னது மனைவி மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி என்னிடம் விவாகரத்து கேட்டுக் கொண்டேயுள்ளார். அதிலிருந்து எப்போது மீள்வார். வாழ்க்கை எப்படியிருக்கும்? -சண்முகம், வேலூர்.

பதில்: அவிட்ட நட்சத்திரம், கும்ப ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்த உங்கள் மனைவிக்கு லக்னாதிபதி சூரியன்- கேது சேர்க்கைப்பெற்று 3-ல் உள்ளது. உங்கள் மனைவிக்கு தற்போது ஏழரைச்சனியில் ஜென்மச் சனி நடப்பதும், சனி தசையில் சுய புக்தி நடப்பதும் சாதகமற்ற அமைப்பாகும். கோட்சாரத் தில் 2-ல் ராகு வந்திருப்பதும் தேவையற்ற நெருக்கடி களை ஏற்படுத்தக்கூடிய அமைப் பாகும். சனி தசையில் சனி புக்தி நடப்பதாலும் ஏழரைச்சனி நடப்பதாலும் பைரவர் வழிபாடு, ஆஞ்சனேயர் வழிபாடுகள் மேற்கொள்ளவும். 2025 ஏப்ரல் வாக்கில் ஜென்மச் சனி முடிகின்றபொழுது குறிப்பாக குருவும் மே மாதத்தில் இருந்து 5-ல் இருக்கின்றபொழுது நல்ல மாற்றங் கள் ஏற்படும்; பொறுமை காக்க வும்.

நான் தற்போது 10-ஆம் வகுப்பு படிக்கின்றேன். எந்தத் துறை சார்ந்த வேலை அல்லது தொழில் எனக்கு சிறப்பாக அமையும்? அதற்கு ஏற்ற படிப்பை எடுத்து 11-ஆம் வகுப்பில் சேர்ந்து படிக்கவேண்டும். -ஷெர்லி, திருநெல்வேலி.

பதில்: திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி, கடக லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 4-ஆம் அதிபதி சுக்கிரன் 10-ல் அமையப்பெற்று செவ்வாயுடன் இணைந்திருப்பது நல்ல அமைப்பாகும். கல்விக்காரகன் புதனும் லாப ஸ்தானத்தில் இருப்பது சிறப்பான அமைப்பாகும். சுக்கிரன், செவ்வாய் சேர்க்கைப் பெற்று இரு கிரகங்களும் சுக்கிர நட்சத்திரத்தில் இருப்பதால் நிர்வாகம், டெக்னிக்கல் தொழில்நுட்ப தொடர்புடைய கல்வி யோகம் சிறப்பாக இருக்கும். நிர்வாகம் சார்ந்த பணியில் செல்வதற்கான படிப்பை படித்தால் எதிர்காலம் நன்றாக இருக்கும். குரு வக்ரகதியில் இருந்து குரு தசை 9-8-2025 முடிய நடப்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருப்பது நல்லது.

Advertisment

நான் தற்போது தனியார் பள்ளியில் பத்து வருடங் களாக ஆசிரியராக பணிபுரிகிறேன் எனக்கு அரசு பள்ளியில் ஆசிரியராக நிரந்தரப் பணி எப்போது கிடைக்கும்? -யுவராஜ், ஈரோடு.

aa

பதில்: கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 10-ஆம் அதிபதி சுக்கிரன், சூரியன், செவ்வாய் சேர்க்கைப் பெற்று ஜென்ம லக்னத்தில் இருப்பது சிறப்பான அமைப்பாகும். அது மட்டுமின்றி சந்திரனுக்கு 10-ல் சூரியன் ஆட்சிபெற்று இருப்பது நல்ல அமைப் பாகும். மனம் தளராமல் முயற்சி செய்யவும். விரைவில் ஒருசில நல்லமாற்றங்கள் உங்களுக்கு கிடைக்கும். பிறக்கின்றபொழுது சனி- சந்திரன் சேர்க்கைப்பெற்று இருப்பதால் தேவையற்ற மனக்கவலை, வாழ்வில் முன்னேற இடையூறுகள் ஏற்படுகிறது. குலதெய்வ வழிபாடு, காலபைரவர் வழிபாடு மேற்கொள்ளவும். விரைவில் ஒரு நல்ல மாற்றங்கள் ஏற்படும்.

எனது மகனுக்கு திருமணம் எப்போது நடக்கும்? -கணேஷ், வேலூர்.

பதில்: மிருகசீரிஷ நட்சத்திரம், ரிஷப ராசி, கன்னி லக்னத்தில் பிறந்த உங்கள் மகனுக்கு களத்திர காரகன் சுக்கிரன் 9-ல் ஆட்சி பெற்றிருப்பது சிறப்பான அமைப்பாகும். 7-ஆம் அதிபதி குரு வக்ரகதியில் இருப்பதால் வரன் பார்ப்பதில் ஒருசில தடைகள் இருக்கும். உங்கள் மகனுக்கு தற்போது குரு தசையில் கேது புக்தி 1-9-2024 முடிய நடக்கிறது. அடுத்து சுக்கிர புக்தி வரும் தருவாயில் நல்ல வரன் அமைய வாய்ப்புகள் உண்டு. குரு வக்ரகதியில் இருப்பதால் தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, உறவில்லாமல் அந்நியத்தில் வரன் பார்ப்பது நல்லது.

எனக்கு பெயரில் இடம் வாங்கி வீடு கட்டினால் சிறப்பாக இருக்குமா அல்லது எனது மகளின் பெயரில் இடம் வாங்கி வீடு கட்டலாமா?

பதில்: அவிட்ட நட்சத்திரம், கும்ப ராசி, தனுசு லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 4-ஆம் அதிபதி குரு லக்ன கேந்திரம் பெற்றிருப்பது நல்ல அமைப்பாகும். 4-ஆம் அதிபதி லக்னத் தில் ஆட்சி பெற்றிருப்பதால் உங்கள் பெயரில் வீடு வாங்குவது தவறல்ல. உங்கள் பெயரிலேயே முதலீடு செய்ய முயற்சி செய்வது சாதகமான பலனை தரும். உங்கள் ஜாதகத்தில் மகளை குறிக்கக்கூடிய கிரகமான சுக்கிரனும் 3-ல் இருந்தாலும் பாவகப்படி 4-ல் இருப்பதால் வீடு வாங்குகின்றபொழுது விருப்பப்பட்டால் உங்களது மகள் பெயரை யும் இணைத்துக்கொள்ளலாம் தவறல்ல. தற்போது ஏழரைச்சனி நடப்பதால் வீடு வாங்குகின்றபொழுது அதிகமாக கடன் வாங்காமல் செய்தால் நல்லது. ஏழரைச்சனி நடப்பதால் ஆஞ்சனேயர் வழிபாடு, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.

எனக்கு அரசு வேலை கிடைப்பதற்கான அனுகூலங்கள் உள்ளதா அப்படியிருந்தால் எப்போது கிடைக்கும்? -ஜெயராமன், சென்னை.

பதில்: ஆயில்ய நட்சத்திரம், கடக ராசி, கடக லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 10-ஆம் அதிபதி செவ்வாய்- ராகு சேர்க்கைப்பெற்று 3-ல் உள்ளார். தற்போது உங்களுக்கு நடப்பது சுக்கிர தசை 23-3-2030 முடிய நடக்கிறது. குறிப்பாக செவ்வாய்- ராகு சேர்க்கைப் பெற்றிருப்பதால் நிர்வாகத் தொடர்புடைய பணிகளில் முயற்சிசெய்வது நன்மையைத் தரும். ராகு தொடர்பு வருகின்ற பொழுது வெளியூர், தனியார் துறை, பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்வதற்கான முயற்சிகள் மேற்கொண்டால் அனுகூலப் பலன் அடையக் கூடிய வாய்ப்புகள் உண்டு. ஒரு ஜாதகத்தில் 10-ஆம் வீட்டில் சூரியன் இருந்தால்தான் அரசு வேலை எனக் கூறலாம்.

உங்கள் ஜாதகத்தில் செவ்வாய்- ராகு சேர்க்கைப் பெற்றிருப்பதால் தனியார் துறை, பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. செவ்வாய்- ராகு சேர்க்கைப் பெற்றிருப்பதால் முன் கோபத்தைக் குறைத்துகொண்டு எதிலும் பொறுமையோடு செய்யப்பட்டால் ஒரு வளமான பலன்களை அடையமுடியும்.