பாலமுருகன் பதில்கள் 26.07.2024

/idhalgal/balajothidam/balamurugan-answers-26072024

எனது மகனின் ஜாதகத்தில் நாகதோஷம், பித்ரு தோஷம் உள்ளது. அவனுடைய உடல் ஆரோக்கியம் மற்றும் படிப்பு எப்படியிருக்கும். அவனுக்கு மறதி உள்ளது. ஏதேனும் பரிகா ரம் உண்டா என்று கூறுங்கள்?

பதில்: உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, கடக லக்னத்தில் பிறந்த உங்கள் மகனின் ஜாதகத் தில் பூர்வபுண்ணிய ஸ்தானமான 5-ஆம் வீட்டில் ராகு இருந்து உடன் சூரியன் இருப்பது பித்ரு தோஷம் என்று கூறினாலும் சூரியனை ராகு கடந்துவிட்டதால் பாதிப்புகள் சற்று குறைவு. நவாம்சத்தில் பாருங்கள் சூரியன்- கன்னி ராசியில் இருக்கிறார், ராகு கடக ராசியில் இருக்கிறார். சூரியனை கடந்து ராகு சென்றுவிட்டதால் சூரியன்- ராகு சேர்க்கைக் கான பாதிப்புகள் சற்றுக் குறைவு. 5-ல் ராகு இருந்தாலே நாக தோஷம் என்று கிடையாது. ராகுவை குரு பார்ப்பதால் பாதிப்புகள் குறையும். குலதெய்வ வழிபாடு செய்வது மிகவும் நல்லது. உங்கள் மகன் ஜாதகத்தில் புதன் வக்ரகதியில் இருந்து உடன் சனி சேர்க்கைப் பெற்றிருப்பதால் ஞாபக மறதி, படிப்பு விஷயங்களில் ஒரு மந்தநிலை இருக்கும். எளிதில் முடிக்கக்கூடிய படிப்புகளை மேற்கொள்வது, மகாவிஷ்ணு வழிபாடு மேற் கொள்வது, குல தெய்வ வழிபாடு மேற்கொள்வது நற்பலனைத் தரும். ஜாதகத் தில் தோஷங்கள் இல்லாமல் இருந்தாலும் நீங்களே ஏதாவது நினைத்து குழப்பிக் கொள்ளாமல் இருப்பது மிகவும் நல்லது. கேள்வி கேட்கின்ற பொழுது நாகதோஷம், பித்ரு தோஷம் என்று கேட்டு உள்ளீர்கள். எதிர்மறை எண்ணங் களை விட்டுவிட்டு எல்லாம்

எனது மகனின் ஜாதகத்தில் நாகதோஷம், பித்ரு தோஷம் உள்ளது. அவனுடைய உடல் ஆரோக்கியம் மற்றும் படிப்பு எப்படியிருக்கும். அவனுக்கு மறதி உள்ளது. ஏதேனும் பரிகா ரம் உண்டா என்று கூறுங்கள்?

பதில்: உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, கடக லக்னத்தில் பிறந்த உங்கள் மகனின் ஜாதகத் தில் பூர்வபுண்ணிய ஸ்தானமான 5-ஆம் வீட்டில் ராகு இருந்து உடன் சூரியன் இருப்பது பித்ரு தோஷம் என்று கூறினாலும் சூரியனை ராகு கடந்துவிட்டதால் பாதிப்புகள் சற்று குறைவு. நவாம்சத்தில் பாருங்கள் சூரியன்- கன்னி ராசியில் இருக்கிறார், ராகு கடக ராசியில் இருக்கிறார். சூரியனை கடந்து ராகு சென்றுவிட்டதால் சூரியன்- ராகு சேர்க்கைக் கான பாதிப்புகள் சற்றுக் குறைவு. 5-ல் ராகு இருந்தாலே நாக தோஷம் என்று கிடையாது. ராகுவை குரு பார்ப்பதால் பாதிப்புகள் குறையும். குலதெய்வ வழிபாடு செய்வது மிகவும் நல்லது. உங்கள் மகன் ஜாதகத்தில் புதன் வக்ரகதியில் இருந்து உடன் சனி சேர்க்கைப் பெற்றிருப்பதால் ஞாபக மறதி, படிப்பு விஷயங்களில் ஒரு மந்தநிலை இருக்கும். எளிதில் முடிக்கக்கூடிய படிப்புகளை மேற்கொள்வது, மகாவிஷ்ணு வழிபாடு மேற் கொள்வது, குல தெய்வ வழிபாடு மேற்கொள்வது நற்பலனைத் தரும். ஜாதகத் தில் தோஷங்கள் இல்லாமல் இருந்தாலும் நீங்களே ஏதாவது நினைத்து குழப்பிக் கொள்ளாமல் இருப்பது மிகவும் நல்லது. கேள்வி கேட்கின்ற பொழுது நாகதோஷம், பித்ரு தோஷம் என்று கேட்டு உள்ளீர்கள். எதிர்மறை எண்ணங் களை விட்டுவிட்டு எல்லாம் நல்லதாக நினையுங்கள். நல்லது நடக்கும். 5-ல் ராகு இருப்பதால் பங்காளிவகையில் ஒற்றுமைக் குறைவு இருக்கும் என கூறலாமே தவிர பெரிய பாதிப்புகள் இருக்காது. நான் ஒரு மாற்றுத்திறனாளி. என் பூர்வீக சொத்து சார்ந்து சொந்த வீடு கட்டுவதில் சகோதரரே பிரச்சினை ஏற்படுத்தி கட்டவிடாமல் தடுக்கிறார்.

aa

இந்த வழக்கு எப்போது தீர்ந்து சொந்த வீடு எனக்கு அமையும் என்று கூறுங்கள்? -சேகர், ஆண்டிக்குப்பம்.

பதில்: அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, மீன லக்னத் தில் பிறந்த உங்களுக்கு பூர்வபுண்ணிய ஸ்தானமான 5-ல் பாவகரீதி யாக கேது இருப் பதால் பூர்வீக சொத்துரீதியாக அனுகூலங்களை அடைய இடையூறுகள் ஏற்படுகிறது. உங்கள் ஜாதகத்தில் சூரியன், செவ்வாய் ஆகிய கிரகங் கள் பாதக ஸ்தானமான 7-ல் இருப்பதால் பங்காளிகளே உங்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்துகிறார்கள். தற்போது ராகு தசை யில் சனி புக்தி 23-9-2024 முடிய நடக்கிறது. அடுத்து உங்களுக்கு 4-ஆம் அதிபதி புதன் புக்தி வரும் தருவாயில் சொத்து சம்பந்த மாக நீங்கள் ஏதாவது முயற்சிகள் மேற்கொண் டால் இருக்கக்கூடிய வழக்குகள் விலகி நல்லது நடக்க வாய்ப்பு உண்டு. குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

என் உடல்நிலை மற்றும் எதிர்காலம் பற்றி கூறுங்கள்? -பரணி, பந்தல்குடி.

பதில்: அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, மகர லக்னத்தில் பிறந்த உங்களுக்கு லக்னத் திற்கு 8-ஆம் வீட்டில் சனி வக்ரகதியில் அமையப்பெற்று உடன் ராகு இருக்கிறது. சனி, ராகு 8-ல் இருப்பது உடல் ஆரோக்கிய பாதிப்புகளை ஏற்படுத்தும் அமைப்பாகும். தற்போது உங்களுக்கு மகர லக்னத்திற்கு 8-ல் உள்ள ராகு தசையில் ராகு புக்தி 28-2-2027 முடிய நடக்கிறது. ராகு தசையில் ராகு புக்தி நடப்பது அதிலும் குறிப்பாக பகை வீடான சூரியன் வீட்டில் அமையப்பெற்று நடைபெறுவதால் உடல் உபாதைகள், இதய சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், உறவினர்கள் பகை எல்லாம் ஏற்படும். 8 என்பது மறைவு ஸ்தானம்; அஷ்டம ஸ்தானமாகும். அதிலும் பகை பெற்று ராகு தசையில் சுய புக்தி நடப்பதால் உங்களது முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு எதிலும் பொறுமை யோடு ராகு புக்தி முடியும்வரை இருப்பது நல்லது. குறிப்பாக வயது மூத்தவரிடம் கருத்து வேறுபாடுகள், உடல் உபாதைகள் ஏற்படும். ராகு என்ற காரணத்தினால் கண்டுபிடிக்க முடியாத அலர்ஜி சம்பந்தப்பட்ட பிரச்சினைகள்கூட ஏற்படலாம். அம்மன் வழிபாடு, துர்க்கை வழி பாடு மேற் கொள்வது, இயற்கை உணவு கள் உட்கொள் வது நன்மை தரும். ராகு தசை சுய புக்திக்கு பிறகு ஆரோக் கியத்தில் முன்னேற்றம், படிப்படியான வளர்ச்சிகளை அடையக் கூடிய வாய்ப்புகள் உண்டு.

எனது மகளுக்கு எப்போது திருமணம் நடைபெறும் என்று கூறுங்கள்?

பதில்: ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி, தனுசு லக்னத்தில் பிறந்த உங்கள் மகளுக்கு 2-ஆம் அதிபதி சனி வக்ரம்பெற்று கேது சேர்க்கைப் பெற்றிருப்பதும், 7-ஆம் அதிபதி புதன் வக்ரம்பெற்று ராகு சேர்க்கைப் பெற்றிருப்பதும் களத்திர காரகன் செவ்வாய் 8-ல் நீசம் பெற்றிருப்பதும் அவ்வளவு சாதக மான அமைப்பு என கூற முடியாது. திருமணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்லது நடக்க இடையூறுகள், அப்படி நல்லது நடந்தாலும் ஒற்றுமை குறைவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. அதிலும் குறிப்பாக புதன்- ராகு சேர்க்கைப்பெற்று ராகு தசை நடப்பது அவ்வளவு சாதகமான அமைப்பு எனக்கூற முடியாது. தற்போது சுக்கிர புக்தி 7-11-2025 முடிய நடப்பதால் 2025 தொடக்கத்தில் உறவில்லாமல் அந்நியத்தில் வரன் அமையக்கூடிய வாய்ப்புகள் இருந்தாலும் அமைந்த வாழ்க்கையில் விட்டுக் கொடுத்து செல்வது நல் லது. அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது முன் கோபத்தைக் குறைத்துக் கொள்வது, எதிலும் பொறுமையாக செயல்படுவது நன்மை தரும்.

இவர் இஊ படித்துள்ளார். வங்கி பணிக்காக தேர்வு எழுதியிருக்கிறார். எப்போது இவருக்கு நிரந்திர வேலை கிடைக்கும் என்று கூறுங்கள்?

பதில்: உத்திராட நட்சத்திரம், மகர ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்த ஜாதகருக்கு 10-ஆம் அதிபதி சூரியன் பஞ்சம ஸ்தானமான 5-ல் அமையப்பெற்று குரு பார்வையுடன் இருப்பது சிறப்பான அமைப்பாகும். மகர ராசியில் பிறந்த ஜாதகருக்கு தற்போது ஏழரைச்சனியில் பாதச்சனி 29-3-2025 முடிய நடக்கிறது. அடுத்து தற்போது ராகு தசையில் புதன் புக்தி 4-1-2025 முடிய நடக்கிறது. ராகு தசையில் சுக்கிர புக்தி 2026 தொடக்கத்தில் தொடங்கும் தருவாயில் நிரந்தர வேலை அமையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தற் போது ராகு தசை நடப்பதால் குறிப்பாக ராகு லக்னத்திற்கு 12-ல் இருப்பதால் பிறந்த ஊரை விட வெளிமாநிலங்கள் அல்லது வெளிநாடு தொடர்புடைய பணிகள் அமைவதற்கான வாய்ப்புகள் உண்டு. தொடர்ந்து போட்டித் தேர்வுகளில் பங்கு பெறவும். வெளியூர் வாய்ப்புகள் கிடைத்தால் செல்லவும். தற்போது ராகு தசை நடப்பதால் உக்கிர தெய்வங்களை வழிபாடு செய்வது நல்லது.

(பெண்) எனது பிள்ளைகள் என்னிடம் வந்து சேர்வார்களா? குடும்பமாக சேர்ந்து வாழும் வாழ்க்கை எனக்கு கிடைக்குமா என்று கூறுங்கள்?

பதில்: சித்திரை நட்சத்திரம், கன்னி ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்த உங்களுக்கு ஜென்ம லக்னத்திற்கு குழந்தைகளை குறிக்கக்கூடிய ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 5-ஆம் அதிபதி புதன் வக்ரகதியில் அமையப்பெற்று சனி சேர்க்கைப்பெற்று 12-ல் இருப்பதும், புக்திரகாரகன் குரு வக்ரகதியில் அமையப் பெற்று 6-ல் இருப்பதும் சாதகம் இல்லாத அமைப்பாகும். இதன் காரணமாக பிள்ளைகள்வழியில் மிகவும் சாதகமான பலன்களை நீங்கள் அடைய இடையூறுகள் ஏற்படும். தற்போது சனி தசையில் ராகு புக்தி 8-12-2026 முடிய நடப்பதும் தேவையற்ற வகை யில் மன அமைதியைக் குறைக்கும் அமைப் பாகும். அடுத்து வரக்கூடிய குரு புக்தி காலத் தில் ஒரு சில சாதக பலன்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. மனதை அலைபாய விடாமல் இறைவழிபாடுகள் மேற்கொள்வது, உடனிருப்ப வர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. குறிப்பாக உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் 2-ல் சிறப்பாக இருப்பதால் உடன் இருக்கக் கூடிய பெண்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். கால பைரவரை வழிபாடு செய்வதன்மூலம் நல்லது நடக்க வாய்ப்பு உண்டு.

bala260724
இதையும் படியுங்கள்
Subscribe