எனக்கு திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகிறது. குழந்தை பாக்கியம் எப்போது கிடைக்கும். ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்று கூறுங்கள்? -பிருந்தா, கோவை.
பதில்: உத்திர நட்சத்திரம், கன்னி ராசி, கும்ப லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 5-ஆம் வீட்டில் கேது இருப்பதும், புத்திர காரகன் குரு வீட்டில் ராகு இருப்பதும், 5-ஆம் அதிபதி புதன் வக்ரம் பெற்றிருப்பதும் புத்திர தோஷம் ஆகும். தற்போது ராகு தசையில் சுக்கிர புக்தி 14-1-2026 முடிய நடக்கிறது.
தற்போது நடக்கும் ராகு தசையில் கடந்த காலங்களில் சனி புக்தி, வக்ர புதன் புக்தி, கேது புக்தி நடந்த காலங்கள் அவ்வளவு சாதகமான காலம் என கூறமுடியாது. தற்போது ராகு தசையில் சுக்கிர புக்தி நடப்பதால் 2024 மே 1-ஆம் தேதிக்குப் பிறகு பெண் குழந்தை வாய்ப்பு உண்டு.
நடப்பது ராகு தசை என்ற காரணத்தால் அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது உக்கிர தெய்வங்களை வழிபாடு செய்வது நன்மையைத் தரும்.
எனது மகளின் திருமணம் எப்போது நடைபெறும்? தோஷம் ஏதாவது இருந்தால் என்ன பரிகாரம் செய்யவேண்டும் என்று கூறுங்கள்? -இளமுருகன், தேவூர்.
பதில்: சதய நட்சத்திரம், கும்ப ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்த உங்கள் மகளுக்கு 7-ஆம் அதிபதியும் களத்திரக்காரமான செவ்வாய் 4-ல் சூரியன் வீட்டில் இருப்பது அற்புதமான அமைப்பு ஆகும்.
ராகு- செவ்வாய் சேர்ந்திருந்தாலும் செவ்வாயை ராகு கடந்துவிட்டதால் கெடுதி கிடையாது. குறிப்பாக செவ்வாய் பூர நட்சத்திரம் 3-ஆம் பாதத்தில் உள்ளது, ராகு மகம் 2-ஆம் பாதத்தில் உள்ளது. இதன் காரண
எனக்கு திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகிறது. குழந்தை பாக்கியம் எப்போது கிடைக்கும். ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்று கூறுங்கள்? -பிருந்தா, கோவை.
பதில்: உத்திர நட்சத்திரம், கன்னி ராசி, கும்ப லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 5-ஆம் வீட்டில் கேது இருப்பதும், புத்திர காரகன் குரு வீட்டில் ராகு இருப்பதும், 5-ஆம் அதிபதி புதன் வக்ரம் பெற்றிருப்பதும் புத்திர தோஷம் ஆகும். தற்போது ராகு தசையில் சுக்கிர புக்தி 14-1-2026 முடிய நடக்கிறது.
தற்போது நடக்கும் ராகு தசையில் கடந்த காலங்களில் சனி புக்தி, வக்ர புதன் புக்தி, கேது புக்தி நடந்த காலங்கள் அவ்வளவு சாதகமான காலம் என கூறமுடியாது. தற்போது ராகு தசையில் சுக்கிர புக்தி நடப்பதால் 2024 மே 1-ஆம் தேதிக்குப் பிறகு பெண் குழந்தை வாய்ப்பு உண்டு.
நடப்பது ராகு தசை என்ற காரணத்தால் அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது உக்கிர தெய்வங்களை வழிபாடு செய்வது நன்மையைத் தரும்.
எனது மகளின் திருமணம் எப்போது நடைபெறும்? தோஷம் ஏதாவது இருந்தால் என்ன பரிகாரம் செய்யவேண்டும் என்று கூறுங்கள்? -இளமுருகன், தேவூர்.
பதில்: சதய நட்சத்திரம், கும்ப ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்த உங்கள் மகளுக்கு 7-ஆம் அதிபதியும் களத்திரக்காரமான செவ்வாய் 4-ல் சூரியன் வீட்டில் இருப்பது அற்புதமான அமைப்பு ஆகும்.
ராகு- செவ்வாய் சேர்ந்திருந்தாலும் செவ்வாயை ராகு கடந்துவிட்டதால் கெடுதி கிடையாது. குறிப்பாக செவ்வாய் பூர நட்சத்திரம் 3-ஆம் பாதத்தில் உள்ளது, ராகு மகம் 2-ஆம் பாதத்தில் உள்ளது. இதன் காரணமாக செவ்வாய் ராகு சேர்க்கைக்கான தோஷம் கிடை யாது.
தற்போது குரு தசையில் சந்திர புக்தி 26-11-2023 முதல் நடக்கிறது. திருமண முயற்சிகள் மேற்கொண்டால் விரைவில் நல்லது நடக்கும்.
குரு சனி வக்ரம்பெற்று, தந்தைக்காரகன் சூரியன்- ராகு சாரம் பெற்றிருப்பதால் உறவில் வரன் பார்க்காமல் அந்நியத்தில் வரன் பார்ப்பது நல்லது. சூரியன் ராகு சாரம் பெற்றிருப்பதால் குலதெய்வ வழிபாடு மேற்கொள்வதன்மூலம் நன்மை நடக்க வாய்ப்பு உண்டு.
இவர்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. குழந்தை பாக்கியம் எப்போது கிடைக்கும் என்று கூறுங்கள்? -பிரபாகர்.
பதில்: அனுஷ நட்சத்திரம், விருச்சிக ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்த கணவர் ஜாதகத்தில் 5-ஆம் அதிபதி புதன் கேந்திரம் பெற்றிருப்பது சிறப்பு என்றா லும் புத்திர காரகன் குரு வக்ரம்பெற்று ராகு சாரம் பெற்றிருப்ப தால் இடையூறு கள் ஏற்படுகிறது. 5-ஆம் அதிபதி கேந்திரம் பெற்றிருப்ப தால் நன்மை நடக்க வாய்ப் புண்டு. தற் போது நடப்பது சுக்கிர தசை என்பதால் 2024 மே மாதத் திற்குபிறகு நல்லது நடக்க வாய்ப்பு உண்டு.
மனைவி ஜாதகத்தில் குரு 6-ல் இருந்தாலும் சூரியன் செவ்வாய் சேர்க்கை பெற்றிருப்பது நன்மைதான். சூரியன் ராகு சாரம் பெற்றிருப்பதால் குழந்தை பாக்கியம் ஏற்பட இடையூறுகள் ஏற்படுகிறது. 5-ஆம் அதிபதி புதனும் 6-ஆம் அதிபதி சுக்கிரனும் பரிவர்த்தனை பெற்றிருப்பதால் ஒருசில இடையூறுக்கு பிறகு நல்லது நடக்க வாய்ப்பு உண்டு. குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளவும்; விரைவில் ஒரு நல்லது நடக்கும்.
எனக்கு அரசு வேலை கிடைக்குமா? திருமண வாழ்க்கை பற்றி கூறுங்கள்? -வைஷு, விருதுநகர்.
பதில்: மிருகசீரிஷ நட்சத்திரம், ரிஷப ராசி, கும்ப லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 10-ல் செவ்வாய் இருப்பதால் நிர்வாகத் தொடர்புடைய வேலையில் சாதிக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பொதுவாக சூரியன் பலம்பெற்றால்தான் அரசு பணியில் அமரக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். உங்கள் ஜாதகத்தில் சூரியன் ராகு சேர்க்கை பெற்றிருப்பதால் நேரடியாக அரசுத்துறையில் அமைய இடையூறுகள் ஏற்படும்.
10-ல் உள்ள செவ்வாய் வக்ரகதியில் இருப்பதாலும் நீங்கள் பிறந்து இருப்பதும் கிரகணத்தை ஒட்டிய காலம் என்பதாலும் நேரடியாக அரசாங்கத்தில் முயற்சிக்காமல் தனியார்த் துறையில் முயற்சிப்பது நல்லது.
உங்கள் ஜாதகத்தில் 7-ஆம் அதிபதி சூரியன் ராகு சேர்க்கை பெற்றிருப்பதாலும், களத்திர காரகன் செவ்வாய் வக்ரகதியில் இருப்பதாலும் மனவாழ்கையில் விட்டுக் கொடுத்து சென்றால்தான் வாழ்க்கை நன்றாக இருக்கும்.
அமாவாசை அன்று பிறந்து, கிரகணத்தின் போது பிறந்தி ருப்பதால் திருமண வாழ்க்கையில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. 21-3-2025-ல் ராகு தசை முடிந்து குரு தசை வரும் என்றபொழுது திருமணம் செய்தால் வாழ்க்கை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். உறவில்லாமல் அந்நியத்தில் வரன் பார்ப்பது நல்லது.
என் மகளுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை பாக்கியம் எப்போது கிடைக்கும் என்று கூறுங்கள்? -சாந்தி, எடப்பாடி.
பதில்: சதய நட்சத்திரம், கும்ப ராசி, மிதுன லக்னத்தில் பிறந்த உங்கள் மகளுக்கு 5-ஆம் அதிபதி சுக்கிரன் லக்னத்தில் இருப்பது நல்ல அமைப்புதான். குரு கேது சேர்க்கை பெற்ற காரணத் தால் ஒருசில இடையூறுகள் ஏற்படுகிறது.
கணவர் ஜாதகத்தில் குருபகவான் கேது சாரம் பெற்றதும், புத்திர ஸ்தானா திபதி சூரியன் ராகு நட்சத்திரத் தில் பகை வீடான கும்ப ராசியில் இருப் பதும் இடை யூறுகளை உண்டாக்கிறது.
மாப்பிள்ளை ஜாதகத்தில் சூரியன் மற்றும் குரு, ராகு கேதுவால் பாதிக்கப்பட்டிருப்பதால் குழந்தை பாக்கியம் உண்டாக இடையூறுகள் உண்டாகிறது. குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளவும்; விரைவில் நல்லது நடக்கும்.
என் அண்ணன் வெளிநாடு சென்று படிக்க விரும்புகிறான். எப்போது வெளிநாடு செல்ல முடியும்? திருமணம் எப்போது நடைபெறும் என்று கூறுங்கள்? -ஸ்ரீஹரி, ஆண்டிபட்டி.
பதில்: விசாக நட்சத்திரம், துலா ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்த உங்கள் அண்ணனுக்கு 5-ஆம் அதிபதி யும், கல்விக் காரகனுமான புதன் வக்ரம் பெற்றிருப்பது கல்வி சம்பந்தப் பட்ட விஷயத் தில் இடையூறு களை ஏற்படுத் தக்கூடிய அமைப்பு ஆகும். உங்கள் அண்ணன் ஜாதகத்தில் லக்னத்திற்கு 12-ல் அமையப் பெற்ற சனி தசை தற்போது நடப்பதால் வெளியூர், வெளிநாடு சென்று படிக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு.
தற்போது ராகு புக்தி 3-10-2024 முடிய நடப்பதால் அடுத்து வரக்கூடிய குரு புக்தி காலத்தில் வெளியூர், வெளிநாடு சென்று படிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். மூன்று கிரகங்கள் வக்ரம் பெற்றிருப்பதால் எந்த ஒரு காரியத்திலும் சற்று பொறுமையோடு செயல்படுவது நல்லது.
உங்கள் அண்ணன் ஜாதகத்தில் களத்திர காரகன் சுக்கிரன் நீசம்பெற்று இருப்பதும், குரு, சனி, புதன் வக்ரகதியில் இருப்பதும் தோஷம் ஆகும். 7-ஆம் அதிபதி செவ்வாய் 8-ல் மறைந்து இருப்பதும் செவ்வாய் தோஷம் ஆகும்.
சூரியன் நீசம்பெற்று இருந்தாலும் நவாம்சத்தின் உச்சம்பெற்று இருப்பதால் ஒருசில இடர்பாடுக்குபிறகு நல்லது நடக்க வாய்ப்பு உண்டு.
2027-க்குபிறகு நடக்க இருக்கக்கூடிய புதன் தசை காலத்தில் மணவாழ்க்கை அமையும். சொந்தமில்லாமல் அந்நியத்தில் வரன் பார்ப்பது நல்லது.
கேள்வி: என் மகனின் முதல் திருமணம் விவாகரத்து ஆகிவிட்டது. இரண்டாவது திருமணத்திற்கு முயற்சி செய்கிறோம் எப்போது நடைபெறும் என்று கூறுங்கள்? -சரசு மெய்ஞானமூர்த்தி, மேட்டூர் அணை.
பதில்: சித்திரை நட்சத்திரம், துலா ராசி, துலா லக்னத்தில் பிறந்த உங்கள் மகனுக்கு 7-ஆம் அதிபதி செவ்வாய் ராசியில் கடகத்தில் அமையப்பெற்று நீசம்பெற்றாலும், நவாம்சத்தில் உச்சம்பெற்று இருப்பதால் நீசபங்க ராஜயோகம் ஏற்பட்டிருக்கிறது.
தற்போது சனி மகா தசையில் களத்திர காரகன் சுக்கிர புக்தி 3-5-2025 முடிய நடப்பது அனுகூலமான அமைப்பாகும். இதுநாள் வரை 7-ல் சஞ்சரித்த ராகு கோட்சாரத்தில் 6-க்கு மாறியிருப்பதும் சாதகமான அமைப்பா கும். தற்போது 7-ல் உள்ள குரு 31-12-2023-ல் வக்ரநிவர்த்திபெற்று சஞ்சரிக்ககூடிய காலமானது ஒரு நல்ல அமைப்பு ஆகும்.
இந்த தருணத் தில் ஜனவரி முதல் ஏப்ரல் மாதத்திற்குள் ஒரு நல்லது நடக்கவாய்ப்பு உண்டு. சிம்மத் தில் சனி, ராகு அமையப்பெற்ற இருப்பதால் உறவில்லாமல் அந்நியத்தில் திருமணத்திற் காக முயற்சிப் பது நன்மை தரும். குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது நல்லது.