என் வாழ்க்கை எப்படியிருக்கும் என்று கூறுங்கள்? -சண்முகம், வேலூர்.

பதில்: அஸ்த நட்சத்திரம், கன்னி ராசி, தனுசு லக்னத்தில் பிறந்த உங்களுக்கு லக்னாதிபதி குரு, சனி சேர்க்கைப்பெற்று லாப ஸ்தானமான 11-ல் இருக்கிறது. 10-ல் புதன், சூரியன், சந்திரன், சுக்கி ரன் ஆகிய கிர கங்கள் இருப் பது சிறப்பு. 10-ல் புதன் ஆட்சி, உச்சம் பெற்றிருப்பதா லும் தற்போது குரு தசை நடப்பதும் அடுத்து உங்களுக்கு சனி மகா தசை நடக்க இருப்பதும் சிறப் பான அமைப்பு. ஜாதகத்தில் புதன், சனி, செவ்வாய் ஆகிய கிரகங்கள் வலுவாக இருப்பதால் சகலவிதத்திலும் ஒரு சிறப் பான வாழ்க்கையை அடையக்கூடிய அதிர்ஷ் டங்கள் உண்டு. தற்போது நடக்கக்கூடிய குரு தசை விட 20-6-2026 முதல் நடைபெற உள்ள சனி மகா தசை உங்கள் வாழ்வில் ஒரு நல்ல முன்னேற்றத்தைத் தரும்.

aa

எனது தங்கைக்கு திருமணம் எப்போது நடைபெறும் என்று கூறுங்கள்? -உமாமகேஸ்வரி, சென்னை.

பதில்: ஆயில்ய நட்சத்திரம், கடக ராசி, கும்ப லக்னத்தில் பிறந்த உங்கள் தங்கைக்கு 7-ஆம் அதிபதி சூரியன் லக்ன கேந்திரத்தில் அமையப்பெற்று குரு பார்வை பெறுவது சிறப்பு. ஜாதகத் தில் களத்திர காரகன் செவ்வாய் உச்சம் பெற்று இருப்பதும் சிறப்பான அமைப்பாகும். ஆயில்ய நட்சத்திரம் என்றால் மாமியாருக்கு ஆகாது என்ற ஒரு கருத்து உண்டு. நடைமுறையில் பார்க்கின்றபொழுது ஆயில்யத்தில் பிறந்தால் மாமியாரை பாதித்துவிடும் என்ற கருத்துதானே தவிர மாமியார் ஜாதகம் சிறப்பாக இருந்தால் கெடுதி செய்யாது. ஜாதகரீதியாக தற்போது சூரிய தசையில் ராகு புக்தி நடக்கிறது. வரும் 7-5-2024 முதல் சூரிய தசையில் குரு புக்தி நடக்கும் தருவாயில் திருமண யோகம் உண்டு. 2024 மே மாதம்முதல் குருபகவானும் கோட்சாரத்தில் லாப ஸ்தானத்தில் இருக்கும் தருவாயில் நல்லது நடக்கும்; குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளவும்.

எனது மகனுக்கு திருமணம் எப்போது நடைபெறும்? என்ன பரிகாரம் செய்வது என்று கூறுங்கள்? -கல்யாணி, பாண்டி.

பதில்: மிருகசீரிஷ நட்சத்திரம், மிதுன ராசி, கடக லக்னத்தில் பிறந்த உங்கள் மகனுக்கு 7-ஆம் அதிபதி சனி, கேது சேர்க்கைப்பெற்ற காரணத்தால் நல்ல காரியம் நடக்க இடையூறுகள் ஏற்படுகிறது. லக்னத்திற்கு 7-ஆம் அதிபதி சனி என்ற காரணத்தால் உறவில்லாமல் அந்நியத்தில் வரன் பார்ப்பது சிறப்பு. குறிப் பாக 8-ல் இருக்கக்கூடிய சுக்கிரன் ராகு சாரம் பெற்றிருப்பதால் அந்நிய ஜாதியில் வரன் பார்ப்பது நல்லது. 15-3-2024 முதல் சனி தசையில் புதன் புக்தி நடக்கும் தருவாயில் திருமண முயற்சிகள் மேற்கொள்ளவும்; நல்லது நடக்கும். 5-ஆம் வீட்டில் சனி, கேது இருப்பதால் குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வதன்மூலம் கெடுதிகள் குறையும்.

எனது மகனுக்கு திருமணம் எப்போது நடைபெறும் என்று கூறுங்கள்?

பதில்: பூர நட்சத்திரம், சிம்ம ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்த உங்கள் மகனுக்கு 7-ஆம் அதிபதியும் களத்திரகாரகனுமான சுக்கிரன் 7-ல் ஆட்சி பெற்றிருப்பது அற்புத மான அமைப்பாகும். 8-ல் செவ்வாய் இருப்பதால் செவ்வாய் தோஷம் ஆகும். வரும் பெண் ஜாதகத்தில் லக்னத்திற்கு 2, 4, 7, 8, 12-ல் செவ்வாய் இருப் பதுபோல் பார்த் தால் நல்லது. தற்போது சந்திர தசையில் ராகு புக்தி 6-7-2024 முடிய நடக்கிறது. அடுத்து சுக்கி ரன் நட்சத்திரத்தில் அமையப்பெற்ற குரு புக்தி தொடங்கியவுடன் நல்ல வாழ்க்கை அமையக் கூடிய ஒரு அதிர்ஷ்டங்கள் உண்டு. சுக்கிரன் வலுவாக இருப்பதால் மணவாழ்க்கை சிறப்பாக இருக்கும். பெருமாள் வழிபாடு மேற்கொள்வது, குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

எனது தம்பிக்கு திருமணம் எப்போது நடைபெறும்? எப்படிபட்ட மனைவி அமைவார் என்று கூறுங்கள்? -மகேஷ்வரி, புதுகோட்டை.

பதில்: சுவாதி நட்சத்திரம், துலா ராசி, மேஷ லக்னத்தில் பிறந்த உங்கள் தம்பிக்கு 7-ஆம் அதிபதி சுக்கிரன் 10-ல் செவ்வாய், ராகு சேர்க்கைப்பெற்று இருப்பது நல்ல அமைப்பாகும். சுக்கிரன், ராகு சேர்க்கைப் பெற்றாலும் ராகு தசை சிறுவயதிலே முடிந்து விட்டதால் கெடுதியில்லை. தற்போது சனி தசையில் கேது புக்தி 4-6-2024 முடிய நடக்கிறது. அடுத்து சுக்கிர புக்தி நடக்க இருப்பதால் அடுத்த ஜூன் பிறகு நல்ல வாழ்க்கை அமையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. 7-ஆம் அதிபதி சுக்கிரன் கேந்திர ஸ்தானத்தில் சிறப்பாக அமையப்பெற்று குரு பார்வை 7-ஆம் வீட்டுக்கு இருப்பதாலும், 7-ல் சந்திரன் இருப்பதாலும் நல்ல அழகான பெண் மனைவியாக வரக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்கள் உண்டு. குரு, ராகு சாரம் பெற் றிருப் பதாலும், சுக்கிரன், ராகு சேர்க்கை பெற்றிருப்ப தாலும் உற வில்லாமல் அந்நியத்தில் வரன் பார்ப்பது நல்லது. பைரவர் வழிபாடு மேற்கொள்ளவும்; நல்லது நடக்கும்.

எனது கணவர் என்னைவிட்டு பிரிந்து சென்றுவிட்டார். அவர் மீண்டும் வருவாரா? என் நேரம் எப்படியிருக்கிறது என்று கூறுங்கள்? -கௌரி, பெட்டவாய்த்தலை.

பதில்: சதய நட்சத்திரம், கும்ப ராசி, கடக லக்னத்தில் பிறந்த உங்கள் ஜாகத்தில் சந்திரனுக்கு 2-ஆம் வீட்டிலுள்ள ராகு புக்தி 24-2-2025 முடிய நடக்கிறது. சனி தசையில் ராகு புக்தி நடப்பதால் உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் ஒற்றுமை குறைவு, கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுவிட்டது. பொதுவாக திருமணத்துக்குபிறகு வரக்கூடிய காலத்தில் லக்ன, ராசிக்கு 2-ஆம் வீட்டில் பாவ கிரகங்கள் இருந்து அந்தப் பாவ கிரக தசை அல்லது புக்தி நடைபெறுகின்ற பொழுது குடும்ப ஒற்றுமை பாதிக்கும். சந்திரனுக்கு 2-ல் ராகு இருப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது தற்போதைக்கு நல்லது. 2025 பிப்ரவரியில் குரு புக்தி வருகின்றபொழுது கண்டிப்பாக குடும்ப ஒற்றுமை சிறப் பாக இருக்கும்; கவலைப்பட வேண்டாம். தற்போதைக்கு பொறுமைக் காக்கவும். அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.

எனது குழந்தையின் படிப்பு எப்படியிருக்கும் என்பதை பற்றியும் அடுத்துவரும் ராகு தசை பலன்களையும் கூறுங்கள்?

பதில்: திருவோண நட்சத்திரம், மகர ராசி, மீன லக்னத்தில் பிறந்த உங்கள் மகளுக்கு 4-ஆம் வீட்டில் சுக்கிரன் அமையப்பெற்று 4-ஆம் அதிபதி புதன் 6-ல் இருந்தாலும் வர்கோத்தமம் பெற்றிருப்பதால் கல்வி நிலை மிகச்சிறப்பாக இருக்கும். புதன், ராகு சேர்க்கை பெற்றாலும் புதனை ராகு கடந்து சென்று விட்டதால் பெரிய கெடுதி கிடையாது. நல்ல அறிவாற் றல், சிறப்பான கல்வி யோகம் இருக்கும். உங்கள் மகளுக்கு அடுத்து ராகு தசை வருகின்றபொழுது ராகு 6-ல் இருந்து தசை நடப்பது சிறப்பான அமைப்பு என்றா லும் சூரியன் வீட்டில் இருக்கக்கூடிய ராகு தசை என்ற காரணத்தால் தந்தைவழி உறவினர் களிடம் ஒற்றுமைக் குறைவு ஏற்படும். தந்தைவழி உறவினர்களிடம் சற்று கவனத்தோடு இருப்பது, வயது மூத்தவரிடம் பேசுகின்றபோது சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. பொதுவாக சூரியன் வீட்டில் ராகு இருப்பது தந்தைக்கே சின்ன சின்ன சோதனையை தரக்கூடிய அமைப்பு என்றாலும் சூரியன் திரிகோண ஸ்தானத்தில் புதன் சாரம் பெற்றிருப்பதால் பெரிய கெடுதிகள் ஏற்படாது. ராகு தசை நடைபெறுகின்றபொழுது சிவ வழிபாடு மேற்கொள்வது, குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது நல்லது.