ப் கேள்வி: எனது வேலை மற்றும் ஆயுளை பற்றி கூறுங்கள்? -செல்வராஜ், சிவகங்கை.
பதில்: அஸ்த நட்சத்திரம், கன்னி ராசி, கடக லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 8-ஆம் அதிபதி சனி 9-ல் அமையப் பெற்று 6, 8-ஆம் வீடுகளை குரு பார்ப்ப தால் நீண்ட ஆயுள் உண்டு. செவ்வாய் 10-ல் நிற்பதால் வேலைவாய்ப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் அனுகூல மான பலன் களை பெறக் கூடிய வாய்ப்பு கள் உண்டு. கடந்த 4 மாதமாக வக்ரகதியில் இருந்த சனி 4-11-2023 முதல் வக்ரநிவர்த்தி பெற்று கோட்சாரத்தில் சனி 6-ல் சஞ்சரிப் பதாலும், சனி மகா தசையில் சுக்கிர புக்தி 22-5-2024 முடிய நடப்பதாலும் வேலை வாய்ப்பு சம்பந்தப்பட்ட விஷயங்கள் அனுகூலமான பலன்களை தரும். சனி தசை நடப்பதால் விநாயகர் வழிபாடு, ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.
ப் கேள்வி: என் மகளுக்கு அரசு அல்லது தனியார் உத்தியோகம் எப்போது கிடைக்கும்? ஆண் வாரிசு உண்டா என்று கூறுங்கள்? -வைத்தியநாதன், கோனேரிராஜபுரம்.
பதில்: திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்த உங்கள் மகளுக்கு 10-ஆம் அதிபதி சனி லக்ன கேந்திரம் பெற்று வக்ரகதியில் உள்ளார். சூரியன் 6-ல் பலவீனமாக இருக்கின்றபொழுது பிறந்து இருப் பதாலும் 10-ஆம் அதிபதி சனியும் குருவும் வக்ரகதியில் இருப்பதால் தனியார் துறை ய
ப் கேள்வி: எனது வேலை மற்றும் ஆயுளை பற்றி கூறுங்கள்? -செல்வராஜ், சிவகங்கை.
பதில்: அஸ்த நட்சத்திரம், கன்னி ராசி, கடக லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 8-ஆம் அதிபதி சனி 9-ல் அமையப் பெற்று 6, 8-ஆம் வீடுகளை குரு பார்ப்ப தால் நீண்ட ஆயுள் உண்டு. செவ்வாய் 10-ல் நிற்பதால் வேலைவாய்ப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் அனுகூல மான பலன் களை பெறக் கூடிய வாய்ப்பு கள் உண்டு. கடந்த 4 மாதமாக வக்ரகதியில் இருந்த சனி 4-11-2023 முதல் வக்ரநிவர்த்தி பெற்று கோட்சாரத்தில் சனி 6-ல் சஞ்சரிப் பதாலும், சனி மகா தசையில் சுக்கிர புக்தி 22-5-2024 முடிய நடப்பதாலும் வேலை வாய்ப்பு சம்பந்தப்பட்ட விஷயங்கள் அனுகூலமான பலன்களை தரும். சனி தசை நடப்பதால் விநாயகர் வழிபாடு, ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.
ப் கேள்வி: என் மகளுக்கு அரசு அல்லது தனியார் உத்தியோகம் எப்போது கிடைக்கும்? ஆண் வாரிசு உண்டா என்று கூறுங்கள்? -வைத்தியநாதன், கோனேரிராஜபுரம்.
பதில்: திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்த உங்கள் மகளுக்கு 10-ஆம் அதிபதி சனி லக்ன கேந்திரம் பெற்று வக்ரகதியில் உள்ளார். சூரியன் 6-ல் பலவீனமாக இருக்கின்றபொழுது பிறந்து இருப் பதாலும் 10-ஆம் அதிபதி சனியும் குருவும் வக்ரகதியில் இருப்பதால் தனியார் துறை யில் பணிக்காக முயற்சிப்பது நல்லது. உங்கள் மகள் ஜாதகத்தில் 5-ஆம் அதிபதி புதன் வக்ரகதியில் இருப்பதும், புத்திரகாரகன் குரு வக்ரகதியில் இருப்பதும் சூரியன் நீசம்பெற்று இருப்பதும் புத்திர தோஷம் ஆகும். உடல்நிலை குறைபாடுகளால் குழந்தை பாக்கியம் தடைப்படும். வேலை விஷயத்திற்கு முக்கியதும் தராமல் ஆண் குழந்தையோ அல்லது பெண் குழந்தையோ கால காலத்தில் எதாவது ஒன்றை பெற்றுக் கொள்வது நல்லது. குலதெய்வ வழிபாடு மேற்கொண்டால் அனுகூலங்கள் ஏற்படும்.
ப் கேள்வி: என் மகனுக்கு எப்போது அரசு வேலை கிடைக்கும்? எப்போது திருமணம் நடைபெறும் என்று கூறுங்கள்? -ராஜேந்திரன்.
பதில்: பூரட்டாதி நட்சத்திரம், கும்ப ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்த உங்கள் மகனுக்கு பத்தாம் அதிபதி சனி 9-ல் ஆட்சிபெற்று இருப்பதால் அரசு துறையைவிட வெளியூர், வெளிமாநிலங்களில் நல்ல வேலை அமையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தற்போது ஏழரைச்சனி நடப்ப தால் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டால் விரைவில் ஒரு நல்ல நிலையை அடையமுடியும். புதன் மகா தசையில் புதன் புக்தி 3-1-2024 முடிய நடக்கிறது. சுய புக்திக்குப் பிறகு வேலைவாய்ப்புரீதியாக அனுகூலங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. உங்கள் மகனுக்கு 7-ஆம் அதிபதி செவ்வாய் 2-ல் அமைந்திருப்பதும், ஜென்ம லக்னத் தில் சுக்கிரன் ஆட்சிபெற்று இருப்பதும் சிறப் பான அமைப்பு என்பதால் நல்ல வாழ்க்கை அமை யக்கூடிய யோகம் உண்டு. புதன் கேது நட்சத்திரத் தில் அமையப் பெற்று புதன் தசையில் சுய புக்தி தற்போது நடப்பதாலும் அடுத்து கேது புக்தி நடப்பதாலும் கேது முடிந்து அதன் பின் வரக்கூடிய சுக்கிர புக்தியில் திருமண யோகம் பலமாக இருக்கிறது. 2025 தொடக்கத்தில் சுக்கிர புக்தி தொடங்குகின்றபொழுது நல்ல வாழ்க்கை அமையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. புதன் தசை நடப்பதால் மகாவிஷ்ணு வழிபாடு மேற்கொள்வது நல்லது.
ப் கேள்வி: என் மகளுக்கு திருமணம் எப்போது நடைபெறும்? மாப்பிள்ளை சொந்தமா அல்லது அந்நியமா? திருமண வாழ்க்கை எப்படியிருக்கும் என்று கூறுங்கள்? -உஷாராணி, ஸ்ரீவில்-புத்தூர்.
பதில்: திருவோண நட்சத்திரம், மகர ராசி, கன்னி லக்னத்தில் பிறந்த உங்கள் மகளுக்கு 7-ல் குரு வக்ரகதியில் இருப்பதும், 8-ல் சனி வக்ரகதியில் இருப்பதும், களத்திர காரகன் செவ்வாய் கடகத்தில் நீசம்பெற்று இருப்பதும் ஒருசில தடைகளை ஏற்படுத்தக் கூடிய அமைப்பு ஆகும். ஏழாம் அதிபதி வக்ரம் பெற்றிருப்பதால் திருமண சம்பந்தப் பட்ட விஷயத்தில் மேற்கொள்ளக் கூடிய முயற்சிகளில் தேவையற்ற இடையூறுகள் ஏற்படும். தற்போது ராகு தசையில் சுக்கிர புக்தி நடப்பதால் 1-5-2024-க்கு பிறகு உறவில் லாமல் அந் நியத்தில் வாழ்க்கை அமைய வாய்ப்புண்டு.
குரு, சனி வக்ரகதியில் இருப்பதாலும் ராகு தசை தற்போது நடப்பதாலும் மண வாழ்க்கையில் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. தற்போது நடக்கக்கூடிய ராகு தசையைவிட 31 வயதில் குறிப்பாக 2029-க்கு பிறகு நடக்கக்கூடிய குரு மகா தசையில் மணவாழ்க்கை சற்று சாதகமாக இருக்கும்.
ப் கேள்வி: சொந்தமாக வீடு எப்போது அமையும் என்று கூறுங்கள்? -விஸ்வகுமார், விழுப்புரம்.
பதில்: மிருகசீரிஷ நட்சத்திரம், ரிஷப ராசி, மேஷ லக்னத்தில் பிறந்த உங்க ளுக்கு 4-ஆம் அதிபதி சந்திரன் 2-ல் உச்சம் பெற்று இருப் பது சிறப் பான அமைப்பு என்பதால் சொந்த வீடு அமைவதற்கான வாய்ப்புகள் உண்டு. தற்போது லக்னாதிபதி செவ்வாய் புக்தி நடப்பதால் முயற்சி செய்தால் நல்லது நடக்கும். சனி பார்வை 4-ஆம் வீட்டிற்கு இருப்பதால் தனித்து முயற்சிக்காமல் கூட்டாக முயற்சிசெய்வது, குடும்ப உறுப்பினர் களை இணைத்துக்கொண்டு சொத்து வாங்குவதற்காக முயற்சிப்பது நற்பலனை தரும்.
ப் கேள்வி: இரண்டு திருமணம் முறிந்துவிட்டது. மற்றொரு திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளதா, எப்போது நடைபெறும்? எதிர்காலம் எப்படியிருக்கும் என்று கூறுங்கள்? -பிரியதர்ஷினி, ஈரோடு.
பதில்: மக நட்சத்திரம், சிம்ம ராசி, மகர லக்னத் தில் பிறந்த உங்களுக்கு 7-ல் கேது இருப்ப தும், ஜென்ம ராசியில் சனி, ராகு இருப்ப தும், 7-ஆம் அதிபதி சந்திரன்- கேது நட்சத்திரத்தில் இருப்பதும் சாதகமற்ற அமைப்பாகும். சனி, ராகு, கேது ஆகிய கிரகங்கள் 1, 7-ல் இருப்பதால் சொந்தத்தில் திருமணம் செய்யாமல் அந்நியத்தில் குறிப்பாக வேற்று ஜாதி ஆணை திருமணத்திற்காக முயற்சித் தால் நல்லது நடக்க வாய்ப்பு உண்டு. 8-ல் அமையப்பெற்ற சந்திர தசை நடப்பதால் வாழ்வில் விட்டுக்கொடுத்து சென்றால்தான் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். பெருமாள் வழிபாடு செய்வது, விநாயகர் வழிபாடு செய்வது நற்பலனை தரும்.
ப் கேள்வி: நடப்பு சுக்கிர தசை நல்லதா அல்லது சுமாராக இருக்குமா? என்ன பலன் என்று கூறுங்கள்? -பன்னீர்செல்வம், திருநெல்வே-.
பதில்: விசாக நட்சத்திரம், துலா ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்த உங்களுக்கு சுக்கிரன் 6-ல் அமையப்பெற்று தசை நடப்பது சாதகமான அமைப்புதான். 6-ஆம் அதிபதி என்பதால் உடல்நலத் தில் கவனம் செலுத்துவது, கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் கவனத்தோடு இருப்பது நன்மை தரும். துலா ராசியில் பிறந்த உங்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள ராகு- கேது பெயர்ச்சி நல்ல அமைப்பு என்பதால் அனுகூல பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. நடப்பது சுக்கிர தசை என்பதால் மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நல்லது. ப்