பாலமுருகன் பதில்கள்!

/idhalgal/balajothidam/balamurugan-answers-40

நான் சொந்த வீடு எப்பொழுது வாங்குவேன்? சொந்தமாக தொழில் செய்வேனா? -கரண், சென்னை.

பதில்: ரேவதி நட்சத்திரம், மீன ராசி, கும்ப லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 4-ஆம் அதிபதி சுக்கிரன் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் இருப்பது சிறப்பான அமைப்பாகும். உங்கள் ஜாதகத்தில் தற்போது சந்திர மகா தசையில் புதன் புக்தி 18-8-2024 முடிய நடக்கிறது.

பொதுவாக 4-ஆம் அதிபதியின் புக்தியில் சொத்துகள் வாங்க முயற்சித்தால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். 2025 மார்ச்சுக்குபிறகு சுக்கிர புக்தி நடக்கும். சுக்கிர புக்தி நடக்கும் தருவாயில் சொந்த வீடு வாங்க முயற்சித்தால் நல்லது நடக்க வாய்ப்பு உண்டு. உங்கள் ஜாதகத்தில் 10-ஆம் அதிபதி 12-ல் இருப்பதாலும் தற்போது 6-ஆம் அதிபதியான சந்திர தசையும் அடுத்து 12-ல் இருக்கக்கூடிய செவ்வாய் தசையும் நடப்பதால் சொந்தத் தொழிலைவிட வேலைக்கு செல்வது, பிறந்த ஊரைவிட வெளியூர் தொடர்புடைய பணிகள் மேற்கொள்வது நன்மையைத் தரும். தற்போது ஏழரைச்சனி நடப்பதால் ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.

எனக்கு எப்போது திருமணம் கைகூடும்? -சியாமளாதேவி, சென்னை.

பதில்: பரணி நட்சத்திரம், மேஷ ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 7-ஆம் அதிபதி சுக்கிரன் 10-ல் அமைந்தி ருப்பது

நான் சொந்த வீடு எப்பொழுது வாங்குவேன்? சொந்தமாக தொழில் செய்வேனா? -கரண், சென்னை.

பதில்: ரேவதி நட்சத்திரம், மீன ராசி, கும்ப லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 4-ஆம் அதிபதி சுக்கிரன் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் இருப்பது சிறப்பான அமைப்பாகும். உங்கள் ஜாதகத்தில் தற்போது சந்திர மகா தசையில் புதன் புக்தி 18-8-2024 முடிய நடக்கிறது.

பொதுவாக 4-ஆம் அதிபதியின் புக்தியில் சொத்துகள் வாங்க முயற்சித்தால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். 2025 மார்ச்சுக்குபிறகு சுக்கிர புக்தி நடக்கும். சுக்கிர புக்தி நடக்கும் தருவாயில் சொந்த வீடு வாங்க முயற்சித்தால் நல்லது நடக்க வாய்ப்பு உண்டு. உங்கள் ஜாதகத்தில் 10-ஆம் அதிபதி 12-ல் இருப்பதாலும் தற்போது 6-ஆம் அதிபதியான சந்திர தசையும் அடுத்து 12-ல் இருக்கக்கூடிய செவ்வாய் தசையும் நடப்பதால் சொந்தத் தொழிலைவிட வேலைக்கு செல்வது, பிறந்த ஊரைவிட வெளியூர் தொடர்புடைய பணிகள் மேற்கொள்வது நன்மையைத் தரும். தற்போது ஏழரைச்சனி நடப்பதால் ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.

எனக்கு எப்போது திருமணம் கைகூடும்? -சியாமளாதேவி, சென்னை.

பதில்: பரணி நட்சத்திரம், மேஷ ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 7-ஆம் அதிபதி சுக்கிரன் 10-ல் அமைந்தி ருப்பது நல்ல அமைப்பாகும். களத்திர காரகன் செவ்வாய், குரு வீட்டில் இருந்து குரு பார்வை பெறுவதும் சாதகமான அமைப்பாகும். மேஷ ராசியில் பிறந்த உங்களுக்கு வரும் மே 1-ஆம் தேதி முதல் 2-ல் குரு சஞ்சரிப்பார். தற்போது சந்திர மகா தசையில் ராகு புக்தி 2-9-2024 முடிய நடக்கிறது. அடுத்து குரு புக்தி நடக்கும் நேரத்தில் திருமண முயற்சிகள் மேற்கொண்டால் நல்லது நடக்க வாய்ப்பு உண்டு. சனி, புதன் வக்ரகதியில் இருப்பதால் மண வாழ்வில் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.

aa

எனக்கு உடல்நலம் ஆரோக்கியம், ஆயுள் பற்றி கூறவும். -ராமகிருஷ்ணன், திருப்பூர்.

பதில்: அனுஷ நட்சத்திரம், விருச்சிக ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்த உங்களுக்கு தற்போது 4-ல் நீசம்பெற்ற சந்திர தசையில் புதன் புக்தி 25-1-2025 முடிய நடக்கிறது. உங்கள் ஜாதகத்தில் சனி, செவ்வாய் வக்ரகதியில் இருப்பதாலும் சந்திர தசை நடப்பதாலும் குளிர்ச்சியான பொருட்களை உட்கொள்ளாமல் உடல்நலத்துக்கு முக்கியத்துவம் தருவது நல்லது. உடல் நல முன்னேற்றத்திற்கு பெருமாள் வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.

எனது மகளுக்கு வேலை எப்பொழுது கிடைக்கும்? திருமணம் எப்பொழுது நடக்கும்? -சாந்தி, திருச்சிராப்பள்ளி.

பதில்: விசாக நட்சத்திரம், துலா ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்த உங்கள் மகளுக்கு களத்திரகாரகன் செவ்வாய் லக்னத்தில் ஆட்சிபெற்றிருப்பது சிறப் பான அமைப்பு என்றாலும் 5-ஆம் அதிபதி குருவும், 7-ஆம் அதிபதி சுக்கிரனும் பரிவர்த்தனை பெற்றிருக்கிறது. அது மட்டுமில்லாமல் 2-ல் கேது, 7-ல் சனி, 8-ல் ராகு இருக்கிறது. தற்போது 7-ல் இருக்கக்கூடிய சனி மகா தசையில் குரு நட்சத்திரத்தில் அமையப்பெற்ற சூரிய புக்தி 6-9-2024 முடிய நடப்பதால் திருமண முயற்சிகள் மேற்கொண்டால் இந்த ஆண்டு இறுதிக்குள் நல்லது நடக்கக்கூடிய வாய்ப்புகள் இருந்தாலும் மணவாழ்வில் விட்டுக்கொடுத்து செல்லவேண்டிய ஜாதக மாகும்.

7-ஆம் அதிபதி பரிவர்த்தனை பெற்றிருப்பதால் திருமணத்திற்காக வரன் பார்க்கின்றபொழுது முத-ல் சில இடையூறுகளும் அதன்பின் வாழ்க்கை அமையக்கூடிய நிலையும் உண்டாகும். 7-ல் இருக்கக்கூடிய சனி தசை நடப்பதால் எதிலும் பொறுமை காப்பது மிகமிக நல்லது.

எனது மகனுக்கு ராகு தசை எப்படியிருக்கும்? சிவில் சர்வீஸ் தேர்விற்கு தயாராகி வருகிறார்.

அரசு துறையில் வேலை அமையுமா? அல்லது தனியார் துறையில் வேலை அமையுமா? -ஆகாஷ், சிவகாசி.

பதில்: கிருத்திகை நட்சத்திரம், ரிஷப ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்த உங்கள் மகனுக்கு தற்போது லக்னத் திற்கு 7-ல் இருக்கக்கூடிய ராகு மகா தசை நடக்கிறது. சூரிய நட்சத்திரத்தில் அமையப்பெற்ற ராகு மகா தசை நடப்பதால் வயது மூத்தவர்களிடம் வாக்குவாதங்கள் செய்யாம-ருப்பது நல்லது. விருச்சிக லக்னத்தில் பிறந்த உங்கள் மகனுக்கு 10-ஆம் அதிபதி சூரியன் கேந்திர ஸ்தானமான 7-ல் உள்ளார். 10-ஆம் அதிபதி வலுவாக இருந்தால்தான் உயரிய பதவியை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். செவ்வாய் உச்சம் பெற்றிருப்பதால் நிர்வாக திறன் சிறப்பாக இருக்கும் என்றாலும் தற்போது ராகு மகா தசை நடப்பதால் அரசுத்துறையைவிட பன்னாட்டு நிறுவனத் தில் வேலைக்காக முயற்சிசெய்வது, கற்ற கல்வியின்மூலமாக வேலைக்காக முயற்சி செய்வதன்மூலம் நல்ல நிலையினை அடையமுடியும்.

எனது இரண்டு பெண் குழந்தைகளின் படிப்பு எப்படியிருக்கும்? -சரவணன், சேலம்.

பதில்: திருவோண நட்சத்திரம், மகர ராசி, கடக லக்னத்தில் பிறந்த உங்கள் மகள்கள் ஜாதகத்தில் கல்வி காரகன் புதன் 4-ல் அமையப்பெற்று, 4-ஆம் அதிபதி சுக்கிரன் 4-ல் ஆட்சி பெற்றிருப்பது சிறப்பான அமைப்பு என்ற காரணத்தால் மகள்களின் படிப்பு சிறப்பாக இருக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. மகள்கள் ஜாதகத்தில் சூரியன்- கேது சேர்க்கைப் பெற்றிருப்பதாலும், சந்திரன்- சனி சேர்க்கைப் பெற்றிருப்பதாலும், தற்போது ஏழரைச்சனி நடப்பதாலும் தாய்க்கு சின்ன சின்ன உடல் உபாதைகள், குடும்பத்தில் நிம்மதி குறைவு இருக்கும். தற்போது சந்திர மகா தசை நடப்பதால் குளிர்ச்சியான உணவுகளைத் தவிர்ப்பது மிகமிக நல்லது. 2025 மார்ச் 29-ஆம் தேதி முதல் ஏழரைச் சனி முடிந்தால் மகள்களின் ஆரோக்கியமும் எதிர்காலமும் சிறப்பாக இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.

என்னுடைய கடன்களை அடைத்து, என்னுடைய பூர்வீக ஊருக்கு செல்வேனா? -தணிகாசலம், கள்ளக்குறிச்சி.

பதில்: ரேவதி நட்சத்திரம், மீன ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்த உங்களுக்கு தற்போது சந்திர மகா தசை நடப்பதால் பிறந்த ஊரைவிட வெளியூர் தொடர்புகள் ஏற்பட்டிருக்கிறது. தற்போது ஏழரைச்சனி நடப்பதால் கடன் தொல்லை உள்ளது. சனியை குரு பார்க்கின்றபோது பிறந்திருப் பதால் வாங்கிய கடனை அடைக்ககூடிய சக்தி உங்களுக்கு உண்டாகும். ஜெனன ஜாதகத்தில் சூரியன்- குரு சாரம் பெற்றிருப்பதாலும், அதுபோல குரு தனது சாரம் பெற்றிருப்பதாலும் அடுத்து வரக் கூடிய செவ்வாய் தசை காலத்தில் கடன்களை குறைத்துக்கொண்டு பிறந்த ஊர் செல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டா கும். தற்போது ஏழரைச்சனி நடப்பதாலும் சந்திர தசை நடப்பதாலும் பெருமாள் வழிபாடு மேற்கொள்வது, ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வதன் மூலம் வளமான பலன்களை அடைய முடியும்.

bala080324
இதையும் படியுங்கள்
Subscribe