பதால் செய்யும் வேலையில் அடிக்கடி மாற்றங் களுடன் அனுகூலங்கள் அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. செவ்வாயின் லக்னத்தில் பிறந்ததால் உங்களது முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு பொறுமையோடு செயல்பட்டால் ஒருசில ஆதாயத்தை அடையமுடியும். 10-ஆம் அதிபதி 9-ஆம் வீட்டில் இருப்பதால் வெளியூர் தொடர்புடைய பணி, பன்னாட்டு நிறுவனங் களில் வேலைக்காக முயற்சிசெய்வது நல்லது. மகர ராசியில் பிறந்த உங்களுக்கு தற்போது ஏழரைச்சனியில் கடைசி நேரமென்பதால் தற்போது சற்று பொறுமையோடு இருந்தால் விரைவில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். 1-5-2024 பிறகு ஒருசில அனுகூலங்களும் 2025 மார்ச்சுக்குபிறகு வாழ்வில் நல்ல மாற்றங் களும் உண்டாகும். நிரந்தரமான வேலை அமையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு இருந்தாலும் உங்களது முன்கோபத்தால் ஒருசில இடையூறுகளை சந்திப்பீர்கள். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.
எனக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக அர்த்தாஷ்டமச் சனி நடைபெற்ற நேரத்தில் வாழ்க்கை மிகவும் மோசமாக இருந்தது. அப்போது தொடங்கிய வீண் பழி, வம்பு வழக்குகள் எப்போது முடிவுக்கு வரும்? -ரவி, சென்னை.
பதில்: விசாக நட்சத்திரம், துலா ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்த உங்களுக்கு ஜெனன ஜாதகத்தில் சனி, குரு, கேது சேர்க்கை பெற்ற காரணத்தால் தேவையற்ற வம்பு, பிரச்சினைகள், வழக்குகளை எதிர் கொள்ளக்கூடிய நிலை உண்டாகியது. ஜெனன கால சனி கேது- குரு மீது கோட்சாரத்தில் சனி சஞ்சரித்ததால் தேவையற்ற இடையூறு களை கடந்த காலங்களில் சந்தித்தீர்கள். இனி படிப்படியான முன்னேற்றங்கள், படிப் படியான வளர்ச்சிகளை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்களுக்கு தற்போது சுக்கிர தசையில் ராகு புக்தி 5-12-2025 முடிய நடப்பதால் எதிலும் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. ராகு- சந்திரன் வீட்டில் இருப்பதால் தேவையற்ற மன குழப்பங்கள் தற்போது ஏற்படுகிறது. பெண் தெய்வங்களை வழிபாடு செய்வது, தாய்வழி குலதெய்வத்தை வழிபாடு செய்வதுமூலம் வாழ்வில் சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. ரிஷப லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 6-ல் உள்ள சுக்கிர தசையில் 3-ல் உள்ள ராகு புக்தி நடப்பதால் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தருவது, தேவையற்ற விஷயங்களை நினைத்து குழப்பிக்கொள்ளாமல் இருப்பது நல்லது. விரைவில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.