என் உடல்நலம் மற்றும் ஆயுள் காலத்தைப் பற்றி கூறுங்கள்? -கெஜபதி, சோத்துபாக்கம்.
பதில்: உத்திராட நட்சத்திரம், மகர ராசி, கடக லக்னத்தில் பிறந்த உங்களுக்கு பிறக்கும்பொழுதே சனி, புதன் உச்சம்பெற்று பிறந்திருப்பது அற்புதமான அமைப்பாகும். தற்போது சனி தசையில் ராகு புக்தி 5-7-2024 முடிய நடைபெறுகிறது. சனி தசையில் ராகு புக்தி நடப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு இடர்பாடுகள் ஏற்படுகிறது. ராகு புக்தி என்பதால் இயற்கை உணவுகளை உட்கொள்வது நல்லது. தற்போது ஏழரைச்சனி நடப்பதாலும் குருவும் 4-ல் இருப்பதாலும் தேவையற்ற மனகவலைகள் ஏற்படுகிறது. 1-5-2024 முதல் குரு 5-க்கு வருகின்ற பொழுது நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். 29-3-2025-ல் முழுமையாக ஏழரைச் சனி முடிவது சிறப்பான அமைப்பாகும். நடப்பது சனி தசையில் ராகு புக்தி என்பதால் துர்க்கை வழிபாடு, உக்ர தெய்வங்களை வழிபாடு மேற்கொள்வது நல்லது.
நான் சுயதொழில் செய்கிறேன். தொழிலில் ஒரு முன்னேற்றமுமில்லை; வருமானமுமில்லை. தொழில் வளர்ச்சிக்கு ஏதாவது பரிகாரம் கூறுங்கள்? -மணிகண்டன், எடப்பாடி (பட்டக்காரனூர்).
பதில்: ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி, கடக லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 10லிஆம் அதிபதி செவ்வாய் 7-ல் உச்சம்பெற்று, 10-ல் சூரியன், புதன், குரு இருப்பது அற்புதமான அமைப்பு. சந்திரன் உச்சம்பெற்று சுக்கிரன் ஆட்சிபெற்று இருப்பதால் நல்ல சம்பாதிக்கக்கூடிய யோகமானது உங்களுக்கு உண்டு. சொந்தத்தொழில்மூலமாக எதிர்காலத்தில் ஒரு வளமான நிலையினை அடைவீர்கள்.
என் உடல்நலம் மற்றும் ஆயுள் காலத்தைப் பற்றி கூறுங்கள்? -கெஜபதி, சோத்துபாக்கம்.
பதில்: உத்திராட நட்சத்திரம், மகர ராசி, கடக லக்னத்தில் பிறந்த உங்களுக்கு பிறக்கும்பொழுதே சனி, புதன் உச்சம்பெற்று பிறந்திருப்பது அற்புதமான அமைப்பாகும். தற்போது சனி தசையில் ராகு புக்தி 5-7-2024 முடிய நடைபெறுகிறது. சனி தசையில் ராகு புக்தி நடப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு இடர்பாடுகள் ஏற்படுகிறது. ராகு புக்தி என்பதால் இயற்கை உணவுகளை உட்கொள்வது நல்லது. தற்போது ஏழரைச்சனி நடப்பதாலும் குருவும் 4-ல் இருப்பதாலும் தேவையற்ற மனகவலைகள் ஏற்படுகிறது. 1-5-2024 முதல் குரு 5-க்கு வருகின்ற பொழுது நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். 29-3-2025-ல் முழுமையாக ஏழரைச் சனி முடிவது சிறப்பான அமைப்பாகும். நடப்பது சனி தசையில் ராகு புக்தி என்பதால் துர்க்கை வழிபாடு, உக்ர தெய்வங்களை வழிபாடு மேற்கொள்வது நல்லது.
நான் சுயதொழில் செய்கிறேன். தொழிலில் ஒரு முன்னேற்றமுமில்லை; வருமானமுமில்லை. தொழில் வளர்ச்சிக்கு ஏதாவது பரிகாரம் கூறுங்கள்? -மணிகண்டன், எடப்பாடி (பட்டக்காரனூர்).
பதில்: ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி, கடக லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 10லிஆம் அதிபதி செவ்வாய் 7-ல் உச்சம்பெற்று, 10-ல் சூரியன், புதன், குரு இருப்பது அற்புதமான அமைப்பு. சந்திரன் உச்சம்பெற்று சுக்கிரன் ஆட்சிபெற்று இருப்பதால் நல்ல சம்பாதிக்கக்கூடிய யோகமானது உங்களுக்கு உண்டு. சொந்தத்தொழில்மூலமாக எதிர்காலத்தில் ஒரு வளமான நிலையினை அடைவீர்கள். தற்போது குரு தசையில் குரு புக்தி 12-1-2024 முடிய நடப்பதால் ஒருசில இடர்பாடுகளைத் தற்போது சந்திக்கிறீர்கள். விரைவில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். சனி வக்ரகதியில் இருப்பதால் வேலையாட்களை நம்பாமல் நீங்களே எதிலும் முன்னின்று செயல்பட்டால் வளமான பலன்களை அடையமுடியும். 10-ஆம் அதிபதி 7-ல் இருப்பதால் கூட்டாக செயல்படுவதன்மூலமாக ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். தற்போது கோட்சாரத்தில் சனி 10-ல் நிற்பதால் ஆஞ்சனேயர் வழிபாடு, சனிபகவான் வழிபாடு மேற்கொள்வதன்மூலமாக நல்ல வளர்ச்சியை அடையமுடியும்.
எனக்கு 43 வயதாகிறது. இன்னும் திருமணம் நடைபெறவில்லை. எப்போது நடைபெறும்? என் எதிர்காலம் எப்படியிருக்கும் என்று கூறுங்கள்? -உதயகுமார், கோவை.
பதில்: கிருத்திகை நட்சத்திரம், மேஷ ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 7-ஆம் அதிபதி செவ்வாய் 3-ல் நீசம்பெற்றா லும் அம்சத்தில் ஆட்சி பெற்றிருப்பது நல்ல அமைப்பாகும். நீங்கள் பிறக்கின்றபொழுது சுக்கிரன் ஆட்சி பெற்றிருப்பதும் அற்புதமான அமைப்பாகும். சூரியன் வீடான சிம்மத்தில் சனி, ராகு அமையப்பெற்ற காரணத்தால் பிதுர்வழி தோஷம் ஏற்பட்டு நல்லகாரியம் நடைபெற இடையூறு கள் ஏற்பட்டு விட்டது. குரு தசையில் சனி புக்தி முடிஞ்சு 10-1-2024 முதல் புதன் புக்தி நடைபெற இருப்பதால் உறவில்லாமல் அந்நியத்தில் வரன் தேடினால் ஒருநல்ல வாழ்க்கை அமைய வாய்ப்புண்டு. குல தெய்வ வழிபாடு மேற்கொள்ளவும்.
எனது மகனுக்கு திருமணம் தள்ளிக்கொண்டே போகிறது. எப்போது நடைபெறும் என்று கூறுங்கள்? -பழனிச்சாமி, இராஜபாளையம்.
பதில்: ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி, மிதுன லக்னத்தில் பிறந்த உங்களுக்கு லக்னத்திற்கு 7-ஆம் அதிபதி குரு கேந்திரம்பெற்று 10-ல் இருப்பதும், சுக்கிரன் உச்சம்பெற்றிருப்பதும் சிறப்பான அமைப்பு ஆகும். சந்திரனுக்கு 7-ல் ராகு அமையப்பெற்று ராகு மகா தசை தற்போது நடப்பதால் நல்ல காரியம் நடைபெற இடையூறுகள் ஏற்படுகிறது. குறிப்பாக லக்னத்திற்கோ, ராசிக்கோ 7-ல் ராகு அமையப்பெற்று ராகு தசை நடைபெற்றால் திருமண சுபகாரியங்கள் நடக்க இடையூறுகள் ஏற்படும். ராகு தசையில் திருமணம் நடைபெற்றால் வாழ்க்கையில் விட்டுக்கொடுத்து செல்லவேண்டிய ஒருநிலை இருக்கும். 14-11-2025 முடிய ராகு தசை நடப்பதால் தற்போது சற்று பொறுமையோடு இருந்தால் ராகு முடிந்து குரு வருகின்ற பொழுது நல்ல வாழ்க்கை அமையும். ராகு தசை யில் நல்ல வாய்ப்புகள் கிடைத்து திருமணம் நடைபெற்றா லும் தேவையில்லாத நெருக்கடிகள் ஏற்படலாம் என்பதால் பக்குவமாக நடந்து கொள்வது நல்லது. 2025 நவம்பருக்கு பிறகு குரு தசை தொடங்குகின்ற பொழுது ஒரு சிறப்பான வாழ்க்கை உண்டு. தற்போதைக்கு பொறுமை காப்பது, நிதானமாக இருப்பது நல்லது. அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது.
இவர்களுக்கு முதல் பெண் குழந்தை உள்ளது. அடுத்து ஆண் குழந்தை பிறக்குமா என்று கூறுங்கள்? -சுந்தரேஷ்
பதில்: ஆண் ஜாதகத்தில் மக நட்சத்திரம், சிம்ம ராசி, ரிஷப லக்னம், ஜென்ம லக்னத் திற்கு 5-ஆம் அதிபதி புதன், ராகு நட்சத்திரமான சதயத்தில் அமையபெற்று இருப்பதும், ஆண் கிரகம், தந்தைக்காரகனான சூரியன் ராகு நட்சத்திரத்தில் இருப்பதும் சாதகமற்ற அமைப்பாகும். குழந்தை பாக்கியத்திற்கு காரணமான குருபகவான் வக்ரகதியில் அமையப்பெற்று சனி நட்சத்திரமான பூசத்தில் உள்ளது. இதுபோன்ற அமைப்பானது ஒரு ஆண் வாரிசு ஏற்பட இடையூறு ஏற்படுத்தக்கூடிய அமைப்பாகும். பெண் கிரகமான சுக்கிரன் உச்சம் பெற்று 5-ஆம் வீட்டை பார்த்ததால் பெண் குழந்தை யோகம் ஏற்பட்டுள்ளது. அதுபோல மனைவியின் ஜாதகத்தில் லக்னத்திற்கு 5-ஆம் வீட்டில் ராகு அமைந்திருப்பதும் புத்திரகாரகன் குருபகவான் கேது நட்சத்திரத்தில் அமையப்பெற்று வக்ரகதியில் இருப்பதும் கடுமையான புத்திர தோஷமாகும். இதுபோன்ற அமைப்பில் இருவருக்கும் பெண் குழந்தை கிடைத்ததே பூர்வ ஜென்ம புண்ணியம் ஆகும். ஜோதிடரீதியாக ஆண் வாரிசுக்கான வாய்ப்புகள் சற்று குறைவாக இருக்கிறது. எவ்வளவு தோஷங்கள் இருந்தாலும் ஒருசிலருக்கு குலதெய்வ வழிபாடு நன்மை தருகிறது. குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளவும்; நன்மை நடக்கட்டும்.
என் கடன் பிரச்சினைகள் நீங்குமா, சொந்த வீடு அமையுமா என்று கூறுங்கள்? -ரகுராமன், கோவை
பதில்: சித்திரை நட்சத்திரம், துலா ராசி, கன்னி லக்னத்தில் பிறந்த உங்களுக்கு சுக்கிரன் வலுவாக அமையப்பெற்று ஆட்சி பெற்றிருப்பதும், 4-ஆம் அதிபதி குரு 4-ஆம் வீட்டை பார்ப்பதாலும் சொந்த வீடு அமையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சனி 4-ல் இருந்தாலும் பாவகரீதியாக 5-ல் இருப்பதால் கெடுதி கிடை யாது; சில தடைக்குப்பிறகு சொந்த வீடு அமையும். 4-11-2023-ல் சனி வக்ர நிவர்த்தி பெற்றி ருப்பதும் 31-12-2023-ல் குரு வக்ர நிவர்த்தி அடைய இருப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் படிப்படி யாக கடன்கள் குறையும். தற்போது 10-ல் இருக்கக்கூடிய குரு தசையில் சந்திர புக்தி 27-4-2024 முடிய நடப்பதால் படிப்படியாக கடன்களை அடைக்கக்கூடிய பலம் உண்டாகும். மனோதைரியத்துடன் இருக்கவும்; நல்லது நடக்கும். 5-ல் ராகு இருப்பதாலும் சூரியன் ராகு நட்சத்திரத்தில் இருப்பதாலும் பங்காளி வகை யில் தேவையில் லாத நிம்மதிக் குறைவு உண்டா கும். குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது நல்லது.
என் தாயின் ஆரோக்கியம், ஆயுள் மற்றும் நடப்பு தசையின் பலன்கள், என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதைப் பற்றி விரிவாக கூறுங்கள்? -மகேஷ்வரன், கோவை
பதில்: கிருத்திகை நட்சத்திரம், மேஷ ராசி, மிதுன லக்னத்தில் பிறந்த உங்கள் தாய்க்கு தற்போது சனி தசையில் சுக்கிர புக்தி 4-12-2025 முடிய நடக்கிறது. பொதுவாக சனி வக்ரகதியி-ருந்து தசை நடைபெற்றால் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதும், கால்களில் பாதிப்பு ஏற்படுவதற்கும் வாய்ப்பு உண்டு. உடல்நலத்தில் கவனம் செலுத்துவது, ஒவ்வொரு அசைவிலும் எச்சரிக்கை யுடன் செயல்படுவது, எந்த ஒரு விஷயத்திலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. சூரியன் உச்சம்பெற்ற நேரத்தில் பிறந்திருப் பதால் நீண்ட ஆயுளுடன் இருக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தற்போது சுக்கிர புக்தி நடப்பதால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நடப்பது சனி தசை என்பதால் பைரவர் வழிபாடு மேற்கொள்வது, ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.