என் கல்வி மற்றும் எதிர்காலம் எப்படியிருக்கு மென்று கூறுங்கள். -ஹரினி, சென்னை.

பதில்: பூச நட்சத்திரம், கடக ராசி, தனுசு லக்னத்தில் பிறந்த ஜாதகிக்கு 4-ஆம் அதிபதி குரு லக்னத்தில் ஆட்சிபெற்று இருப்பதும், 10-ல் புதன் ஆட்சி, உச்சம்பெற்று செவ்வாய் சேர்க்கைப்பெற்று இருப்பதும் சிறப்பான அமைப்பாகும். 4-ஆம் அதிபதியும், புதனும் வலுவாக இருப்பதால் நல்ல அறிவாற்றல், சிறப்பான கல்வி யோகம், மற்றவர்களுக்கு வழிகாட்டியாக விளங்கக்கூடிய யோகம் உண்டு. செவ்வாய் 10-ல் வலுவாக இருப்ப தால் நிர்வாகப் பணிகளில் அமரக்கூடிய யோகம், கல்வித் தகுதியால் ஒரு உயர்வான நிலையினை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு.

நான் இரண்டு வருடங்களாக மத்திய அரசு வேலைக்கு முயற்சி செய்துவருகிறேன். எனக்கு அரசு வேலை எப்போது கிடைக்கும்? -சிவா, கன்னியாகுமரி.

பதில்: பரணி நட்சத்திரம், மேஷ ராசி, கன்னி லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 10-ஆம் அதிபதி புதன் லக்னத்தில் ஆட்சி, உச்சம்பெற்றிருப்பது நல்ல அமைப்பாகும். 10-ல் சூரியன் வலுவாக இருந்தால் அரசு வேலை கிடைக்கும் என கூறலாம். உங்களுக்கு 10-ஆம் அதிபதி புதன் என்ற காரணத்தால் கணக்கு, கம்ப்யூட்டர் கல்வித்துறைகளில் வேலைக்காக முயற்சி செய்கின்றபொழுது நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் ஜாதகத்தில் தற்போது 8-ல் மறைந்த சந்திர தசையில் ராகு புக்தி 21-7-2025 முடிய நடக்கிறது. சந்திரன்- சனி சேர்க்கைப்பெற்றிருப்ப தால் வெளியூர், வெளிமாநிலங்களில் சென்று பணிபுரியக்கூடிய வாய்ப்புகளுக்கு முயற்சி செய்யவும். 2025 ஜூலைக்கு பிறகு சந்திர தசையில் குரு புக்தி காலத்தில் நல்லவாய்ப்புகள் கிடைக்கும்.

Advertisment

ww

எனது தொழில் அமைப்பு எவ்வாறு இருக்கும், திருமண வாழ்க்கை எப்போது ஆரம்பிக்கலாம், சொந்தத் தொழில் ஆரம்பிக்கலாமா? -கோகுல் ராஜா, நாமக்கல்.

பதில்: சதய நட்சத்திரம், கும்ப ராசி, கடக லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 10-ஆம் அதிபதி செவ்வாய் 6-ல் கேது சேர்க்கை பெற்றிருக்கிறார். 10-ஆம் அதிபதி செவ்வாய் என்ற காரணத்தால் நல்ல நிர்வாக திறனுடன் வேலைக்கு சென்று சம்பாதிக்கக்கூடிய யோகம் உங்களுக்கு உண்டு. குறிப்பாக கடக லக்னத்தில் பிறந்த உங்களுக்கு தற்போது பாதக ஸ்தானமான 11-ல் சனி அமையப்பெற்ற தசை நடைபெறுவதால் சொந்தத் தொழில் முயற்சியை தவிர்த்துவிட்டு வேலைக்குச் செல்வது மிகமிக நல்லது. களத்திரகாரகன் சுக்கிரன் லக்ன கேந்திரம் பெற்று 7-ஆம் அதிபதி 11-ல் இருப்பதால் எதிர் கால திருமண வாழ்க்கைச் சிறப்பாக இருக்கும். தற்போது சனி தசையில் சுயபுத்தி 15-6-2024 முடிய நடக்கிறது. அடுத்து நடைபெற இருக்கக்கூடிய புதன் புக்தி முடியும் தருவாயில் 25, 26 வயதில் திருமணம் முயற்சிகள் மேற் கொள்ளலாம். ஏழரைச்சனியும், சனி தசையும் நடப்பதால் ஆஞ்சனேயர் வழிபாடு, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.

எனக்கு திருமணம் எப்போது நடக்கும்? எந்த வேலை சிறப்பாக இருக்கும்?

பதில்: திருவோண நட்சத்திரம், மகர ராசி, மீன லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 7-ஆம் அதிபதி புதன் 6-ல் கேது நட்சத்திரத் தில் இருப்பதும், 7-ல் சுக்கிரன் நீசம் பெற்றிருப்ப தும் சாதகமற்ற அமைப்பாகும். 2-ல் கேது, 8-ல் ராகு இருந்து தற்போது ராகு தசையில் சுக்கிர புக்தி 4-9-2024 முடிய நடப்பதால் அமையும் வாழ்க்கையில் விட்டுக்கொடுத்து செல்வது, அந்நியத்தில் திருமண முயற்சிகள் மேற்கொள்வது நற்பலனைத் தரும். 2, 8-ல் கேது- ராகு இருந்தாலும் பாவகரீதியாக 3-ல் கேது, 9-ல் ராகு இருப்பதால் பெரிய கெடுதி யின்றி சற்று சாதகமானப் பலன் கிடைக்கும். வரும் 1-5-2024 முதல் குரு 5-ல் கோட்சார ரீதியாக சஞ்சரிக்கின்றபொழுது திருமண முயற்சிகள் மேற்கொள்ளலாம். திருமண முயற்சிகள் மேற்கொண்டாலும் சுக்கிரன் நீசம்பெற்று புதன், கேது சாரம்பெற்று இருப்பதால் மணவாழ்க்கையில் விட்டுக் கொடுத்து செல்லவேண்டும். உங்கள் ஜாதகத்தில் 10-ஆம் அதிபதி குரு, ராகு சேர்க்கைப்பெற்று 8-ல் மறைந்துள்ளார். 10-ஆம் அதிபதி குரு என்ற காரணத்தால் பணப்புழக்கம் தொடர்புடைய பணி, மக்கள் தொடர்புடைய பணிகள் மேற்கொள்ளலாம். ராகு பாவகரீதியாக 9-ல் இருந்து தசை நடப்பதால் வெளியூர், வெளி மாநிலங்களில் வேலைக்காக முயற்சிசெய்வது நற்பலனைத் தரும். 29-3-2025-ல் ஏழரைச்சனி முடிகின்றபொழுது வாழ்வில் நல்லமாற்றங்கள் ஏற்படும். தற்போது ராகு தசை நடப்பதால் அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது நல்லது.

எனது மகளுக்கு வங்கிப்பணி எப்போது கிடைக்கும் மற்றும் திருமணம் எப்போது நடக்கும்?

பதில்: பூச நட்சத்திரம், கடக ராசி, மீன லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகள் ஜாதகத்தில் 10-ஆம் அதிபதி குரு 10-ல் ஆட்சிபெற்று உடன் புதன் இணைந்திருப்பது அற்புதமான அமைப்பாகும். 10-ஆம் அதிபதி குரு வலுவாக இருப்பதால் வங்கிப்பணி, பணப்புழக்கம் தொடர்புடைய இடங்களில் பணிபுரியக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. தற்போது கேது தசை நடப்பதால் குறிப்பாக கேது 8-ல் இருப்பதால் தேவையற்ற இடையூறுகள் ஏற்படும். 23-10-2026 முதல் உங்கள் மகளுக்கு சுக்கிர மகா தசை நடக்கும் தருவாயில் நல்ல வேலை கிடைக்கக்கூடிய வாய்ப்புகள், சிறப்பான மணவாழ்க்கை அமையக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. தற்போது கேது தசை நடப்பதால் கிடைக் கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வது, கல்வி தகுதியை வளர்த்துக்கொள்வது நல்லது. உங்கள் மகளுக்கு 7-ஆம் அதிபதி குரு ஆட்சி பெற்றிருப்பதாலும், சூரியன், சுக்கிரன், சந்திரன் ஆட்சி பெற்றிருப்பதாலும் எதிர்கால வாழ்க்கை சிறப்பாக இருக்கும். செவ்வாய் ராகு சாரம்பெற்று வக்ரகதியில் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, இயற்கை உணவுகளை உட்கொள்வது நல்லது. 2026-க்கு பிறகு வர இருக்கக்கூடிய சுக்கிர மகா தசையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தற்போது விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.

நான் சொந்தத் தொழில் (தையல் கடை) செய்வதற்கான வாய்ப்பு இருக்கிறதா? அப்படி செய்தால் லாபம் கிடைக்குமா? அதற்கான நேரம் எது? எனது குடும்ப வாழ்க்கை மற்றும் எதிர்காலம் எப்படி இருக்கிறது. -தங்கம், கோவில்பட்டி.

பதில்: பூராட நட்சத்திரம், தனுசு ராசி, துலா லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 10-ஆம் அதிபதி சந்திரன் 3-ல் அமையப்பெற்று 3-ஆம் அதிபதி குரு 10-ல் அமையப்பெற்று குரு, சந்திரன் பரிவர்த்தனை பெற்றபோது பிறந்துள்ளீர்கள். உங்களுக்கு கடந்த வருடத்தில் ஏழரைச்சனி முடிந்தது சிறப்பான அமைப்பு. தற்போது உங்களுக்கு துலா லக்னத்திற்கு 3, 6-க்கு அதிபதியான குரு தசை நடந்தாலும் குரு வக்ரகதியில் இருப்பதால் சொந்தத் தொழில் செய்வதை விட வேலைக்குச் செல்வது மிகமிக நல்லது. 2023 ஒப்பிடுகின்றபொழுது 2024-ல் பொருளாதார முன்னேற்றங்கள் இருக்கும். பொதுவாக நீங்கள் பணத்தை முதலீடு செய்வதைவிட வேலைக்கு செல்வது, கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. ஜென்ம லக்னத்தில் கேது, 7-ல் ராகு அமையப்பெற்று 7-ஆம் அதிபதி செவ்வாய்- கேது சேர்க்கைப் பெற்றிருப்பதால் குடும்ப வாழ்வில் விட்டுக் கொடுத்து சென்றால்தான் வாழ்க்கை நன்றாக இருக்கும். தற்போது வக்ர குரு தசை நடைபெறுவதால் பிறரை நம்பி பணம் கொடுக்காமல் இருப்பது மிகமிக நல்லது. தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொண்டால் வருகின்ற நாட்களில் முன்னேற்றத்தை அடையலாம்.

நான் சொந்தத் தொழில் செய்கிறேன். எனக்கு நல்ல வேலையாட்கள் நிரந்தரமாக அமைய என்ன செய்யவேண்டும்? -ரவி, திருப்பூர்.

பதில் மக நட்சத்திரம், சிம்ம ராசி, மகர லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 10-ஆம் அதிபதி சுக்கிரன் 2-ல் அமைந்திருப்பது சிறப்பான அமைப்பாகும். ஜென்ம லக்னத்தில் சனி ஆட்சிபெற்று, செவ்வாய் உச்சம்பெற்றிருப்பதும் நல்ல முன்னேற் றத்தை தரக்கூடிய அமைப்புதான். சொந்தத் தொழில் யோகம் சிறப்பாக இருந்தாலும் வேலையாட்களைக் குறிக்கக்கூடிய கிரக மான சனி- செவ்வாய், கேது சேர்க்கைப் பெற்றிருப்பதால் வேலையாட்களால் தேவையற்ற நிம்மதிக்குறைவு ஏற்படுகிறது. வேலையாட்களை கையாளும்பொழுது பேச்சில் நிதானத்தையும், பொறுமையும் கடைப்பிடிப்பது நல்லது. தற்போது ராகு தசை நடப்பதால் அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வதும், விநாயகர் வழிபாடு மேற்கொள்வதும் உங்களுக்கு நற்பலனைத் தரும்.