இவரின் படிப்பு மற்றும் ஆரோக்கியத்தை பற்றி கூறுங்கள்?

பதில்: திருவோண நட்சத்திரம், மகர ராசி, மீன லக்னத் தில் பிறந்த ஜாதகருக்கு லக்னம், ராசியை குரு பார்ப்பதால் நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம் ஏற்படும். 4-ஆம் வீட்டில் சுப கிரகமான சுக்கிரன் அமையப்பெற்று 6-ல் உள்ள புதன் வர்கோத்தமம் பெற்று சுக்கிர நட்சத்திரமான பூரத்தில் இருப்பதால் எதிர்காலத்தில் படிப்பு சிறப்பாக இருக்கக்கூடிய வாய்ப்புகள், நல்ல வளர்ச்சி இருக்கும். அடுத்து ராகு தசை நடக்க இருப்பதால் அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது நல்லது.

(பெண்) இந்த ஜாதகருக்கு எப்போது திருமணம் நடைபெறும்? ஏதாவது தோஷம் இருந்தால் என்ன பரிகா ரம் செய்வது என்று கூறுங்கள்?

பதில்: உத்திராட நட்சத்திரம், மகர ராசி, கன்னி லக்னத்தில் பிறந்த ஜாதகிக்கு 7-ஆம் அதிபதி குரு 12-ல் மறைந்திருப்பதா லும், களத்திரகாரகன் செவ்வாய் 8-ல் கேது நட்சத்திரத்தில் இருப்பதாலும் திருமணம் தாமதமாகி உள்ளது. தற்போது கேது நட்சத்திரத்தில் அமையப்பெற்ற ராகு தசை நடப்பதாலும் திருமணத்தில் இடையூறுகள் ஏற்படுகிறது. ராகு தசை நடப்பதால் உறவில்லாமல் அந்நியத்தில் வரன் பார்த்தால் நல்லது நடக்க வாய்ப்பு உண்டு. அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது. 2025 மே மாதத்திற்குள் நல்ல பலன் கிடைக்க வாய்ப்பு உண்டு. குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளவும். சூரியன்- கேது சேர்க்கைப் பெற்று கிரகன காலங்களில் பிறந்திருப்பதால் தேவையற்ற இடையூறுகள் ஏற்படுகிறது.

aa

மனைவியை பிரிந்து வாழும் எனக்கு மறுமணம் உண்டா? என் கடன் பிரச்சினைகள் எப்போது தீரும் என்று கூறுங்கள்?

பதில்: அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, கும்ப லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 7-ஆம் அதிபதி சூரியன்- கேது நட்சத்திரத் தில் அமையப்பெற்று லாப ஸ்தானத் தில் இருப்பதாலும், சந்திரன்- கேது நட்சத்திரத்தில் இருக்கும்பொழுது பிறந்ததாலும், சுக்கிரன்- ராகு சாரம் பெற்ற சனி சேர்க்கைப்பெற்ற நேரத்தில் பிறந்ததா லும் அடுத்து கடந்த காலங்களில் கேது நட்சத்திரத்தில் அமையப்பெற்ற சூரிய தசை யும், கேது நட்சத்திரத்தில் அமையப்பெற்ற சந்திர தசையும் நடைபெற்றதாலும் மனவாழ் வில் ஒற்றுமை குறைவு ஏற்பட்டு உள்ளது. கன்னியில் செவ்வாய் இருப்பது இல்லற வாழ்க்கைக்கு அவ்வளவு சிறப்பு அல்ல. அடுத்து ஏதாவது வாழ்க்கை அமைந்தாலும் விட்டுக் கொடுத்து சென்றால்தான் வாழ்க்கை நன்றாக இருக்கும். உங்களுக்கு தற்போது 8-ல் உள்ள செவ்வாய் தசை நடப்பதால் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படுகிறது. பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சிக்கனத்தோடு இருந்தால்தான் ஏற்படக் கூடிய கடன்களை சற்று குறைத்துக்கொள்ள முடியும். 8-ல் உள்ள செவ்வாய் தசை நடப்ப தால் முருக வழிபாடு தொடர்ந்து மேற் கொள்ளவும். படிப்படியான வளர்ச்சியை அடையமுடியும்.

என் சகோதரியின் மகளுக்கு முதல் திருமணம் பிரச்சினை ஏற்பட்டு விவாகரத்து வழக்கு நடந்துகொண்டிருக்கின்றது. அவளுக்கு மறுமணம் நடைபெறுமா என்று கூறுங்கள்?

பதில்: விசாக நட்சத்திரம், துலா ராசி, மகர லக்னத்தில் பிறந்த உங்கள் சகோதரியின் மகளுக்கு 7-ஆம் அதிபதி சந்திரன் 10-ல் இருப்பதும், லக்னத்தில் செவ்வாய் உச்சம் பெற்றிருப்பதும் நல்ல அமைப்பு என்ற காரணத்தினால் மனவாழ்வில் ஒருசில அனுகூலங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு என்றாலும் கடந்த மூன்று வருடங்களாக 2-ல் அமையப்பெற்ற ராகு புக்தி புதன் தசையில் 28-12-2024 முடிய நடைபெறுவது நல்ல அமைப்பில்லை. அடுத்து குருபுக்தி வருகின்ற பொழுது ஜனவரிக்குப்பிறகு மறுமணம் ஏற்பட வாய்ப்பு உண்டு. 2-ல் ராகு இருப்பதாலும் 2029-க்குபிறகு 8-ல் உள்ள கேது தசை நடைபெற இருப்பதாலும் அடுத்த வாழ்க்கை அமைந்தாலும் விட்டுக் கொடுத்து செல்வது மிகவும் நல்லது. செவ்வாய் உச்சம் பெற்றிருந்தாலும் 2-ல் ராகு 8-ல் கேது இருப்பதால் எதிலும் பொறுமை காப்பது மிகவும் நல்லது.

நான் கடன் வாங்கி சொந்த வீடு கட்டிக் கொண்டிருக்கின்றேன். இதில் தடை ஏதுமின்றி விரைவில் வீட்டை கட்டிமுடித்து மகிழ்ச்சியுடன் வாழ்வேனா? வாங்கிய கடனை திருப்பி அடைக்க முடியுமா என்று கூறுங்கள்? -கமலவேணி, ஈரோடு.

பதில்: அவிட்ட நட்சத்திரம், கும்ப ராசி, தனுசு லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 4-ஆம் அதிபதி குரு ஜென்ம லக்னத்தில் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால் வீடு கட்டக் கூடிய முயற்சியில் எந்தவித தொய்வின்றி வெற்றியடைய வாய்ப்பு உண்டு. கும்ப ராசியில் பிறந்த உங்களுக்கு தற்போது ஏழரைச்சனியில் ஜென்மசனி நடப்பதால் கடன்கள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. 4-ஆம் அதிபதி பலமாக இருப்பதாலும் குரு- சனி சேர்க்கைப் பெற்றிருப்பதாலும் வாங்கிய கடனை அடைக்கக்கூடிய சக்தி கிடைக்கும். ஏழரைச்சனி நடப்பதால் கடன் பிரச்சினை சற்று அதிகப்படியாகதான் இருக்கும். பணத்தை கையாளுகின்றபொழுது சற்று சிக்கனத்தோடு செயல்படுவது நன்மை தரும். சனிபகவான் வழிபாடு, ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வதன்மூலம் நன்மை ஏற்பட வாய்ப்பு உண்டு.