எனது மனைவியுடன் இணைந்து வாழ்வது எப்போது?
பதில்: ரேவதி நட்சத்திரம், மீன ராசி, கன்னி லக்னத்தில் பிறந்த ஜாதகருக்கு லக்னத் தில் கேது, 7-ல் ராகு அமையப் பெற்று, குறிப்பாக லக்னத்தில் சூரியன், கேது அமையப்பெற்று தற்போது சூரிய தசை நடைபெறுவதால் குடும்ப ஒற்றுமை பாதிக்கிறது.
தற்போது சூரிய தசையில் புதன் புக்தி 11-3-2024 முடிய நடக்கிறது. அடுத்து கேது புக்தி 17-7-2024 முடிய நடக்கும். சூரிய தசையில் கேது புக்திக்கு பின்பு சுக்கிர புக்தி வருகின்றபொழுது குடும்ப ஒற்றுமை ஏற்பட வாய்ப்புண்டு. பிறக்கின்றபோது சுக்கிரன் வலுவாக இருக்கின்றபோது பிறந் திருப்பதால் தற்போது ஏற்பட்டிருப்பது தற்கா-க பிரச்சினையே தவிர நிரந்தர பிரச்சினையில்லை. பொறுமை காக்கவும். விநாயகர் வழிபாடு, குலதெய்வ வழிபாடு செய்வது நல்லது.
என் எதிர்காலம் எப்படி இருக்கும்? பதவி உயர்வு எப்போது கிடைக்கும்?
பதில்: அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்த உங்களுக்கு தற்போது சந்திர தசையில் சனி புக்தி 8-12-2024 முடிய நடக்கிறது. தசாநாதன் சந்திரனுக்கு 8-ல் உள்ள சனி புக்தி நடப்பதால் தேவையற்ற மனகுழப்பம், நிம்மதியில்லாத நிலை, உடல் பலவீனம் ஏற்படுகிறது. 8-12-2024 முதல் புதன் புக்திவரும் தருவாயில் பதவி உயர்வுகள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. எதிர்காலம் சிறப்பாக இருக்கும். பெருமாள் வழிபாடு நற்பலனைத் தரும்.
என்னுடைய மகனுக்கு திருமண எப்பொழுது நடக்கும்? -விஜய ராமு. பள்ளிகரணை.
பதில்: புனர்பூச நட்சத்திரம், கடக ராசி, மகர லக்னத்தில் பிறந்த உங்கள் மகனுக்கு 7-ஆம் அதிபதி சந்திரன் 7-ல
எனது மனைவியுடன் இணைந்து வாழ்வது எப்போது?
பதில்: ரேவதி நட்சத்திரம், மீன ராசி, கன்னி லக்னத்தில் பிறந்த ஜாதகருக்கு லக்னத் தில் கேது, 7-ல் ராகு அமையப் பெற்று, குறிப்பாக லக்னத்தில் சூரியன், கேது அமையப்பெற்று தற்போது சூரிய தசை நடைபெறுவதால் குடும்ப ஒற்றுமை பாதிக்கிறது.
தற்போது சூரிய தசையில் புதன் புக்தி 11-3-2024 முடிய நடக்கிறது. அடுத்து கேது புக்தி 17-7-2024 முடிய நடக்கும். சூரிய தசையில் கேது புக்திக்கு பின்பு சுக்கிர புக்தி வருகின்றபொழுது குடும்ப ஒற்றுமை ஏற்பட வாய்ப்புண்டு. பிறக்கின்றபோது சுக்கிரன் வலுவாக இருக்கின்றபோது பிறந் திருப்பதால் தற்போது ஏற்பட்டிருப்பது தற்கா-க பிரச்சினையே தவிர நிரந்தர பிரச்சினையில்லை. பொறுமை காக்கவும். விநாயகர் வழிபாடு, குலதெய்வ வழிபாடு செய்வது நல்லது.
என் எதிர்காலம் எப்படி இருக்கும்? பதவி உயர்வு எப்போது கிடைக்கும்?
பதில்: அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்த உங்களுக்கு தற்போது சந்திர தசையில் சனி புக்தி 8-12-2024 முடிய நடக்கிறது. தசாநாதன் சந்திரனுக்கு 8-ல் உள்ள சனி புக்தி நடப்பதால் தேவையற்ற மனகுழப்பம், நிம்மதியில்லாத நிலை, உடல் பலவீனம் ஏற்படுகிறது. 8-12-2024 முதல் புதன் புக்திவரும் தருவாயில் பதவி உயர்வுகள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. எதிர்காலம் சிறப்பாக இருக்கும். பெருமாள் வழிபாடு நற்பலனைத் தரும்.
என்னுடைய மகனுக்கு திருமண எப்பொழுது நடக்கும்? -விஜய ராமு. பள்ளிகரணை.
பதில்: புனர்பூச நட்சத்திரம், கடக ராசி, மகர லக்னத்தில் பிறந்த உங்கள் மகனுக்கு 7-ஆம் அதிபதி சந்திரன் 7-ல் வலுவாக இருப்பதும், களத்திர காரகன் சுக்கிரன் உச்சம் பெற்றிருப்பதும் மிகச்சிறப் பான அமைப்பாகும். தற்போது புதன் தசையில் ராகு புக்தி 9-3-2026 முடிய நடக்கிறது. ராகு 11-ல் இருப்பதால் சாதகமான பலன்தான் ஏற்படும். வரும் மே மாதத்திற்கு பிறகு நல்லவரன் அமையக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்ளவும்; நல்லது நடக்கும்.
எனது மகன் 4-ஆம் ஆண்டு பொறியியல் படிக்கிறார். நடக்கும் ராகு தசை எப்படியிருக்கும்? அரசு அல்லது தனியார் துறையில் அமையுமா? எதிர்காலம் எப்படியிருக்கும்? -கிருஷ்ணகுமார், மதுரை.
பதில்: கிருத்திகை நட்சத்திரம், ரிஷப ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்த உங்கள் மகனுக்கு சந்திரன், குரு, செவ்வாய் ஆகிய கிரகங்கள் உச்சம் பெற்றிருப்பது சிறப்பான அமைப்பாகும். 10-ஆம் அதிபதி சூரியன் கேந்திர ஸ்தானமான 7-ல் சந்திரனுடன் இணைந்திருப்பது ஒரு நல்ல பணியில் அமரக்கூடிய ஒரு அதிர்ஷ்டத்தைத் தரும். அரசு, அரசு சார்ந்த துறையில்கூட வேலைக்காக முயற்சித்தால் நல்லவாய்ப்புகள் கிடைக்கும். தற்போது ராகு தசை நடப்பதால் ராகு 7-ல் உள்ள காரணத்தால் வெளியிடங்களுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள், வெளி மாநிலங்களுக்கு செல்லக்கூடிய யோகம் உண்டு. வேலைவாய்ப்பு சம்பந்தப்பட்ட விஷயங்கள் சிறப்பாக இருக்கும். 7-ல் உள்ள ராகு தசை என்ற காரணத்தினால் திருமண வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயத்தில் சற்று கவனத் தோடு இருக்கவேண்டும்.
எனது மகள் திருமண எப்பொழுது நடக்கும், எந்த திசையில் வரன் அமையும், ராகு தசையில் திருமணம் செய்யலாமா, அரசு வேலை வாய்ப்புண்டா?
பதில்: திருவோண நட்சத்திரம், மகர ராசி, மகர லக்னத்தில் பிறந்த உங்கள் மகளுக்கு 7-ஆம் அதிபதி சந்திரன் லக்ன கேந்திரம் பெற்றிருப்பது சிறப்பான அமைப்பாகும். செவ்வாய் 12-ல் இருந்தாலும் பரிவர்த்தனை பெற்றிருப்ப தால் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். ஜாதகத்தில் சனி, செவ்வாய், சூரியன், சுக்கிரன் நான்கு கிரகங்கள் பரிவர்த்தனை பெற்றிருப்பதால் ஒரு சில தடைக்குப்பிறகு அனுகூலங்கள் உண்டு. 7-ல் ராகு இருந்து ராகு தசை நடப்பதால் திருமண வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக கையாள வேண்டிய நேரமாகும். ராகு தசை சந்திர புக்தி 5-5-2024 முதல் நடப்பதால் மே மாதத்திற்கு பிறகு திருமண வாய்ப்புண்டு. ராகு தசையில் திருமணம் செய்தாலும் ராகு தசை முடியும்வரை மணவாழ்க்கையில் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. 10-ஆம் அதிபதி சுக்கிரன் பரிவர்த்தனை பெற்றிருக்கிறது. பரிவர்த்தனை பெற்றிருக்கின்ற காரணத்தால் முத-ல் ஒரு பணியில் இணைந்து அதன்பிறகு வாழ்வில் ஒரு முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டு முன்னேற்றம் உண்டாகும். 10-ஆம் அதிபதி சுக்கிரன் பரிவர்த்தனை பெற்றிருப்பதாலும், புதன் 10-ல் வலுவாக இருப்பதாலும் அரசு துறையைவிட தனியார்துறை, பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிவதற்கான முயற்சிகள் மேற்கொண்டால் நல்லது நடக்க வாய்ப்புண்டு. குரு, சனி வக்ரகதியில் இருப்பதால் எதிலும் சற்று பொறுமையோடு இருப்பது வாழ்வில் முன்னேற்றத்தைத் தரும்.
கணவன்- மனைவி இருவரும் பிரிந்துள்ளனர். மறுபடியும் சேர்ந்து வாழ்வது எப்போது?
பதில்: பெண்ணின் ஜாதகத்தில் பூச நட்சத்திரம், கடக ராசி, துலா லக்னம், 7-ஆம் அதிபதி செவ்வாய் 11-ல் சூரியன் வீட்டி-ருக்கிறார். செவ்வாய்- கேது சாரம் பெற்றாலும், சூரியன் வீட்டி-ருப்பது சாதகமான அமைப்பே. பெண்ணுக்கு தற்போது 12-ல் ஆட்சிபெற்ற புதன் தசை நடப்பது இல்லற வாழ்க்கைரீதியாக அனுகூலமான அமைப்புதான். ஆண் ஜாதகத்தில் 7-ஆம் அதிபதி செவ்வாய் 4-ல் அமையப்பெற்று 4-ஆம் அதிபதி சூரியன் 7-ல் அமையப்பெற்று சூரியன்- செவ்வாய் பரிவர்த்தனை பெற்றிருக்கிறது. சுக்கிரன், ராகு, சந்திரன் இணைந்து இருக்கிறது. சுக்கிரன் ராகு இணைந்திருந்து தற்போது குரு மகா தசையில் ராகு புக்தி 12-7-2025 முடிய ராகு புக்தி நடப்பதால் மனைவியிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படுகிறது. ராகு புக்தி நடப்பதால் முன்கோபத்தாலும், மூன்றாவது நபர் தலையிட்டாலும் குடும்ப ஒற்றுமை பாதிக்கிறது. ராகு கடந்து அடுத்து சனி தசை வருகின்ற பொழுது கண்டிப்பாக கணவன்- மனைவியிடையே ஒற்றுமை ஏற்பட வாய்ப்புண்டு. தற்போதைக்கு சற்று பொறுமையோடு இருப்பது நல்லது.
எனது மகள் படிக்கிறாள், படிப்பை நல்லபடியாக முடிப்பாளா, திருமண எப்பொழுது நடக்கும்? -நாராயணன், சென்னை.
பதில்: பூச நட்சத்திரம், கடக ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்த ஜாதகிக்கு 4-ஆம் அதிபதி சூரியன் 9-ல் இருப்பது நல்ல அமைப்பு என்றாலும், 5-ஆம் அதிபதியும், கல்வி காரகனுமான புதன் வக்ரகதியில் 9-ல் இருப்பது அவ்வளவு சிறப்பான அமைப்பில்லை. பொதுவாக புதன் வக்ரகதியில் இருந்தால் படிப்பில் தேவையற்ற இடையூறுகள், படித்த படிப்பை முழுமையாக பயன்படுத்த தடங்கல்கள், குறிப்பாக படித்த துறையை விட்டு வேறு ஒரு துறைக்குச் செல்லக் கூடிய அமைப்புகள் உண்டாகும். சூரியன், புதன் இணைந்திருப்பது நல்ல அறிவாற்றலை தரக்கூடிய அமைப்பு என்றாலும் புதன் வக்ரகதியி-ருப்பதால் சற்று கவனத்தோடு கையாள்வது நல்லது. பெண் ஜாதகத்தில் சனி, குரு, புதன் ஆகிய கிரகங்கள் வக்ரகதியில் இருப்பதால் எண்ணங்களில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. வேலை சம்பந்தப்பட்ட விஷயத்தில்கூட ஒரு பணியில் சேர்ந்து அதிலே நிரந்தரமாக இல்லாமல் அடிக்கடி வேலை மாறக்கூடிய அமைப்புகள் ஏற்படும். பெண் ஜாதகத்தில் 7-ஆம் அதிபதி செவ்வாய் 11-ல் சிறப்பாக இருப்பதால் மணவாழ்க்கை சிறப்பாக அமையும். மூன்று கிரகங்கள் வக்ரம் பெற்றிருப்பதால் தாமதம் செய்யாமல் திருமணம் செய்வது மிகமிக நல்லது. பெண்ணுக்கு தற்போது புதன் தசையில் சூரிய புக்தி 11-9-2024 முடிய நடக்கிறது. லக்னத்திற்கு 2-ல் ராகு இருப்பதால் தாமதம் செய்யாமல் திருமணம் செய்வது நல்லது. குறிப்பாக கடக ராசியின் பிறந்த ஜாதகிக்கு அடுத்து சந்திர புக்தி நடக்கின்ற பொழுது கோட்சாரத்தில் குரு 11-ல் இருக்கின்றபொழுது குறிப்பாக ஏப்ரலுக்கு பிறகு திருமணம் செய்வது சிறப்பு. ஏனென்றால் சந்திர புக்தி, செவ்வாய் புக்தி காலங்கள் திருமண வாழ்க்கைக்கு ஒரு சாதக மான காலமாகும். அதன்பின்பு வரக்கூடிய ராகு புக்தி சாதகமற்ற நேரமாகும். ராகு புக்தி தோராயமாக மூன்று வருடங்கள் நடக்கும் என்பதால் ராகு புக்தி தொடங்கிவிட்டால் குடும்ப ஒற்றுமை சற்று பாதிக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. அதனால் விரைவில் திருமணம் செய்வது நல்லது. ராகு புக்தி தொடங்கிவிட்டால் ராகு முடிந்தால்தான் திருமணம் செய்யமுடியும். அதன்பின்பு வயதாகிவிடும். அதனால் தாமதம் செய்யாமல் திருமணம் செய்வது நல்லது.