பாலமுருகன் பதில்கள்!

/idhalgal/balajothidam/balamurugan-answers-29

ன் மகளுடைய எதிர்கால படிப்பு மற்றும் வேலை எப்படி யிருக்கும் என்று கூறுங்கள்? -கிருத்திகா.

திருவோண நட்சத்திரம், மகர ராசி, மீன லக்னத்தில் பிறந்த உங்கள் மகளுக்கு லக்னாதிபதி குரு 10-ல் ஆட்சிபெற்றிருப்பதும், 4-ஆம் அதிபதி புதன்- சூரியன் சேர்க்கைப்பெற்றிருப்பதும் சிறப்பான அமைப்பு என்ப தால் எதிர்கால வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

சூரியன், புதன், செவ்வாய் சேர்க்கைப்பெற்று இருப்ப தால் படிப்பில் சாதிக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. எதிர்காலத்தில் நல்ல வேலை யில் அமரக்கூடிய அமைப்பு, குறிப்பாக வங்கி பணி, மக்கள் தொடர்புடைய பணிகளில் நல்ல பதவி வகிக்கக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்கள் உண்டாகும்.

கிரகங்கள் எதுவும் வக்ரம் பெறாமல் இருப்பது சிறப்பான அமைப்பாகும். சூரியன், ராகு சாரம் பெற்று இருப்பதாலும் சிம்மத்தில் சனி இருப்பதாலும் தந்தை வழி உறவினர்வகையில் பகை உண்டாகும். குல தெய்வ வழிபாடு மேற் கொள்வது நல்லது.

எனது மகனுக்கு எப்போது வேலை கிடைக்கும் என்று கூறுங்கள்?

கிருத்திகை நட்சத்திரம், மேஷ ராசி, மீன லக்னத்தில் பிறந்த உங்கள் மகனுக்கு 10-ஆம் அதிபதி குரு 3-ல் வக்ரம் பெற்றிருக்கிறது. குரு வக்ரகதியில் இருப்பதால் நீங்கள் எதிர்பார்த்த பணி கிடைக்க ஒருசில தடைகளும், வேலையில் அடிக்கடி மாற்றங்களும் ஏற்படுகிறது.

தற்போது ராகு தசையில், சுக்கிர புக்தி 29-3-2026 முடிய நடப்பதால் கோட்சாரத்தில் குரு வக்ரநிவர்த்திக்கு பிறகு குறிப்பாக ஜனவரி 1-ஆம் தேதிக்கு மேல் நல்ல வேலை

ன் மகளுடைய எதிர்கால படிப்பு மற்றும் வேலை எப்படி யிருக்கும் என்று கூறுங்கள்? -கிருத்திகா.

திருவோண நட்சத்திரம், மகர ராசி, மீன லக்னத்தில் பிறந்த உங்கள் மகளுக்கு லக்னாதிபதி குரு 10-ல் ஆட்சிபெற்றிருப்பதும், 4-ஆம் அதிபதி புதன்- சூரியன் சேர்க்கைப்பெற்றிருப்பதும் சிறப்பான அமைப்பு என்ப தால் எதிர்கால வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

சூரியன், புதன், செவ்வாய் சேர்க்கைப்பெற்று இருப்ப தால் படிப்பில் சாதிக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. எதிர்காலத்தில் நல்ல வேலை யில் அமரக்கூடிய அமைப்பு, குறிப்பாக வங்கி பணி, மக்கள் தொடர்புடைய பணிகளில் நல்ல பதவி வகிக்கக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்கள் உண்டாகும்.

கிரகங்கள் எதுவும் வக்ரம் பெறாமல் இருப்பது சிறப்பான அமைப்பாகும். சூரியன், ராகு சாரம் பெற்று இருப்பதாலும் சிம்மத்தில் சனி இருப்பதாலும் தந்தை வழி உறவினர்வகையில் பகை உண்டாகும். குல தெய்வ வழிபாடு மேற் கொள்வது நல்லது.

எனது மகனுக்கு எப்போது வேலை கிடைக்கும் என்று கூறுங்கள்?

கிருத்திகை நட்சத்திரம், மேஷ ராசி, மீன லக்னத்தில் பிறந்த உங்கள் மகனுக்கு 10-ஆம் அதிபதி குரு 3-ல் வக்ரம் பெற்றிருக்கிறது. குரு வக்ரகதியில் இருப்பதால் நீங்கள் எதிர்பார்த்த பணி கிடைக்க ஒருசில தடைகளும், வேலையில் அடிக்கடி மாற்றங்களும் ஏற்படுகிறது.

தற்போது ராகு தசையில், சுக்கிர புக்தி 29-3-2026 முடிய நடப்பதால் கோட்சாரத்தில் குரு வக்ரநிவர்த்திக்கு பிறகு குறிப்பாக ஜனவரி 1-ஆம் தேதிக்கு மேல் நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். முத-ல் கிடைக்கக்கூடிய பணியை செய்தால் படிப்படியான வளர்ச்சியை அடைய முடியும்.

குரு வக்ரகதியில் இருக்கும்போது பிறந்த தால் சில விஷயங்களில் விட்டுக் கொடுத்து சென்றால்தான் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.

என் மகளுக்கு திருமணம் எப்போது நடைபெறும்? ஜாதகத்தில் மாங்கல்ய தோஷம் ஏதாவது உள்ளதா என்று கூறுங்கள்?

திருவோண நட்சத்திரம், மகர ராசி, மகர லக்னத்தில் பிறந்த உங்கள் மகளுக்கு 7-ஆம் அதிபதி சந்திரன் லக்ன கேந்திரம்பெற்று, செவ்வாய் 10-ல் குரு நட்சத்திரத்தில் இருப்பது அற்புதமான அமைப்பு என்பதால் சிறப் பான திருமண வாழ்க்கை அமையும் வாய்ப்புகள் உண்டு. 8-ல் ராகு இருப்பது மாங்கல்ய தோஷம் என்றாலும் 8-ஆம் அதிபதி சூரியன் ஆட்சிபெற்று, களத்திரகாரகன் செவ்வாய் 10-ல் இருப்பதால் பெரிய கெடுதியில்லை.

என் அனுபவத்தில் 8-ல் பாவ கிரகங்கள் அமையப்பெற்று திருமணத்துக்கு பிறகு வரக்கூடிய காலத்தில் அந்தப் பாவ கிரகத்தின் தசை நடைபெற்றால் கணவர்வழி உறவினர் வகையில் ஒற்றுமை குறைவு ஏற்படும்.

oo

உங்கள் மகளுக்கு 1-5-2024-க்கு பிறகு குரு 5-ல் சஞ்சரிக்கின்றபொழுது சிறப்பான மணவாழ்க்கை அமையும் யோகம் உண்டு.

8-ல் உள்ள ராகுவின் தசை 8-6-2032 வரை நடைபெற இருப்பதால் திருமணத்துக்கு பிறகு கணவர்வழி உறவினரிடம் விட்டுக்கொடுத்து செல்வது மிகவும் நல்லது. ஒரு சிறப்பான வாழ்க்கை அமைய அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.

எனது மகளுக்கு திருமணம் எப்போது நடைபெறும்? ஜாதகத்தில் தோஷம் ஏதாவது உள்ளதா என்று கூறுங்கள்? -ஜெயலட்சுமி.

ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி, கும்ப லக்னத்தில் பிறந்த உங்கள் மகளுக்கு 7-ஆம் அதிபதி சூரியன் 8-ல் அமைந்து 8-ஆம் அதிபதி புதன் 7-ல் அமைந்து 7, 8 பரிவர்த்தனை பெற்றிருக்கிறது. களத்திர காரகன் செவ்வாய் 10-ல் அமைந்து ஆட்சி பெற்று இருப்பது அற்புதமான அமைப் பாகும்.

7-ஆம் அதிபதி பரிவர்த்தனை பெறுகின்றபொழுது திருமண விஷயத்தில் குறிப்பாக திருமணத்திற்காக வரன் பார்க்கின்றபொழுது ஒரு தடை ஏற்பட்டு அதன்பிறகு அனுகூலங் கள் உண்டாகிறது.

உங்கள் மகள் ஜாதகத்தில் 7-ல் ராகு இருந்தாலும் 19-2-2023-ல் ராகு தசை முடிந்துவிட்டதால் கெடுதியில்லை. தற்போது குரு தசை நடப்பதால் ஒரு சிறப்பான மண வாழ்க்கை அமையக்கூடிய யோகங்கள் உண்டு.

7-ல் ராகு இருப்பதால் உக்ர தெய்வங் களை வழிபாடுசெய்வது, குரு வக்ரம் பெற்றிருப் பதால் குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது நல்லது.

1-5-2024 முதல் கோட்சாரத்தில் குரு ஜென் மத்தில் இருந்து 7-ஆம் வீட்டை பார்க்கும் தருவாயில் ஒரு சிறப்பான வாழ்க்கை அமையக் கூடிய யோகங்கள் உண்டு.

எனது தம்பி மகளுக்கு திருமணம் எப்போது நடைபெறும் என்று கூறுங்கள்? -பாலசுப்பிரமணியன், சென்னை.

பூராட நட்சத்திரம், தனுசு ராசி, மகர லக்கனத்தில் பிறந்த உங்கள் தம்பி மகளுக்கு களத்திரகாரகன் செவ்வாய் 6-ல் குரு நட்சத்திரத்தில் இருப்பது நல்ல அமைப் பாகும். 7-ஆம் அதிபதி சந்திரன் 12-ல் அமைந்து 12-ஆம் அதிபதி குரு 7-ல் அமைந்து 7, 12 பரிவர்த்தனை பெற்றிருக்கிறது.

7-ஆம் அதிபதி பரிவர்த்தனை பெறுகின்ற பொழுது திருமண விஷயத்தில் ஒரு தடைக் குப்பிறகு அனுகூலங்கள் உண்டாகிறது.

இந்த ஜாதகத்தில் 7-ஆம் அதிபதி ராகு சேர்க்கைப்பெற்றிருப்பதும், களத்திரகாரகன் செவ்வாய்- கேது சேர்க்கைபெற்றிருப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் அமையும் வாழ்க்கையில் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும்.

தனுசு ராசியில் பிறந்த ஜாதகிக்கு தற்போது 5-ல் வக்ரகதியில் சஞ்சரித்து கொண்டு இருக் கக்கூடிய குரு வரும் 31-12-2023 முதல் வக்ர நிவர்த்தி பெற்று 5-ல் சஞ்சரிக்க இருப்பதும், 12-1-2024 முதல் சந்தர தசையில் சுக்கிர புக்தி நடக்க இருப்பதாலும் ஒரு நல்ல வாழ்க்கை அமையக்கூடிய யோகங்கள் உண்டு.

குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளவும்; நல்லது நடக்கும்.

இவருடைய வேலை மற்றும் வாழ்க்கை எப்படியிருக்கும் என்று கூறுங்கள்?

திருவோண நட்சத்திரம், மகர ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்த ஜாதகருக்கு 10-ஆம் அதிபதி சூரியன் 10-ல் ஆட்சிபெற்றிருப் பது அற்புதமான அமைப்பாகும்.

தற்போது 3-ஆவது தசையாக ராகு தசை நடப்பது ஒரு நல்ல அமைப்பு இல்லை.

அடுத்து குறிப்பாக 23-3-2024 முதல் குரு மகா தசை நடக்க இருப்பது சிறப்பான அமைப் பாகும். குரு தசை தொடங்குகின்றபொழுதே அரசுசார்ந்த இடங்களில் ஒரு உயர்வான இடத்தில் நல்ல வாழ்க்கை அமையக் கூடிய ஒரு அதிர்ஷ்டங்கள் உண்டு.

மகர ராசியில் பிறந்த ஜாதகருக்கு 1-5-2024 முதல் குரு 5-ல் சஞ்சரிக்க இருப்பதும். 29-3-2025-ல் ஏழரைச்சனி முடிய இருப்பதும் சிறப்பான அமைப்பாகும்.

2025 முதல் வேலைவாய்ப்பு, வாழ்க்கை நிலை சிறப்பாக இருக்கும். சுக்கிரன், புதன், சூரியன் ஆகிய கிரகங்கள் ஆட்சிபெற்றிருப் பதால் குரு தசை தொடங்கியப் பிறகு வாழ்க்கை மிகமிக நன்றாக இருக்கும்.

என் மகனுக்கு திருமணம் எப்போது நடைபெறும் என்று கூறுங்கள்? -வள்ளியம்மை, புதுகோட்டை.

அவிட்ட நட்சத்திரம், மகர ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்த உங்கள் மகனுக்கு 7-ஆம் அதிபதி சுக்கிரன் 11-ல் நீசம்பெற்று உடன் புதன் உள்ளது. சுக்கிரன் நீசபங்க ராஜயோகம் பெற்ற காரணத்தால் திருமண தொடர்பாக ஒருசில தடைக்குப் பிறகு அனுகூலங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

ஜாதகத்தில் 2-ல் கேது, 8-ல் ராகு, 7-ல் சனி இருப்பதும், சுக்கிரன் நீசபங்க ராஜயோகம் பெற்றிருப்பதும் ஜாதகரீதியாக சாதகமற்ற அமைப்பு என்பதால் இளமையில் திருமணம் செய்வதைவிட சற்று தாமதமாக திருமணம் செய்வது மிகமிக சிறப்பு. அடுத்து திருமணத்திற்கு பிறகும் மணவாழ்க்கையில் விட்டுக் கொடுத்து செல்லவேண்டிய ஜாதகம் ஆகும். தற்போது நடக்கக்கூடிய ராகு தசையை விட 5-3-2024 முதல் நடைபெற இருக்கக்கூடிய குரு மகா தசை சிறப்பாக இருக்கும். 2025 மார்ச் சுக்குப் பிறகு மகர ராசியில் பிறந்த ஜாதகருக்கு ஏழரைச்சனி முடிந்தவுடன் திருமணம்செய்வது மிகமிக நல்லது. திருமணம் செய்தாலும் சிறிது காலத்துக்கு விட்டுக்கொடுத்து செல்வது மிகவும் உத்தமம். குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

bala221223
இதையும் படியுங்கள்
Subscribe