பாலமுருகன் பதில்கள் 25.10.2024

/idhalgal/balajothidam/balamurugan-answers-25102024

எப்போது திருமணம் நடைபெறும் என்று கூறுங்கள்?

பதில்: பூரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, மீன லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 7-ஆம் அதிபதி புதன் 8-ல் மறைந்து இருந்தாலும் பாவகரீதியாக 9-ல் இருப்பதும், களத்திரகாரகன் செவ்வாய் பரிவர்த்தனை பெற்றிருப்பதும் நல்ல அமைப்பாகும். தற்சமயம் புதன் தசையில், சுக்கிர புக்தி 31-5-2026 முடிய நடப்பதால் திருமண முயற்சிகளைதீவிரமாக மேற்கொண்டால் 2025 முற்பாதியில் நல்லது நடக்க வாய்ப்புண்டு. உங்கள் ஜாதகத்தில் 2-ல் சனி இருப்பதால் அமையும் வாழ்வில் விட்டுக்கொடுத்துச் செல்வது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நற்பலனைத் தரும்.

Q&A

என் மகனுக்கு திருமணம் எப்போது நடக்கும்?

பதில்: அஸ்த நட்சத்திரம், கன்னி ராசி, கும்ப லக்னத்தில் பிறந்த உங்கள் மகனுக்கு லக்னத்திற்கு 2-ல் சனி, கேது, 8-ல் சந்திரன், ராகு, புதன் ஆகிய கிரகங்கள் அமையப்பெற்று இருக்கிறது. 2, 8-ல் சனி, ராகு, கேது இருப்பது

எப்போது திருமணம் நடைபெறும் என்று கூறுங்கள்?

பதில்: பூரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, மீன லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 7-ஆம் அதிபதி புதன் 8-ல் மறைந்து இருந்தாலும் பாவகரீதியாக 9-ல் இருப்பதும், களத்திரகாரகன் செவ்வாய் பரிவர்த்தனை பெற்றிருப்பதும் நல்ல அமைப்பாகும். தற்சமயம் புதன் தசையில், சுக்கிர புக்தி 31-5-2026 முடிய நடப்பதால் திருமண முயற்சிகளைதீவிரமாக மேற்கொண்டால் 2025 முற்பாதியில் நல்லது நடக்க வாய்ப்புண்டு. உங்கள் ஜாதகத்தில் 2-ல் சனி இருப்பதால் அமையும் வாழ்வில் விட்டுக்கொடுத்துச் செல்வது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நற்பலனைத் தரும்.

Q&A

என் மகனுக்கு திருமணம் எப்போது நடக்கும்?

பதில்: அஸ்த நட்சத்திரம், கன்னி ராசி, கும்ப லக்னத்தில் பிறந்த உங்கள் மகனுக்கு லக்னத்திற்கு 2-ல் சனி, கேது, 8-ல் சந்திரன், ராகு, புதன் ஆகிய கிரகங்கள் அமையப்பெற்று இருக்கிறது. 2, 8-ல் சனி, ராகு, கேது இருப்பதும் தற்போது ராகு தசை நடப்பதும் அவ்வளவு சிறப்பல்ல. 2, 8-ல் ராகு- கேது அமையப்பெற்று 3-ஆவது தசையாக ராகு தசை நடைபெறுவதால் திருமணம் நடை பெற்றாலும் ராகு தசை முடியும்வரை சற்று கவனத் தோடு இருக்கவேண்டிய ஜாதகம் ஆகும். 8-ல் ராகு இருந்து ராகு தசை 4-4-2027 முடிய நடக்கிறது. ராகு தசை நடப்பதால் திருமண வாய்ப்புகள் தற்போது கிடைத்தாலும் ராகு தசை முடியும்வரை- குறிப்பாக குரு தசை தொடங்குகின்ற வரை மணவாழ்வில் விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும். தற்போது கன்னி ராசிக்கு 9-ல் குரு சஞ்சரிப்பதால் திருமண முயற்சிகளை மேற்கொண்டால் 2025 முற்பாதியில் நல்லது நடக்க வாய்ப்பு இருக்கிறது என்றாலும் ராகு தசை நடப்பதால் எதிலும் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது சிறப்பு.

என் மகனுக்கு நல்ல வேலை எப்போது கிடைக்கும்? எதிர்காலம் எப்படி இருக்கும்? -பத்மா, திருநெல்வேலி.

பதில் ரேவதி நட்சத் திரம், மீன ராசி, தனுசு லக்னத்தில் பிறந்த உங்கள் மகனுக்கு 10-ஆம் அதிபதி புதன் 2-ல் அமையப்பெற்று குரு பார்வை பெற்றிருப்பது சிறப்பான அமைப்பாகும். தற்போது சுக்கிர தசையில் ராகு புக்தி நடக்கிறது. ஏழரைச்சனி நடப்ப தால் கிடைக்கும் வேலையில் சற்று நெருக்கடிகள் இருக்கும். பெரிய வாய்ப் புக்கான யோகங் கள் தற்போது இல்லை. கிடைக்கக் கூடிய வாய்ப்பு களைப் பயன் படுத்திக் கொண் டால் விரைவில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். உங்கள் மகன் ஜாதகத்தில் சுக்கிரன்- குரு பரிவர்த்தனை பெற்றிருப்ப தால் எதிர்கால வாழ்க்கை சிறப்பாக இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. ஏழரைச்சனி நடப்பதால் தற்போது கிடைக்கக்கூடிய சிறு வாய்ப்பையும் உதாசீனப்படுத்தாமல் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வது, ஆஞ்சனேயர் வழிபாடு, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.

என் மகளுக்கு எப்போது திருமணம் நடக்கும்? அவள் வாழ்க்கை எப்படி இருக்கும்?

பதில்: அஸ்த நட்சத்திரம், கன்னி ராசி, தனுசு லக்னத்தில் பிறந்த உங்கள் மகளுக்குத் தற்போது குரு தசையில் சுக்கிர புத்தி 7-9-2026 முடிய நடக்கிறது. களத் திர காரகன் செவ்வாய் 9-ல் இருப்பது நல்ல அமைப் பாகும். உங்கள் மகளுக்கு விரைவில் நல்லது நடக்கக்கூடிய வாய்ப்பு கள்- குறிப்பாக 2025 தொடக்கத்தில் நல்ல ஒரு வாழ்க்கை அமையும் யோகங்கள் உண்டு. சூரியன் வீட்டில் கேது இருப்பதால் குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளவும். நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். 7-ல் குரு தனித்திருப்பதாலும் சனி பார்வை 7-ஆம் வீட்டுக்கு இருப்பதாலும் திருமணம் தாமதம் ஆகிறது. தற்போது குரு தசை நடப்பதால் கண்டிப்பாக நல்லது நடக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு.

எனக்கு ஜோதிடம் சொல்ல வருமா? எப்போது கடன் நிவர்த்தியாகும்? -சண்முகம், திண்டுக்கல்.

பதில்: அவிட்ட நட்சத்திரம், கும்ப ராசி, ரிஷப லக் னத்தில் பிறந்த உங்களுக்கு தற்போது ஏழரைச் சனியில் ஜென்மச் சனி நடப்பதாலும் சனி தசையில் ராகு புக்தி நடப்பதாலும் பொருளாதாரரீதியாக நெருக்கடிகள் இருக்கிறது. 29-3-2025-ல் ஜென்ம சனி முடிகின்றபொழுது கடன் பிரச்சினைகள் சற்று குறையும். ஒருவர் ஜோதிடத்தில் சாதிக்க புதன் வலுவாக இருக்க வேண்டும். புதன் ஆட்சி, உச்சம் பெற்றிருப்பது, புதனுடன் கேது இருப்பது, ஜீவனாதிபதி சனியுடன்- கேது, சந்திரன் போன்ற கிரகங்கள் இருப்பது ஜோதிட யோகத்தைத் தரும். குறிப்பாக 2-ஆம் அதிபதி வலுவாக இருப்பது நல்ல அமைப்பாகும். உங்கள் ஜாதகத்தில் 2-ல் சனி இருப்பதாலும் புதன் வக்ரகதியில் இருப்பதாலும் ஜோதிடத்தில் ஏற்றம் பெற இடையூறுகள் ஏற்படும். தற்போது நடைபெறக்கூடிய சனி தசையைவிட 2028-க்குப் பிறகு வரக்கூடிய புதன் தசை காலத்தில், புதன் ஜோதிடத்திற்கு காரகன் என்பதால் புதன் தசையில் அதற்கான முயற்சிகளை அதிகம் மேற்கொள்ளவும்; நல்லது நடக்கும். பொதுவாக 2-ல் சனி இருப்பதால் பேச்சில் சற்று கவனத்தோடு இருக்க வேண்டிய ஜாதகமாகும்.

bala251024
இதையும் படியுங்கள்
Subscribe