எனக்கு சரியான வேலை அமையவில்லை, பொருளாதாரநிலையும் சரியில்லை. எனக்கு அரசு வேலை கிடைக்கவாய்ப்பு உள்ளதா என்று கூறுங்கள்? -சரவணன், பட்டுகோட்டை.
பதில்: சதய நட்சத்திரம், கும்ப ராசி, கன்னி லக்னத்தில் பிறந்த உங்களுக்கு லக்னத் திற்கு 10-ஆம் அதிபதி புதன் 8-ல் மறைந்திருந்தாலும் சூரியன், செவ்வாய், சுக்கிரன் சேர்க்கைப் பெற்றிருப்பது சிறப்பான அமைப்பு என்ப தால் நல்ல வேலைவாய்ப்பு, அரசுவழி ஆதரவுகள் கிடைக்கக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்கள் உண்டு.
சதய நட்சத்திரம், கும்ப ராசியில் பிறந்த உங்களுக்கு தற்போது ஏழரைச்சனி நடப்பதாலும் ஜென்ம லக்னத்தில் வக்ரகதியில் இருக்கக் கூடிய சனி தசை நடப்ப தாலும் ஒரு நல்ல நிலை அடைய இடையூறுகள் ஏற்படுகிறது. தற்போது சனி தசையில் செவ்வாய் புக்தி 23-8-2024 முடிய நடக்கிறது. அதன்பின் வரக்கூடிய ராகு புக்தியில் வேலைரீதியாக ஒரு நல்லமுன்னேற்றம், பொருளாதார முன்னேற் றம் இருக்கும். கும்ப ராசி யில் பிறந்த உங்களுக்கு ஏழரைச்சனி நடப்பதால் தற்போதைக்கு கிடைத்ததைப் பயன்படுத்திக் கொண்டால் 2024 ஆகஸ்ட் பிறகு ராகு புக்தி காலத்தில் நல்லமுன்னேற்றம் இருக்கும். 2025 மார்ச்சுக்கு பிறகு ஜென்மச்சனி முடிந்தபிறகு ஒருசில வளர்ச்சி கிடைக்கும். ஆஞ்சனேயர் வழிபாடு, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.
தற்போது நடக்கும் சனி தசையைவிட அடுத்துவரும் புதன் தசைதான் நல்ல வளர்ச்சியைத் தரும்.
என் படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கவில்லை, வீட்டிலும் பிரச்சினைகள் உள்ளது. என் பிரச்சினைகள் எப்போது தீரும்? எனக்கான பலனை கூறுங்கள்? -தமிழ்செல்வன், திண்டுக்கல்.
பதில்: உத்திராட நட்சத்திரம், தனுசு ராசி, மீன லக்னத்தில் பிறந்த உங்களுக்கு லக்னத் திற்க
எனக்கு சரியான வேலை அமையவில்லை, பொருளாதாரநிலையும் சரியில்லை. எனக்கு அரசு வேலை கிடைக்கவாய்ப்பு உள்ளதா என்று கூறுங்கள்? -சரவணன், பட்டுகோட்டை.
பதில்: சதய நட்சத்திரம், கும்ப ராசி, கன்னி லக்னத்தில் பிறந்த உங்களுக்கு லக்னத் திற்கு 10-ஆம் அதிபதி புதன் 8-ல் மறைந்திருந்தாலும் சூரியன், செவ்வாய், சுக்கிரன் சேர்க்கைப் பெற்றிருப்பது சிறப்பான அமைப்பு என்ப தால் நல்ல வேலைவாய்ப்பு, அரசுவழி ஆதரவுகள் கிடைக்கக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்கள் உண்டு.
சதய நட்சத்திரம், கும்ப ராசியில் பிறந்த உங்களுக்கு தற்போது ஏழரைச்சனி நடப்பதாலும் ஜென்ம லக்னத்தில் வக்ரகதியில் இருக்கக் கூடிய சனி தசை நடப்ப தாலும் ஒரு நல்ல நிலை அடைய இடையூறுகள் ஏற்படுகிறது. தற்போது சனி தசையில் செவ்வாய் புக்தி 23-8-2024 முடிய நடக்கிறது. அதன்பின் வரக்கூடிய ராகு புக்தியில் வேலைரீதியாக ஒரு நல்லமுன்னேற்றம், பொருளாதார முன்னேற் றம் இருக்கும். கும்ப ராசி யில் பிறந்த உங்களுக்கு ஏழரைச்சனி நடப்பதால் தற்போதைக்கு கிடைத்ததைப் பயன்படுத்திக் கொண்டால் 2024 ஆகஸ்ட் பிறகு ராகு புக்தி காலத்தில் நல்லமுன்னேற்றம் இருக்கும். 2025 மார்ச்சுக்கு பிறகு ஜென்மச்சனி முடிந்தபிறகு ஒருசில வளர்ச்சி கிடைக்கும். ஆஞ்சனேயர் வழிபாடு, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.
தற்போது நடக்கும் சனி தசையைவிட அடுத்துவரும் புதன் தசைதான் நல்ல வளர்ச்சியைத் தரும்.
என் படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கவில்லை, வீட்டிலும் பிரச்சினைகள் உள்ளது. என் பிரச்சினைகள் எப்போது தீரும்? எனக்கான பலனை கூறுங்கள்? -தமிழ்செல்வன், திண்டுக்கல்.
பதில்: உத்திராட நட்சத்திரம், தனுசு ராசி, மீன லக்னத்தில் பிறந்த உங்களுக்கு லக்னத் திற்கு 10-ஆம் அதிபதி குரு 10-ல் ஆட்சி பெற்றிருப்பது சிறப்பான அமைப்பாகும். உங்கள் ஜாதகத் தில் லக்னத்திற்கு 7-ல் இருக்கக் கூடிய ராகு தசை தற்போது நடக்கிறது. ஜாத கக் கட்டத்தில் 7-ல் இருந்தா லும் பாவகரீதி யாக ராகு 8-ல் உள்ளார். பொது வாக பாவகரீதியாக 8-ல் இருக்கக்கூடிய கிரகத்துடைய தசையில் நீங்கள் எதிர்பார்க்கக் கூடிய வாய்ப்புகள் கிடைக்க இடையூறுகள் ஏற்படும்.
தனுசு ராசியில் பிறந்த உங்களுக்கு ராகு தசையில் 2-1-2024 முதல் சனி புக்தி நடக்கிறது. கோட்சாரத்தில் குரு 5-ல் இருப்பதால் 2023 ஒப்பிடுகின்ற பொழுது 2024-ல் ஒரு நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். நடப்பது ராகு தசை என்பதால் அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது நற்பலனைத் தரும்.
என் வருமானம் கொரோனா காலத்தில் குறைக் கப்பட்டது. எப்போது நல்ல வருமானம் கிடைக்கும் என்று கூறுங்கள்? -பாஸ்கர்.
பதில்: பூரட்டாதி நட்சத்திரம், கும்ப ராசி, மீன லக்னத்தில் பிறந்த உங்களுக்குத் தற்போது சுக்கிர மகா தசையில் சந்திர புக்தி 3-11-2024 முடிய நடக்கிறது. கும்ப ராசியில் பிறந்த உங்களுக்கு 2020 ஜனவரிமுதல் ஏழரைச்சனி தொடங்கியது, அதே நேரத்தில் தான் கொரோ னா காலமும் தொடங்கியது. உங்களுக்கு ஏழ ரைச்சனி நடப்ப தாலும் அதிலும் குறிப்பாக சனி நீசம்பெற்ற போது நீங்கள் பிறந்திருப்பதால் எதிர்நீச்சல் போடவேண்டிய ஒரு நிலை இருக்கிறது. உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேற இடை யூறுகள் ஏற்படுகிறது. தாராள வருவாய் ஏற்பட தடங்கல் உண்டாகிறது. தற்போது ஏழரைச் சனியில் ஜென்மச்சனி நடப்பதால் தற்போது கிடைக்கும் வாய்ப்புகளை நல்லபடியாக பயன்படுத்திக்கொள்ளவும். 2025 மார்ச் 29-க்கு பிறகு ஜென்மச்சனி முடிகின்ற பொழுது வருமானரீதியாக ஒரு நல்ல முன்னேற் றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஏழரைச்சனி நடப்பதாலும் குரு சஞ்சாரமும் சரியில்லாத காரணத்தினாலும் தற்போதைக்கு பொறுமை காப்பது நல்லது.
எனக்கு திருமணம் எப்போது நடைபெறும்? காதல் திருமணமா அல்லது வீட்டில் பார்த்து நடத்தும் திருமணமா என்று கூறுங்கள்? -பிரியதர்ஷினி.
பதில்: உத்திர நட்சத்திரம், கன்னி ராசி, கடக லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 7-க்கு அதிபதி சனி 9-ல் அமையப்பெற்று, 9-ஆம் அதிபதி குரு 7-ல் அமையப்பெற்று 7, 9 அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றுள்ளது. ஏழாம் அதிபதி பரிவர்த்தனை பெற்றாலே ஒரு வரன் முடியும் தருவாயில் தடைப்பட்டு அதன் பிறகு ஒரு வரன் அமையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. ஏழாம் அதிபதி சனி என்ற காரணத்தினால் உங்களுக்கு உறவில்லாமல் அந்நியத்தில் வரன் அமையும். பெற்றோர் பார்த்து வரன் அமையக்கூடிய வாய்ப்புகள் உண்டு.
நடப்பது ராகு தசை என்ற காரணத்தினா லும் பாவரீதியாக ராகு 2-ல் இருப்பதால் அமையும் வாழ்க்கையில் விட்டுக்கொடுத்து சென்றால்தான் வாழ்க்கை நன்றாக இருக்கும். அடிக்கடி அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது சிறப்பு.
ஏழாம் அதிபதி சனி புக்தி தற்போது நடப்பதால் 2024 மே 1-ஆம் தேதிக்கு பிறகு ஒரு நல்ல வாழ்க்கை அமையக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்கள் உண்டு. பேச்சைக் குறைப் பது நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.
என் மகளுக்கு திருமணம் எப்போது நடைபெறும் என்று கூறுங்கள்? -சாந்தி சரவணன்.
பதில்: கிருத்திகை நட்சத்திரம், ரிஷப ராசி, கடக லக்னத்தில் பிறந்த உங்கள் மகளுக்கு 7-ஆம் அதிபதி சனி 9-ல் அமையப்பெற்று 9-ஆம் அதிபதி குரு 7-ல் அமையப்பெற்று 7, 9 அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றிருக்கிறது. சனி வக்ரகதியில் இருப்பதும் சற்று சாதகமற்ற அமைப்பாகும். திருமண விஷயத்தில் ஒரு சில இடையூறு கள் இடை யூறுக்கு பின்பு அனுகூலம் ஏற்பட வாய்ப் புண்டு. தற் போது 2-ல் உள்ள ராகு தசை நடப்பதால் எந்த வாழ்க்கை அமைந்தாலும் குடும்ப ஒற்றுமை பாதிக்கக் கூடிய நேரமென்பதால் விட்டுக்கொடுத்து செல்லவேண்டும். தற்போது ராகு தசையில் 31-1-2024 முதல் சனி புக்தி நடைபெறவுள்ள காலத்தில் குறிப்பாக மே 1-ஆம் தேதிக்கு பிறகு குரு ஜென்ம ராசியின் சஞ்சரிக்கின்றபொழுது 7-ஆம் வீட்டை பார்க்கும் என்ற காரணத்தினால் மே 1-க்கு பிறகு திருமணம் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. 2-ல் உள்ள ராகு தசையில், 7-ஆம் அதிபதி வக்ரம் பெற்றிருப்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது, விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. அம்மனின் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.
எனக்கும் என் மனைவிக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை வருகின்றது. இது விவாகரத்துவரை செல்லுமா? என் வருமானம் எப்படியிருக்கும் என்று கூறுங்கள்? -சரவணன், சேலம்.
பதில்: திருவோண நட்சத்திரம், மகர ராசி, மகர லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 7-ஆம் அதிபதி சந்திரன் லக்னத்தில் இருந்தாலும், நீங்கள் அமாவாசைக்கு முதல்நாள் பிறந்து உள்ளீர்கள். கடுமையான தேய்பிறையில் பிறந்த உள்ள தால் சற்று குழப்பவாதி யாக இருப்பீர் கள். உங்களுக்கு தற்போது குரு மகாதசையில் 18-6-2024 முடிய சந்திர புக்தி நடக்கிறது. தேய்பிறைச் சந்திரன் என்ற காரணத்தினால் தேவையற்ற மன குழப்பங்கள் ஏற்பட்டு கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக 7-ஆம் அதிபதி சந்திரன் என்ற காரணத்தினால் மனைவியிடம் மனஸ்தாபம் உண்டாகிறது. ஜூன் மாதத்தில் செவ்வாய் புக்தி வருகின்றபொழுது மனகுழப்பங்கள் சற்றுக்குறைந்து கணவன்- மனைவியிடையே இருக்கக்கூடிய கருத்து வேறுபாடுகள் குறைந்து மனநிம்மதி உண்டாகும்.
தற்போது ஏழரைச்சனி நடப்பதால் பொருளாதாரநிலை ஏற்ற- இறக்கமாக இருக்கும். மே 1-ஆம் தேதிக்கு பிறகு குரு 5-க்கு வருகின்றபொழுது பொருளாதாரநிலை நல்ல வளர்ச்சி ஏற்பட வாய்ப்புண்டு. 2025 மார்ச் 29-ல் ஏழரைச்சனி முடிந்தால் ஒருசில நல்ல மாற்றங்கள் உண்டாகும். தற்போதைக்கு பொறுமைக் காப்பது, பெருமாள் வழிபாடு மேற்கொள்வது நல்லது.
நான் பலவித நோய்களால் அவதிபட்டு கொண்டிருக்கின்றேன். ஆரோக்கியம் மற்றும் எதிர்காலம் எப்படியிருக்கும் என்று கூறுங்கள்? -அசுந்தா, திருச்செந்தூர்.
பதில்: விசாக நட்சத்திரம், விருச்சிக ராசி, கும்ப லக்னத்தில் பிறந்த உங்களுக்கு தற்போது 10-ல் நீசம்பெற்ற சந்திர தசை நடக்கிறது. சந்திர தசையில் தற்போது புதன் புக்தி 13-7-2024 முடிய நடக்கிறது. நீசபெற்ற சந்திர தசை நடப்பதால் உடல் உபாதைகள், மனகவலைகள் ஏற்படுகிறது. தற்போது அர்த்தாஷ்டமச் சனி நடப்பதால் ஆரோக் கியத்தில் அக் கறை எடுத்துக் கொள்வது உத்தமம். 2024 மே 1-க்கு பிறகு குரு 7-க்கு வருகின்றபொழுது ஒருசில அனு கூலங்கள் ஏற்ப டும். பெருமாள் வழிபாடு மேற்கொள்வது நல்லது.
உங்கள் ஜாதகத்தில் சனி, செவ்வாய் வக்ரகதியில் இருப்பதால் உடல் ஆரோக் கியத்தில் கவனம் செலுத்துவது வெளியிடங் களுக்கு செல்கின்றபொழுது பொறுமை யோடு செல்வது நல்லது. குறிப்பாக சனி வக்ர கதியில் இருப்பவர்களுக்கு உடல் பலவீனம், கால்பாதத்தில் பிரச்சினை ஏற்பட வாய்ப் புண்டு. வயது மூப்பு காரணமாக வெளியிடங் களுக்கு செல்கின்ற பொழுது பொறுமை யோடு செல்வது, அதிக அலைச்சலை குறைத் துக்கொள்வது நல்லது.