இதுவரை வாழ்க்கையில் எந்த முன்னேற்றமுமில்லை, இனிவரும் காலம் எப்படியிருக்கும்? நிம்மதி இருக்குமா என்று கூறுங்கள்? -வெண்ணிலா, பழனி.

சுவாதி நட்சத்திரம், துலா ராசி, கடக லக்னத்தில் பிறந்த உங்களுக்கு சனி, புதன் நீசம்பெற்று குரு வக்ரகதியில் இருக்கும்பொழுது பிறந்துள்ளீர்கள். கடந்த காலங்களில் நீச சனி தசை நடந்ததாலும், தற்போது நீச புதன் தசை நடப்பதாலும் தேவை யற்ற இடையூறுகள் உங்களுக்கு ஏற்பட்டது. புதனுக்கு நீசபங்க ராஜயோகம் ஏற்பட்டு இருப் பதால் வரும் 17-6-2025 முதல் புதன் தசையில் சுக்கிர புக்தி வருகின்றபொழுது வாழ்வில் நல்ல முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்ளவும். குரு வக்ரகதியில் இருப்பதால் பண விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருக்கவும். நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும்.

என் மகனின் திருமணம் தாமதமாகிக்கொண்டே போகின்றது. திருமணம் எப்பொழுது நடைபெறும்? என்ன பரிகாரம் செய்யவேண்டும்? -அய்யாகண்ணு, பெருங்களத்தூர்.

பூராட நட்சத்திரம், தனுசு ராசி, மேஷ லக்னத்தில் பிறந்த உங்கள் மகனுக்கு 2-ல் கேது, 8-ல் ராகு இருந்து 8-ல் உள்ள ராகு தசையில் சனி புக்தி 5-10-2027 முடிய நடக்கிறது. அஷ்டம ஸ்தானத்திலுள்ள ராகு தசை நடப்ப தால் திருமண சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஒரு நல்ல பலன் அடைய இடையூறுகள் ஏற்படு கிறது. தற்போது ராகு தசை நடப்பதால் உறவில்லாமல் அந்நியத்தில் வரன் பார்க்கவும். உங்கள் மகன் ஜாதகத்தில் சுக்கிரன் 3-ல் இருப் பது நல்ல அமைப்பு என்பதால் 14-5-2025-க்குப் பிறகு ராசிக்கு 7-ல் குரு வரும் தருவாயில் அந்நியத்தில் வரன் அமைய வாய்ப்பு உண்டு. அம்மன் வழிபாடு மேற்கொள்ளவும்; நற்பலன் கிடைக்கும்.

a

எனக்கு அரசாங்க வேலை கிடைக்குமா? திருமணம் எப்பொழுது நடைபெறும் என்று கூறுங்கள்? -கார்த்திகேயன், கோவை.

மிருகசீரிஷ நட்சத்திரம், மிதுன ராசி, கன்னி லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 7-ஆம் அதிபதி குரு 2-ல் அமைந்து குரு தசையில் சுக்கிர புக்தி வரும் 17-7-2025 முடிய நடப்பது நல்ல அமைப்பு என்பதால் இந்த ஆண்டு இறுதிக்குள் நல்ல வாழ்க்கை அமையக் கூடிய வாய்ப்புகள் உண்டு. சுக்கிரன், கேது சாரம் பெற்றிருப்பதால் சொந்தத்தில் வரன் பார்க்காமல் அந்நியத்தில் வரன் பார்ப்பது நற்பலனைத் தரும். உங்கள் ஜாதகத்தில் சனி வக்ரகதியில் இருப்பதால் ஒருசில தடைக்குப்பிறகு வாழ்வில் நல்லது நடக்கும். ஜென்ம லக்னத்திற்கு 10-ஆம் வீட்டில் சூரியன், புதன், சந்திரன் ஆகிய கிரகங்கள் அமையப் பெற்றிருப்பதால் அரசு, அரசு உதவி பெறக்கூடிய இடங்களில் முத-ல் ஒரு தற்கா-க பணி, அதன்பிறகு ஒரு நல்ல நிலை ஏற்பட வாய்ப்பு உண்டு. இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு நல்ல நிலையை அடையக்கூடிய அதிர்ஷ்டங்கள் உங்களுக்கு உண்டு.

நானும் என் மகன்களும் சேர்ந்து என் மூத்த மகன் பாலசுப்ரமணியம் பெயரிலுள்ள இடத்தில் கடன் வாங்கி வீடு கட்டி முடித்துள்ளோம். எங்கள் உறவுக் கார பையன் வீடு சம்பந்தமாக எங்கள்மீது கோர்ட்டில் வழக்கு கொடுத்துள்ளான். இந்த வழக்கு எப்பொழுது முடியும்? எங்கள் பிரச்சினை எப்பொழுது தீரும்? என்ன பரிகாரம் செய்யவேண்டும் என்று கூறுங்கள்? -திருவேங்கடம், சென்னை.

மூல நட்சத்திரம், தனுசு ராசி, மீன லக்னத் தில் பிறந்த உங்கள் மகனுக்கு செவ்வாய், புதன், சுக்கிரன் இணைந்து 2-ஆம் வீட்டில் உள்ளது. செவ்வாய், சுக்கிரன்- கேது நட்சத்திரத்தில் அமையப்பெற்று செவ்வாய் தசை நடக்கிறது. செவ்வாய் தசை நடப்ப தால் தேவையற்ற வம்பு, பிரச்சினைகள், நிம்மதியற்ற நிலை உள்ளது. வரும் 2025 நவம்பர் 6-ஆம் தேதிமுதல் செவ்வாய் தசை முடிந்து ராகு தசை தொடங்க இருக்கிறது. குரு பார்வைப்பெற்ற ராகு தசை தொடங்குகின்றபொழுது உங்களுக்கு இருக்கக்கூடிய வழக்குகளில் ஒரு முடிவு வந்து மன நிம்மதி ஏற்பட வாய்ப்பு உண்டு. தற்போது செவ்வாய் தசை நடப்பதால் கோபத்தை குறைத்துக்கொள்வது, முருக வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.

எனக்கு அரசாங்க வேலை கிடைக்குமா? வீடு, மனை எப்பொழுது அமையும் என்று கூறுங்கள்? -விஷ்ணு, திண்டுகல்.

மக நட்சத்திரம், சிம்ம ராசி, மிதுன லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 10-ஆம் அதிபதி குரு- சனி சேர்க்கைப் பெற்று புதன் பார்வையுடன் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் உள்ளார். குரு, சனி வக்ரகதியில் இருப்பதால் முத-ல் கிடைக்கக்கூடிய பணியில் ஒரு தற்கா-க நிலை சற்று தாமதமான அனுகூலங்கள் கிடைக்கும். ஒரு ஜாதகத்தில் 10-ல் சூரியன் இருந்தால்தான் அரசாங்க பணி. உங்கள் ஜாதகத்தில் சூரியன் 6-ல் சனி சாரம் பெற்றுள்ளார். அது அவ்வ ளவு சிறப்பு என கூறமுடியாது. சனி- புதன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வதால் வங்கிப் பணி, கல்வித்துறை, மக்களுக்கு சேவை செய்யக்கூடிய துறைகளில் பணிகளுக்காக முயற்சி செய்யவும். உங்கள் ஜாதகத்தில் 4-ஆம் அதிபதி புதனும், 5-ஆம் அதிபதி சுக்கிரனும் பரிவர்த்தனை பெற்று இருப்ப தால் சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் முத-ல் ஒரு சில தடை அதன்பிறகு தாமத மாக அனுகூங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. உங்களுக்கு தற்போது 25 வயதுதான் ஆகிறது தற்போதைக்கு சற்று பொறுமையாக இருக்க வும்; எதிர்காலத்தில் நல்லது நடக்கும்.