ப் கேள்வி: நான் குரூப் தேர்வுக்கு முயற்சி செய்துகொண்டிருக்கிறேன். எனக்கு அரசு வேலை கிடைக்குமா? எனக்கு அடுத்து ஆண் குழந்தை எப்போது பிறக்கும் என்று கூறுங்கள்?

-நிவேதா, சேலம்.

பதில்: சித்திரை நட்சத்திரம், கன்னி ராசி, துலா லக்னத்தில் பிறந்த உங்களுக்கு ஒருவர் ஜாதகத்தில் ஜீவனஸ்தானமான 10-ல் சூரியன் செவ்வாய் ஆகிய கிரகங்கள் வலுவாக இருந்தால்தான் அரசு பணியில் பணிபுரியக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். உங்கள் ஜாதகத்தில் 10-ஆம் அதிபதி சந்திரன் 12-ல் அமைந்துள்ளார். சந்திரனுக்கு 10-ல் புதன் வலுவாக இருந்தாலும் கேது சேர்க்கைப் பெற்று இருப்பது சாதகமற்ற அமைப்பாகும். புதன் வலுவாக இருப்பதாலும் குரு தசை நடப்பதாலும் கணக்கு, கம்பியூட்டர், வங்கிப் பணி ஆகியவற் றில் முயற்சித் தால் நல்லது நடக்க வாய்ப் புண்டு.

உங்கள் ஜாதகத்தில் 5-ஆம் அதிபதி சனி வக்ரம் பெற்றிருப்ப தும், ஆண் கிரகங்களான குரு, செவ்வாய் ஆகியவை கேது நட்சத்திரத்தில் இருப்ப தாலும் ஆண் வாரிசுக்கான வாய்ப்பு சற்று குறைவு. கணவர் ஜாதகத்தில் ஆண் கிரகங்கள் வலுவாக இருந்தால் நல்லது நடக்க வாய்ப்புகள் உண்டு. தற்போது குரு தசையில் சுக்கிர புக்தி 16-1-2025 முடிய நடப்பதால் தற்சமயத்துக்கு பெண் குழந்தைக்கான வாய்ப்புகள் உங்க ஜாதகரீதியாக பலமாக இருக்கிறது. வாழ்வில் நல்லது நடக்க விநாயகர் வழிபாடு, குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளவும்

Advertisment

கேள்வி: நான் குரூப்- 2 தேர்வு எழுதி வருகிறேன். எனக்கு அரசு வேலை எப்போது கிடைக்கும்? திருமணம் எப்போது நடைபெறும் என்று கூறுங்கள்?

-கோகுல்நாத், சேலம்.

பதில்: சதய நட்சத்திரம், கும்ப ராசி, கும்ப லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 10-ஆம் அதிபதி செவ்வாய் குரு நட்சத்திரத்தில் அமையப்பெற்று 5-ல் இருப்பது நல்ல அமைப்பாகும். சூரியன், குரு, புதன் ஆகிய கிரகங்கள் இணைந்து 4-ல் இருப்பது சிறப்பாகும். தற்போது சனி தசையில் சனி புக்தி 2-12-2023 முடிய நடப்பதால் 2023 டிசம்பருக்குப்பிறகு நிர்வாக தொடர்புடைய பணிகளுக்கான வாய்ப்புகள் உண்டு.

Advertisment

சனி வக்ரம் பெற்றிருப்பதால் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டால் எதிர்காலத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். 7-ஆம் அதிபதி சூரியன் சுக்கிரனுடன் 4-ல் இருப்து சிறப்பு என்பதால் 2024 தொடக்கத்தில் திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு.

qq

ப் கேள்வி: எனக்கு திருமணம் எப்போது நடைபெறும்? எங்கள் வீட்டை புதுப்பித்து கட்டலாமா அல்லது அதை விற்றுவிட்டு புதுவீடு வாங்கும் யோகம் உண்டா? எனக்கு அரசு பணி கிடைக்குமா என்று கூறுங்கள்?

-கோவிந்தன், கடலூர்.

பதில்: உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்த உங்க ளுக்கு 7-க்கு அதிபதியும் களத்திரக் காரனுமான சுக்கிரன் 5-ல் உச்சம் பெற்று இருப்பது அற்புதமான அமைப்பாகும். லக்னத்திற்கு 7-ல் கேது அமையப்பெற்ற தற்போது கேது தசையில் ராகு புக்தி 9-8-2023 முடிய நடப்பது நல்ல அமைப்பு இல்லை. 7-ல் அமையப்பெற்ற கேது தசை நடைபெற்றாலே திருமணம் நடைபெற இடையூறுகள் ஏற்படும். திருமணம் நடைபெற்றாலும் ஒற்றுமை குறைவுகள் ஏற்படும். 2023 ஆகஸ்ட்பிறகு திருமணம் முயற்சிகள் மேற்கொண்டால் நல்லது நடக்கும் என்றாலும் 21-8-2026 வரை கேது தசை நடப்பதால் வாழ்வில் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. உங்கள் ஜாதகத்தில் 4-ஆம் அதிபதி சனி 3-ல் ஆட்சிபெற்று பலமாக இருப்பதால் புதிதாக வீடு வாங்குவதைவிட பழைய வீட்டை புதுப்பிப்பது நல்ல பலனை தரும். தற்போது ஏழரைச்சனியும் கேது தசையும் நடப்பதால் கேது தசை முடியும் வரை பொறுமை காப்பது மிக மிக நல்லது. அடுத்து சுக்கிர தசை வருகின்றபொழுது சொந்த வீடு, வாசல், வசதி வாய்ப்புகள் உண்டாக்கும். 10-ஆம் அதிபதி சூரியன் 3-ல் புதன் சேர்க்கைப்பெற்று இருப்பதால் பிறந்த ஊரைவிட வெளியூர், வெளிமாநிலங்களில் நல்ல வாய்ப்புகள் உண்டு. 2026-க்குப் பிறகு நல்ல வேலை வாய்ப்பு அமையும்.

ப் கேள்வி: என் மகனுக்கு திருமணம் முடிந்த சில மாதங்களில் இருவரும் பிரிந்து விட்டார்கள். அவர்கள் இருவரும் மீண்டும் சேர்ந்துவாழ வாய்ப்பு உள்ளதா அல்லது என் மகனுக்கு மறுமணம் செய்யலாமா என்று கூறுங்கள்? இப்பொழுது என்ன தசை, என்ன புக்தி நடக்கின்றது? -பெயர் வெளியிட விரும்பவில்லை

பதில்: ஆயில்ய நட்சத்திரம், கடக ராசி, கும்ப லக்னத்தில் பிறந்த உங்கள் மகனுக்கு 7-க்கு அதிபதி சூரியன் 9-ல் நீசம் பெற்றாலும் துலா ராசியில் கடைசி பாதத் தில் இருப்பது சாதகமான அமைப்புதான். சுக்கிரன் கேந்திர ஸ்தானமான 10-ல் வலுவாக இருப்பதால் மணவாழ்வில் அனுகூலங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. மருமகள் ஜாதகரீதியாக ஏதாவது குறை இருந்தால் இருவருக்கும் பிரச்சினைகள் ஏற்பட்டு இருக்கலாம். சிறிது காலம் பொறுமை காக்கவும். விரைவில் நல்லது நடக்கும். தற்போது சுக்கிர தசையில் புதன் புக்தி 4-8-2025 வரை நடப்பது சாதகமான அமைப்புதான். மனம் தளராமல் இறைவழிபாடுகள் மேற்கொள்ளவும்; நல்லது நடக்கும்.

ப் கேள்வி: என் மகனுக்கு நல்ல வேலை எப்போது அமையும்? இப்பொழுது என்ன தசை என்ன புக்தி நடக்கின்றது என்று கூறுங்கள்?

-இராஜபாளையம்

பதில்: ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி, மிதுன லக்னத்தில் பிறந்த உங்கள் மகனுக்கு 10-ஆம் அதிபதி குரு 4-ல் வக்ரகதி இருப்பது எதிர்நீச்சல் போட்டு ஒரு நல்ல நிலையினை அடையக்கூடிய அமைப்பாகும். தற்சமயம் 6-ல் ராகு அமைந்து 3-ஆவது தசையாக ராகு தசை நடப்பது சாதகமற்ற அமைப்பாகும். ராகு நின்று விட்டது செவ்வாய் பலவீனமாக இருப்பதால் ராகு தசை முடியும் வரை கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டால் 2025 நவம்பர் பிறகு குரு தசை வருகின்றபொழுது நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தற்போது முன்கோபத்தை குறைத்துக் கொள்வது அம்மன் வழிபாடு துர்க்கை வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

ப் கேள்வி: எப்போது என் கடன் பிரச்சினை தீரும்?

-பாரி, விருத்தாச்சலம்

பதில்: மிருகசீரிஷ நட்சத்திரம், மிதுன ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 6-ஆம் அதிபதி சனி தசையில் சுய புத்தி 8-10-2025 முடிய நடக்கிறது. 6-ஆம் அதிபதி தசை நடந்தாலே பொருளாதாரம் நெருக்கடிகள், கடன், வம்புகள் வரக்கூடிய அமைப்பை ஏற்படுத்தும். கடந்த ஆறு மாத காலமாக சுயபுக்தி நடப்பது, அதற்குமுன்பு அஷ்டமச்சனியும், 6-ல் உள்ள குரு தசை நடந்ததும் சாதகமற்ற அமைப்பாகும். சிம்ம லக்னத்திற்கு 6, 7-க்கு அதிபதி சனி லக்னாதிபதி சூரியனுக்கு பகை கிரகம் என்றாலும் 3-ல் உச்சம்பெற்று இருப்பதால் உங்களுக்கு ஒரு வளமான பலன்களை ஏற்படுவதற் கான வாய்ப்புகள் உண்டு. சனி வக்ரம் பெற்றிருந்தா லும் சூரியனுக்கு 5-ல் இருப்பதால் வக்ரத்தின் பலம் குறைவு. 4-ஆவது தசை யாக சனி தசை நடப்ப தால் இனிவரும் காலங்களில் படிப்படியான வளர்ச்சிகள் இருக்கும். சுய புக்தி கடந்தால்கடன்கள் குறையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சுய புக்தி முடியும் வரை ஆஞ்சனேயர் வழிபாடு, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது.