என்னுடைய கடன் பிரச்சினை எப்போது தீரும் என்று கூறுங்கள்? -சரவணன், வேலூர்.
பதில்: கும்ப லக்னம், புனர்பூச நட்சத்திரம், மிதுன ராசியில் பிறந்த உங்களுக்கு தற்போது கேது தசை நடக் கிறது. கேது- சனி சேர்க்கை பெற்று கேது தசை நடை பெறுவதால் உங்களுக்கு கடன்கள் உள்ளது. தற்போது கேதுவுக்கு 8-ல் இருக்கக்கூடிய குரு புக்தி நடக்கிறது. கடந்த வருடம் கோட்சாரரீதியாக குரு- ராகு சேர்க்கைப்பெற்று, பின்பு குரு வக்ரகதியில் சஞ்சரித்தது சாதகமற்ற அமைப்பாகும். கடந்த 31-12-2023 முதல் குரு வக்ரநிவர்த்தி பெற்றிருப்பதால் பணவரவுகள் ஓரளவுக்கு சிறப் பாக இருந்து படிப்படியாக கடன்கள் குறையும். தற்போது நடக்கக்கூடிய கேது தசை முடிந்து 4-3-2026 முதல் உங்களுக்கு சுக்கிர தசை நடக்க இருக்கிறது. சுக்கிர தசை தொடங் குகின்றபொழுது பெரும் பாலான கடன்கள் குறைந்து நிம்மதி அடைவீர்கள்.
என் உடல்நலம் மற்றும் ஆயுட் காலம் பற்றி கூறுங்கள்? -மூர்த்தி, வேலூர்.
பதில்: ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி, மீன லக்னத்தில் பிறந்த உங்களுக்கு செவ்வாய் குரு ஆட்சிபெற்று, சந்திரன் உச்சமாக அமையப்பெற்று, சூரியன்- சுக்கிரன் பரிவர்த்தனை பெற்றபொழுது பிறந்துள் ளீர்கள். இது சிறப்பான அமைப்பாகும் என்றாலும் தற்போது உங்
என்னுடைய கடன் பிரச்சினை எப்போது தீரும் என்று கூறுங்கள்? -சரவணன், வேலூர்.
பதில்: கும்ப லக்னம், புனர்பூச நட்சத்திரம், மிதுன ராசியில் பிறந்த உங்களுக்கு தற்போது கேது தசை நடக் கிறது. கேது- சனி சேர்க்கை பெற்று கேது தசை நடை பெறுவதால் உங்களுக்கு கடன்கள் உள்ளது. தற்போது கேதுவுக்கு 8-ல் இருக்கக்கூடிய குரு புக்தி நடக்கிறது. கடந்த வருடம் கோட்சாரரீதியாக குரு- ராகு சேர்க்கைப்பெற்று, பின்பு குரு வக்ரகதியில் சஞ்சரித்தது சாதகமற்ற அமைப்பாகும். கடந்த 31-12-2023 முதல் குரு வக்ரநிவர்த்தி பெற்றிருப்பதால் பணவரவுகள் ஓரளவுக்கு சிறப் பாக இருந்து படிப்படியாக கடன்கள் குறையும். தற்போது நடக்கக்கூடிய கேது தசை முடிந்து 4-3-2026 முதல் உங்களுக்கு சுக்கிர தசை நடக்க இருக்கிறது. சுக்கிர தசை தொடங் குகின்றபொழுது பெரும் பாலான கடன்கள் குறைந்து நிம்மதி அடைவீர்கள்.
என் உடல்நலம் மற்றும் ஆயுட் காலம் பற்றி கூறுங்கள்? -மூர்த்தி, வேலூர்.
பதில்: ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி, மீன லக்னத்தில் பிறந்த உங்களுக்கு செவ்வாய் குரு ஆட்சிபெற்று, சந்திரன் உச்சமாக அமையப்பெற்று, சூரியன்- சுக்கிரன் பரிவர்த்தனை பெற்றபொழுது பிறந்துள் ளீர்கள். இது சிறப்பான அமைப்பாகும் என்றாலும் தற்போது உங்களுக்கு லக்னத்திற்கு 8-ல் வக்ரகதியில் இருக்கக்கூடிய புதன் தசை நடப்பது சாதகமற்ற அமைப்பாகும். அதிலும் குறிப்பாக புதன் தசையில் புதனுக்கு 8-ல் உள்ள சந்திர புக்தி 12-9-2024 முடிய நடக்கிறது. மீன லக்னத்தில் பிறந்த உங்களுக்கு புதன் தசை நடப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. தற்போது நடக்கும் சந்திர புக்தியைவிட அடுத்து வரக்கூடிய செவ்வாய் புக்தி ஆரோக்கியத்தில் சற்று முன்னேற்றம் இருக்கும்.
வணக்கம் ஐயா! நான் டட்.உ எப்பொழுது முடிப்பேன்? என் நிம்மதி, குடும்பம், வருமானம் இவையெல்லாம் இனிவரும் காலங்களில் எப்படியிருக்கும்?
பதில்: ரேவதி நட்சத்திரம், மீன ராசி, மீன லக்னத்தில் பிறந்துள்ளீர்கள். உங்களுக்கு 5-ஆம் அதிபதி சந்திரன் லக்ன கேந்திரம் பெற்று 9, 11-க்கு அதிபதியான சனி- செவ்வாய் பரிவர்த்தனை பெற்றிருப்பது சிறப்பான அமைப்பாகும். 5, 9 அதிபதிகள் பலம் பெறுகின்றபொழுது உயர் படிப்பு யோகம் உண்டு. உங்கள் ஜாதகத்தில் சூரியன், புதன் இணைந்து உள்ளதால் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் நல்லது நடக்கும். தற்போது நடக்கக்கூடிய சூரிய தசையைவிட வரும் 3-7-2024 பிறகு நடைபெற இருக்கக்கூடிய சந்திர தசையில் படிப்பு ரீதி யாக அனுகூலங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. சந்திரன், ராகு சேர்க்கை பெற்றிருப்ப தால் எதிலும் நிதானமாக செயல்பட்டால் அணுகூலமான பலன் களை அடைய முடியும். உங்களுக்கு சூரியன் நீசம்பெற்றிருப்பதும், அடுத்த சந்திரன், ராகு சேர்க்கைப்பெற்ற சந்திர தசை நடக்க இருப்பதாலும் முடிந்தவரை பொறுமையைக் கடைப் பிடித்தால் தற்போது நடக்கக்கூடிய சூரிய தசைவிட சந்திர தசையில் குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.
என்னோட எதிர்கால வாழ்க்கை எப்படி யிருக்கும், வேலையில் முன்னேற்றம் இருக்குமா, நான் முற்றிலும் குழப்பத்தில் இருக்கிறேன்...
பதில்: அஸ்த நட்சத்திரம், கன்னி ராசி, கன்னி லக்னத்தில் பிறந்த உங்களுக்கு தற்போது குரு தசையில் சுக்கிர புக்தி 2-2-2026 முடிய நடக்கிறது. கோட்சாரரீதியாக சனி 6-ல் இருப் பது அற்புத மான அமைப் பாகும். வரும் மே 1 முதல் குரு 9-ல் சஞ்சரிக்க இருப்பது சிறப் பான அமைப் பாகும். வரு கின்ற நாட்களி லேயே வாழ்வில் படிப்படியாக முன்னேற்றங்கள் இருக்கும். சமுதாயத்தில் ஒரு கௌரவமான நிலையினை அடையமுடியும்; கவலைவேண்டாம். 2023 ஒப்பிடுகின்றபொழுது 2024-ஆம் ஆண்டு உங்களுக்கு ஒரு வளர்ச்சி தரக்கூடிய நாட்களாக இருக்கும். குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளவும்.
எனது வேலை மற்றும் நடப்பு தசா பலன் எப்படியிருக்கும் என கூறவேண்டுகிறேன்.
பதில்: அஸ்த நட்சத்திரம், கன்னி ராசி, கடக லக்னத்தில் பிறந்த உங்களுக்கு தற்போது சனி தசையில் சுக்கிர புக்தி 22-5-2024 முடிய நடக்கிறது. லக்னத்திற்கு 9-ல் இருக்கக்கூடிய சனி தசை படிப்படியான வளர்ச்சிகளைத் தரும். தற்போது கன்னி ராசிக்கு 6-ல் சனி சஞ்சரிப்பதால் வேலையில் முன்னேற்றம் இருக்கும். குரு வக்ரகதியில் இருக்கும்பொழுது பிறந்திருப்பதால் பிறரை நம்பி பணம் கொடுக்காமல் இருந்தால் வாழ்வில் ஒரு நல்ல நிலையை அடைய முடியும். சனி, ராகு சேர்க்கைபெற்றிருப்பதால் அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற் கொள்ளவும்; நல்லது நடக்கும். எனக்கு எப்போது பதவி உயர்வு கிடைக்கும்? -சரவணன் வேலூர். பதில்: உத்திராட நட்சத்திரம், தனுசு ராசி, துலா லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 10-ஆம் அதிபதி சந்திரன் 3-ல் இருக்கிறது. உங்களுக்கு 12-ல் இருக்கக்கூடிய குரு தசையில் 12-ல் உள்ள சனி புக்தி 28-5-2025 முடிய நடக்கிறது. தற்போது குரு 5-ல் சஞ்சரிப்பதாலும், சனி 3-ல் சந்திப்பதாலும் வருகின்ற நாட்களிலே குறிப்பாக ஓரிரு மாதத்திலே பதவி உயர்வுகள் கிடைக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு; கவலைப்பட வேண்டாம்.
என் மகள் +2 படிப்பை முடிக்க உள்ளதால் மேற்கொண்டு என்ன படிக்க வைக்கலாம்? -சி. ஷண்முகம் (எ) கிருஷ்ண மூர்த்தி.
பதில்: அவிட்ட நட்சத்திரம், கும்ப ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்த உங்கள் மகளுக்கு 4-ஆம் அதிபதி செவ்வாய் 5-ல் அமையப் பெற்று, 5-ஆம் அதிபதி குரு 4-ல் அமையப் பெற்று குரு, செவ்வாய் பரிவர்த்தனை பெற்றிருக்கிறது. 4-ஆம் அதிபதி செவ்வாய் என்ற காரணத்தினால் நிர்வாகத் தொடர்புடைய கல்வி மற்றவர் களை வழிநடத்தக்கூடிய கல்வி யோகம் உண்டு. குறிப்பாக வங்கிப்பணியில் பணி புரியக்கூடிய கல்விகூட படிக்கலாம். உங்கள் மகள் ஜாதகத்தில் புதன் வக்ரகதியில் அமையப் பெற்று ராகு சேர்க்கைப் பெற்றிருப்பதால் படிப்பு விஷயத்தில் ஒரு நிலையான முடிவு எடுக்கமாட்டாள். ஒரு நேரம் ஒரு துறை படிக்கிறேன் என்று கூறுவாள். அடுத்து கொஞ்ச நாள்களிலேயே வேறு துறை படிக்கிறேன் என்று கூறுவாள். ஜாதகரீதியாக 4, 5-க்கு அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றிருப்பதால் தாய்- தந்தையரை விட்டுவிட்டு வெளியிடங்களுக்கு சென்று படிக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. ஜாதக கிரகணத்தன்று பிறந்திருப்ப தால் வெளியிடங்களில் சென்று தங்கி படிக்கக் கூடிய வாய்ப்புகள்கூட எதிர் காலத்தில் உண்டாகும். குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது நல்லது. ஒரு ஊருவிட்டு ஒரு ஊர் சென்று வெளியிடங்களில் தங்கிப் படிக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு.