கேள்வி: என் கடன் பிரச்சினைகள் எப்போது தீரும்? என்ன பரிகாரம் செய்யவேண்டும்? எந்த தெய்வத்தை வழிபடவேண்டும் என்று கூறுங்கள்? -லட்சுமணன், கரூர்.
பதில்: பூச நட்சத்திரம், கடக ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்த உங்களுக்கு கடன்களை குறிக்கக்கூடிய ஸ்தானம் என சொல்லக்கூடிய 6-ஆம் அதிபதி செவ்வாய் நீசம்பெற்று 9-ல் இருப்பதும், கடன்களுக்கு காரனான சனி பகை வீட்டான சிம்மத்தில் அமையப்பெற்று கேது நட்சத்திரத்தில் இருப்பதும் சாதகமற்ற அமைப்பாகும்.
பொதுவாக 6-ஆம் அதிபதி பலம் இழந்து இருந்தால் வாங்கிய கடனை அடைக்க இடையூறுகள் ஏற்படும். அது மட்டுமில்லாமல் தற்போது உங்களுக்கு அஷ்டமச்சனி நடக் கிறது. அடுத்து 10-ல் குரு சஞ்சரிக்கிறது. இதன்காரணமாக தற்போது கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறீர்கள்.
வரும் 1-5-2024-க்குபிறகு குரு 11-க்கு வருகின்றபொழுது ஒருசில பொருளாதார உதவிகள் கிடைக்கும். அது மட்டுமில்லாமல் சுக்கிர தசையில் தற்போது புதன் புக்தி 27-4-2026 முடிய நடப்பது சிறப்பான அமைப்பு என்பதால் 2024 மே மாதத்திற்குப் பிறகு படிப்படியாக கடன்கள் குறையும் வாய்ப்பு உண்டு. அடுத்தடுத்து கடன் வாங்கு கின்றபொழுது உங்கள் பெயரில் வாங்காமல் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் வாங்குவது சிறப்பு. முருக வழிபாடு, ஆஞ்சனேயர் வழிபாடு
கேள்வி: என் கடன் பிரச்சினைகள் எப்போது தீரும்? என்ன பரிகாரம் செய்யவேண்டும்? எந்த தெய்வத்தை வழிபடவேண்டும் என்று கூறுங்கள்? -லட்சுமணன், கரூர்.
பதில்: பூச நட்சத்திரம், கடக ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்த உங்களுக்கு கடன்களை குறிக்கக்கூடிய ஸ்தானம் என சொல்லக்கூடிய 6-ஆம் அதிபதி செவ்வாய் நீசம்பெற்று 9-ல் இருப்பதும், கடன்களுக்கு காரனான சனி பகை வீட்டான சிம்மத்தில் அமையப்பெற்று கேது நட்சத்திரத்தில் இருப்பதும் சாதகமற்ற அமைப்பாகும்.
பொதுவாக 6-ஆம் அதிபதி பலம் இழந்து இருந்தால் வாங்கிய கடனை அடைக்க இடையூறுகள் ஏற்படும். அது மட்டுமில்லாமல் தற்போது உங்களுக்கு அஷ்டமச்சனி நடக் கிறது. அடுத்து 10-ல் குரு சஞ்சரிக்கிறது. இதன்காரணமாக தற்போது கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறீர்கள்.
வரும் 1-5-2024-க்குபிறகு குரு 11-க்கு வருகின்றபொழுது ஒருசில பொருளாதார உதவிகள் கிடைக்கும். அது மட்டுமில்லாமல் சுக்கிர தசையில் தற்போது புதன் புக்தி 27-4-2026 முடிய நடப்பது சிறப்பான அமைப்பு என்பதால் 2024 மே மாதத்திற்குப் பிறகு படிப்படியாக கடன்கள் குறையும் வாய்ப்பு உண்டு. அடுத்தடுத்து கடன் வாங்கு கின்றபொழுது உங்கள் பெயரில் வாங்காமல் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் வாங்குவது சிறப்பு. முருக வழிபாடு, ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.
கேள்வி: என் ஜாதகப்படி நான் சுய தொழில் செய்யலாமா அல்லது வேலைக்கு செல்லலாமா? தொழில் செய்வதென்றால் என்ன தொழில் செய்வது? வேலைக்கு செல்வதென்றால் எந்தத்துறை சார்ந்த வேலைக்குச் செல்வது என்று கூறுங்கள்? -ஸ்ரீனிவாசன், திருச்சி.
பதில்: கிருத்திகை நட்சத்திரம், ரி‘ப ராசி, மகர லக்னத்தில் பிறந்த உங்களுக்கு லக்னத்திற்கு 10-ஆம் அதிபதி சுக்கிரன் 10-ல் வக்ரம்பெற்று இருப்பதால் சொந்தத் தொழில் செய்வதைவிட வேலைக்கு செல்வது மிகமிக நல்லது.
சூரியன் நீசம்பெற்று, புதன், சுக்கிரன், சனி போன்ற கிரகங்கள் வக்ர கதியில் இருப்பதால் முதலீடுசெய்து தொழில்செய் வது அவ்வளவு நல்லதல்ல. உங்களுக்கு தற்போது ராகு 3, 12-க்கு அதிபதியான குரு சாரம் பெற்று ராகு மகா தசை நடப்பதால் வெளியூர் தொடர்புடைய பணி, பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிவதற்கான பணிகளில் முயற்சி மேற்கொண்டால் நற்பலன் அடை யக்கூடிய வாய்ப்புகள் உண்டு. மேலும் வள மான பலன்களைபெற உக்கிர தெய்வங் களை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.
கேள்வி: கடன் பிரச்சினை தீருமா? பொருளாதாரநிலை எப்போது சிறப்பாக இருக்கும் என்று கூறுங்கள்? -சுப்பிரமணியன், மதுரை.
பதில்: திருவோண நட்சத்திரம், மகர ராசி, கும்ப லக்னத்தில் பிறந்த உங்களுக்கு தற்போது சனி தசை நடப்பதாலும், ஏழரைச்சனி நடப்பதாலும் அதிகப்படியான கடன்கள் உள்ளது. குறிப்பாக சனி தசையில் ராகு புக்தி 2-7-2026 முடிய நடப்பதால் எதிலும் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. 2025 மார்ச்சில் ஏழரைச்சனி முடிகின்றபொழுது முழுமையாக கடன்கள் தீர வாய்ப்பு உண்டு. 1-5-2024-க்குப்பிறகு பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டு மன ஆறுதலை தரும். உடல் ஊனமுற்றவர் களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது, சனிபகவானுக்கு எள் தீப மேற்றுவது கெடுதியை குறைக்கும்.
கேள்வி: எனக்கு ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகம். குறிச்சொல் சொல்ல வாய்ப்பு இருக்கிறதா என்று கூறுங்கள்? -அண்ணாமலை, சிவகங்கை.
பதில்: ஆயில்ய நட்சத்திரம், கடக ராசி, கன்னி லக்னத்தில் பிறந்த உங்களுக்கு சந்திரனுக்கு திரிகோணத்தில் குரு, சூரியன் இருப்பதாலும், குரு வீட்டில் கேது இருப்ப தாலும், சந்திர தசை நடப்பதாலும் ஆன்மிக ஈடுபாடுகள் ஏற்பட்டு இருக்கிறது. அடுத்து பேச்சால் அனுகூலங்களை பெறவேண்டும் என்றால் 2-ஆம் வீடு பல மாக இருக்க வேண் டும். உங்கள் ஜாதகத்தில் 2-ல் சனி வக்ரகதி யில் இருப்பதால் பேச்சால் வருவாய் ஈட்டக் கூடிய வாய்ப்புகள் சற்று குறைவு. நீங்கள் பேசி னால் அது வீண் பிரச்சினைகளை ஏற்படுத் தக்கூடிய அமைப்பு இருப்பதால் குறி சொல் வதுமூலம் அனுகூலங்களை அடையமுடியாது.
கேள்வி: (பெண்) நான் இடம் மாறி இருக்கலாமா, என்ன தொழில் செய்வது என்று கூறுங்கள்?
பதில்: உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, மே‘ லக்னத்தில் பிறந்த உங்களுக்கு தற்போது கேது தசை நடக்கிறது. 3-ஆவது தசையாக கேது தசை நடப்பதாலும், ஏழரைச்சனி நடப்பதாலும் தொழில் செய்வது தற்போதைக்கு சிறப்பல்ல, அடுத்து 20-1-2027 முதல் சுக்கிர தசை வருகின்றபொழுது நீங்கள் மேற் கொள் ளக்கூடிய தொழில் சம்பந்தப்பட்ட முயற்சி களுக்கு அனுகூலப் பலன் கிடைக்கும்.
தற்போது உங்கள் ஜாதகரீதியாக 9-ல் இருக்கக்கூடிய கேது தசை நடப்பதால் பிறந்த ஊரைவிட வெளியிடங்களில் மாறி இருப்பது நல்லது. கேது தசை நடப்பதால் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பொறு மையைக் கடைப்பிடிப்பது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, எதிலும் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.
கேள்வி: என் மகனுக்கு அரசு உத்தியோகம் கிடைக்குமா? திருமணம் செய்ய வரன் பார்க்கலாமா, குருபலன் வந்துவிட்டதா என்று கூறுங்கள்?
பதில்: பரணி நட்சத்திரம், மே‘ ராசி, தனுசு லக்னத்தில் பிறந்த உங்கள் மகனுக்கு 10-ல் புதன் ஆட்சி, உச்சம் பெற்றிருப்பது அற்புதமான அமைப்பாகும். 9-ல் சூரியன் ஆட்சிபெற்று இருப்பதால் நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய யோகங்கள் உண்டு. கல்வித்துறை, கம்ப்யூட்டர் தொடர்புடைய துறைகளில் வேலைக்காக முயற்சித்தால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சூரியன் வலுவாக இருப்பதால் அரசு சார்ந்த இடங்களில்கூட அனுகூலமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தற் போது நடக்கக்கூடிய சந்திர தசையைவிட, 7-8-2025-ல் வரக்கூடிய செவ்வாய் தசையில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
7-ஆம் அதிபதி புதன் பலமாக இருந்து தற்போது சந்திர தசையில் சுக்கிர புக்தி நடப்ப தால் தற்போது திருமணம் முயற்சிகள் மேற்கொண்டால் 2024 மே மாதத்திற்குப் பிறகு திருமணம் நடைபெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு.
கேள்வி: என் மகனுக்கு திருமணம் எப்போது நடைபெறும் என்று கூறுங்கள்?
பதில்: உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, கும்ப லக்னத்தில் பிறந்த உங்கள் மகனுக்கு 7-ஆம் அதிபதி சூரியன் லக்ன கேந் திரம் பெற்று, 2-ல் சுக்கிரன் உச்சம் பெற்று இருப்பது நல்ல அமைப்பாகும். கடந்த காலங்களில் கேது தசை நடைபெற்றது ஒருசில தடைகளை உண்டாக்கியது.
தற்போது சுக்கிர தசையில் 7-ஆம் அதிபதி சூரிய புக்தி 25-12-2023 முதல் நடைபெறுவதாலும், 1-1-2024 முதல் குரு வக்ரநிவர்த்தி பெற்று 2-ல் சஞ்சரிக்க இருப்பதால் தற்போது திருமணம் முயற்சிகள் மேற்கொண்டால் நல்லது நடக்க வாய்ப்பு உண்டு. சூரியன் ராகு சாரம் பெற்றிருப்பதால் குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது, உறவில்லாமல் அந்நியத்தில் வரன் பார்ப்பது நன்மை தரும்.