ப் கேள்வி: எனக்கு திருமணம் தடைப்பட்டு கொண்டே இருக்கிறது. என்ன காரணம்? பரிகாரம் என்ன செய்யவேண்டும் என்று கூறுங்கள்? -அருண்குமார், ஓசூர்.
பதில்: உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, மேஷ லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 2-ல் ராகு 7-ல் சனி, 8-ல் கேது உள்ளது. பொது வாக 2, 7, 8 சனி, ராகு, கேது அமை யப்பெற்றால் திருமணம் அமைய இடையூறுகள் ஏற்படும். உங்களுக்கு 2012 முதல் 2019 வரை 8-ல் அமையப் பெற்ற கேது தசை நடைபெற்றது அனுகூல மற்ற அமைப்பாகும். தற்போது சுக்கிர தசையில் சந்திர புக்தி 14-11-2023 முதல் நடைபெறுவதால் நீங்கள் திருமண முயற்சிகள் மேற்கொண்டால் நல்ல பலன் அடைய வாய்ப்புகள் உண்டு. உறவில்லாமல் அந்நியத்தில் வரன் பார்க்கவும். குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது நல்லது.
ப் கேள்வி: நான் வெளியூரில் அரசு உத்தி யோகத்தில் உள்ளேன். எப்போது உள்ளூருக்கு இடமாற்றம் கிடைக்கும். பிரமோஷன் எப்போது கிடைக்கும். உடல்நிலை எப்போது சரியாகும் என்று கூறுங்கள்? -கீதா, திருவையாறு.
பதில்: திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்த உங்களுக்கு தற்போது புதன் தசையில் 12-ஆம் அதிபதியான சந்திர புக்தி 2-2-2024 முடிய நடக்கிறது. ஒருவருக்கு 12-ஆம் அதிபதி தசை, புக்தி நடைபெற்றாலும் சந்திர தசை அல்லது புக்தி நடைபெற்றாலும் வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய நிலை உண்டாகும். சந்திர புக்தி நடைபெறுவதால் பணி தொடர்பாக வெளியூர் செல்ல நேரிட்டது. அடுத்து உங்களுக்கு 2-2-2024 முதல் செவ்வாய் புக்தி தொடங்குகிறது. 31-12-2023-ல் 11-ல் கோட் சாரத்தில் சஞ்சரிக்கும் குரு வக்ர நிவர்த்தி அடை யும். பிப்ரவரி மாதத்தில் பதவி உயர
ப் கேள்வி: எனக்கு திருமணம் தடைப்பட்டு கொண்டே இருக்கிறது. என்ன காரணம்? பரிகாரம் என்ன செய்யவேண்டும் என்று கூறுங்கள்? -அருண்குமார், ஓசூர்.
பதில்: உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, மேஷ லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 2-ல் ராகு 7-ல் சனி, 8-ல் கேது உள்ளது. பொது வாக 2, 7, 8 சனி, ராகு, கேது அமை யப்பெற்றால் திருமணம் அமைய இடையூறுகள் ஏற்படும். உங்களுக்கு 2012 முதல் 2019 வரை 8-ல் அமையப் பெற்ற கேது தசை நடைபெற்றது அனுகூல மற்ற அமைப்பாகும். தற்போது சுக்கிர தசையில் சந்திர புக்தி 14-11-2023 முதல் நடைபெறுவதால் நீங்கள் திருமண முயற்சிகள் மேற்கொண்டால் நல்ல பலன் அடைய வாய்ப்புகள் உண்டு. உறவில்லாமல் அந்நியத்தில் வரன் பார்க்கவும். குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது நல்லது.
ப் கேள்வி: நான் வெளியூரில் அரசு உத்தி யோகத்தில் உள்ளேன். எப்போது உள்ளூருக்கு இடமாற்றம் கிடைக்கும். பிரமோஷன் எப்போது கிடைக்கும். உடல்நிலை எப்போது சரியாகும் என்று கூறுங்கள்? -கீதா, திருவையாறு.
பதில்: திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்த உங்களுக்கு தற்போது புதன் தசையில் 12-ஆம் அதிபதியான சந்திர புக்தி 2-2-2024 முடிய நடக்கிறது. ஒருவருக்கு 12-ஆம் அதிபதி தசை, புக்தி நடைபெற்றாலும் சந்திர தசை அல்லது புக்தி நடைபெற்றாலும் வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய நிலை உண்டாகும். சந்திர புக்தி நடைபெறுவதால் பணி தொடர்பாக வெளியூர் செல்ல நேரிட்டது. அடுத்து உங்களுக்கு 2-2-2024 முதல் செவ்வாய் புக்தி தொடங்குகிறது. 31-12-2023-ல் 11-ல் கோட் சாரத்தில் சஞ்சரிக்கும் குரு வக்ர நிவர்த்தி அடை யும். பிப்ரவரி மாதத்தில் பதவி உயர்வும், நீங்கள் விரும் பிய இடமாற்றமும் கிடைக்கக்கூடிய வாய்ப்பு களும் உண்டாகும். தற்போது 4-11-2023-ல் சனி வக்ரநிவர்த்தி பெற்றிருப்பதால் நல்ல மாற்றங்கள் ஏற்படும். செவ்வாய் வக்ரகதியில் இருப்பதால் இயற்கை உணவுகளை உட்கொள்வது, முருக வழிபாடு மேற்கொள்வது நல்லது.
ப் கேள்வி: எனக்கு திருமணம் எப்போது நடைபெறும்? செவ்வாய் தோஷமுள்ள பெண்ணை திருமணம் செய்யவேண்டுமா என்று கூறுங்கள்? -சிவம், திண்டுக்கல்.
பதில்: பூரட்டாதி நட்சத்திரம், கும்ப ராசி, மேஷ லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 7-ஆம் அதிபதியும் களத்திர காரகனுமான சுக்கிரன் 6-ல் நீசம் பெற்றிருப்பது அனுகூலமற்ற அமைப்பு என்றாலும் நவாம்சத்தில் ரிஷபத்தில் அமையப்பெற்று ஆட்சி பெற்றிருப்பதால் நிச்சயமாக நல்லது நடக்கும். உங்களுக்கு 32 வயது கடந்துவிட்டதால் நீச தோஷம் விலகி நல்ல பலன் அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தற்போது கோட்சாரத்தில் 3-ல் சஞ்சரிக்கக் கூடிய குரு 7-ஆம் வீட்டை பார்ப்பதால் திருமணம் முயற்சிகள் மேற்கொண் டால் நல்லது நடக்க வாய்ப்பு உண்டு. உங்கள் ஜாத கத்தில் 7-ல் செவ்வாய் இருப்பதால் வரக்கூடிய வரன் ஜாதகத் தில் லக்னத் திற்கு 2, 4, 7, 8, 12-ல் செவ்வாய் இருக்கும் ஜாதகமாக பார்ப்பது உத்தமம். சுக்கிரன் வலு இழந்து இருப்பதால் சம வயதுள்ள பெண்ணைப் பார்ப்பது, மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நல்லது.
ப் கேள்வி: நான் ஐ.ஏ.எஸ். அகாடமி தொடங்க இருக்கிறேன். அரசியல் ஆர்வமும் உள்ளது. கல்வி, சமூகம் மற்றும் அரசியல் பணிகளில் எனது எதிர்காலம் எப்படியிருக்கும் என்று கூறுங்கள்? -மதிராஜா திலகர், கடலூர்.
பதில்: பூர நட்சத்திரம், சிம்ம ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்த உங்களுக்கு லக்னாதி பதி சூரிய நீசம் பெற்றாலும் உடன் சுக்கிரன் அமையப் பெற்று நீசபங்க ராஜயோகம் ஏற்பட்டு இருப்பதால் வாழ்வில் எதிர் நீச்சல் போட்டு ஏற்றத்தை அடையக்கூடிய ஜாதகம் ஆகும். 10-ஆம் அதிபதி சுக்கிரன் குரு சாரம் பெற்றிருப்பதால் கல்வி நிறுவனங்கள் தொடர்புடைய பணிகள் செய்வது, பெண்கள் தொடர்புடைய தொழில், ஆடை, ஆபரணங்கள் சார்ந்த தொழில், கட்டத்தொழில், ஆடை, அணிகலம், அலங்கார சம்பந்தப்பட்ட தொழில் உங்களுக்கு ஏற்றத்தை தரும். சூரியன், சுக்கிரன் இணைந்திருப்பதால் படிப்படியான வளர்ச்சியை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. குரு சனி வக்ரகதியில் இருப்பதால் வேலையாட்களை நம்பாமல், மற்றவர்களை நம்பி பணம் தராமல் மேற்கொள்ளக்கூடிய பணிகள் நற்பலனை தரும். ஒருவர் ஜாதகத்தில் 10-ல் சூரியன் அமைவது சூரியன் வலுவாக இருந்தால் மட்டுமே அரசியல் தொடர்பான விஷயங்கள் அணுகூலத்தை தரும். உங்களுக்கு சூரியன் நீசபங்க ராஜயோகம் பெற்றிருப்பதால் வேறு ஏதாவது ஒரு தொழில் செய்துகொண்டு அரசியல்வாதிகள் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வது நற்பலனை தரும். தற்போது சந்திர தசை நடப்பதால் பெருமாள் வழிபாடு மேற்கொள்வது நல்லது.
ப் கேள்வி: எனக்கு சொந்த வீடு மற்றும் அரசு பணி எதிர்காலத்தில் அமைய வாய்ப்பு இருக்கிறதா என்று கூறுங்கள்? -ஈஸ்வரி, மதுரை.
பதில்: ஆயில்ய நட்சத்திரம், கடக ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்த உங்களுக்கு ஜென்ம லக்னத்தில் செவ்வாய் வலுவாக அமையப்பெற்று, 10-ஆம் அதிபதி சூரியன் 2-ல் அமைந்து குரு பார்வை யோடு இருப்பது நல்ல அமைப்பா கும். உங்களுக்கு தற்போது நடை பெறுவது சுக்கிர தசையாகும். அடுத்து வரக் கூடிய சூரிய தசையில் ஸ்திரமான ஒரு வேலைவாய்ப்பு அமையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. அதுவரை கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்வது நல்லது. 10-ஆம் அதிபதி சூரியன் என்ற காரணத்தினால அரசு, அரசு உதவி பெறக்கூடிய இடங்களில் பணிக்காக முயற்சித்தால் சூரிய தசை வரும் காலத்தில் அனுகூலங்கள் அடைய வாய்ப்பு உண்டு. சுக்கிரன் வக்ரகதியில் இருப்பதாலும், 3-ஆவது தசையாக சுக்கிர தசை நடப்பதா லும், சூரிய தசையில்தான் ஒரு ஸ்திரமான நிலை உண்டாகும். உங்கள் ஜாதகத்தில் மூன்று கிரகங்கள் வக்ரம் பெற்றிருப்பதால் உங்கள் முயற்சி களுக்கு தேவையில்லாத இடையூறுகள் ஏற்படும். 4-ஆம் அதிபதி சனி என்ற காரணத் தினால் பழைய வீடு, கட்டிய வீடுகளை எதிர்காலத்தில் வாங்குவதற்காக முயற்சித்தால் சொந்தமாக அமைய வாய்ப்பு உண்டு. மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்ளவும்; நல்லது நடக்கும்.
ப் கேள்வி: என் மகனுக்கு கடந்த ஒன்பது வருடங்களாக பெண் பார்த்து கொண்டிருக்கின்றோம். ஒரு வரனும் அமையவில்லை. அவனுக்கு திருமணம் எப்போது நடைபெறும்? நல்ல படித்த, வேலை பார்க்கும் பெண் அமையுமா என்று கூறுங்கள்? -பாலன், சென்னை.
பதில்: மூல நட்சத்திரம், தனுசு ராசி, தனுசு லக்னத்தில் பிறந்த உங்கள் மகனுக்கு 7-ஆம் அதிபதி புதன் 7-ல் வலுவாக அமையப்பெற்றிருப்பது நல்ல அமைப்பு என்றாலும் லக்னத்தில் அமையப்பெற்ற சனி 7-ஆம் வீட்டை பார்ப்பதால் தேவையற்ற இடையூறுகள் ஏற்படுகிறது. 3, 9-ல் உள்ள ராகு- கேது பாவக ரீதியாக 2-ல் ராகு 8-ல் கேது இருப்பதால் வாழ்வில் ஒரு நல்லது நடை பெற இடையூறுகள் உண்டாகிறது. 11-1-2024 முதல் சந்திர தசையில் குரு புக்தி நடக்கும் தருவாயில் நல்லது நடைபெற வாய்ப்பு உண்டு. தற்போது 5-ல் சஞ்சரிக்கக்கூடிய குரு 31-12-2023 முதல் வக்ரநிவர்த்தி பெற்று சஞ்சரிக்கும் தருணத்தில் நல்லவாய்ப்புகள் ஏற்படும் பொறுமை காக்கவும். 7-ஆம் அதிபதி புதன் ஆட்சிபெற்று வலுவாக இருப்பதால் வரும் மனைவி நல்ல படித்த பெண்ணாக அமையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. திருமணம் தாமதமாவதால் குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளவும். குறிப்பாக உங்கள் ஜாதகத்தில் சனி, சந்திரன் சேர்க்கைப் பெற்று புனர்பூதோஷம் ஏற்பட்ட காரணத்தினால் திருமணம் கைகூடும் நேரத்தில் தேவையில்லாத இடையூறுகள் ஏற்படுகிறது. குறிப்பாக தாய்வழி குலதெய்வத்தை வழிபாடு செய்வது மிகமிக நல்லது.
ப் கேள்வி: நான் பலவித ஆரோக்கிய பிரச்சினைகளால் அவதிபடுகிறேன். லட்ச கணக்கில் மருத்துவச் செலவுகள் செய்தும் சரியாகவில்லை. என் உடல்நிலை சரியாகுமா- சரியாகாதா? என்ன பரிகாரம் செய்யவேண்டும் என்று கூறுங்கள்? -லட்சுமி, மதுரை.
பதில்: பரணி நட்சத்திரம், மேஷ ராசி, கடக லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 8-ல் ராகு அமையப்பெற்று, எட்டாம் அதிபதி சனி 10-ல் நீசம்பெற்று வக்ரகதியில் நிற்பதால் உடல் ஆரோக்கிய பாதிப்புகள் அடிக்கடி ஏற்படுகிறது. உங்களுக்கு 16-10-2022 முடிய ராகு தசை நடைபெற்ற காலம் சாதக மற்ற நேரமாகும். தற்போது குரு மகா தசை தொடங்கியிருப் பது உடல் ஆரோக்கியத் தில் சற்று முன் னேற்றத்தை ஏற்படுத்தக் கூடிய அமைப் பாகும். சனி பல வீனமாக இருப்பதால் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கிறது. கடந்த காலங்களில் நடந்த ராகு தசையைவிட தற்போது நடக்கக்கூடிய குரு தசை ஆரோக்கியத்தில் ஒருசில முன்னேற் றத்தை தரக்கூடிய வாய்ப்புகள் உண்டு. விநாய கர் வழிபாடு, ஆஞ்சனேயர் வழிபாடு மேற் கொள்ளவும்; நன்மை நடக்கட்டும்.