என் திருமணம் தாமதமாகி கொண்டிருக்கின்றது. எப்போது நடைபெறும்? உத்தியோகத்தை பற்றி கூறுங்கள்? கோகுலகிருஷ்ணன், சென்னை.
பதில்: சதய நட்சத்திரம், கும்ப ராசி, கடக லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 7-ஆம் வீட்டில் ராகு அமையப்பெற்று 7-ஆம் அதிபதி 6-ல் மறைந்த காரணத்தால் திருமணம் தாமதமாகிகொண்டு இருக்கிறது. 7-ஆம் அதிபதி சனி என்றாலே பெரும்பாலும் திருமணம் தாமதமாகும். தற்போது சனி தசையில் லக்னாதிபதி சந்திர புக்தி 19-1-2025 முடிய நடப்பதாலும் கோட்சாரத்தில் 3-ல் உள்ள குரு 7-ஆம் வீட்டை பார்ப்பதாலும் சொந்தம் இல்லாமல் அந்நியத்தில் திருமண முயற்சிகள் மேற்கொண்டால் நல்லது நடக்கும்.
என் மகளுக்கு திருமணம் எப்போது நடைபெறும்? எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கூறுங்கள்?
பதில்: மக நட்சத்திரம், சிம்ம ராசி, கடக லக்னத்தில் பிறந்த உங்கள் மகளுக்கு 7-ஆம் அதிபதி சனி, ராகு நட்சத்திரத்தில் அமையப்பெற்று 12-ல் அமைந்துள்ளார். களத்திரகாரகன் செவ்வாய்- ராகு நட்சத்திரத்தில் அமையப்பெற்று 8-ல் மறைந் துள்ளார். சூரியன்- ராகு சாரம் பெற்று, சந்திரன்- கேது சாரம் பெற்ற ஜாதகமாகும். அது மட்டும் இல்லாமல் 5-ஆம் வீட்டில் கேது இருக்கிறது. இப்படிப்பட்ட அமைப்பு இருக்கின்றபொழுது உறவில் திருமணம் நடக்க வாய்ப்பில்லை. அந்நியத்தில் திருமண முயற்சிகள் மேற்கொள்ளலாம். வேற்று ஜாதி ஆணை திருமணம் செய்வதற்கான வாய்ப்புகள்கூட பலமாக இருக்கிறது.
குரு பார்வை 7-ஆம் வீட்டுக்கு இருப்ப தால் திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை நன்றாக இருக்கும். மே மாதத்திற்குள் திருமணம் செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டால் நல்லது நடக்கும். அப்படி யில்லை என்றால் 2026-ல்தான் திருமண யோகம் உண்டு. குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது நல்லது.
புதன் தசையில் என் வாழ்க்கை எப்படியிருக்கும் என்று கூறுங்கள்? -வெங்கடசுப்பிரமணியம், அரக்கோணம்.
பதில்: சித்திரை நட்சத்திரம், கன்னி ராசி, மிதுன லக்னத்தில் பிறந்த உங்களுக்கு லக்னாதிபதியான புதன் 4-ல் ஆட்சி, உச்சம்பெற்றிருப்பது அற்புதமான அமைப்பாகும். புதன் தசை தற்போது நடப்பதால் உங்கள் வாழ்க்கை நிலை இனி சிறப்பாக இருக்கும். கடந்த காலங்களில் வக்ரம்பெற்ற சனி தசை நடந்தது அவ்வளவு சிறப்பு அல்ல, குறிப்பாக புதன் தசையில் சுய புக்தி மற்றும் கேது புக்தி முடிந்து 12-1-2024 முதல் சுக்கிர புக்தி நடக்க இருப்பதால் இனி உங்களுடைய வாழ்க்கையில் அனுகூலமானபலன்களை பெறக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. கடந்தகால பிரச்சினைகள் எல்லாம் குறையும். ஒரு கௌரவமான நிலையினை அடையமுடியும். மேலும் வளமான பலன்களை பெற விஷ்ணு வழிபாடு மேற்கொள்வது நல்லது.
நான் சொந்தத் தொழில் செய்யலாமா? என்ன தொழில் செய்வது, எப்போது செய்வது என்று கூறுங்கள்? -விஜயகுமார், சேலம்.
பதில்: அஸ்வனி நட்சத்திரம், மேஷ ராசி, மகர லக்னத்தில் பிறந்த உங்களுக்கு தொழில் ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 10-ஆம் அதிபதி 11-ல் பாதக ஸ்தானத்தில் இருப்பது சாதகமற்ற அமைப்பாகும். மேலும் 8-ல் உள்ள செவ்வாய் தசை நடப்பது அவ்வளவு சாதகமான அமைப்பல்ல. அதனால் சொந்தத் தொழில் செய்வது அவ்வளவு சிறப் பல்ல. ராகு 7-ல் இருப்பதால் எதிர்வரும் ராகு தசையில் சுயபுக்திக்கு பிறகு கூட்டாக தொழில்செய்வது, மனைவி அல்லது வயது மூத்தவர்களை உடனிணைத்துக்கொண்டு தொழில் செய்வது நற்பலனை தரும்.
எனக்கு அரசு வேலை கிடைக்குமா, எந்த துறையில் கிடைக்கும். திருமணம் எப்போது நடைபெறும், சொந்தமா அல்லது அந்நியமா என்று கூறுங்கள்? -சர்மிளா, திருநெல்வேலி.
பதில்: அஸ்த நட்சத்திரம், கன்னி ராசி, தனுசு லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 10-ஆம் அதிபதி புதன் 10-ல் ஆட்சி, உச்சம்பெற்றாலும் வக்ரகதியில் இருப்பதும் ராகு சேர்க்கைப் பெற்றிருப்பதும் அவ்வளவு சிறப்பல்ல. ஒரு நிரந்தர அமைப்பு ஏற்பட இடையூறுகள் ஏற்படும். சூரியன் ஆட்சி பெற்றிருப்பது நல்ல அமைப்பாகும். உங்கள் ஜாதகத்தில் 10-ஆம் அதிபதி புதனாகவும், லக்னாதிபதி குருவாகவும் இருந்து இருவரும் ஆட்சி பெற்றிருப்பதால் கல்வித்துறை, வங்கிப்பணி போன்றவற்றில் முயற்சித்தால் சிறிது காலம் தற்காலிக பணியில் இருந்து அதன்பின் நிரந்தரப் பணி அமைய வாய்ப்பு உண்டு. குறிப்பாக 2029 பிறகு குரு மகா தசை வருகின்றபொழுது நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
வேலை வாய்ப்பு சம்பந்தப்பட்ட விஷயத்திற்கு முக்கியத்துவம் தருவதை விட தற்போது மண வாழ்க்கையை அமைத்துக்கொள்வது நல்லது. உங்களுக்கு 7-ஆம் அதிபதி புதன் வக்ரம் பெற்றிருப்பதும், செவ்வாய் 8-ல் நீசம் அடைந்திருப்பதும் சாதகமற்ற அமைப்பாகும். சந்திரன், ராகு சேர்க்கைப்பெற்று சந்திரனுக்கு 7-ல் சனி இருப்பதும் அனுகூலமற்ற அமைப்பாகும். இப்படிப்பட்ட நிலையில் தற்போது ராகு தசையில் சுக்கிர புக்தி உங்களுக்கு நடக்கிறது. மே 2024-க்கு பிறகு திருமண வாய்ப்புகள் உண்டு. அதனை சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டு ராகு தசை முடியும் வரை மணவாழ்க்கையில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. குறிப்பாக சனி, ராகு, கேது ஆகிய கிரகங்கள் 1, 7-லோ, சந்திரனுக்கு 1, 7-லோ அமையப்பெற்று தசை நடைபெற்றால் மணவாழ்க்கை அவ்வளவு சிறப்பாக இருக்காது. அதிலும் குறிப்பாக ஏழாம் அதிபதி புதனுடன் ராகு சேர்க்கைப்பெற்றிருப்பதால் மண வாழ்க்கையில் சற்று விட்டுக்கொடுத்து சென்றால்தான் வாழ்க்கையில் ஒருசில அனுகூலங்களை அடையமுடியும்.
அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது நல்லது.
என் ஜாதகப்படி 11-ஆமிடத்தில் கிரகங்கள் இருப்பதால் எனக்கு 2-ஆவது திருமணம் நடைபெறும் என்று கூறுகிறார்கள். அது உண்மையா, என் மனைவியுடன் பிரச்சினைகள் ஏதாவது ஏற்படுமா? நான் என்ன தொழில்செய்வது என்று கூறுங்கள்? -ராமன், தஞ்சாவூர்.
பதில்: கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, தனுசு லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 11-ல் சுக்கிரன் ஆட்சி பெற்றிருக்கிறது. 11-ல் கிரகங்கள் இருந்தாலே இருதார யோகம் என்றில்லை. கிரகங்கள் அமையக்கூடிய நிலையை பொறுத்து, ஏழாம் அதிபதி பலவீனமாக இருக்கக்கூடிய நிலையை பொறுத்துதான் மண வாழ்வில் சிலருக்கு மறுமணம் ஏற்படும். எதையாவது குழப்பிக்கொண்டு தற்போது உங்கள் வாழ்க்கையை பாதித்துக்கொள்ளவேண்டாம். உங்களுக்கு சுக்கிரன் வலுவாக இருக்கிறார். மண வாழ்வில் விட்டுக்கொடுத்து செல்லவும். 11-ல் கிரகங்கள் இருந்தாலே பிரச்சினை என்றெல்லாம் இல்லை. தயவு செய்து அமைந்த வாழ்க்கையே நல்ல படியாக பயன்படுத்திக்கொள்ளவும். உங்கள் ஜாதகத்தில் பத்தாம் அதிபதி புதன் 12-ல் இருப்பதாலும் தற்போது 12-ல் நீசம்பெற்ற சந்திர தசையும், அடுத்து 8-ல் நீசம்பெற்ற செவ்வாய் தசை நடப்பதால் சொந்தத் தொழில் செய்வதைவிட வேலைக்கு செல்வதே சிறப்பு. உங்கள் ஜாதகத்தில் சூரியன் வீட்டில் சனி அமையப்பெற்று சூரியன் ராகு சாரம் பெற்றதால் தந்தைவழியில் கருத்து வேறுபாடு, வேலைக்கு சென்றால் வேலையில் மேலதிகாரியிடம் கருத்து வேறுபாடு ஏற்படும் நிலை உண்டு. மற்றவர்களை அனுசரித்துச்சென்றால் வாழ்க்கை நன்றாக இருக்கும்.
எனக்கு அரசு வேலை கிடைக்குமா என்று கூறுங்கள்? -முத்துகருப்பன், திருச்சி.
பதில்: ரேவதி நட்சத்திரம், மீன ராசி, கும்ப லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 10-ஆம் அதிபதி செவ்வாய் 5-ல் வக்ரம் பெற்றுள்ளார். ஒருவர் ஜாதகத்தில் பத்தில் சூரியன் இருந்தாலோ, பத்தாம் அதிபதி சேர்க்கைப்பெற்று சூரியன் இருந்தாலோதான் அரசு வேலை என கூறலாம். உங்களுக்கு 10-ஆம் அதிபதி வக்ரம் பெற்றிருப்பதால் அடிக்கடி மாற்றங்களுடன் கொண்ட நிர்வாகத் தொடர்புடையப் பணி அமையும். பத்தில் ராகு இருப்பதாலும், 12-ல் சனி அமையப் பெற்று இருப்பதா லும் வெளியூர் தொடர்புகள்மூலமாக ஒருசில ஆதாயங்களைப் அடையக் கூடிய வாய்ப்புகள் உண்டு. தற் போதைக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளவும். வாழ்வில் ஏற்றத்தை அடைய முருக வழிபாடு மேற்கொள்ளவும்.