என் மகன் நன்றாக படிப்பானா? பட்டப் படிப்பு முடிப்பானா? தாயுடன் இருப்பானா என்று கூறுங்கள்? -தமிழரசி, நெல்லை.

பதில்: திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்த உங்கள் மகனுக்கு 4-ஆம் அதிபதி சனி கேது சேர்க்கை பெற்று கேது நட்சத் திரத்தில் இருப் பது படிப்புரீதியாக இடையூறுகளை ஏற்படுத்தக்கூடிய அமைப்பு என்றாலும், புதன்- சுக்கிரன் சேர்க்கை பெற்றிருப் பதால் அடைய வேண்டிய இலக்கை அடையக்கூடிய வாய்ப்புகள், பட்டப் படிப்பு படிக்கக்கூடிய அமைப்புகள் உண்டாகும். ஆரம்ப படிப்பில் தடை இருந்தாலும் 5-ஆம் அதிபதி பலமாக இருப்பதால் மேற்படிப்பு யோகம் சிறப் பாக இருக்கும்.

ஜென்ம லக்னத்திற்கு 4-ல் ராகு இருப்பதாலும், சனி- கேது சாரம் பெற்று சந்திரன்- ராகு சாரம் பெற்றிருப்பதாலும் தாயிக்கு அவ்வளவு சிறப்பு எனக் கூறமுடியாது. சூரியன் வீட்டில் சனி, கேது இருப்பதால் எதிர்காலத்தில் படிப்புக்காக வெளியூர் செல்லக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும்.

aa

பத்தாவது படிக்கும் என் மகன் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்க ஏதாவது பரிகாரம் செய்ய வேண்டுமா? -சரஸ்வதி, சென்னை.

பதில்: அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்த ஜாதகருக்கு 4-ஆம் அதிபதி சனி வக்ர கதியில் இருப்பதால் படிப்பு விஷயத்தில் ஒருசில இடையூறு களை ஏற் படுத்தக் கூடிய அமைப்பு என்றாலும் கல்வி கார கன் புதன், குரு பார் வையோடு இருப்பதால் நன்கு படித்து நல்ல மதிப் பெண்கள் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சனி வக்ரகதியில் இருப்பதால் பைரவர் வழிபாடு மேற்கொள்வது வேங்கடேச பெருமாளைத் தரிசிப்பதன் மூலமாக படிப்பில் முன்னேற்றத்தை அடையமுடியும்.

எனக்கு மூட்டுவலி மற்றும் குடும்ப பிரச்சினைகளால் நிம்மதி இல்லாமல் இருக்கிறேன். என் மூட்டுவலி மற்றும் குடும்ப பிரச்சினைகள் எப்பொழுது தீரும்? இதற்கு என்ன பரிகாரம் செய்வது என்று கூறுங்கள்? -கனிமொழி, சென்னை.

பதில்: அஸ்த நட்சத்திரம், கன்னி ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்த உங்களுக்கு புதன் வக்ரகதியில் இருப்பதால் கை- கால் மூட்டு வலி ஏற்படுகிறது. உங்கள் ஜாதகத்தில் குரு பார்வை 8-ஆம் வீட்டுக்கு இருப்பதால் எந்தவித உடம்பு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டால் கண்டிப்பாக ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். தற்போது ஜென்ம ராசியில் கேது கோட்சாரத்தில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு குடும்ப பிரச்சினைகள் இருக்கிறது. வரும் மே மாதம் ராகு- கேது பெயர்ச்சிக்குப் பிறகு தற்போது இருக்கக்கூடிய பிரச்சினைகள் எல்லாம் படிப்படி யாக குறையும்; கவலைப்பட வேண்டாம். துர்க்கை வழி பாடு மேற்கொள் வது நல்லது. எனக்கு வேலையில் இடமாற்றம் ஏற்பட்டுள்ளது.

மாற்று இடத்தில் பணியில் சேர முகூர்த்த நாள் பார்த்து சேர வேண்டுமா, எந்த நாளில் பணியில் சேர்ந்தால் சிறப்பாக இருக்கும்? -ஈஸ்வரி, குமுü.

பதில்: சுப முகூர்த்த நாள் என்பது திருமணம் சார்ந்த நிகழ்ச்சிக்குத்தான் பார்க்க வேண்டும். புதிதாக ஒரு வேலையில் சேர, இட மாறுதலுக்கு பின்பு உங்களது பணியை தொடங்க ஆகிய விஷயங்களுக்கு முகூர்த்த நேரத்தை மட்டும் பார்த்தால் அது இன்றைய நடைமுறைக்கு ஏற்புடையதாக இருக்காது. மாதத்தில் 4, 5 நாட்கள்தான் முகூர்த்த நேரம் இருக்கும். அந்த நேரத்திற்காக நாம் காத்திருக்க முடியாது. ஒரு பணியில் சேர்வதற்கு முகூர்த்த நாள் உடனடியாக இல்லாதபட்சத்தில் நீங்கள் எந்த நாளாக இருந்தாலும் நல்ல ஓரையில் புதிய பணியை தொடங்குவதோ, ஒரு பணியில் இணைவதோ, பணம் கொடுக்கல்- வாங்கல் போன்ற விஷயத்தில் ஈடுபடுவதோ, முக்கிய நபரை பார்ப்பதோ ஆகிய விஷயங்களை செய்ய லாம். அப்படி ஒரு காரியத்தை செய்கின்றபொழுது அந்த காரியம் ஆனது உங்களுக்கு அனுகூலத்தைத் தருவதாக இருக்கும். பொதுவாக ஒவ்வொரு நாளும் சுப ஓரை என்று உண்டு. நவ கிரகங்களில் ராகு- கேதுவுக்கு ஓரையில் பங்கு கிடையாது. சுப ஓரை என பார்க்கின்றபொழுது குரு, சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்களின் ஓரைகள் சுப ஓரை ஆகும். பஞ்சாங்கம் மற்றும் கேலண்டர் களில் சுப ஓரைக்கான நேரத்தைத் தந்திருப்பார்கள். அந்த சுப ஓரையில் உங்களுக்கு சந்திராஷ்டமம் இல்லாத நாட்களாக பார்த்து ஒரு காரியத்தை மேற்கொண்டால் அந்த காரியம் சாதகமாக முடிவதற்கான வாய்ப்புகள் இருக்கும். நமது "பாலஜோதிடம்' இதழில் ஒவ்வொரு வாரமும் வரக்கூடிய நாளும் நேரமும் என்ற பகுதியில் ஒவ்வொரு ராசிக்கான அந்த வாரத்தில் இருக்கக்கூடிய சுப ஓரை நேரத்தை, ஒவ்வொரு நாளுக்கும் விளக்கமாக வழங்கி வருகிறோம். அதில் இருக்கக்கூடிய நேரத்தில் ஒரு காரியத்தை முயற்சித்தால் நற்பலன் தரும். வாரத்தில் உள்ள ஏழு நாளிலும் ராகு காலம், எமகண்டம் இல்லாமல் ஒவ்வொரு நாளும் இருக்கக்கூடிய சுப ஓரை நேரத்தைத் தான் விளக்கமாக உங்களுக்கு தருகிறோம். அதனை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வது நல்லது. ப்